Contact us at: sooddram@gmail.com

 

அன்று முன்பு பின் கதவால் செய்ததை இன்று பகிரங்கமாக செய்ய முற்படுகின்றனர். மக்களுக்கு பலன் கிடைக்குமா ?

(மாதவன் சஞ்சயன்)

புதிய மொந்தையுடன் அடுத்தகட்ட அரசியலுக்கு தயாராகிவிட்டது மூத்த தமிழ் தலைமை. இணக்க அரசியல் என்ற என்ற புதிய ( பழைய ) மொந்தை தற்போது அகிம்சா மூர்த்திகளால் கையில் பகிரங்கமாக எடுக்கப்பட்டுள்ளது. அதனால் தான் சிவனும் விஸ்ணுவும் கடந்த சுதந்திர தினத்தில் கலந்து கொண்டனர். பிரம்மா எப்போதுமே மான் உடனும் புலி உடனும் உறவு கொண்டால் மட்டுமே பாராளுமன்றம் போகலாம் என்பதால் அதை கெடுக்கும் செயலை செய்யவில்லை. சிவனும் விஸ்ணுவும் தன்னை கலந்தாலோசிக்கவில்லை என நழுவிக்கொண்டார். 50 / 50 கேட்டு கிடைக்காததால், சுதந்திரத்தின் பின் ஜீ ஜீ பொன்னம்பலம் செய்ய முற்பட்டதும் இதே இணக்க அரசியல் தான். அதை அமைச்சர் பதவிக்காக விலைபோய் விட்டார் என பழி சுமத்தி ஆரம்பிக்கபட்டது தமிழரசு கட்சி. அப்போது அது கொண்டு வந்தது தான் சமஸ்டி என்ற புதிய மொந்தை.

பண்டாவுடன் இணங்க முயற்ச்சித்து தோல்வியடைந்து பின்னர் டட்லி அரசில் அவர்கள் திருச்செல்வத்தை அமைச்சர் ஆக்கி செய்ததும் இணக்க அரசியல் தான். ஜீ ஜீ இணங்கிப்போனதால் ஒரு சில தொழிற்சாலைகள் தமிழ் மண்ணில் உருவானது. ஆனால் ஆரம்பத்தில் இணக்கம் காட்டிய தமிழரசு கட்சி பின் முரண்பட தொடங்கி திருச்செல்வம் திருமலை புனித நகர் விடயத்தில் பதவி விலகியதுடன் எதிப்பரசியலை மீண்டும் தொடங்கியது.

சும்மா கிடந்த சங்கை திருமலை தான் தலைநகரம் என ஊதி அந்த மண் மத்தியின் சிங்கள குடியேற்ற திட்டத்தில் முன்னுரிமை பெற்று அதை பறிகொடுத்தது தான் கண்டமிச்சம். மக்கள் பெற்ற பலன் எதுவும் இல்லை. ஆனால் அடுத்த தேர்தலில் வாக்கு பெற அதுதான் உதவியது.
ஜீ ஜீ உறவினர் துரையப்பா யாழ்ப்பாணத்தை அழகூட்டும் புதிய மொந்தையுடன் வந்தார். மத்தியுடனான அவரது இணக்க அரசியல் அவரை துரோகியாக அடையாளம் காட்ட அந்த இலக்குக்கு குறிவைத்தார் பிரபாகரன்.

விருந்து வைத்து கொண்டாடியது தமிழர் தலைமை. பின் ஏட்டிக்கு போட்டியாக இருந்த செல்வா -​​ ​ஜீஜீ கட்சிகள் இணைந்து தமிழ் ஈழம் என்ற புதிய மொந்தயுடன் வந்தனர். வென்ற பின் ஜே ஆர் உடன் இணங்கி மாவட்டசபை கொண்டு வந்தனர். இயங்க முடியாமல் அதை துறந்தனர். பொறுத்தது போதும் பொங்கி எழு என இளைஞர்களை தூண்டினர். அவர்களும் புதிய மொந்தைகளை தூக்கிக்கொண்டு போராட புறப்பட்டனர்

