Contact us at: sooddram@gmail.com

 

தந்திரிகளின் மறுமுகம் - 10

 

'இயக்கம் விரைவில் அழியும் அபாயத்தை எதிர்நோக்கியிருப்பதாகவும், இதனை தடுப்பதற்கு சரணடைவதைத் தவிர இயக்கத்திற்கு வேறு வழி ஏதும் இல்லை'

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்துடனான தனது உறவைப் புதுப்பித்துக்

கொள்வதற்கு மூத்த அரசியல் போராளி ஒருவர் ஊடாக எடுத்த முயற்சி தோல்வியடைந்த நிலையில், இதுவிடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியை உருத்திரகுமாரன் நாடியிருந்தமை தொடர்பான தகவல்களை எமது கடந்த பத்தியில் வெளியிட்டிருந்தோம். இதன் தொடர்ச்சியாக இவ்வாரத்திற்கான பத்தியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின்முன்னாள் செயலரும், தேசிய பாதுகாப்பு ஆலோசனைச் சபையில் உறுப்பினராக அங்கம் வகித்தவருமான கிருஷ்ணன் ராஜன் என்ற இராசதந்திரியுடன், ஒஸ்லோவில் உள்ள உருத்திரகுமாரனின் சகாக்கள் நிகழ்த்திய சந்திப்புத் தொடர்பான தகவல்களை வெளியிடுவதாகத் தெரிவித்திருந்தோம். எனினும் இது தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு முன்னர் கே.பியுடன் தற்பொழுதும் இரகசியத் தொடர்பைப் பேணியவாறு, உருத்திரகுமாரனின் பின்புலத்தில் இருந்து அரூபகரமாக

இயங்கி வரும் மிகவும் ஆபத்தான நபர் ஒருவர் தொடர்பான உண்மைகளை இப்பத்தியில் வெளிக்கொணர்வது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகின்றோம்.

 

உருத்திரகுமாரனின் உதவியாளரான வழுதிக்கு பரிந்துரைத்துக் கடிதம் எழுதிய

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருடனும் இந்த நபர் தொடர்புகளைப் பேணி வந்திருந்தார். மே 18இற்கு முன்னரே உருத்திரகுமாரனுடன், கே.பியுடனும் தொடர்புகளைப் பேணி வந்த இவர், 2008ஆம் ஆண்டின் இறுதியில் பிரித்தானியாவில் உள்ள மருத்துவர் ஒருவருடன் உரையாடுகையில் இயக்கம் விரைவில் அழியும் அபாயத்தை எதிர்நோக்கியிருப்பதாகவும், இதனை தடுப்பதற்கு சரணடைவதைத் தவிர இயக்கத்திற்கு வேறு வழி ஏதும் இல்லை என்றும் கூறியிருந்தார் (இத்தகவலை சம்பந்தப்பட்ட மருத்துவர் எமது செய்தியாளர் ஒருவரிடம் இவ்வாரம் உறுதிசெய்துள்ளார்).

 

2006ஆம் ஆண்டிலிருந்து பிரித்தானியாவில் வசித்து வரும் இவர், மே 18இற்குப் பின்னர்புலம்பெயர் தேசங்களில் குழப்ப சூழலை தோற்றுவிப்பதில் மும்முரமாக ஈடுபட்டு

வருகின்றார். பிரான்சில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உடைக்கப்பட்டு கே.பியின்

கையாட்களின் ஆதிக்கத்தின் கீழ் அது தற்பொழுது வீழ்ச்சியுற்றிருப்பதற்கு இந்த நபரே

காலாக அமைந்துள்ளார். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வெளிநாட்டுக் கிளைகளை

படிப்படியாக கே.பியின் கையாட்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் முயற்சியில்

மும்முரமாக ஈடுபட்டு வரும் இவர், கடந்த ஆண்டு தனது கையாளான இலண்டன் மருத்துவர்

ஒருவரைக் கொழும்புக்கு அனுப்பி கோத்தபாயவுடன் பேச்சுவார்த்தைகளை

நிகழ்த்தியிருந்தார்.

