Contact us at: sooddram@gmail.com

 

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

இன்று இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும், பார்க்கப்படும் விடயம் வடபுலத் தலமையின் வட அமெரிக்க விஜயம் ஆகும். யுத்தம் முடிந்த பின்னரான இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் புலிகளுடனான போரை முன்னின்று நடத்திய இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை அமெரிக்கா தனது நாட்டிற்கு அழைத்தது. அன்று அதுவும் தமிழ் மக்களால் பரபரப்பாக பேசப்பட்டது, பார்க்கப்பட்டது. அமெரிக்க அன்பு அழைப்பை ஏற்றுப் அமெரிக்கா போனதை சரத் பொன்சேகா தானாகவே பொறிக்குள் வீழ்ந்து விடப் அமெரிக்காவிற்கு போவதாக நம்பினார்கள் அப்பாவித் தமிழ் மக்கள் பலர். மேலும் அமெரிக்கா சரத் பொன்சேகாவை கைது செய்து சிறையில் அடைக்கப் போகின்றது என்று தமிழ் மக்கள் மத்தியில் செய்தி பரப்பப்பட்டதை நிறைவே நம்பினார்கள் இவர்கள். ஆனால் அவ்வாறு ஏதும் நடைபெறவில்லை. மாறாக ஜனாதிபதித் தேர்தலில் அவர் ஜதே கட்சியின் கூட்டமைப்பு ஜனாதிபதி வேட்பாளராக ஆசீர்வதிக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்க சார்பு நிலையற்ற பொது ஜன ஐக்கிய முன்னணி வேட்பாளர் மகிந்த ராஜபக்கஷவை தோற்கடிப்பதே அன்றைய அமெரிக்காவின் ஒரே வேலைத்திட்டமாக இருந்தது. இதற்கு சிங்கள் மத்தியில் இருந்த ஜதே கட்சி, ஜேவிபி, தமிழ் மக்கள் மத்தியிலிருந்த குறும் தேசியவாத அமெரிக்க சார்ப்பு கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அமெரிக்காவின் விருப்பத்தை நிறைவேற்றும் கடமைகளை செவ்வனவே செய்தன. புலிகளையும், முள்ளிவாய்காலில் புலிகளால் சிறைபிடித்து செல்லப்பட்ட அப்பாவி மக்களை கடித்துக் குதறவும், புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் அவரின் சகாக்களையும் கொல்லவும் ஆணையை துப்பாக்கி மூலம் நிறைவேற்றிய சரத் பொன்சேகாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஜனாதிபதித் தலைமை வேட்பாளராக பிரகடனப்படுத்தியது. அவரின் வெற்றிக்காக தமிழ் மக்களை வாக்குகள் போடச் சொன்னார்கள். தமிழ் மக்களில் பெரும்பான்மையினர் கடந்த 60 வருடங்களாக செய்து வந்த வரலாற்றுத் தவற்றை இந்த ஜனாதிபதித் தேர்தலிலும் செய்து கொண்டு தமது கைகளை தாமே சுட்டுக் கொண்டனர். தமிழ் குறும் தேசியவாதம் அவ்வளவு பலமாக சரத் பொன்சாகாவின் வெற்றிக்காக செயற்பட்டது தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கில்.

