Contact us at: sooddram@gmail.com

 

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

கொஞ்சம் அவசரப்பட்டு எழுதப்படும் கட்டுரையோ என்ற எண்ண ஓட்டம் எனக்குள் ஓடிக்கொண்டு இருந்தாலும், தாமதிப்பது என்பது அதனைவிட மோசமான நிலமைகளை ஏற்படுத்திவிடுமோ? என்ற ஆதங்கத்துடன் இக்கட்டுரையை எழுதுகின்றேன். நாம் கடந்து வந்த பாதையில் ஏற்பட்ட தோல்விகள் சற்ற அவசரமாகவும் அதேவேளை எச்சரிக்கை உணர்வுடன் செயற்பட எம்மை வைத்துள்ளது என்பது உண்மையே. அதுவும் தமிழ் காங்கிரஸில் ஆரம்பித்து, தமிழரசுக்கட்சி, தமிழர்விடுதலைக் கூட்டணி என்று வந்து இன்று (ஆயுதம் ஏந்தாத புலிகள்) தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று வந்துள்ள வரலாற்று நிகழ்வுகள் எமக்கு கற்றுத்தந்த பாடங்கள் நமக்கு நிறையவே உண்டு. இவ் மிதவாத தலமைகள் தமிழ் மக்களின் பிரச்சனையை கையாண்ட விதமும் அதன் தொடர்சியாக இன்று தமிழ் மக்கள் அடைந்துள்ள நிலமைகளுமே இக்கட்டுரையை அவசரமா எழுதத் தூண்டியது. தமிழ் மக்களின் இன்றைய மோசமான நிலமைகளுக்கு இலங்கையை ஆண்டு வந்த பேரினவாத சக்திகளின் பங்கிற்கு எந்தவகையிலும் குறைவில்லாத செயற்பாட்டை மேற் கூறிய தமிழ் மிதவாத சக்திகள் மேற் கொண்டன. பேரினவாதிகளின் விருப்புக்களையும் ஏகாதிபத்திய சக்திகளின் எதிர்பார்பக்களையும் ஆயுதங்களுக்கூடாக வடிவம் கொடுத்தது புலிகள் என்பதையும் நாம் அறிந்ததினால் இவற்றை எழுதுகின்றோம். 

தமிழ் தேசிய கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்பட்ட உருளைக்கிழங்கு மூட்டை. மூட்டையை அவிழ்த்து விட்டால் உருளைக் கிழங்குகள் தனித்தனியாக போய்விடுவதைப் போல் இவர்களும் தனித் தனியாக செல்லும் தன்மை உடையவர்கள். ஆனால் வர்க்க குணாம்சத்தில் இவர்கள் யாபேரும் ஒரு புளி மூட்டையே. அவ்வளவு இறுக்கமான பிணைப்பில் ஒரேமாதிரியான செயற்பாடுகளை உடையவர்கள். இதில் உள்ள யாபேரும் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுவதில் ஒரே ரகம். ஏகாதிபத்திய நலன்சார்ந்த நிலைப்பாட்டில் உள்ளவர்கள். அதனால் உள்நாட்டில் ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளான ஐக்கிய தேசியக்கட்சியை தமது முன்னோர்கள் போல் ஆதரித்து செயற்படுபவர்கள். பிழைப்புவாதிகள், சந்தர்பவாதிகள், சுயநலவாதிகள். நாற்காலிகளை இறுக்கப்பிடிக்கும் பதவி வெறிபிடித்த சுயநலவாதிகள்.

