Contact us at: sooddram@gmail.com

 

மைத்திரி முடிவு சரி ! விக்னேஸ்வரன் செயல் தவறு!

(மாதவன் சஞ்சயன்)

அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப பிரபலங்களான தனி நபர்கள் முன்னிலைப் படுத்தப்படுவது டட்லியில் தொடங்கிய வரலாறு. டி எஸ் சேனநாயக்க தன்னை ஒதுக்குவதாக உணர்ந்த பண்டாரநாயக்க தனிவழி போனார். அதன் பின்பு நிகழ்ந்த டி எஸ் திடீர் மரணத்தால் தானே நிரந்தர பிரதமர் என்ற கொத்தலாவலையின் கனவு டட்லியை பிரதமராக நியமித்ததன் மூலம் கலைக்கப்பட்டது. டட்லியிடம் அப்போது இருந்தது டி எஸ் மகன் என்ற பிரபலம் மட்டுமே.
பண்டாரநாயக்க சுடப்பட்ட பின்பு இடைக்காலத்தில் தகாநாயக்க பிரதமராக இருந்தாலும் பின் கூட்டி வரப்பட்டவர் சிறிமா. பண்டாவின் மனைவி என்பதே அவரின் அடையாளம். தொடர்ந்த வரலாற்றில் காமினி திசநாயக்கா, அத்துலத்முதலி, அஸ்ரப், ஜெயராஜ் பெனாண்டோ பிள்ளை ஆகியோரின் மனைவிமாரும் அரசியலில் புது பிரவேசங்கள். சந்திரிகா விதி விலக்கு. அவர் விஜயுடன் இணைந்து அரசியல் இயங்கியவர்.

தெற்கின் இந்த வாரிசு அரசியல் கலாச்சாரம் வடக்கு கிழக்கில் இருக்கவில்லை. செல்வாவின் மகன் சந்திரகாசன் அவர்வழி தொடரவில்லை. ஜீ ஜீ மகன் குமார் குழப்பி அடித்து தோற்றுப்போனார். அவர் மகன் புலி நியமனத்ததால் 1 தரம் எம் பி. பின் தோல்வி. இம்முறை முடிவு ? தந்தை தருமலிங்கம் எம் பி யாக இருக்கும் போது புளட்டில் செயல்பட்டவர் சித்தார்த்தன். வாரிசு அறிமுகம் தேவைப்படாதவர்.

ஒவ்வொரு தேர்தலிலும் பிரபலங்களை களம் இறக்குவது தான் வடக்கு கிழக்கு அரசியல் சூத்திரம். அப்படி களமிறக்கப்பட்டவர் தான் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியும் இன்னாள் வடமாகாண முதல்வரும் ஆகிய திரு விக்னேஸ்வரன். மக்களால் அறியப்பட்ட பல பிரபலங்கள் இருந்த போதும் அவர்கள் பின் அணிதிரள பலர் காத்திருந்த போதும் பலரின் கனவை கலைத்தாலும் உத்தம வில்லனாக அவர் வெற்றி வாகை சூடினார்.

வெளிப்படையாக மாவை மண் அள்ளி தூற்ராவிட்டாலும் வித்தியாதரன் விக்கி விக்கி அழா விட்டலும் உள்ளுக்குள் குமைந்து கொண்டு தான் இருந்திருப்பார்கள். இருந்த போதும் கூட்டமைப்பு கட்சிகள் எல்லாம் கொழும்பு சென்று அவரை வேண்டிக் கேட்டதால் வந்தார், போட்டியிடார், பிரபாகரனை மாவீரன் என்றார் அதனால் அதிகப்படியான வாக்குகளை பெற்றார், வென்று முதல்வர் ஆனார்.

தெற்கின் மகிந்த புயலை தென்றலாக மாற்றியவர் 4 தசாப்தம் அரசியல் செய்த சாமானியரான மைத்திரி. மெல்லென பாயும் நீர் கல்லையும் கரைக்கும் என்பதை இன்றுவரை நிரூபிப்பவர். மகிந்த எனும் சூறாவளி மீண்டும் உருவாக முற்படும் போது, தான் நடுநிலை வகிப்பதாக கூறி எவருக்காகவும் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என அறிவித்து அதே வேளை மகிந்தவை பிரதமராக நியமிக்க மாட்டேன் என கூறியதன் மூலம் ஒரு செய்தியையும் வாக்காளருக்கு அவர் தெரிவித்துவிட்டார்.