ஆனால் இலங்கையில் தீராமல் இழுத்தக் கொண்டு போன போரை முடீவுக்கு கொண்டு வந்து தினமும் ஒரு பிணமாவது சிங்களக் கிராமங்களுக்கு செல்லும் நிலமையிலிருந்த 30 வருட போர் நிகழ்வை தடுத்து நிறுத்திய மாவீரனாக மகிந்த ராஜபக்ஷ பெரும்பான்மைச் சிங்கள மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதிக வாக்குகளை அவருக்கு அளித்து வெற்றியீட்டச் செய்யப்பட்டார். இதனை கொஞ்சம் கூட அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை. இந்தத் தோல்வியை சரத் பொன்சேகாவும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ரணில் மாத்திரம் எதிர்பார்த்தும் கூடவே விரும்பியும் இருந்தார். சரத்தின் வெற்றி ரணிலின் தலைமைத் தோல்வியை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளும் என்பதே இதற்கு முக்கிய காரணம். அமெரிக்காவின் சொல்லை தட்ட முடியாமல் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் ஒதுங்கி நின்று சரத்திற்கு இடம் விட்டார். எனவேதான் சரத்தின் தோல்வியை விருப்புடன் ரணில் எதிர்பார்த்திருந்தார். இதுவும் நடைபெற்று முடிந்து விட்டது. பெரும்பான்மை தமிழ் மக்களின் இச் செயற்பாடு முழுத் தமிழ் மக்களுக்கும் தமக்கு தாமே சேற்றை வாரியிறைத்தது போல் ஆகிவிட்டது. இதற்கான முழுப்பொறுப்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையே சாரும்.

தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து சரத்தும் சிறைக்கு உள்ளே தள்ளப்பட்டார் மகிந்த அரசினால். மகிந்தாவும் மேலும் சீனாவின் பக்கம் நிறையவே சாய்ந்து விட்டார். சீனாவுடனான நல் உறவு சிறீலங்கா சுதரந்திரக் கட்சியின் நீண்ட கால வெளிநாட்டுக் கொள்கை என்றாலும் கூட மகிந்தா இந்தியாவின் 'நெருக்குவாரத்தை' வருங்காலத்தில் தவிர்க்கும் ஒரு கைங்கரியத்திற்காவும் சற்று கூடுதலாக சீனா பக்கம் சாய்தார் என்பதையும் மறுக்க முடியாது.

தென் கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் பிலிப்பைன்சில் மார்கோஸின் வீழ்ச்சிக்கு பின்னர் தன் இஷ்டத்திற்கு இராணுவத் தளங்களை பிலிப்பைன்சில் அமைத்து அமெரிக்காவால் செயற்படமுடியவில்லை. ஏற்கனவே 'நல்ல' உறவுகளில் உள்ள பாகிஸ்தானில் தனது தளங்களை அமைத்து தென் கிழக்கு ஆசியாவில் தனது இராணுவ விளையாட்டைக் காட்ட முயன்றுதான் வருகின்றது நேட்டோ உலகம். பாகிஸ்தான் என்ற நாடு உருவாகிய நாளிலிருந்து பாகிஸ்தானில் ஒருவகையான இராணுவ ஆட்சிதான் நிலவி வருகின்றது. இந்த இராணுமயமான ஆட்சி நடைபெறும் நாடு தனது 'ஜனநாயக சூழலில் இராணுவச் செயற்பாடு' என்ற செயற்திட்டத்திற்கு சௌகரியமானதாக அமையவில்லை என நேட்டோ நாடுகள் உணருகின்றன. காஷ்மீரை கையில் எடுத்து பாகிஸ்தான் இந்தியா இடையில் பனிப் போரை நடத்தி அப்பிராந்தியத்தில் தொடர்ந்தும் பதட்டத்தை நிலைநாட்டி பாகிஸ்தானில் தொடர்ந்தும் தனது இருப்பை அமெரிக்கா செய்து வந்தது. இதுவும் இந்தியாவின் பாகிஸ்தானுடனான அதீதமான அமைதிப் போக்கால் அமெரிக்காவின் எதிர்பார்பிற்கு பெரியளவில் வெற்றியைக் பெற்றுக் கொடுக்கவில்லை.