இதற்காக தமிழ் தேசியம் பேசும் வாய்வீச்சாளர்கள். இதற்காக தமது 'சகபாடிகளை' கொலை செய்ய அனுசரiணாக இருந்த 'புண்ணியவான்கள்'. புலிகளிடம் சோரம் போன பச்சை துரோகிகள். இவர்களை மனிதர்கள் என்ற வட்டத்திற்குள் வைத்து பார்க்க முடியாது. ஒன்றாக இருந்த காலத்தில் சகபாடிகள் பட்டினியால் வாடியபோது, தமது குடும்ப உறவுகளுடன் விருந்துண்டு மகிழ்ந்தவர்கள். காட்டிக் கொடுத்து சகபாடிகளை பரலோகம் அனுப்பிய பொட்டனின் புலனாய்வு ஏஜன்டுகள். இன்றும் புலிகள் இருந்திருந்தால் அவர்களின் கால்களை நக்க தயாராக இருக்கும் பச்சோந்திகள். இவர்களுக்கு எப்போதும் மக்கள் ஒரு பொருட்டே அல்ல. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டங்கள் உருவாகுவதை இல்லாமல் செய்ததில் பெரும் பங்காற்றிய காட்டிக் கொடுப்பாளர்கள். நாற்காலிகளை இறுகப்பிடிக்க எதையும் செய்வார்கள். மொத்தத்தில் இவர்கள் மனிதர்களே அல்ல.

இதில் அங்கம் வகிக்கும் முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களாக இருக்கட்டும், ஈபிஆர்எல்எவ்(சுரேஸ் அணி) உறுப்பினர்களாக இருக்கட்டும். ரெலோ உறுப்பினர்கள் இருக்கட்டும், தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்களாக இருக்கட்டும் தமது அமைப்பின் தலைவர்களை கொலை செய்த புலிகளுடன் ஐக்கியப்பட்ட மனித நேயமற்ற மகா பாதகர்கள். எல்லாம் தமது சுயநலத்திற்காகவும் தமது குடும்பங்களின் சுகபோக வாழ்விற்காகவும் இவ் காட்டிக் கொடுப்புக்களில் இவர்கள் ஈடுபட்டனர். இவர்கள் ஒருவகையில் 'புத்திசாலிகள்' தான். ஏன் எனில் புலிகள் வன்னியில் இருந்த காலத்தில் வன்னி, கொழும்பு, இந்தியா, வெளிநாடு என சகல இடங்களுக்கும் சென்று வரக்கூடிய செயற்பாட்டை இவர்கள் மட்டுமே கொண்டிருந்தவர்கள்.

இக் கூட்டமைப்பு அமிர்தலிங்கத்தை கொலை செய்தவர்களை மன்னித்த மகாபிரபுகளையும் மனித நேயத்தின் விளைநிலமான பத்மநாபா என்ற நல்ல மனிதனை கொன்றவர்களுடன் விருந்துண்டு மகிழ்ந்து சுபத்திரனை கொன்றொளித்தவர்களையும். தமது தலைவர் சிறீசபாரத்தினத்தையும் அவர் தம் போராளிகளை துரத்தி துரத்தி சுட்டுக் கொன்றவர்களை நண்பர்களாக ஏற்றுக் கொண்டவர்களையும், தனது தந்தையைக் கொன்றவர்களை மன்னித்த தனையனையும் கொண்ட அமைப்பாகும்.

இவர்கள் புலிகளின் சகல கொலைகளுக்கும் துணைபோன போர்க்குற்றவாளிகள். யுத்தத்தில் மரணித்த மக்களின் மரணங்களை தடுக்காமல் சர்வதேசம் சுற்றி புலிகளைக் காப்பாற்ற முயன்ற புலிகளின் 'இராஜதந்திரிகள';. இன்றுவரை அகதி முகாங்களில் உள்ள மக்களை சந்திப்பதை தவிர்க்கும் மக்கள் சேவையாளர்கள். தமது குடும்பங்களை இந்தியாவிலும் ஏனைய வெளிநாடுகளிலும் பத்திரமாக பாதுகாப்பாக வைத்துவிட்டு ஏதும் இல்லா எம்மின சிறார்களை குண்டுகளுக்கு பலியாக்கிய மனித நேயம் படைத்தவர்கள். 3 இலட்சம் மக்கள் முள்ளுக்கம்பிக்கு பின்னால் அடைபட தாமும் தமது குடும்பங்களும் வெளிநாடுகளிலும் கொழும்பிலும் அடுக்கு மாடிவீடுகளில் விருந்துண்டு மகிழ்ந்தவர்கள், மகிழ்கின்றவர்கள். இவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றால் எப்படி நம்ப முடியும்? புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் வாக்குப் பெட்டிகள் நிரப்பப்பட்டு பாராளுமன்றம் சென்றவர்கள். தமிழ்செல்வனின் புன்சிரிப்பு 'வேண்டுகோளை' தலையால் நடந்து நிறைவேற்றியவர்கள். பொட்டனின் நம்பிக்கை வட்டத்தில் இருந்த காட்டிக்கொடுப்பாளர்கள். இவர்கள் எப்படி பாராளுமன்ற அங்கத்தவர் என்று ஏற்றுக் கொள்ள முடியும். எப்படி மனிதர்கள் என்ற வட்டத்திற்குள் சேர்த்துக் கொள்ள முடியும்.