அந்த சாமானியனுக்கு உள்ள தைரியம் முன்னாள் நீதிமானுக்கு இல்லை. மைத்திரியின் பேச்சு இதய சுத்தியுடன் வெளிப்படுகிறது. முதல்வர் எழுத்தில் வடித்து வாசிப்பார் அல்லது வெளியிடுவார். அரசியல் என்பது மக்கள் நலன் சார்ந்தது. தனி நபர் கௌரவமல்ல. ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி அதற்கு பின் நீயாரோ நான் யாரோ என்பது நீதிப்பிறழ்வு.
மைத்திரியை கூட்டி வந்து வெல்ல வைத்த கூட்டை அவர் கௌரவப் படுத்தினார். கூட்டாக அழைத்தால் மட்டுமே வருவேன் என கூறி வந்த விக்கியர் தான் வென்ற பின் கூட்டில் உள்ளவரை அகௌரவப் படித்தினார். பிரபாகரன் மாவீரன் என கூறியவர் மகிந்த முன் தான் பதவி ஏற்பேன் என ஏன் அதே மேடையில் கூறவில்லை. ஜனாதிபதி முன் பதவி பிரமாணம் என்பது சம்பிரதாயம் (Protocol) அதை ஏன் வாக்காளருக்கு கூறவில்லை.

பதவி ஏற்றபின் நல்லிணக்கத்துக்காக போனேன் மகிந்த தலையில் நல்லெண்ணை பூசப் போனேன் என்று பசப்பினார் வினை தீர்க்க வந்தவர். பூட்டிய அறையில் கேட்டதை மேடையில் தம்பிக்கு மந்திரி பதவி கேட்டார் என வசை பாடியவருக்கு தெரியாதா தான் எண்ணை தடவிய ஜனாதிபதி மகிந்தர் முன்பு மீன்பிடி அமைச்சராக இருந்த போது அந்த அமைச்சில் வலை வீசும் ஆலோகசரான சுரேஸ் பிரேமச்சந்திரனின் சுயநலம் பற்றி.
சாமானிய அரசியல்வாதி நேர்மையாக நடந்து கொண்டார் கூட்டி வரப்பட்ட நீதிமான் சந்தர்ப்பவாதியானார். அன்று சிங்களவர் மோடையார் என சிறு வயதில் கூற கேட்ட எம் காதுகள் குளிர்ந்தன. இன்று எம் மூளை தமிழர்களான நாம் தான் அடி முட்டாள்களாக்கப்பட்டோம் என்பதை ஏற்க மறுக்கிறது. எம் சிந்தனை சிறகுகள் உணர்ச்சி பேச்சுகளால் விரிய மறுக்கின்றன. கூண்டு பறவைகளாய் வாக்களிக்க மட்டும் நாம் திறந்து விடப்படுகின்றோம்.

மகிந்த தேர்தலில் போட்டியிடாதிருந்தால் மைத்திரி முடிவு வேறாக இருந்திருக்கும். அவரின் தேசிய அரசு கனவை நிறைவேற்ற நிச்சயம் தான் வளர்ந்த கட்சியை ஆதரித்து பிரச்சாரம் செய்திருப்பார். மகிந்தரை அம்மணமாக்கவே அவர் நடுநிலை வகிக்க முடிவெடுத்தார். அதே நேரம் தான் வளர்ந்த கட்சியின் தொகுதி அமைப்பாளர்களாக மகிந்த எதிர்ப்பு அணியினரை தான் நியமிக்கிறார். இது மகிந்தர் பலத்தை குறைக்கும்.