 

இதன் தொடர்ச்சியாக புலம்பெயர் தேசங்களில் இருந்து கொழும்பு சென்ற ஒரு தொகுதியினர்,

அங்கு கே.பியையும், கோத்தபாயவையும் சந்தித்திருந்தனர். இதுபற்றிய தகவல்களை

தமிழ்நெற் இணையம் ஊடாக மருத்துவர் அருட்குமார் அவர்கள் பின்னர்

அம்பலப்படுத்தியிருந்தமை வாசகர்களுக்கு நிச்சயம் நினைவில் இருக்கும்.

18இற்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்திற்கு கே.பி உரிமைகோரிய பொழுது அதற்கு உறுதுணையாக நின்றவர் இவர். கே.பியின் தேசவிரோதப் போக்கை எதிர்ப்பது போன்று அப்பொழுது தமிழீழ தேசிய உணர்வாளர்களிடையே பாசாங்கு செய்தவாறு, செயற்குழு என்ற பெயரில் புதிய தலைமைச் செயலகத்தை கே.பி கட்டமைத்துக் கொள்வதற்கு திரைமறைவில் ஒத்தாசையாக இருந்தவரும் இவரே. கடற்கோளுக்குப் பின்னரான அபிவிருத்திப் பணிகளுக்கென சமாதான காலப் பகுதியில் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதியில் நூற்றுப் பதினொரு கோடியே ஐம்பத்தேழு இலட்சம் ரூபா பணத்தை 2006ஆம் ஆண்டு சிங்கள அரசிடம் தாரைவார்த்துக் கொடுத்தவரும் இவரே.

கே.பியால் கட்டமைக்கப்பட்ட காகிதப்புலிகளின் தலைமைச் செயலகத்தின் இணைப்பாளராக

பெயரளவில் இராமு.சுபன் என்பவர் பதவி வகித்தாலும்கூட, காகிதப்புலிகளின் உண்மையான

தலைவராகவும், இணைப்பாளராகவும் இந்த நபரே விளங்குகின்றார். இவர் வேறு யாருமல்ல.

இவர்தான் கே.பி.ரெஜி என்றழைக்கப்படும் காந்தலிங்கம் பிரேம்ரெஜி. 10.11.1971 அன்று

பிறந்த இவர், யாழ் பல்கலைக்கழகத்தில் வணிகத்துறையில் பட்டப்படிப்பை நிறைவு

செய்தவர். 1995ஆம் ஆண்டின் இறுதியில் யாழ்ப்பாணம் நோக்கிய சூரியக்கதிர்

ஆக்கிரமிப்பு நடவடிக்கையை சிங்களப் படைகள் முன்னெடுத்திருந்த பொழுது தமிழீழ

விடுதலைப் புலிகள் அமைப்பில் இவர் இணைந்து கொண்டார்.

 

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கான மேலான வரலாற்றைக் கொண்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வெறுமனவே பதினான்கு ஆண்டுகள் மட்டும் உறுப்பினராக அங்கம் வகித்த இவர் தன்னை ஒரு கேணல் தரப் போராளியாக அடையாளப்படுத்திக் கொண்டாலும்கூட, இவருக்கு எந்தவொரு கள அனுபவமும் கிடையாது. 1996ஆம் ஆண்டின் முதற்கூறில் விசுவமடுவில் இயங்கிய அடிப்படைப் பயிற்சி முகாமில் இவருக்குப் பயிற்சி வழங்கப்பட்டது. அப்பொழுது புதிய போராளிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியமைக்காக இவர் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு தண்டனைக்கு ஆளாக்கப்பட்டிருந்தார்.