ஆனால் அமெரிக்க இரட்டைக் கோபுரம் மீதான தாக்குதலும், அதனைத் தொடர்ந்த ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் மீதான நேட்டோ உலகத்தின் படையெடுப்பும் தன்னாலேயே வளர்தெடுக்கப்பட்ட பல இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுடன் பகைக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு அமெரிக்காவை தள்ளியது. இந்த அமைப்புக்கள் பலவும் பாகிஸ்தானை மையமாக கொண்டு அமெரிக்காவின் ஆசீர்வாதத்துடன் உருவாக்கப்பட்டு செயற்பட்டு வந்தன, வருகின்றன. தான் வளர்த்தவற்றை தானே அழிக் முற்பட்டது அமெரிக்கா. இதற்கு ஓத்துழைக்க பாகிஸ்தானையும் வற்புறுத்தியது அமெரிக்கா. பாகிஸ்தானுக்கு இதில் விருப்பம் இன்மையே பெரும்பாலும் இருந்தது. இதனையும் விட பாகிஸ்தான் விரும்பினாலும் இது முடியாது என்பதுவும் இங்கு கவனிக்கப்பட வேண்டும்.

காரணம் பாகிஸ்தானில் எப்போதும் இரண்டு அரசுகள் ஆட்சி செய்யும். ஒன்று தேர்தல் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகின்ற அரசு. மற்றது பாகிஸ்தான் உளவுப்பிரிு எஸ்.ஐ.எஸ் இனால் நடத்தப்படும் அரசு. ஆனால் இவ்விரு அரசுகளுக்கு இடையில் பரஸ்பரம் நல்ல புரிந்துணர்வும், ஓத்துழைப்பும் இருந்தே வந்திருக்கின்றது. தற்போதைய நிலையில் பாராளுமன்ற அரசு நினைத்தாலும் உளவுப் பிரிவு அரசு நினைக்காவிட்டால் பாகிஸ்தானில் ஏதும் செய்ய முடியாது. பாராளுமன்ற அரசுகள் அரசுகளுடன்தான் பேச முடியும். பாகிஸ்தான் பாராளுமன்ற அரசை கட்டுப்படுத்திய? அமெரிக்க அரசு பாகிஸ்தானின் உளவுத்துறையின் அரசை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பெரும் முரண்பாடு அமெரிக்க - பாகிஸ்தான் அரசுகளுக்கிடையில் ஏற்பட்டது. இதன் தொடர்சியாக அமெரிக்கா பின்லாடனை பாகிஸ்தானுக்கு தெரியாமல் தாக்கியளித்த 'அத்து மீறல்' நிகழ்வு இரு நாடுகளுக்குமான முறுகல் நிலை உச்ச நிலை அடைய ஏதுவாக அமைந்தது.

தற்போது தெற்கு ஆசிய நாட்டில் தனது இராணுவ செயற்பாட்டை தங்கு தடையின்றி செய்வதற்கு ஒரு 'ஜனநாயக' செயற்பாட்டு நாடு தேவை நேட்டோ நாடுகளுக்கு. அதில் ஒரு நாடுதான் இலங்கை. இரண்டாவது அமெரிக்காவிற்கு 'எரிச்சலான' உணர்வை ஏற்படுத்தும் சீனா இலங்கை இடையிலான நல்ல உறவிற்கு இலங்கைக்கு பாடம் கற்பிக்க வேண்டிய தேவையும் உள்ளது அமெரிக்காவிற்கு. இதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தது அமெரிக்கா. 

சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்கி தமது விருப்பை நிறைவேற்ற முடியாமல் போன அமெரிக்காவிற்கு தற்போது கிடைத்திருக்கும் ஆயுதம் போர்க்குற்றங்களை தொடர்ந்த ஓ பிளேக் போன்றவர்களின் அறிக்கைகளும், செயற்பாடுகளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பை விருந்தாளிகளாக அழைத்த அமெரிக்க பயணமும் ஆகும். இதனைத் தொடர்ந்து ஏனைய நேட்டோ நாடுகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு செங்கம்பள வரவேற்புகள் நடைபெறும். அதுதான் பிரபா - ரணில் 'சமாதான' காலத்தில் புலிகளுக்கு நேட்டோ நாடுகளின் செங்கம்பள வரவேற்புகள் நடைபெற்றனவே அதை ஒத்த நிகழ்வுகள் இவை. அமெரிக்கா ஏனைய நாடுகளின் இறமைகளில் தலையிடும் தனது நிகழச்சி நிரலை தனது நேட்டோ நாடுகளில் ஒன்றின் ஊடாகவே ஆரம்பிக்கும் உதாரணமாக லிபிய விடயத்தை பிரான்ஸ் ஊடாக ஆரம்பித்தார். ஏன் இலங்கை, பாலஸ்தீன விடயங்களை முதலில் நோர்வே ஊடாகவே அணுகி தனது திருகு தாளங்களை அரங்கேற்றி வந்தது. தற்போது புலம் பெயர் தேசங்களில் அதிக தமிழ் மக்கள் வாழும் கனடா நாட்டினூடாக அணுகி வருகின்றது. இதன் தொடர்ச்சிதான் புலிகளை ஒரு காலத்தில் தடை செய்வதற்கு முனைப்பாக செயற்பட்ட கனடிய கொன்சவேற்ரிவ் அரசின் பிரதமர் ஸ்ரீபன் காபர் இன் இலங்கை அரசுக்கு எதிரான கருத்துக்களும், பொது நலவாய நாடுகளின் மகாநாடுகள் சம்மந்தமான பேச்சுக்களும் ஆகும். கூடவே கனடாவில் அண்மைக்காலமாக புலிகள் மீதான் மென்மையான அணுகு முறைப் போக்கும் ஆகும்.

ஆனாலும் இலங்கை விடயத்திலும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அணி தோற்றுப் போகப் போவதாகவே வரலாறு தனது பதிவைச் பதியப்போவது உறுதி. இது தமிழ் தேசிக் கூட்டமைப்பிற்கும் தெரியும். இவர்களின் மூதாதையர் தமிழரசுக்கட்சியில் தொடங்கி யாபேருக்கும் இது தெரியும். ஆனால் தமது நாற்காலிகளை தொடர்ந்து இறுக்கப் பற்றிக்கொள்ள இது சரியான அணுகு முறை என்பதுவும் அவர்களுக்கு தெரியும். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த வழி முறையை தொடர்ந்தும் கடைப்பிடிக்கும். இதனால் மீண்டும் தமிழ் மக்கள் ஏமாற்றப்படப் போவதும் நிதர்சன உண்மை. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்காக புலிகளின் தீவிர ஆதரவாளர்களாக இருக்கும் சிறப்பாக புலம் பெயர் தேசங்களில் வாழும் ஒரு பகுதியினர் இலங்கை அரசை ஒரு வகையான பழிவாக்கும் நடவடிக்கையாக இதற்கான எல்லா ஒத்துழைப்புக்களையும் வேலைகளையும் செய்து கொண்டே இருப்பர். இதனால் புலம் பெயர் தேசத்திலுள்ள சிலருக்கு ஒருவகை விளம்பரமும், பணக்குவியலும் கிடைக்கும். இவர்கள் இலங்கைக்கு போனால் இவர்களை கோதபாய 'வரவேற்க' (நன்றி: சொல்லாடல் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், புலிகளின் சர்வ ஆட்சிகாலத்தில் ஆனந்த சங்கரி ஐயாவை கிளிநொச்சியல் வரவேற்க பொட்டன் காத்திருப்பதாக கூறியது)) காத்திருக்கின்றார் என்பதினால் இலங்கையிற்கு 'எப்போதும்' போவதில்லை என்ற நிலைப்பாட்டிலிருந்துதான் இச் செயற்பாடுகள் தொடருகின்றன.

மலையக மக்களின் குடியுரிமையை பறித்து அவர்களை நாடற்றவர்களாக்கிய பெருமை பொன்னம்பலத்தின் ஒரு வாக்குக்குத்தான் காரணம் என்றாலும் பாராளுமன்ற வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் தமிழரசுக் கட்சி திட்டமிட்டு தவிர்த்து கழுவ முடியாத பாவத்தை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தலையில் அரைத்த பெருமை இவர்களையே சாரும். இதில் ஆரம்பித்து இன்று வரை தமிழரசுக் கட்சி, அதன் வழித் தோன்றல்களான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஆயுதம் ஏந்திய விடுதலைப்புலிகள், இலங்கை அரசாங்கம் தனித்து கொண்ட வந்த தீர்வுத்திட்டங்களையும், இந்தியாவின் செ(சொ)ல் வாக்கினால் உருவான வடக்கு கிழக்கு மாகாண சபையையும் இல்லாமல் செய்ததும் என்று மண்பானையை போட்டுடைத்த சம்பவங்கள் பற் பல.