புலிவரும் முன்னே தமிழ் ஈழம் வரும் பின்னே என்றவர்களும், நாம் ஈழவர் எமது தாயகம் ஈழம் என படம் வரைந்தவர்களும், பெரும்படை ஆயுதங்களுடன் இலக்கை அடைவோம் என்றவர்களும், கண்ணுக்கு கண் அடிக்க சொன்னால் அடிப்போம் கொல்ல சொன்னால் கொல்வோம் என்ற கொள்கை கொண்டவர்களும், மக்கள் போராட்டம்தான் வெல்லும் அவர்களை அரசியல் மயப் படுத்துவதே எம் முதல்பணி என பலஅணிகளை உருவாக்கியவர்களும் எதிபார்க்காத வேளையில் வந்தது 83 இனக்கலவரம்.
பாதைகள் மாறின பயணங்கள் தொடர்ந்தன. தமிழ் பேசும் மக்களிடமிருந்து ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைத்தது. கூடவே அவர்களிடம் எதிர்காலம் பற்றிய பெரும் எதிர்பார்க்கையும் எழுந்தது.

தூண்டி விட்ட பழைய தலைவர்கள் தம் அரசியல் இருப்பை தக்கவைக்க சிறுபிள்ளை வேளாண்மை என கூறி இந்தியா மூலம் பலவிதமான புதிய மொந்தைகளை கொண்டுவர முற்பட்டனர். உள்ளுடனாக பழைய கள்ளே கிடைக்கும் நிலைதான் அப்போதும் ஏற்பட்டது.
தனி நாடு என்பது ஆரம்பம் முதலே இந்தியாவின் நிகழ்ச்சி நிரலில் இருக்கவில்லை. இரந்து பெறும் மனநிலையில் இல்லாத போராளிகள் நிலைமையை உணர்ந்து பேதைமை மறந்து இணைந்தனர். அதனால் ஈ என் எல் எப் பிறந்தது.

அடம்பன் கொடி திரண்டதால் திம்பு பேச்சுவார்த்தை ஈழத் தமிழருக்கு புதிய சரித்திரம் எழுதியது. அங்கு கொண்டுவரப்பட்ட புதிய மொந்தையிலும் இருந்த பழைய கள்ளை சீச் சீ புளிக்கும் என கூறி 4 அம்ச அடிப்படை கோரிக்கை வைத்து ஏற்பாடு செய்தவர் மூக்கில் விரல்விட்டு வெளியேறி வந்தனர் போராளிகள். அதனால் வந்த தும்மலின் சீற்றம் போராளிகளிடையே சிண்டு முடிந்து மோதலை ஏற்படுத்த, அதன் விளைவாக திசைமாறியது எம்மவர் ஆயுதங்கள். எதிரியின் இலக்கை விட்டு எம்மை நோக்கியே குண்டுகள் பாய்ந்ததால் நாம் சிதறுண்டு போக எதிரி இலகுவாக வடமராட் சியின் வாசலை தட்டினான்.

வடக்கின் வீழ்ச்சி இந்தியாவின் பேரம் பேசலுக்கு குந்தகம் என்பதால் தன் பிராந்திய நலனை முன்னிறுத்தி ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியா ஒப்பமிட்டது. போராளிகளின் மேல் சமா பேத தான தண்டம் பிரயோகிக்கப்பட்டு மாகாணசபை என்ற புதிய மொந்தை வந்தது. அதற்குள் மாகாணதுக்கான பூரண அதிகாரங்கள் எனும் புதிய கள் விடப்படும் என கூறப்பட்டது. புதிய கள்ளுடன் தான் வருவோம் என போராடியவர்களும் அதை நம்பி ஏற்கும் நிலைதான் ஏற்பட்டது.

மாகாண நிரல் மத்திய நிரல் பொது நிரல் என பகிரப்படும்போது மத்திய நிரல் தனித்துவம் கொண்டது பங்கிட முடியாது. மாகாண நிரலும் அவ்வாறுதான் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. இடையில் அதில் இருந்து பல உருவப்பட்டது. அதனால் மாகாண நிரலில் பல முக்கிய விடயங்கள் பகிரப்பட கூடியதாக மாற்றம் பெற்றது. மாகாண நிரல் மொந்தையில் புதிய கள்ளை பகிர முற்பட்டால் அது புளிக்கும். ஏனெனில் பொது நிரல் மொந்தை அதில் இருந்தது பெரும் பகுதியை தனக்கு சொந்தம் என கூறி எடுத்துவிடும். மிஞ்சுவது பொது நிரல் கழித்து விட்ட பழைய கள் என்பதால் அது புளிக்கும் . மீண்டும் புதிய மொந்தையில் பழைய கள் தான் இத்தனை அழிவிற்கு பின்பும் எமக்கு கிடைத்தது.

