Contact us at: sooddram@gmail.com

 

தமிழர் தலையில் மட்டுமல்ல தம் தலையிலும் மண் போடும் சிங்களம்

(மாதவன் சஞ்சயன்)

யானை தன்தலையில் தானே மண் போடுவதாக நையாண்டி பண்ணுபவர்க்கு அதன் உள்ளார்ந்த அர்த்தம் தெரியாது. இயற்கையோடு இசைந்து வாள்பவை ஐந்தறிவு ஜீவன்கள். ஆறாவது அறிவு நன்மைகளும் தீமைகளும் கொண்டது. அதனால் தான் சுனாமி வருமுன் ஊருக்குள் வந்தன பாம்புகள். ஓடி பறந்தன பறவைகள். ஆனால் புதினம் பார்கப்போன ஆறறிவு மனிதர்கள் தான் அள்ளுண்டு அதோகதி ஆனார்கள். தன் உடல் சூட்டை மற்றும் எரிச்சலை தீர்க்கும் அரு மருந்து புழுதி மண் என்பது ஐந்தறிவு யானைக்கு தெரியும்.
அதனை ஆறறிவு அண்ணல் காந்தி அவர்களும் அறிந்ததால் தான் தென் ஆபிரிக்காவில் தன் சொந்த மகனுக்கு நோய் வந்தபோது ஆங்கில வைத்தியத்தை தவிர்த்து இயற்கை வைத்தியமான மண் வைத்தியம் செய்ததை அவரின் சத்திய சோதனை புத்தகத்தை படித்தால் அறிந்து கொள்ளமுடியும்.

இயற்கையோடு வாழ்தல் தன் இனத்தை காத்தல் எதிரிகளை தன் பிரமாண்டத்தால் பயமுறுத்தல் தன் பாகனின் அங்குச ஆணைக்கு கட்டுப்பாடல் என பல தனி தன்மை கொண்டது யானை. ஆனால் மதம் பிடித்தால் தனக்கு உணவு தந்தவனையே காலில் போட்டு மிதிக்கும். இது கவி பாரதியாரே பட்ட அனுபவம். அந்த நிலையில் தான் யானை சின்னத்தை கொண்ட யு. என். பி. யும் இருக்கிறது. நாட்டில் காணப்பட்ட குடும்ப ஆட்சி அதிகாரத்துக்கு முடிவுகட்ட ஜனாதிபதி போட்டியில் இருந்து விலகி பொது வேட்பாளரை வெல்லவைத்தது யு என் பி . அப்போது அது தன் எதிர்கால அரசியலில் மண் அள்ளிபோடுவதாக தான் பார்க்கப்பட்டது.

ஆனால் அன்று நாட்டில் காணப்பட்ட தனிநபர் அதிகார சூட்டை தணிக்கத்தான் அது அவ்வாறு செய்தது. வெல்ல முடியாதவர் என வர்ணிக்கபட்ட பிரபாகரன் போல தோற்கடிக்கப்பட முடியாதவர் என பிரமாண்டப் படுத்தபட்ட மகிந்தரும் சந்தித்த முடிவு காலத்தின் கட்டாயம். காலத்தின் தேவை அறிந்து அன்று செயல்பட்டது யு. என். பி. யானையும் அதன் தலைவர் ரணிலும். யானை நிதானமாக செயல்பட்டால் பல நன்மைகள் பெறலாம். நிறைவேற்று அதிகார முறைமை பலமுறை நீக்கப்பட எடுக்கப்பட்ட முடிவுகள் பேச்சளவிலேயே கடந்த காலத்தில் காணப்பட்டது. ஆனால் இன்று அதை நிகழ்த்தி காட்ட எடுத்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறது அதனால் பலன் பெற்ற ஒரு கூட்டம்.
 

உண்மையில் முழுமையாக அதிகாரங்களை நீக்க பாரளுமன்றால் முடியாது. அதற்கு மக்கள் ஆணை வேண்டும் என நீதிமன்றம் கூறிய விடயங்களை தவிர்த்தே அதை நிறைவேற்ற முற்பட்டனர் யானை கட்சியினர். அதை குழப்ப மற்றவர்கள் எடுத்த ஆயுதம் அற்பத்தனமானது. கடந்த ஆட்சியில் நடந்த அதிகார ஊழலை ஒழிக்கவே மக்களிடம் வாக்குப்பெற்று புதிய ஜனாதிபதி பதவிக்கு வந்தார். 100 நாள் வேலைத் திட்டத்தில் செய்வதை பட்டியல் இட்டே வாக்குக்கள் பெறப்பட்டன.

அதில் முக்கியமானது 19 தாவது திருத்தம். அதில் தான் எதிர்கால நேர்மையான நல்லாட்சிக்கான விடயங்கள் உள்ளன. அதை கூட நிறைவேற்றும் தினத்தில் ஊழல் விசாரணைக்கு அழைக்கபட்டவரை காப்பற்ற பாராளுமன்றத்தில் படுத்துறங்கும் கேவலம் நடந்தேறியது. புதிய ஜனாதிபதிக்கு மக்கள் கொடுத்த ஆணையை அந்த மக்களின் பிரதிநிதிகள் என பாராளுமன்றத்தில் இருக்கும் பிரகிருதிகளே உதாசீனம் செய்தனர்.