இப்படிபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை, இணக்கப்பாடு, ஐக்கியம் என்றால் எப்படி ஐயா ஏற்றுக் கொள்ள முடியும். என்னத்தையிட்டு பேச்சுவார்த்தை, இணக்கப்பாடு, ஐக்கியம்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மாறிவிட்டார்கள் என்றால் என்ன இது எம்ஜிஆர் - நம்பியார் தமிழ்படமா? எல்லா அநியாயங்களையும் செய்துவிட்டு கடைசி சீனில் வில்லன் கதாநாயகன் காலில் வீழ்ந்து நான் திருந்தி விட்டேன் என்று சொல்வதை நம்புவதற்கு. ஒரு மனிதனில் ஏற்படும் குணாம்ச மாற்றம் ஒரு படிமுறையான முறையில் கால ஓட்டத்தினூடாக மாத்திரம் சாத்தியமான ஒன்று. மே 18 இற்கு பிந்திய 6 மாதத்திற்குள் இவர்கள் திருந்திவிட்டார்கள் என்றால் நம்பவா முடியும்? நடக்கின்ற காரியமா? இன்றும், இன்னும் தமது வர்க்க விசுவாசத்தை பல இடங்களில் காட்டி தொடர்புகளை பேணுபவர்கள் இவர்கள். அண்மையில் முடிந்த மாநகர சபை தேர்தலிலும் வெளிநாட்டுப்  புலிகளின் பினாமிகளிடம் இருந்த பணம் பெற்று 'வெற்றியை' தமதாக்கிக் கொண்டவர்கள். இந்தியாவால் உருவாக்கப்பட்ட 13 வது திருத்தச்சட்டதை அரசியல் தீர்விற்க ஒரு ஆரம்ப படியாக எடுத்து செயல்படலாம் என்பதை இன்றும் நிராகரிப்பவர்கள். தம்மை காத்துக்கொள்ள இந்தியாவுடன் நட்புறவு? கொண்டாடி இலங்கை அரசின் ஆசீர்வாதம் பெற்று அஞ்ஞானவாசம் முடித்து நாற்காலிகளைப் பிடிக்க இலங்கைக்கு வந்தவர்கள்.

13 வது திருத்தச்சட்டம் தமிழ்மக்களின் பிரச்னைக்கு முழுமையான அரசியல் தீர்வாகாது. ஆனால் இதனை ஒரு ஆரம்பமாக எடுத்து பயணிக்க ஆரம்பிக்கலாம். அரசுடன் இணக்கமான அணுகுமுறை  அரசியலை முன்னெடுத்து சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் பேசி பெறவேண்டிய நிலையில் இருக்கும் நிலமைகளை ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து செயற்பட்டு இல்லாமல் செய்ய முயலும் செயற்பாடுகளை இவர்களும் தம் முன்னோர் போலவே பின்பற்றுபவர்கள். அடிப்படையில் இன்னும் ஒரு தலைமுறைக்கு மேல் பிரசனையை இழுத்துக்கொண்டு போகச் செய்யும் படு பாதகமான அணுகு முறையை கடைப்பிடிக்க தமது சகாக்களை தென்னிலங்கையில் தேடுபவர்கள். இதன் மூலம் இலங்கையில் தமிழ் மக்கள் என்றொரு இனம் வாழ்ந்தார்கள் என்பதை எதிர்காலத்தில் புதைபொருள் ஆராய்ச்சியில் அல்லது வரலாற்றுப் புத்தகங்களில் மட்டும் தேட வைக்கும் அழிவுப்பாதைக்கு வழி சமைப்பவர்கள். 