இந்தியா கொண்டுவந்த இணைந்த வட - கிழக்கு மாகாணசபை மொந்தைக்குள்ளும் புதிய கள் கிடைக்காமல் அது கலைந்து போனது. பல வருடங்களின் பின் புலிகளின் உள்வீட்டு புடுங்குப்பாடு பிரபாகரன் வன்னிக்கும் கருணா கிழக்குக்கும் தலைமைதாங்க அவர்களின் செயல் இணைந்த சபையை இரண்டாக்க வழிவிட்டது. ஆனாலும் அவை இரண்டிற்கும் அதிகார பகிர்வு என்ற புதிய கள் கிடைக்கவில்லை. பிரபாகரன் பரலோகம் போக கருணா பிரதி அமைச்சரானார். மொத்தத்தில் வந்த மொந்தைகள் புதிது கள் பழையது.
இப்போது இணக்க அரசியல் எனும் புதிய மொந்தையை பழைய தலைமை கொண்டுவர முயல்கிறது. அதற்கு கூறப்படும் காரணம் தவறவிட்ட சந்தர்ப்பங்கள், பற்றிப்பிடிக்க வேண்டிய உலக நிலவரம்.

காலம் அறிந்து பயிர் செய்வது போல் மக்கள் நலன் அறிந்து அரசியல் செய்வது சாலச்சிறந்தது. வரவேற்கலாம். ஆனால் அதை செய்ய முற்படுபவர் கடந்த கால செயல் பற்றியும் சற்று அலசுவது மக்களை தெளிவு படுத்தும். அவர்களின் சிந்தனைக்கு உரமூட்டும், தெளிவு பிறக்கும், எதிர்வரும் தேர்தல்களில் சரியானவரை தெரிவு செய்யும். ஜீ ஜீ யின் இணக்க அரசியலை எதிர்த்தவர்கள் கையில் எடுத்தது மலையக தமிழர் பிரச்சனை. ஆனால் அதன் மூலம் மலையக மக்கள் பலனடையவில்லை. மாறாக தமிழ் அரசு கட்சி தான் பலன் அடைந்தது.

தொண்டமான் அவர்களுக்கு தலைமை தங்கிய போதும் திம்புவில் போராளிகள் முன்வைத்த 4 கோரிக்கைகளில் அதுவும் உள்ளடக்க பட்டதால் இந்தியா அதை செயல்படுத்தியது. அதுவரை இலங்கையும் இந்தியாவும் ஒப்பந்தங்கள் போட்டு அவர்களை இங்கும் அங்கும் என பந்தாடின. இன்று அவர்கள் இந்த நாட்டின் நிரந்தர குடிமக்கள். துரையப்பா தன்னிச்சையாக முடிவெடுத்து இணக்க அரசியல் செய்தார். அதனால் பலநன்மைகள் நடந்ததை மறுக்க முடியாது. அவர் செயலை சரி என்று சொன்னவர்கள் பெரும் தொகையாக அவரது இறுதி ஊர்வலத்தில் அழுகுரல் எழுப்பியது அதற்கு சாட்சி. அன்று அவர் இணக்க அரசியல் செய்ததால் சுடப்பட்டார்.