கள்வனுக்கு என்ன கௌரவம் தேவைப்படுகிறது ?. குற்றம் சாட்டப்பட்டால் கைவிலங்கு போட்டுத்தான் கூட்டி செல்வர். குற்றமற்றவர் என்பது விசாரணைக்குப் பின் தன் தெரியவரும்.
என்னை விசாரணை நிலையத்துக்கு அழைக்கமுடியாது என முரண்டு பிடிப்பது, சிறப்புரிமை இருப்பதாக மக்கள் மன்றத்தை முடக்குவிப்பது எந்தவகை நியாயம்?. பதவியில் இருக்கும் வரை தலை கால் தெரியாமல் ஆடுவது பின் ஆட்டம் முடிந்தபின் அவலக்குரல் எழுப்புவது கேவலமான செயல். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது பொய்யாமொழி.

அன்று குண்டுக்கட்டாக சரத் பொன்சேகாவை தூக்கி சென்று சிறையில் அடைத்த போது அவரது முன்னாள் இராணுவ தளபதி என்ற சிறப்புரிமை எங்கே போனது ?  தான் விதைத்த வினை தன் வாசல் கதவை தட்டியற்தகே இத்தனை ஆர்பாட்டம் செய்விக்கும் தந்தைக்காக அன்று பாராளுமன்றத்துள் போர்த்திகொண்டு படுத்துவிட்டார் மகன் நாமல் ராஜபக்ச. இன்று சித்தப்பாவை சிறை மீட்க அர்த்தராத்திரியில் நீதிமன்றம் ஓடுகிறார்.

இவை எல்லாமே 19 தை நிறைவேற்றாமல் செய்ய எடுக்கும் இவர்களின் சதி முயற்சி. தேன் எடுத்தவன் புறம் கையை நக்குவான் என்றால் இவர்கள் தேன் குடத்தையே காலிபண்ணிய கூட்டம். திருடனுக்கு தேள் கொட்டியது போல இதுவரை கமுக்கமாக இருந்தவர்கள் தம் தலைவரின் அடிமடியில் கைவைத்ததும் அடுத்தது தம் மடிமீது தான் என பயந்து பதறியடித்து வருமுன் காக்கவே பாராளுமன்றத்தில் படுத்துறங்கி சிறப்புரிமை மீறல் என பிதற்றுகின்றனர்.
உண்மையில் பாராளுமன்றத்தின் சிறப்புரிமையை மீறிய இவர்களின் மேல் சபாநாயகர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவரது சகோதர பாசம் அதை தடுத்துவிட்டது என என்ணத் தூண்டுகிறது.

ஏனெனில் பாராளுமன்றத்துக்கு அணியும் ஆடை பற்றிய ஒழுங்குவிதி உண்டு. ஒரு தடவை சுரிதா உடையில் வந்த மட்டக்களப்பு பெண் உறுப்பினர் ஒழுங்கு விதிப்படி சபையில் இருந்து வெளியேற்றபட்டமை இதே சபையில் நடந்தது. அதே சபைக்குள் சாரத்துடனும் ரீ சே ட்டுடனும் படுத்துறங்கியது விதி மீறல் இல்லையா ?

மடியில் கனம் இல்லை என்றால் வழியில் பயம் இல்லை என்பார்கள். அதே போல் தவறிழைக்கவில்லை என்றால் ஆணையாளர் அழைப்புக்கு மதிப்பளித்திருக்க வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி என்ற தலைக்கனம் அவரை தடுத்துவிட்டது. ஆணையாளர் பதவி படிப்பால் பட்டறிவால் வந்தது. ஓய்வு பெறும் காலம் வரை நிலைத்து நீடிப்பது. மக்கள் ஆட்சியின் பலவீனம் பதவிக்கு வருபவரின் தரம் தராதரம் நிர்ணயிக்கப்படாமை.
அதனால் தான் மக்கள் பிரதி நிதி எனும் பல மண்ணாங்கட்டிகள் முன் கை கட்டி நிற்கும் நிலையில் படிப்பறிவு பட்டறிவு கொண்ட அதிகாரிகளை வைத்திருக்கிறது. நிர்வாக சேவையில் நீண்ட அனுபவம் கொண்டவர்கள் பல ஞானசூனிய அரசியல்வாதிகளின் கீழ் சேவையாற்ற வேண்டிய பரிதாபநிலை நாம் அனைவரும் அறிந்ததே.

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களான இவர்கள் அதிகாரிகளை ஆட்டிப் படைக்கின்றனர். ஆனால் அந்த படிப்பறிவும், பட்டறிவும் கொண்ட அதிகாரிகள் ஓய்வு பெற்றபின் அவர்களுக்கு எந்தவிதமான சிறப்புரிமையும் தரப்படுவதில்லை. அந்த நிலமையை மாற்றி அதிகாரிகளை ஆமாம் சாமிகள் அன்றி சுயமாக செயல்பட்டு சிறந்த சேவையை வழங்கவும் சட்டத்திற்கு உட்பட்ட ஊழல் அற்ற ஆட்சியை கொண்டுவரவும் மக்களின் உரிமைகள் பத்திரிகை சுதந்திரம் ஆட்சியின் வெளிப்படைத்தன்மை என பல மக்கள் நலன் சார்ந்த விடயங்களை உள்ளடக்கியதே 19 தாவது திருத்தம்.