இத்தண்டனையின் ஓர் அங்கமாக விசுவமடுவில் இயங்கிய முகாம் ஒன்றில் பதுங்கு குழி

வெட்டும் பணி இவருக்கு வழங்கப்பட்டது. தண்டனைக்கு உட்படுத்தப்பட்டமைக்கான அடையாளமாக அரைக்காற்சட்டையும், மேலங்கியும் மட்டும் அணிவதற்கு இவருக்கு அனுமதி

வழங்கப்பட்டிருந்தது. அப்பொழுது சாரங்கன் என்ற போராளியே இவரது பதுங்கு குழி

வெட்டும் பணியை மேற்பார்வை செய்திருந்தார்.

தண்டனைக் காலம் நிறைவுற்ற பின்னர் மீண்டும் அடிப்படைப் பயிற்சியைத் தொடர்வதற்கு

அனுமதிக்கப்பட்ட இவர், அடிப்படைப் பயிற்சி நிறைவடைந்த பின்னர் தமிழீழ அரசியல்

துறையில் இணைத்துக் கொள்ளப்பட்டார். இவருக்கு வழங்கப்பட்ட இயக்கப் பெயர் அறிவன்.

வணிகத்துறை பட்டதாரி என்ற வகையில் முதலில் தமிழீழ அரசியல்துறையின் நிதிப்பிரிவில்

இவருக்குப் பணி வழங்கப்பட்டது. அக்காலப் பகுதியில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன்

அவர்களின் உதவியாளரான லெப்.கேணல் அலெக்ஸ் (அன்புமணி) அவர்களுக்கு அறிமுகமாகிய இவர், பின்னர் அவர் ஊடாக பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு

அறிமுகமாகியிருந்தார்.

 

ஜெயசிக்குறு எதிர்ச்சமரின் பொழுது களமுனைப் போராளிகளுக்கான உணவு விநியோக்கத்தராகப் பணியாற்றிய இவர், பின்னர் எல்லைப்படையின் கிராமம் ஒன்றுக்கான பயிற்சி மேலாளராக நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் 1998ஆம் ஆண்டின் இறுதியில் அக்கராயனில் ஏற்பட்ட பட்டினிச்சாவுச் சம்பவமொன்றை அடுத்து தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தில் இவருக்குப் பணிமாற்றம் வழங்கப்பட்டது.   2002ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையை தொடர்ந்து சிறீலங்கா அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மாற்றம் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருந்தது.

இதன்பொழுது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைவராக தமிழீழ தேசிய உணர்வாளரான

சிவனடியார் அவர்கள் நியமிக்கப்பட்டார். சிவனடியார் அவர்களுக்கு உதவியாக தமிழர்

புனர்வாழ்வுக் கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக கே.பி.ரெஜியும், திட்டமிடல்

பணிப்பாளராக லோறன்ஸ் திலகர் கிறிஸ்ரி அவர்களும் நியமிக்கப்பட்டனர். அதன் பின்னர்

சந்திரிகா குமாரதுங்கவின் ஆலோசகரான ஹரீம் பீரிஸ் அவர்களுடன் ரெஜிக்கு தொடர்பு

ஏற்பட்டிருந்தது. ஹரீம் பீரிஸ் அவர்களுடன் இவர் கொண்டிருந்த நெருங்கிய உறவு

காரணமாகவே கடற்கோளுக்குப் பின்னரான புனர்வாழ்வுப் பணிகளுக்காக தமிழர்

புனர்வாழ்வுக் கழகத்திற்கு சந்திரிகா குமாரதுங்கவால் பாராட்டுச் சான்றிதழ் ஒன்றும்

வழங்கப்பட்டது.

 

இதேபோன்று ஹரீம் பீரிஸ் அவர்களின் அனுசரணையுடனேயே தமிழர் புனர்வாழ்வுக்

கழகத்திற்கான வங்கிக் கணக்கும் இவரால் கொழும்பில் திறக்கப்பட்டு, அதன் ஊடாக நிதிப்

பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிறீலங்கா அதிபராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றதை தொடர்ந்து, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கொழும்பு வங்கிக் கணக்கின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வந்த பரிவர்த்தனைகளை நிறுத்துமாறு இவருக்கு வன்னியில் வைத்து அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு மேலதிக பணத்தை 2006ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து தருவித்து விட்டு இவர் இலண்டனை வந்தடைந்தார்.