இப்படிபட்வர்களுடன் எப்படி பேசுவது? என்ன அடிப்படையில் பேசுவது? எதைப் பேசுவது?

எனவேதான் கூறுகின்றோம் நஞ்சுப் பாம்பிற்கு பால் ஊற்றும் வேண்டாத வேலையை யாரும் செய்யாதீர்கள். இது தந்திரோபாயமும் அல்ல. தவிர்க்க முடியாத நிலமையும் அல்ல. தவறான முடிவுகளை ஏற்படுத்தப் போகும் செயல். நஞ்சுப் பாம்பிற்கு பால் ஊற்றும் பிழையான செயற்பாட்டை செய்யாதீர்கள். இது உங்களையும், தமிழ் மக்களையும் மேலும் நடுத்தெருவிற்கு கொண்டுவந்து எல்லாவற்றையும் நாசப்படுத்திவிடும். திம்புவில் ஐக்கியப்பட்டோம் என்றால். அன்று பலரும் பிறந்த குழந்தை பருவ வெள்ளந்தி? மனநிலையில் இருந்தோம். பாவங்களை செய்ய பெரியளவில் பழக்கப்படவில்லை. தனிநபர் தவறுகள் மட்டும் இருந்தன. அமைப்பு ரீதியாக புலிகள் ஏனைய விடுதலை அமைப்புக்களோ அல்லது அரசியல் அமைப்புக்களோ தடை செய்யப்பட்ட ஜனநாக மறுப்பு நிலமைகள் அல்லது கொலை செய்யப்பட்ட நிலமைகள் இல்லை. இலங்கையை ஆண்ட ஐக்கிய தேசியக்கட்சியே தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு அகதி அந்தஸ்தை வழங்கி ஆயுதம் ஏந்திய விடுதலை அமைப்புக்களுடன் ஐக்கியப்படவேண்டிய நிர்பந்தங்களை ஏற்படுத்தி இருந்தனர். ஆனால் இன்றோ நிலமைகள் முற்று முழுதாக வேறு வடிவங்களில் உள்ளன. இவற்றை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

புலிகள் ஆயுத ரீதியாக ஒடுக்கப்பட்டிருக்கும் நிலமையில் கிடைத்திருக்கும் குறைந்த பட்ச ஜனநாய நிலமைகளை பாவித்து மக்களிடம் செல்வோம். சிறப்பாக இடம் பெயர்ந்து வாழும் மக்களிடம் செல்வோம். அவர்களோடு ஒன்றாக வாழ்ந்து அவர்களின் புனர்வாழ்வு, புனருத்தாரணம், மீள்குடியேற்றம் போன்வற்றில் இணைந்து செயற்படுவோம். மக்களின் மனங்களில் நம்பிக்கயை ஊட்டுங்கள். முடிந்தால் கடந்து வந்த விடுதலைப்பாதையில் நடந்த தவறுகளுக்கு சுயவிமர்சன அடிப்படையில் மக்களுடன் பேசுங்கள். இதன் தொடர்சியாக அரசியல் தீர்வுத்திட்டதை நோக்கிய பயணத்திற்கு பலமான அடித்தளம் இடுங்கள். இதற்கு தேவையான சொந்த காலில் நிற்கும் சுய பொருளாதார திட்டங்களை அமைத்துக் கொள்வோம், இதன் மூலம் தங்கியிருக்கும் நிலமைகளை தவிர்போம்.