அது மட்டும் அல்லாது சந்திரிகா அம்மையார் பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்த நல்ல அரசியல் தீர்வுத்திட்டத்தை முதல்நாள் இரவு விசேஷ அழைப்பில் சந்திப்பை மேற்கொண்டு தீர்வுத்திட்டத்தை ஆதரிப்பதாக சம்மந்தர் தலைமையிலான தமிழ் தேசியக கூட்டமைப்பு வாக்குறுதி கொடுத்தவிட்டு பின்பு மறு நாள் பாராளுமன்றத்தில் ஐதே கட்சியுடன் சேர்ந்து தீர்வுத்திட்டத்தை மட்டும் அல்ல முழு வடக்கு கிழக்கு மக்களின் வாழ்விற்கும் கொள்ளி வைத்த பெருமை எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு சேரும். தமிழ் செல்வனின் சட்டாம்பி வேலைக்கு பயந்து நீங்கள் செய்ததாக சமாதானம் கூறினாலும் இது தானே இறுதியில் முள்ளிவாய்காலில் வகை தொகையில்லா மனித அவலத்திற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. சரி அதைத்தான் விடுவோம் நோர்வேயின் 'மத்தியஸ்தம்' இல் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் 'சமஷ்டி' என்ற இடைக்கால வாய்பை நழுவவிட்ட பெருமைகளும் தமிழர்களின் ஏகபோக தலமை புலிகளையே சாரும்.

இலங்கையை ஆளும் பேரினவாத அரசுகள் பௌத்த சிங்கள் பேரினவாதம் என்ற மாயக் கண்ணாடி ஊடாகவே தமிழர் பிரச்சனையைப் நோக்குவதும், நிதர்சனமான உண்மை. கூடவே தமிழர் பிரகடனப் படுத்தும் தொப்புள் கொடி உறவு இலங்கை அரசால் தமிழருக்கு கொடுக்கும் உரிமைகள் அவர்கள் பிரிந்து சென்று இந்தியா(தமிழ்நாடு) உடன் இணைந்து விடுவார்கள் என்ற பயப்பிராந்தியை சாதாரண சிங்கள மக்களுக்கும் ஏற்பட ஏதுவாக இருந்தது. இந்த யதார்த்த நிலமைகளை சிங்களப் பேரினவாதம் தனக்கு சாதகமாக பாவிக்கின்றது. இவற்றையெல்லாம் கணக்கில் எடுக்காமல் காற்று புகமுடியாத இடத்தில் கூட நாம் புகுந்து எவரையும் எந்நேரமும் என்னவும் செய்வோம் என்ற வீர சாகச் சிந்தனை இறுதியில் 'அவுஸ்திரேலியா புகழ்' அருணாசலம் ஜெகதீஸ்வரன் கட்டிய நிலவறைகளையும் இலங்கை படைகள் ஊடறுத்து தலைவர் நீராடி மகிழந்த நீச்சல் தடாகம் வரை சென்றது அந்தோ பரிதாபம் என்பதைவிட தூர நோக்கற்ற மக்கள் நலன் சாராத செயற்பாடுகளின் விளைவே ஆகும்.