 

இதனை அடுத்து இப்பணத்தை வங்கிக் கணக்கிலிருந்து எடுத்து, கணக்கை மூடுவதற்கு லோறன்ஸ் திலகர் முற்பட்ட பொழுது வங்கிக் கணக்கு ஏற்கனவே முடக்கப்பட்டிப்பதாக வங்கி

முகாமையாளரால் தெரிவிக்கப்பட்டது. எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ள உறுதிப்படுத்தப்பட்ட

தகவல்களின்படி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்ட பொழுது

அதற்கு சொந்தமான நூற்றுப் பதினொரு கோடியே ஐம்பத்தேழு இலட்சம் ரூபா பணத்தையும்,

சொத்துக்களையும் சிங்கள அரசு சுவீகரித்துக் கொண்டது.

இதனை மீட்பதற்கு ஏதுவாக உடனடியாக கொழும்பு சென்று நீதிமன்றத்தில் வழக்குத்

தொடருமாறு ரெஜிக்கு வன்னியிலிருந்து அறிவுறுத்தப்பட்டபொழுது, தனது விசா இலண்டனில் முடக்கப்பட்டிருப்பதாகக் கூறி கொழும்பு செல்வதை ரெஜி தவிர்த்திருந்தார். ரெஜியின் இந்நடவடிக்கையின் எதிரொலியாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு எதிராக சிங்கள அரசால் வழக்குத் தொடரப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்கு சமூகமளிக்குமாறு ரெஜிக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. எனினும் இதனை ரெஜி எதிர்கொள்ளத் தவறிய நிலையிலேயே அனைத்துலக காவல்துறையினரின் (இன்ரர்போல்) தேடப்படுவோர் பட்டியலில் இவர் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

 

இதற்கிடையே 2007ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பிரித்தானியாவில் அகதித் தஞ்சம் கோரிய

ரெஜி, தனது பினாமிகள் ஊடாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணத்தில் இலண்டனில்

இரண்டு பல்பொருள் அங்காடிகளையும், இலண்டனுக்கு வெளியே மூன்று எரிபொருள்

நிலையங்களையும் கொள்வனவு செய்திருந்தார். இக்காலப் பகுதியில் நோர்வே சென்று

அமைச்சர் எரிக் சுல்கைம் அவர்களை சந்திக்குமாறு இவருக்கு வன்னியிலிருந்து பணிப்புரை

வழங்கப்பட்ட பொழுது, தனது விசாவை பிரித்தானிய உள்துறை திணைக்களம் திட்டமிட்டு

இழுத்தடிப்பதாக இவர் பொய்யுரைத்திருந்தார்.

 

உண்மையில் இவர் பிரித்தானியாவில் அகதித் தஞ்சம் கோரியதன் காரணமாக இவருக்கு உள்துறை திணைக்களத்தால் அப்பொழுது தற்காலிக வதிவிட அனுமதியே வழங்கப்பட்டிருந்தது.  இதன் பின்னர் புலம்பெயர் தேசங்களில் இயங்கும் தமிழீழ தேசிய கட்டமைப்புக்களை குழப்பும் நடவடிக்கைகளில் இவர் ஈடுபடுவது தமிழீழ தேசிய செயற்பாட்டாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு இது தொடர்பாக வன்னிக்கு முறைப்பாடுகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக 2003ஆம் ஆண்டு வெளிநாட்டுக் கட்டமைப்புக்கள்

மறுசீரமைக்கப்பட்ட பொழுது ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு பணிநீக்கம்

செய்யப்பட்ட கே.பியின் ஆட்களுடன் இவர் கொண்டிருந்த தொடர்பு பற்றியும், வெளிநாட்டுக்

கட்டமைப்புக்களின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இவர் நடந்து

கொண்டமை குறித்தும் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கு முறைப்பாடுகள்

தெரிவிக்கப்பட்டன.