மறுபுறத்தில் புலிகளின் ஏகபோக சிந்தனை ஜனநாயக மறுப்பாக மாறி மாற்றுக்கருத்தாளர்களை நிராகரித்தது. விமர்சிப்பவர்களை தூக்கிச் சென்று 'போட்டு'த் தள்ளியது. இறுதியில் மாற்றுக்கருத்தாளர்களை தடை செய்கின்றேன் உன்று புறப்பட்டு ஆயுத ரீதியாக ஒடுக்கியது. இறுதியாக தமது இன மக்களுக்கு எதிராகவும் ஆயுதம் தூக்கியது. பாசிஷமாக உருவெடுத்தது. புலிகளின் மறுபக்கத்திலும் இதுபோன்ற வளர்ச்சிப் போக்கு சிலரிடம் தலைதூக்கியே வருகின்றது. இதனையும் நாம் ஏற்க முடியாது. ஏகபோக சிந்தனை ஐக்கியப்படுவதற்கான முதல் தடைக்கல்லு. இவர்களும் தவிர்கப்பட வேண்டியவர்களே. இவ் நவ ஏகபோக சிந்தனைவாதிகளுடன் அவர்களின்  ஏகபோக சிந்தனையின் அடிப்படையில் வைத்துக்கொண்டு இணைத்து செயல்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

வெளிநாட்டில் வாழும் நாம் ஓடிவந்தவர்கள் அல்லது ஓடவிரட்டப்பட்டவர்கள.; நாம் பிறந்த மண்ணில் தற்போது வாழும் மைந்தர்கள் நீங்கள்தான் என்ன செய்யவேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும் நாம் எமது பார்வையை மட்டும் சொல்ல முடியும.; தீர்மானிப்பதும் செயற்படுவதும் நீங்கள்தான். அதுதான் சரியானதும் கூட. ஆனாலும் எங்கேயோ பிழைக்கின்றது என்று மட்டும் எமக்கும் தோன்றுகின்றது. அவிழ்ந்த உருளைக்கிழங்கு மூட்டையாக இருக்கும் அவர்களை(ரிஎன்ஏ) ஒரு மூட்டையாக சேர்க்கும் வேலையை செய்ய மாட்டீர்கள் என்ற நம்புகின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முதலில் கூட்டமைப்பை கலைக்கட்டும். தனித்தனி அமைப்பாக வரட்டும். ஒவ்வொரு அமைப்பும் தமது கடந்த கால (சிறப்பாக புலிகளுடான 'நல்;ல' உறவு காலத்தில்) தவறுகளுக்கு மக்கள் மன்றங்களில் மன்னிப்பு கோரி சுயவிமர்சனம் செய்யட்டும். 13 வது திருத்தச்சட்டத்தை ஏற்றுக் கொள்ளட்டும். நல்வர்களுக்கும் வல்லவர்களுக்கும் வழிவிட்டு (தற்காலிகமாவேனும்)ஒதுங்கட்டும். அகதி முகாங்களில் மக்களோடு மக்களாக அவர்களுடன் தங்கி சேவை செய்யட்டும். இதன்பின்பு யோசிக்கலாம் இவர்களுடன் பேசலாமா? இல்லையா? என்று. இது சம்மந்தருக்கும் பொருந்தும், சிறீகாந்தாவிற்கும் பொருந்தும், சிவாஜிலிங்கத்திற்கும் பொருந்தும், செல்வம் அடைக்கலநாதனுக்கும் பொருந்தும். சுரேஷ் பிரேமசந்திரனுக்கும், பொன்னம்பலம் கஜேந்திரனுக்கும் பொருந்தும். (பத்மினி சிதம்பரநாதன் வகையறாக்களில் நம்பிக்கை இல்லை. உடம்பெல்லாம் விஷத்துடன் வாழும் ஜந்துகள் இவர்கள்.) மாறாக இவர்கள் வெளிநாடுகளில் சுகபோகம் அனுபவிக்கும் தம் குடும்ப உறவுகளுடன் மட்டும் உல்லாசம் பின் தமிழ் தேசியவாதம்...... பின்பு அகதி முகாம் பற்றிய குற்றச்சாட்டுக்கள் என்றால் சரிப்பட்டு வராது.