அதை கொண்டுவரும் நேரத்தில் ஊழல் விசாரணைக்கு அழைக்கப் பட்டதற்கே மக்கள் பிரதிநிதிகளும் ஒரு பகுதி மக்கள் கூட்டமும் குழப்பம் விளைவிக்கின்றனர். முன்பு இனபிரச்சனைக்கு தீர்வு தரக்கூடிய நீலன் - பீரிஸ் திட்டத்தை தீயிட்டு கொளுத்தியது யு. என். பி.. அன்று யானைக்கு மதம் பிடித்திருந்தது. அதனால் தான் என்றோ தீர்ந்திருக்கவேண்டிய பிரச்னை தீர்வு திட்டத்துக்கு தீயிட்டு யுத்தத்தை நீடித்து தன் சொந்த நாட்டு மக்களையே யுத்த அரக்கனுக்கு பலி கொடுத்தது.

காலமாற்றத்தால் இன்று முழு நாட்டிற்கும் நன்மை தரக்கூடிய அரசியல் அமைப்பு மாற்றத்தை அவர்களே கொண்டுவரும் போது அவர்களின் சொந்த இன மக்களே அதனை குழப்புகின்றனர். அன்று இனவாத நோக்கில் இன நலன் சார்ந்த தீர்வை தரவிடாமல் தமிழர் தலையில் மண் அள்ளிப்போட்ட சிங்களம் இன்று தன் நலன் சார்ந்த செயலை செய்ய விடாமல் தன்தலையில் தானே மண்ணை அள்ளிப் போடுகிறது. இதை அறிந்து தான் தீதும் நன்றும் பிறர் தர வாரா என அன்றே எழுதிவைத்தார் வள்ளுவர்.

அதிகாரிகள் அரசியல் தலியீடின்றி செயல் பட்டால் மட்டுமே மக்களுக்கு சிறந்த சேவை கிடைக்கும். அதே நேரம் விசாரணைக்கு ஆளாவோம் என்ற பயம் இருந்தால் மட்டுமே அரசியல்வாதிகள் நிதானமாக செயல்படுவர். ஜனநாயகத்தில் அனைவரும் சமம். சிறப்புரிமை என்பது செய்த சேவையை கௌரவப்படுத்துவது. களங்கப் பட்டவர் கௌரவம் பார்க்க கூடாது. பிரச்சனைக்கு முகம்கொடுக்கவேண்டும். ஒளிந்திருந்து அடுத்தவரை தூண்டி விடக்கூடாது.

உன் இடத்துக்கு நான் வரமாட்டேன் என் இடத்துக்கு நீ வா என விசாரணையை அழைத்தால் அது விருந்தில்தான் முடியும். நக்கினார் நாவிழந்தார் நிலை தான் இறுதியில் விசாரணை முடிவாக வரும். தவறு தப்பித்து கொள்ளும். இலஞ்சம் அன்பளிப்பாக அறிவிக்கப்படும். இந்த நிலை நீடித்தால் நீதிமன்றம் குற்றமிளைத்தவர் வீட்டில் நடக்கும் காலம் வரும். நாட்டாமை தீர்ப்பை மாற்றி சொல்லு எனும் குரல் கேட்கும். வேண்டாம் இந்த விபரீதம்.

இனப்பிரச்சனையில் தீர்வுகாண எடுத்த பலமுயற்சிகள் தோல்வி கண்டதற்கு இரு பகுதியினரின் விடாப்பிடியான செயல்களும் காரணமாகும். பிரித்தாளும் சூத்திரம் தெரிந்த பிரித்தானியர் தம் வசதிக்காக பதவிகள் தந்து வளர்த்த தமிழ் பெண்ணை பெரும்பான்மை சிங்கள மாப்பிள்ளையுடன் சேர்ந்து வாழ் என கட்டிவைத்து போன கல்யாணம் மனமுறி ஏற்பட்டதால் இருவரும் ஒத்து வாழ போட்ட ஒப்பந்தங்கள் மீறப்பட விவாகரத்து கேட்ட போது தமிழ் மீது சீறிய சிங்களம்.

அன்று இனவாத பேயிடம் சரணடைந்தது போல இன்று ஊழல் பூதத்திடம் மண்டியிட்டு தன் தலையில் தானே சுடு மண்ணை அள்ளிப்போடுகிறது. அவிந்து போகும் தலை. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால் என்ற பாரதியார் பாடல் எங்கோ ஒலிக்கிறது. அது உன் சிங்கள மொழியில் ஒலித்தால் தான் நீ தெளிவு பெறுவாயா சிங்களமே ?.
(மாதவன் சஞ்சயன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com