 

இதனையடுத்து இவருடன் தொடர்பு கொண்ட தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள், இவரைக் கடுமையாகக் கடிந்து கொண்டதோடு, வெளிநாட்டுக் கட்டமைப்புக்களுடன் இணைந்து செயற்படுமாறு இவருக்கு அறிவுரை வழங்கியிருந்தார். இது தொடர்பான பல கடிதங்கள் எமது வசம் இருந்தாலும்கூட, இவற்றில் இரண்டு கடிதங்களையும், ரெஜியால் எழுதப்பட்ட இன்னுமொரு கடிதத்தின் முக்கிய பந்திகளையும் மட்டும் இப்பத்தியில் நாம் இணைத்துக் கொள்கின்றோம்.

 

இதில், 19.07.2008 அன்று ரெஜியால் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கு எழுதப்பட்ட

கடிதத்தில் குறிப்பிடப்பட்ட சில விபரங்களையும், அமைப்பு ஒன்றின் பெயரையும், ஒரு

நபரின் பெயரையும், அவர் செல்லவிருந்த நாட்டின் பெயரையும் சட்டபூர்வ காரணங்களுக்காக

இக்கடிதத்தில் இருந்து நாம் நீக்கியுள்ளோம். அக்கடிதம் பின்வருமாறு அமைந்திருந்தது:

 

அன்புடன் திரு பா.ந.அண்ணரிற்கு வணக்கம்,

நாங்கள் முக்கியமாக சிறுவர் இல்லங்கள், போசாக்கு நிலையங்கள், செயற்கை கால்

பொருத்தும் திட்டம் என்பவற்றையே கவனத்தில் எடுத்து செய்ய முயற்சி செய்கின்றேன்.

செயற்கை கால் ஒஒஒஒஒஒ இருந்து எடுத்து அனுப்புவதற்கு (ஒஒஒஒஒஒ ஆட்கள்) 8 இலட்சம்

அனுப்பியுள்ளேன். தவிர மாதாந்தம் இரண்டரை இலட்சம் ரூபா வெண்புறாவிற்கு நேரடியாக

கிடைக்க ஒழுங்கு செய்துள்ளேன்.

நேற்று சிறுவர் இல்லங்களிற்கான மூன்றுமாத கொடுப்பனவாக 41 இலட்சம் வவுனியாவிற்கு

அனுப்பியுள்ளேன். மாதாந்தம் உரிய நேரத்திற்கு அனுப்ப முடியாமைக்கு வருந்துகின்றேன்.

அண்மையில் பிரான்சில் வழமையான விளையாட்டுபோட்டி நடைபெற்றது. புனர்வாழ்வு கழகமும் ஒஒஒஒஒஒ சேர்ந்துதான் நடாத்துவது. வழமை வருமானத்தில் மூன்றில் இரண்டு ஒஒஒஒஒஒ , ஒருபங்கு ஒஒஒஒஒஒ ஒஒஒஒஒஒ வழமை. இம் முறை ஒஒஒஒஒஒ ஈரோ வரை சேர்ந்தது.ஒஒஒஒஒஒ ஈரோ அவர்களிடம் கொடுக்கப்பட்டது. உண்மையில் இப்பணம் சிறுவர் இல்லங்களிற்கு 4 மாதங்களிற்கு போதுமானது.

நோர்வேயில் வழமையாக நாங்கள்தான் நிகழ்ச்சிகளிற்கு கன்ரீன் போடுவோம். தற்போது

அமைப்பின் பொறுப்பாளர் மாற்றப்பட்டுள்ளார். புதிய பொறுப்பாளர் இனிமேல் தாங்கள்தான்

கன்ரீன் நடாத்தப்போவதாக சொல்லியுள்ளார். நாம் ஒன்றும் கதைப்பதில்லை. நான  ுன்பு

அனுப்பிய கடிதங்கள் கிடைத்திருக்கும் என நினைக்கின்றேன். புனர்வாழ்வுக்கழகத்தின்

வெளிநாட்டு பிரச்சினைகளிற்கு எங்கு இருந்தும் எந்தவிதமான தீர்வுகளும் வராது என்பது

தெரியும். ஆதலால் நான் தங்களிற்கு எழுதி தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை.

