Contact us at: sooddram@gmail.com

 

ஒன்றுபட்ட இலங்கை சாத்தியமாகுமா?

வெள்ளையர்கள் இருக்கும் போதே விதைக்கப்பட்ட இன வேற்றுமை , சமூக ஏற்றத்தாழ்வுகளின் விதைகள் அவர்கள் வெளியேறியதன் பின்னர் அவர்களே எதிர்பார்க்காத அறுவடையைத் தந்தது இலங்கையின் கடந்த கால வரலாறு. இந்த வரலாற்றின் ஏக போக விளைச்சலை இனப் பிரச்சினை எனும் பூதம் ஆட்கொண்டதால் எதிர்காலம் என்று ஒன்று இருக்கிறதா என்றே தெரியாமல் நாட்டை விட்டு தூர ஓடியர்வர்கள் பல லட்சக் கணக்கில் இருக்கிறார்கள். இப்போது இனப் பிரச்சினை எனும் பெயரால் இடம்பெற்ற போர் ஓய்ந்துவிட்டது, இனியாவது ஒன்றுபட்ட இலங்கை சாத்தியமாகுமா?ஒன்று பட்ட இலங்கை என்பதன் அடிப்படை ஆளும் வர்க்கத்தின் கொள்கைக் கோட்பாடு சம்பந்தப்பட்ட விடயம். ஆனால் அதை மக்கள் மயப்படுத்தி வேற்றுமைகளை வளர்ப்பதும் அதைப் பரிபாலிப்பதும் அரசியலின் அடிப்படை. இந்த இரண்டையும் தாண்டி மக்கள் என்பது சாத்தியமா என்றால் அது நடைமுறையில் சவாலான விடயமாகக் கருதப்படும், இந்த இரண்டும் இல்லாத மக்கள் ஒற்றுமை சாத்தியமா என்றால்? அது சாத்தியம் என்று அடித்துக் கூறிவிடலாம்.

எனவே, அரசியலுக்கப்பாற்பட்ட சமூக ஒற்றுமைக்குத் தடையாக இருக்கப்போவது ஆளும் வர்க்கத்தின் பிரித்தாளும் கோட்பாடுகளும், அவற்றை அவர்கள் செயற்படுத்த உபயோகப்படுத்தப் போகும் அரசியல் வாதிகள் எனும் கருவிகளும் தான் என்பதை ஏற்றுக்கொள்ள யாருக்கும் தயக்கம் இருக்கப் போவதில்லை. இந்த சவாலை மகிந்த அரசு அறியுமா? அறிந்தாலும் அதற்கான விடிவைப் பெற்றுத்தருமா என்பது என்றாவது ஒரு நாள் மீண்டும் இலங்கைக்கே போய் விட வேண்டும் எனும் ஏக்கத்தில் வாழ்பவர்களின் மனதில் வாழும் பிரதானமான கேள்வியாகும்.

பிரபாகரனை அழித்தொழித்த கையோடு அவசர அவசரமாக களையெடுப்பைச் செய்து கொண்டு வந்த வெளிப்பக்க மகிந்த அரசைக் கூட விமர்சனம் பண்ணத் தெரியாத வங்குரோத்து நிலையில் எதிர்க்கட்சிகள் இருக்க, நாட்டில் என்ன நடக்கிறது எனும் அனுமானமே இல்லாத நிலையில் தான் தமிழ்க் கட்சிகள் இருக்கிறார்கள். இந்த நிலையில், எதிர்க்கட்சி அரசியலை எங்கிருந்து ஆரம்பிப்பது என்று அவர்களுக்குப் பிடிகொடுக்காமல் பல்வேறு பட்ட குழப்ப நிலைக்குள் தந்திரமாக பிரதான (Main steam) அரசியலை வெளியில் வைத்துப் பாதுகாக்கும் புத்தி சாதுர்யமான மகிந்தா சகோதரர்களின் அரசியல் வலையிலிருந்து மீண்டு எழுவதற்கு இன்னும் நூறு ரணில் விக்கிரமசிங்காக்கள் பிறக்க வேண்டும்.