அப்படி என்றால் 1977ல் தமிழ் ஈழத்துக்கு ஆணை பெற்று சென்றவர்கள் அவர்களின் பாவனைக்கு கொண்டுவந்த ஜப்பான் ஜீப் உட்பட மாவட்ட சபை கூட இணக்க அரசியல் தானே. அப்படி என்றால் எத்தனை பேரை சுட்டிருக்க வேண்டும். இங்கு தர்மலிங்கம் ஐயா, ஆலாலசுந்தரம் கொலைகள் ஏன் நடந்தது என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
அன்று ஒரு துரையப்பா அழிக்கப்பட்டார். அதன் பின் எத்தனை துரையப்பாக்கள் எம்மிடையே உருவானார்கள். துரையப்பா மிடுக்குடன் இணங்கி செய்ததை இவர்கள் சரணாகதி அடைந்து செய்தனர். எதிர்ப்பரசியல் செய்தவர்கள் கூட தங்கள் தேவைகளுக்காக பின் கதவால் இணக்கம் காட்டினர் தமக்கு வேண்டியதை பெற்றனர், மக்களை அவலத்தில் விட்டனர்.

போராளிகளாக இருந்து இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின் இணக்க அரசியல் செய்தவர்கள் கூட பேரம் பேசும் பலம் அற்றவர்களாகவே இருந்தனர். மக்களின் அவலங்களை தீர்க்கும் முழுமையான செயலை பிரபாகரன் முடிவிற்கு பின்பும் அவர்களால் செய்ய முடியவில்லை.
ஆட்சியில் இருக்கும் போது அதிகாரத்தில் இருந்தவருடன் குசு குசுக்க முடிந்ததே தவிர குரல் எழுப்ப முடியவில்லை. மத்தியில் பதவி கிடைத்தது ஆனால் மாகாணத்தில் முழுமையாக செயல்பட முடியவில்லை.

இன்று ஆட்சியில், பதவியில் இல்லாத போது அவர்களின் பேச்சுக்களும், விடும் அறிக்கைகளும் அதற்கு சாட்சி. மக்கள் காணி மக்களுக்கே ! அப்பாவிகளை விடுதலை செய் ! இரகசிய முகாம்கள் இருக்கிறதா ? என பலவாறாக குரல் இப்போது தான் பகிரங்கமாக ஒலிக்கிறது. அரசியல் போரட்டத்திலோ ஆயுத போராட்டத்திலோ சம்மந்தபடாத இரண்டும் கெட்டான்கள் செய்த இணக்க அரசியல் அவர்களையும் அவர்களின் வியாபாரங்களையும் தான் பலனடைய செய்தது.

பிரபாகரனை வெல்ல அரசுக்கு உதவிய கருணா கூட இணக்க அரசியலால் கிழக்கில் பெரிதாக எதனையும் சாதிக்கவில்லை. காரணம் அவர் சரணடைந்து பலன் பெற்றதே. அவர் தப்பிப் பிளைத்ததே பெரும் பாக்கியம். அதனால் தன் இருப்பை காப்பாற்ற இணங்கி செயல்பட மட்டுமே அவரால் முடியும். எனவே அவரும் செய்தது சரணாகதி அரசியல் தான்.  வரலாற்றில் முதல் தடைவையாக உருவான இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை கூட ஆரம்பத்தில் இணக்க அரசியல் மூலமே உருவானது. ஆனால் அது இந்திய உத்தரவாதத்துடன் ஏற்படுத்த பட்டதால் இழுபறி கொண்டதாகவே இருந்தது. ஒப்பந்தம் போட்டதால் ஜே ஆர் அதை நடைமுறை படுத்தும் கடப்பாட்டுக்கு விருப்பமின்றியே சம்மதித்தார்.

திருமலையில் மாகாணசபை அமைவதை தவிர்த்தால் தமிழ் ஆளுநர் தருவதாக பேரம் பேசினார். மறுத்தபோது இளைப்பாறிய இராணுவ தளபதியை ஆளுநராக நியமித்தார். தன் பதவிக்காலம் முடியும் போது முழுமையாக எதனையும் அவர் பகிரவில்லை. ஈழம் இல்லை ஆனால் எல்லாம் என கூறிய பிரேமதாசா ஜனாதிபதி தேர்தலில் வெல்வதற்காக மாகாண சபை கட்சி இணங்கி செயல்பட்டது. ஜனாதிபதியாக வந்த பிரேமதாசா ஏறிவந்த ஏணியை உதைத்து அதிகார பகிர்வு பற்றி பல தடவைகள் பேசிய பெருமாளுடன் இணங்க மறுத்தார்.