திரு ஒஒஒஒஒஒ அவர்களை அனுப்பி உதவுமாறு கேட்டிருந்தேன். ஒஒஒஒஒஒ ற்கு அனுப்பவேண்டும்.

அங்கு மரக்காலை போட்டு முடிந்து விட்டது. இரண்டு வெளிநாட்டில் இருப்போர்

பணிபுரிந்தாலும், நிதி விடயத்தில் ஒஒஒஒஒஒ இருந்தால் நல்லது. இந்தியாவிற்கு

அனுப்பினால் நான் எடுப்பேன்.

நன்றி.

இப்படிக்கு

அறிவன்

 

ரெஜியால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் பற்றி அனைத்துலக தொடர்பகப் பொறுப்பாளர்

வீ.மணிவண்ணன் அவர்களுடன் ஆராய்ந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் அவர்கள்,

ரெஜியை வெளிநாட்டுக் கட்டமைப்புக்களுடன் இணைந்து செயற்படுமாறு மீண்டும் பணித்துக்

கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். சிங்களப் படைகளின் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கை

காரணமாக மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்து பெருவாரியான மக்கள்

இடம்பெயர்ந்து அவலத்திற்கு ஆளாகியிருந்த நிலையில், வெளிநாட்டுக் கட்டமைப்புக்களுடன்

இணைந்து மக்களின் துயர் துடைக்கும் பணிகளை முன்னெடுக்குமாறு ரெஜிக்கு தமிழீழ

அரசியல்துறைப் பொறுப்பாளரால் பணிக்கப்பட்டிருந்தது.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்ட சில விடயங்களையும், அதிலிருந்த மற்றுமொரு நபரின்

பெயரையும் சட்டபூர்வ காரணங்களுக்காக நாம் தவிர்த்துள்ளோம். 31.07.2008 அன்று தமிழீழ

அரசியல்துறைப் பொறுப்பாளரால் ரெஜிக்கு அனுப்பிவைக்கப்பட்ட அக்கடிதம் பின்வருமாறு

அமைந்திருந்தது:

 

அன்பின் றெஜிக்கு,

தற்பொழுது மக்கள் மன்னார் மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து

இடம்பெயர்ந்துள்ளனர். இதனை ஒஒஒஒஒஒ ஒஒஒஒஒஒ மக்கள் மத்தியில் வேலை செய்து ஒஒஒஒஒஒஒஒஒஒஒஒ. இவ்விடயம் தொடர்பாக கஸ்ரோவிடம் கதைத்துள்ளேன். அவர்களும் நாங்களும் ஒன்றாகச் சேர்ந்து இதனைச் செய்வதால் ஒஒஒஒஒஒ ஒஒஒஒஒஒ . அதனை ஒஒஒஒஒஒ ஒஒஒஒஒஒ ஒஒஒஒஒஒ உதவியாக இருக்கும். இவ்விடயம் தொடர்பாக நீங்கள் எதுவித தயக்கமும் இல்லாமல் ஒஒஒஒஒஒ உடன் கதைக்கவும். அவருக்கு முழுவிபரமும் தெரியும்.

நன்றி

இப்படிக்கு,

பா. நடேசன்

 

எனினும் இதன் பின்னரும் தனது குழப்ப வேலைகளை ரெஜி நிறுத்திக் கொள்ளவில்லை.