இலங்கையின் அபிவிருத்தி என்பது உலக அரங்கில் இனிமேல் ஆர்ப்பாட்டமில்லாமல் அரங்கேற்றப்படும். இந்த அபிவிருத்தியைத் தடுக்கும் சக்தியோ அல்லது இணைந்து பணியாற்றும் சக்தியோ கூட தற்போதைய எதிர்க்கட்சிகளுக்கு இல்லாத நிலையில், மகிந்தா சகோதாரர்களின் பாதை மிகத் தெளிவானதாகவும், தங்கு தடையற்றதாகவும் இருக்கப்போகிறது. சூழ்நிலை அரசியலின் ஆளுமையில் தவித்திருந்து எதிர்க்கட்சிகள் வெளியேறுவதற்கு எடுக்கப்போகும் காலத்திற்குள், இலங்கையின் அரசியல் நிலைப்பாடும் நாட்டின் பயன்பாடும் முதலாளித்துவ சுரண்டல்களின் மையமாக நவ நாகரீக முறையில் மாற்றம் பெற்றிருக்கும்.

பல்வேறு சர்வதேசப் பங்காளர்களின் தலையில் (ஏறத்தாழ பிரேமதாசா பிரபாகரனிடம் வடக்கைக் கொடுத்து ஏகபோகமாக தமிழர் காதில் புலியின் பிரசன்னத்தை ஊதிப் பெருப்பித்ததைப் போல) கட்டிவிட்டு, விளைச்சலின் சுகபோகத்தை தம் குடும்பத்தோடும், ஒரு பகுதியை நாட்டோடும் பகிர்ந்து கொள்வதன் மூலம் சிங்கப்பூரின் “லீ” யை மிஞ்சிய ஒரு வரலாற்றுப் பதவியை நோக்கி மகிந்த சிந்தனை பயணித்துக் கொண்டிருக்கிறது.

இந்த இடைவெளியை நிரப்ப, மக்கள் அபிப்பிராய பேதத்தை ஏதாவது ஒரு வழியில் உருவாக்கும் பழைய அரசியலைப் பற்றிப் பிடித்துக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் அதைத்தவிர எதையும் செய்யத் தெரியாத காரணத்தினால் மகிந்தாக்கள் எதிர்பார்க்கும் ஆனால் நேரடியாகத் தலையிட விரும்பாத “பிளவுகளை” தானாகத் தோற்றுவிப்பார்கள். இந்தப் பிளவுகளுக்காக தரங்கெட்ட அரசியல் பாவிக்கப் போகும் பிரதானமான ஆயுதம் மீண்டும் இனப் பிளவுகளாகும். இலங்கையில் பிரதானமாக ஏற்படுத்தக்கூடிய இனப் பிளவுகள் என்பது சிங்கள – தமிழ் அல்லது முஸ்லிம் – தமிழ் அல்லது சிங்கள – முஸ்லிம் பிளவுகள் என்ற வகைகள். எனினும், மீண்டும் இந்தப் பிளவுகளின் போது ஆயுத , அதிகார ஆளுமைகளின் விதமும், வகையும் வேறுபட்டுக் காணப்படப்போகிறது.

அரசோடு இணைந்து செயற்படும் கட்டாய நிலைக்குத் தள்ளப்படப்போகும் அரசியல் சூழ்நிலைகளைப் பொறுத்த வரை கடுகதியாக முன்னேற முடியாத கட்டாயம் என்பது தங்கி வாழும் அல்லது சார்ந்து வாழும் நிலைக்கே அரசியலையும் மக்களையும் இட்டுச் செல்லும் எனும் போது, அந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்பவர்களிடன் யார் முந்தி சலுகைகளைப் பெற்றுக்கொள்வது எனும் போட்டிதான் நிலவுமே தவிர பெற்றுக்கொடுப்பது என்பது இரண்டாம் கட்டத் தேவையாக மாறிவிடும்.

எனவே சராசரி வருமானத்திற்குக் குறைந்த நிலையில் வாழும் மக்கள் மீண்டும் மீண்டும் தயவில் வாழும் நிலைக்கும், அல்லது குறுக்கு வழியில் முன்னேறிச் செல்லும் பழைய நிலையிலுமே வைத்துப் பாதுகாக்கப்படுவார்கள். எனவே சலுகைகளைப் பெற்றுக்கொள்வதையே தமது உச்ச பட்ச இலக்காகக் கொண்டு வாழும் ஒரு தரத்தினரையும் பிரித்தாளும் வர்க்கத்தினர் உருவாக்கி விடுவார்கள்.