புலிகளை அழித்த போருக்குப் பின்னர், போருக்கு முன்னரான இலங்கை அரசுகள் போலன்றி வடக்கு கிழக்கும் இலங்கையுடன் இணைந்த பகுதிகள் தான் என்று இலங்கை அரசை செயற்பட வைத்திருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக வேப்பமரம் காணும் இடமெல்லாம் சூலம் குத்தி வைரவப் பெருமானை தமிழர்கள் நிலைநிறுத்தியது போல், அரச மரம் காணும் இடமெல்லாம் புத்தர் சிலையை நிறுவும் செயற்பாட்டை வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசம் எங்கும் ஏற்படுத்தியிருக்கின்றது. இதைத் தடுத்தி நிறுத்த கருணா அம்மானாலும் முடியவில்லை. ஏன் தேவானந்தாவினாலும் முடியாதபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உண்ணாவிரதத்தினால் முடியுமா...? என்பது பெரிய கேள்விக் குறியே. உண்ணாவிரதம், சாத்வீகமான உசுப்பேத்தும் 'வீரப் போராட்டம்' நாற்காலிகளை மீண்டும் பிடிக்க உதவுமே தவிர மரங்களின் கீழ் சிலை வைக்கும் செயற்பாட்டை தடுத்து நிறுத்த உதவாது, கூடவே பசளை போட்டு தண்ணி ஊத்தவே உதவும்.

ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா. பலஸ்தீனம் போன்ற நாடுகளின் தனது 'மனிதாபிமான' செயற்பாட்டை காட்டி நிற்கும் நேட்டோ உலகம் இலங்கை தமிழ் மக்களுக்கும் அதே மனிதாபிமானத்தை காட்டி நிற்கும் என்பதே உண்மை நிலை. மன்னார் கடற் படுக்கையில் எண்ணை வளமும், சீன, ரஷ்யா நாடுகளின் இலங்கை பிரசன்னமும், நிமிர்த்த முடியாமல் சரிந்து வரும் அமெரி;க்க – ஐரொப்பிய சுரண்டல் முதலாளித்துவ பொருளாதாரமும் இதன் தொடர்சியான வால் ஸ்ரீர் போராட்டமும் இலங்கையின் வளத்தையும், தளத்தையும் நேட்டோ உலக நாடுகள் பார்த்து வாணி ஊத்தும் நிலமையை ஏற்படுத்தியிருக்கின்றது.

மேலும் புலம் பெயர் தேசத்து வால் ஸ்ரீர் போராட்டங்களில் எங்களைப் போன்றவர்களின் இணைப்பைத் தவிர்க்கவும் மேற்குலக நாடுகள் அந்தந்த நாடுகளில் வாழும் புலம் பெயர் தேசத்து மக்களின் 'Domestic' பிரச்சனைகளை முன்னிறுத்தி அதற்கு ஆதரவு வழங்கி அவர்களை திசை திருப்புதல் என்ற மிக உயர்ந்த நிலை ஏமாற்று வேலைகளை அடிப்படைச் சம்பளத்தில் வேலை செய்யும் குடிவரவாளர்களால் நிரம்பி வழியும் நாடுகளில் திட்டமிட்டே செயற்படுத்தும். புலிகளை தடைசெய்த நாடுகள் தற்போறு போர்குற்றம், மனிதாபிமான நடவடிக்கைகள் என்று புலிகளின் பினாமி அமைப்புக்களின் அறிக்கையின் அடிபடையிலான செயற்பாடுகள் இதன் வடிவமேயாகும்.

எனவே வடக்கு தலைமையின் வட அமெரிக்க விஜயம் மேற்குலம் இலங்கையை தனது கட்டுக்குள் கொண்டு வர பாவிக்கும் ஒரு துரும்புச் சீட்டுத்தான். இது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தெரிந்தாலும் தமது நாற்காலிகளை இறுக்கிப் பிடிக்கவும், டாலர்களில் மிதக்கவும் மேற்குலக நாடுகளுக்கான அரசு செலவு உல்லாசப் பணயங்களுக்கும் வழி வகுக்கும். எனவே இவற்றைத் தொடர்ந்து அவர்களும் மேற்குலகமும் செய்து கொண்டே இருப்பர். கூடவே மற்றய எவர்களையும் விட தமிழ் தேசியக் கூட்டமைப்பை கையாளுதல் இலகு என்பதினால் இலங்கை அரசம் தமிழ் மக்களின் ஏக தலமை தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதை தொடர்நதும் நிறுவிக் கொண்டே இருக்கும்.