முதல்வர் இந்தியாவிடம் முறையிட அதை முறியடிக்க இந்திய படைகளை வெளியேற்ற புலிகளின் வாலை பிடித்தார் பிரேமதாசா. இறுதியில் அதனை கலைத்து தன் சுய முகத்தை காட்டினார். ஜே ஆர் ஆரம்பித்து வைத்த சபைக்கு பிரேமதாசா சங்கூதினார். ஆரம்பம் முதலே அரசுகளுடன் பின்கதவு அரசியல் செய்து சுயநலன் பெற்ற மூத்த கட்சிதலைவரும் அவர் பின்தொடரும் இளவலும் தம் பட்டறிவால் மக்கள் நலனுக்காக எதிர்ப்பரசியலை கைவிட்டு இனி தாங்கள் இணக்க அரசியல் செய்யப்போவதாக புதிய மொந்தையை காட்டுகின்றனர். அவர்களுடன் கூட்டில் உள்ள கட்சிகள் என்ன முடிவில் இருக்கின்றன என்பது தான் இங்கு எழும் கேள்வி.

அண்மையில் ஈ பி ஆர் எல் எப் கட்சியின் முன்னாள் மூத்த உறுப்பினர் தெரிவித்த கருத்தை நண்பர் ஒருவர் கூற கேட்டு ஆச்சரியப்பட்டேன். அந்த முன்னாள் அரசியல் போராளியும் இன்று அறப்படித்த பல்லியின் நிலையில் இருப்பதை பார்த்து கவலைப்பட்டேன்.
போராட்ட காலத்தில் அவர்கள் நடத்திய தெருக்கூத்தை அப்போது மானிப்பாய் தெரு சந்தி மூலை முடுக்கெல்லாம் பார்த்து அவர்களின் யதார்த்த சிந்தனைகளால் கவரப்பட்டவன். கடந்த கால தமிழர் விடுதலை கூட்டணியின் பம்மாத்து அரசியலை புட்டு புட்டு வைப்பார்கள்.
அதில் ஒருவர் அமிர்தலிங்கம் பாணியில் பேசுவது தான் சுவாரசியம். தமிழ் ஈழம் என்று எழதிய அட்டையின் முன் நின்று இளைஞர்களே அணிதிரள்வீர் அமைப்போம் தமிழ் ஈழம்.

எமக்கு ஆதரவாக தமிழகம் பொங்கி எழும் இந்தியா வரும் அமெரிக்காவுக்கும் அறிவித்து விட்டேன் இறுதிவரை போராடுவோம் ஓயமாட்டோம் மக்களை வழி நடத்தி வாக்குகளை எமதாக்குவீர் துரோகிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என தேர்தல் காலத்தில் மேடைகளில் அவர் பேசுவது போல அதே குரல் பாணியில் பேசிவிட்டு அடுத்து ஜனாதிபதி என எழுதிய அட்டையின் முன் நிற்கும் ஜே ஆர் நடிகரை கண்டதும் பவ்வியமாக ஆங்கிலத்தில் யுவர் எக்சலன்சி வீ ஆர் ஆண்சரபிள் ரு அவர் பீபிள் யு கிவ் சம்திங் ரு சற்றிஸ்வை அவர் பீபிள் (Your Excellency We Are Answerable to Our People, You Give Some Think To Satisfy Our People - அதி மேதகு ஜனாதிபதி அவர்களே எமது மக்களுக்கு பதில்கூற கடமை பட்டவர்கள் நாங்கள் அவர்களை திருப்பி படுத்த எதையாவது தாருங்கள்) என கேட்க, மாவட்ட சபை என எழுதிய அட்டையை ஜே ஆர் நடிகர் தூக்கி போட அதை தூக்கி கொண்டு அனைவரும் ஆனந்த கூத்தாடுவர். ஒரு மூலையில் தமிழ் ஈழம் என எழுதிய அட்டை கை விடப்பட்டு புழுதியில் கிடக்கும். அப்போது பின் புலத்தில் வாய் சொல் வீரர் வாய் சொல் வீரர் என கோசம் எழும்பும். பறை ஒலி அடங்கி அறைகூவல் விடுக்கப்படும். வாய்ச்சொல் வீணரை நம்பாதீர். மக்கள் மயப்பட்ட ஆயுத போராட்டமே வெல்லும். ஆதலால் அணிதிரள்வோம் வாரீர் என்ற அழைப்பு விடப்படும். அதை கேட்டு புல்லரித்து தம் பாடசாலை புத்தகங்களை கைவிட்டு கால் மாக்சும் லெனினும் மாக்சிம் கோக்கியின் தாய் நாவலும் மாணவர் கையில் ஏறியது.