இந்த நிலையை சிங்கள மக்கள் உணர்ந்து புரட்சி செய்வதற்கான கால அவகாசத்தை அவர்கள் பெற்றுக்கொள்ளப்போவதில்லை. ஏனெனில் தென்பகுதி காணப்போகும் மாற்றங்களில் ஏற்படும் மாயையையும், நாட்டைக் குட்டிச் சுவராக்கிக்கொண்டிருந்த போரினை முடிவுக்குக் கொண்டு வந்து சுபீட்சத்துக்கு வழி சமைத்த மகிந்தாக்களின் சேவை தொடர்பான எண்ணங்களையும் பிரித்தறிந்து அம்மக்கள் எப்போதும் சாதகமாகவே பார்க்கப்போவதனால், எதிர்காலத்தில் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள் வளங்கள் மூலமாக அவர்கள் வாயடைக்கப் படுவார்கள். எனவே தமிழ் – முஸ்லிம் உறவுகள் சீர்குலைந்திருப்பதன் தேவையே எதிர்கால முதலாளித்துவத்துக்கு பேருதவியாக இருக்கப்போகிறது.

இந்தத் தேவையை அரச சார்பில் நிறைவேற்றி வைக்கப்போவது யார் எனும் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விடயமாகினும், இதன் மூலம் தோல்வியைக் காணப்போவது ஏற்கனவே போர் எனும் பெரும் பூதத்தால் பெரும் பின்னடைவை சந்தித்த அதே தமிழ் பேசும் சமூகமாகும். அவர்களுக்கான மாற்றீடாக வெளிநாடுகளின் உருவம் முன்னால் வந்து நிற்கப்போவதால் அதற்கான வழிகளில் தன் நிறைவு பெறுவதே எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு அவர்களின் முதற் தேவையாக இருக்கப் போகிறது. இந்த வெற்றிடத்தை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளப் போகும் சிறுபான்மை பிரதிநிதித்துவம் விழித்துக் கொண்டாலன்றி ஆத்மார்த்தமான ஒன்று பட்ட இலங்கையைக் கட்டியெழுப்புவது நடைமுறையில் சாத்தியமற்ற ஒரு விடயமாகும்.

தற்போது விட்டுக்கொடுக்கப்பட்டுள்ள “இடத்தை” தமது ஆளுமையின் மூலம் நிரப்பிக்கொண்டுள்ள அரசியல் சூழ்நிலை தொடருமாக இருந்தால் நாளடைவில் இதனை மீண்டும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வர்க்க ஆளுமையின் மூலம் சிறுபான்மையினர் தரம் பிரிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகும். அந்தத் தரம் பிரித்தலின் போது மீண்டும் வன்முறைகள் வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையாகினும், பிரிவினைகள் முன்னரை விட ஆழமாக விதைக்கப்படப்போவது திண்ணம்.

அந்த விதைப்பின் பின்ணனியில் இலாபமடைவது மீண்டும் வர்க்கக்கூட்டு அரசியலாக இருந்தாலும் உண்மையான நட்டத்தின் பாதிப்பு சிறுபான்மைத் தமிழ் பேசம் சமூகத்தையே வந்து அடையும். சிங்கள மக்களைப் பொறுத்தவரை இவ்வாறான உளவியல் போரினை கட்சி ரீதியாகவும், அரசியல் வேறுபாடுகளாகவும் மாத்திரமே உணர்ந்து கொள்ளப்போவதனால் அவர்களுக்கு இது முக்கியத்துவமற்ற விடயமாகவே இருக்கும். தமிழ் பேசும் சமூகத்தைப் பொறுத்தவரை இதன் பாதிப்புகள் அரசியல் வரையறையைத் தாண்டிய இன, பிரதேச மற்றும் தராதரப் பிரச்சினைகளாகவும் உருவெடுக்கும் நிலையை அறிந்து அரசியல்வாதிகள் தமது நிலை மாற்றத்தினை உரிய நேரத்தில் மேற்கொள்ளவில்லையாயின் உண்மையான முன்னேற்றத்தை தமது சமூகத்துக்கு அவர்களாலும் வழங்க முடியாது, இவ்வாறான நிலை ஏற்படாமல் தடுக்கும் வகையில் உள்ளாட்சிக் கொள்கைகளில் மாற்றங்களைக் கொள்ளத் தவறினால் மகிந்த அரசாலும் ஆத்மார்த்தமான ஒன்றுபட்ட இலங்கையை உருவாக்க முடியாது.

(அறிவுடன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com