இலங்கை அரசின் ஆசீர்வாதம், அனுமதி இல்லாமல் இராஜதந்தி கடவுச் சீட்டுகக்களுடன் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து விமானம் ஏறியிருக்க முடியாது. பயண அனுமதிக்கு சில வேளைகளில் இலங்கைக்கு இந்தியா தனது அன்பான வேண்டுகோளை விடுத்திருக்கலாம். ஆனால் ஏதோ  மாயாவிகள் போல் இலங்கை அரசின் எதிர்பை மீறி வட அமெரிக்காவிற்கு பறந்து வந்தோம் என்று புரளி புலிகளின் இரசிகர்களிடம் எடுபடலாம். பகுத்தாய்வு செய்து பார்பவர்களிடம் எடுபடாது.

இது வரை காலமும் சரியோ பிழையோ இலங்கை தமிழ் மக்களுக்கு கிடைத்த அதிக பட்ச அரசியல் தீர்வு வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த (தற்காலிகமாகவேனும்) மகாண சபையே. இதன் ஆயுள்காலம் மிகச் சிறிதே. சம அளவில் பிரபா, பிரேமா சோமவன்ச போன்றவர்களால் தங்களின் நலன்கள் சார்ந்து செயற்படவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்ட ஒன்று. இதில் விபி சிங்கின் இராஜதந்திரம் அற்ற செயற்பாடும் முக்கிய பங்காற்றியது. இந்த மாகாண சபைச் சட்டமூலம் இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் இலங்கை அரசால் இலங்கை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் சட்ட மூலமாக்கப்பட்டதே. இந்த 13 வது திருத்தச்சட்டம் என்ற மாகாண சபைச் சட்ட மூலம் 1990 இற்கு பிற்பட்ட காலங்களில் பிரித்து மேய்ந்து, சிந்திச் சிதறி, சின்னாபின்னம் ஆக்கப்பட்டாலும் இதன் வாழ்வு காலம் இன்று வரை நீடிக்கின்றது என்ற உண்மை நிலையை புரிந்து கொள்ள வேண்டும். இதிலிருந்து ஒரு உண்மை புலப்படுகின்றது அது இலங்கையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு இந்திய அரசின் அனுசரணையுடன் இலங்கை அரசால் இலங்கைப் பாராளுமன்றத்தினால் மாத்திரம் சாத்தியம். இதற்கான தார்மீக ஆதரவுகளை தற்போதைய இலங்கை அரசின் நட்பு நாடுகளான சீனா. இந்தியா, ரஷ்யா போன்ற ஜனநாயக முற்போக்கு நாடுகளிடம் நாம் தெளிவு படுத்தல்கள் மூலம் பெற்று நிறைவேற்றுவதே சரியானதும் சாத்தியமானதும் நிலைத்து நிற்கக் கூடியதும், இலங்கை வாழ் சகல மக்களுக்கும் எற்புடையதும், இலங்கை மக்களின் நலன்களை பெரிய அளவில் நிலை நிறுத்த ஏதுவாகவும் அமையும். மாறாக வட அமெரிக்க, நேட்டோ உலகத்திற்கு காவடி எடுப்புக்கள் 'இப்படியே தமிழர் பிரச்சனையை தீர்காமல் இழுத்துக் கொண்டு போகவே' உதவும். சம்மந்தப்பட்ட யாபேரும் இதனை உணர்வார்களா...? சரியான திசை வழியில் பயணிக்கு முற்படுவார்களா...?

இதனைப் பகுத்தாய்வு செய்து விழிப்படையாதவிடத்து இலங்கை வாழ் தமிழ் மக்கள் பாவம்....? வேறு என்ன சொல்ல......?

(Saakaran) (நவம்பர் 11, 2011) (11/11/11)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com