தமிழ் தேசிய கூட்மைப்பினர் திருந்தி? வரும் வரை பொறுத்திருங்கள் ஜனநாய தோழர்களே! பேசுவதை தவிர்த்;திருங்கள் தோழர்களே! அன்றேல் தமிழ் தேசியக் கூட்மைப்பினரின் பாவங்களை நீங்களும் சேர்ந்து சுமந்து அவ் அசுத்தங்களை நீங்களே கழுவவேண்டிவரும். பாவங்களை சுமக்க நீங்கள் ஒன்றும் இயேசுநாதரும் அல்ல. ஒரு இயேசுநாதர் பிறந்தார் அவரும் இறந்துவிட்டார் என்பதே உண்மைநிலை என்பதை ஏற்பவர்கள் நீங்கள் என்பதுவும் எமக்கு தெரியும். என்ன? பின்பு ஒரு காலத்தில் 'தமிழ் தேசியக் கூட்டமைப்பை புலிகள் அமைத்த போது தொலைபேசி அருகில் அழைப்பை எதிர்பார்த்திருந்த எங்கள் சகா கூப்பிட்டார்' என்று எதிர்காலத்தில் சொல்லும் காரணம் ஏற்புடையதாக இல்லாமல் போய்விடும். யாருடனும் பேசுவதில் தவறில்லை என்பது பொதுவாக பார்த்தால் சரியாகப்படும். அது மனிதர்களுடன் பேசுவதைதான் குறிக்கும். மனிதர் அல்லதவர்களுடன் பேசுவதை அல்ல. மிருகங்களுடன் வாழ்ந்த மனிதர் அல்லாதவர்களுடன் பேசுவதை தவிருங்கள் அல்லது பேசாதிருங்;கள். அவர்கள் மனிதராக? மாறும் வாய்புக்களை நீங்களே தடுத்தவர்கள் என்ற பழிச் சொல்லுக்கு எதிர்காலத்தில் உள்ளாகாதீர்கள்.

உங்களுடன் காடு மேடு எல்லாம் திரிந்து உண்ண உணவின்றி. உறங்க இடமின்றி இராணுவம், புலிகளின் துப்பாக்கி சனியன்களுக்கு முகம் கொடுத்த மக்களுக்காக போராடுகின்ற உங்கள் சக தோழர்கள்; என்ற உரிமையுடன் கேட்கின்றோம், வேண்டாம் விஷப் பாம்புகளுடன் விஷப்பரீட்சை. செத்த பாம்பை காற்றில் தூக்கப் போட்டு உயிர் கொடுத்தது மட்டும் அல்லாமல் பாம்பிற்கு பால் ஊத்தி விஷம் கக்க வாய்ப்பு கொடுக்காதீர்கள். இனியும் மக்களின் சுபீட்சத்திற்காகவும், அவர்களின் சக, சம வாழ்விற்காகவும் உங்களுடன் இணைந்து பயணிக்கவே விருப்பமாக உள்ளோம். இதில் எம்மை நாம் இழக்கவும் தயாராகவும் உள்ளோம். நாம் எல்லோரும் வாழ்வதற்காக, போராடும் நாம், என்றும் உங்களுடன் இருக்கவே விரும்புகின்றோம். நீங்கள் பயணிக்க எத்தனிக்கும் இப் 'புதிய' பாதை சரியானது? என்றால் தெளிவுபடுத்துங்கள். எங்களில் பலருக்கு இதில் சந்தேகங்கள் இருக்கின்றன?.

(சாகரன்) (கார்த்திகை 14, 2009)(Saakaran)    

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com