மாகாணசபை அதிகாரத்தை அதிகரிக்கும் ஒரே இடம் பாராளுமன்றம் தான். எந்த அரசியல் மாற்றமும் அங்குதான் கொண்டுவரப்படும். நடைமுறையில் இருக்கும் 13 ஐ பலப்படுத்தி மேல்நோக்கி எடுத்து செல்ல அங்குதான் போராடவேண்டும். தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதை கூறினாலும் நம்பிக்கை நல்லெண்ண மூலம் படிப்படியாகத்தான் 67 வருட பிரச்னையை தீர்க்க முடியும். அதற்கு கூட்டமைப்பு அதிக ஆசனம் பெறவேண்டும்.

அதற்கான தேர்தலில் தன்னை கூட்டிவந்த கூட்டில் உள்ளவர்களுள் காணப்படும் விருப்பு வாக்கு போட்டியை காரணம் காட்டி நடு நிலை வகிக்க போகிறாராம். போட்டியாளர் வெற்றியை தான் குறிவைப்பார் அது தவறல்ல. அது ஒரு கட்சியோ கூட்டோ அது தான் யதார்த்தம். 1994ல் தனித்து போட்டியிட்ட தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர்கள் தமக்குள் விரோதிக்க வில்லையா.

ஆரம்பத்தில் இருந்தே முன்னாள் ஆயுத போராளிகளுடன் அவருக்கு ஒவ்வாமை உண்டு. மாகாண சபையில் முதல்வரை சுற்றி நோகாமல் நுங்கு தின்ற சில சட்டத்தரணிகளும் கட்சிமாறிகளும் முதல்வரின் விருப்பு தெரிவானதால் ஆரம்பத்தில் அவர் தமிழரசு கட்சியின் வாரிசாக தன்னை மாற்றமுற்பட்டார். மாகாண சபையே போராளிகள் பொதுமக்கள் பேரழிவில் வந்தது என்பது அவருக்கு உணர்த்தப்பட்டதும் மௌனமானார்.
பொருளியல் படிப்பவருக்கு கேவலக்கூட்டு என்றால் புரியும். எண்ணை ஏற்றுமதி நாடுகளின் கூட்டான ஒபெக் (OPEC) அமைப்பை அவ்வாறு கூறுவார். தமக்குள் மோதல் போக்கை கொண்ட அந்த நாடுகள் எண்ணை விலையை தீர்மானிப்பதில் மட்டும் தமக்குள் ஒன்றுபடுவார். அதே போல பாராளுமன்ற ஆசனங்களை வெற்றி கொள்ளல் என்ற ஒரே நோக்கில் உருவான கூட்டமைப்பு என்ற கேவலக் கூட்டில் தான் முதல்வரும் இருக்கிறார்.
அவரது கடமை கூட்டை வெல்ல வைப்பது. மேடையில் வீட்டுக்கு வாக்களியுங்கள் வீடுபேறு அடையலாம் என கூறுவதில் அவருக்கென்ன தடை உள்ளது. எப்படி நடுநிலை தவறும். வேண்டுமானால் உங்கள் விருப்பு வாக்குகளை நீங்கள் விரும்பியவர்களுக்கு போடுங்கள் என வாக்காளருக்கு கூறி நடுநிலை வகிக்கலாம். வேட்பாளரிடமும் நான் எவரது இலக்கத்தையும் முன்னிலை படுத்தமாட்டேன் என நிபந்தனை விதிக்கலாம்.

இதே முதல்வர் பதவிக்கு மாவையோ வித்தியாதரனோ தமிழ்மாறானோ நிறுத்தப்பட்டிருந்தாலும் விக்கியர் பெற்ற விருப்பு வாக்கை பெற்றிருப்பர். வடக்கில் தமிழ் அரசு கட்சியின் பாரம்பரிய செயல் அது. தாம் முன்னிலை படுத்துபவருக்கு வாக்களிக்க செய்யும் சூத்திரம் அவர்களுக்கு தெரியும். அவர்கள் ஆதரவில் எவர் முதல்வராக வந்திருந்தாலும் இந்த முடிவை எடுத்திருக்க மாட்டார்கள். வெளித்தாக்கம் இல்லாத மண்ணின் மைந்தர்கள். அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை என்பது போல நடுநிலை என்பது நழுவுதல் அல்ல.

(மாதவன் சஞ்சயன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com