21.08.2008 அன்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கு மிகவும் நீண்டதொரு கடிதத்தை ரெஜி அனுப்பியிருந்தார். வெளிநாட்டில் சுயாதீனமாக இயங்கும் தமிழீழ தேசிய ஊடகங்களை கட்டுப்படுத்துதல், பிரித்தானிய தமிழர் பேரவை போன்ற சுயாதீன பரப்புரை

அமைப்புக்களின் செயற்பாடுகளை முடக்குதல் உட்பட பல்வேறு திட்டங்களைக் கொண்ட ஒரு

நீண்ட கடிதத்தையே ரெஜி எழுதியிருந்தார்.

இதில் பிரித்தானிய தமிழர் பேரவையையும், 12.07.2008 அன்று இலண்டனில் இடம்பெற்ற

பொங்குதமிழ் நிகழ்வையும் கடுமையாக விமர்சித்து ரெஜி எழுதிய பந்திகள் சிலவற்றை

இப்பத்தியில் இணைத்துக் கொள்கின்றோம். அவை பின்வருமாறு அமைந்திருந்தன.

'...பிரித்தானிய தமிழர்பேரவை ஆரம்பத்தில் இயக்கத்தின் தடையினை நீக்க வழக்கு

போடப்போவதாக கூறி இருந்தது. இதுபற்றியும் இவர்களை எவ்வாறு பிரிட்டிஸ் அரசு

பயன்படுத்தலாம் என்பது பற்றியும், நான் முன்பு எழுதியிருந்தேன்.

...இந்த மிகப்பெரிய சூழ்ச்சியில் தமிழ்போரம் மாட்டுப்பட போகின்றது. தயவு செய்து

இதற்கு அனுமதிக்கவேண்டாம். பிரித்தானிய தமிழ்போரத்தினை ஒரு நிறுவனமாக வைத்திருக்க வேண்டும் தவிர இயக்கத்தின் அல்லது தமிழ் மக்களின் ஒரு தனித்துவ நிறுவனமாக ஆக்க கூடாது. ஆனால் அதுதான் நடக்கின்றது. மக்களிடம் அங்கத்தவர் பட்டியல் சேர்ப்பது, தாம் இயக்கத்தின் அரசியல் பிரிவு என ஆருடம் கூறுவது, இயக்கத்திற்கு போராட்டம் செய்வதுதான் கடமை, அரசியலை பார்ப்பது எமது கடமை என கூறுவது, இதெல்லாம் தெளிவற்ற கூற்றுக்களோ அன்றி தற்செயலான வாக்கியங்களோ அல்ல. திட்டமிட்டு மக்கள் மத்தியில் ஊன்றப்படுகின்றன.

 

அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற பொங்குதமிழ், தமிழ்போரத்திற்கான ஆதரவு தேடும் தளமாகவே பாவிக்கப்பட்டது. ...தங்களிற்கு அசுரபலம் இருப்பதாக சொல்லிகொள்ளும்

தமிழ்போரம் ஒரு சிறிய பத்திரிகையில் ஒரு சின்ன மூலையிலாவது ஏன் செய்தியினை

வரசெய்திருக்க கூடாது? யாருக்காக பொங்குதமிழ் செய்தோம்? பொங்குதமிழ் நடந்த இடம்

உங்களிற்கு எங்கு என்று தெரியுமா?'

 

இதனால் கடும் சீற்றமுற்ற தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர், ரெஜியை வன்னிக்கு

வருவதற்கான ஒழுங்குகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு பணித்திருந்தார். இது பற்றிய முழு விபரங்களையும், வன்னிக்குச் செல்வதைத் தவிர்த்து தமிழீழ அரசியல்துறைப்

பொறுப்பாளருக்கு ரெஜி கூறிய சாக்குப் போக்குக்களையும், சுயாதீன ஊடகங்களையும்,

சுயாதீன பரப்புரை அமைப்புக்களையும் விமர்சித்து ரெஜி எழுதிய கடிதத்தின் முழு

வடிவத்தையும் எமது அடுத்த பத்தியில் இணைத்துக் கொள்கின்றோம்.

 

(தொடரும்)

நன்றி: ஈழமுரசு (10.06.2011)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com