அதை படித்து தெளிவு பெற்றவர்களில் ஒரு பகுதியினர் ஆயுத பயிற்சிக்கு தமிழகம் செல்ல மாதகல் கரையில் காத்திருக்க ஏனையவர்கள் கிராமங்கள் தோறும் அரசியல் பிரிவாக செயல்பட தொடங்கினர்.பின்பு நிகழ்ந்த காட்சி பிழைகள் பற்றி நான் கூறவேண்டியதில்லை. முள்ளிவாய்க்கால் வரை நடந்ததை நாம் அறிவோம். அத்தனையும் நேரில் பார்த்தும் கேட்டும் அறிந்த என் மனதில் அந்த மூத்த போராளியின் இன்றைய நிலைபாடு அறிந்து கவலை கொண்டேன். இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் சுரேஸ் பிரேமசந்திரன் மட்டும் தான் அரசியல் செய்கிறார் என அவர் கூறியதை என் நண்பன் கூற கேட்டபோதது மானிப்பாய் தெருக்களில் நடந்த கூத்து என் ஞாபகத்துக்கு வந்தது.

அன்று எவரை வாய்ச்சொல் வீரர் என தோலுரித்தார்களோ இன்று அவர் பாணியிலேயே உணர்ச்சிகர பேச்சாலும் நிறைவேறாத வாக்குறுதிகளாலும் மக்களை தூண்டி பாராளுமன்றம் செல்வதும் தன் பதவியை தக்கவைப்ப துமே நோக்கமாக கொண்டவரை இந்த முன்னாள் மூத்த போராளி சிலாகித்து பேசுவது எவ்வளவு சிறுமைத்தனம். எனது இந்த மனநிலையில் தான் அன்று இதயசுத்தியோடு போராடப்புறப்பட்ட அதனை ஆதரித்த அனைவரும் இருப்பர்.
கொண்ட கொள்கை மாறி தன் தோழர்களை தலைவனை பலி கொண்டவரிடம் பதவிக்காக சரணடைந்து தியாகிகள் தினத்தை கைவிட்டு தான் மண்டியிட்ட பிரபாகரன் மனம் மகிழ தீபம் ஏற்றியவர் இன்று இணைந்திருக்கும் கூட்டமைப்பு தலைமை தான் இணக்க அரசியல் எனும் புதிய (பழைய) மொந்தையை பகிரங்கமாக தூக்குகிறது.

வாக்குகளுக்காக வசைபாடும் இவரை இணங்க வைக்க பதவி கொடுத்தால் போதும் அடக்கிவாசிப்பர் ஆனால் அல்லல் பட்ட மக்களுக்கு இணக்க அரசியல் மூலம் எதை பெற்றுக்கொடுக்க போகிறது அதன் தலைமை என்பது தான் கேள்வி.
அவர்களின் கடந்த கால அரசியலில் சுதந்திர கட்சியுடன் வாதடுவதும் யு என் பி க்கு வாலாட்டுவதும் வரலாறாகும். சந்திரிகாவின் தீர்வு பொதியை தீயிட்டு கொளுத்துவதற்கு துணைபோனவர்கள் வாதாடி எதையும் பெறுவார்கள் என எப்படி நம்புவது. வழமை போல யு என் பி க்கு வாலாட்டினால் போடுவதை பொறுக்கத்தான் முடியும்.
இணக்க அரசியல் என்பது இரந்து பெறுவதல்ல என்பதை பழைய தலைமை நிரூபிக்குமா ? பொறுத்திருந்து பார்ப்போம் இவர்கள் இதுவரை வெளிப்படையாக தூக்காத புதிய மொந்தையில் கொண்டு வருவதை.

(மாதவன் சஞ்சயன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com