Contact us at: sooddram@gmail.com

 

பழையவை படிப்பினையா ? அல்லது அல்லது தொடர்கதையா ?

கௌரவர் அமைத்த பத்மவியூகத்தை உடைத்து செல்லும் வித்தை தெரிந்த அபிமன்யுவுக்கு அதற்குள் இருந்து வெற்றிவாகை சூடி திரும்பும் சூத்திரம் தெரியவில்லை. உடைத்துக்கொண்டு உள்ளே போ நாங்கள் பின்னே தொடர்வோம் என்ற பாண்டவரில் நால்வரால்,சயத்திரதனின் அக்கினி மாலையை கூட கடந்து செல்ல முடியவில்லை. உட்புகுந்த அபிமன்யு வெளியேறும் வழியறியாது துரியோதனாதியாரின் சூழ்ச்சிக்கு பலியானான்.

அபிமன்யு வீரன் மறுப்பதற்கில்லை. இளம்கன்று பயமறியாது. தன் பெரியப்பாக்களும் சித்தப்பாக்களும் பின் தொடர்வர் என்ற நம்பிக்கையில் தனக்கு தெரிந்த வித்தையை கொண்டு வெற்றியை நிச்சையிக்க களம் புகுந்தான். ஆனால் அவனை பின்தொடர்வோம் என சொன்னவர்களுக்கு தாம் எதிர்கொள்ள கூடிய தடைகள் பற்றிய முன்னறிவு விவேகம் இருக்கவில்லை. விவேகம் மந்தமானதால் வீரம் மடிந்து போனது.

ராமாயணம் மகாபாரதம் கற்பனை வடிவங்களாக இருக்கலாம். ஆனால் அவற்றில் கூறப்பட்டவை எக்காலத்துக்கும் பொருந்தும். உறவுகள் ஒன்றுபட்டால் எதிரியை வெல்லலாம் என ராமாயணமும், நமக்குள் நாமே முரண்பட்டால் எதிரியில் மட்டுமல்ல, எம்மிலும் பலர் மாண்டு மடியலாம் அதனால் எதிரி தன் சேதாரம் போக மிஞ்சும் தானடைந்த தன் வெற்றியை குதூகலித்து கொண்டாடுவான் என பாரதமும் கூறுகிறது.

99 சகோதரர்களை இழந்து, தன் 1 சகோதரி கணவன் சயத்திரதனை இழந்து மாமன் சகுனியை இழந்து, நண்பன் கர்ணனை காவுகொடுத்து, இறுதியில் பீமனுடன் மோதி மல்யுத்த விதி மீறலாக தொடை மீது வீமன் தாக்கியதால், தொடை பிளந்து குற்றுயிராய் கிடந்த வலிக்கு துரோணர் மைந்தன் அசுவத்தாமா கொண்டு வந்த பாண்டவர் புதல்வர்கள் அனைவரையும் கழுத்தறுத்து கொன்றுவிட்டேன் எனும் செய்தி நிவாரணியானது.

யுத்த தர்மத்தை மீறி நித்திரையில் இருந்த பாண்டவர் புதல்வரை கழுத்தறுத்து கொன்ற அசுவத்தமாவுக்கு தெரியாது பாண்டு வம்சத்தை மீண்டும் கட்டி எழுப்பும் வாரிசு கௌரவர்களால் வஞ்சகமாக வீழ்த்தப்பட்ட அபிமன்யு மனைவி உத்தரையின் வயிற்றில் கருவாக உறங்குகிறான் என்பது. தமது அராஜகத்தை எதிர்த்த பாண்டவர் வாரிசுகளை அழித்துவிட்டேன் என ஏக்களாமிட்டான் துரியோதனன். ஆனால் பாண்டுவின் பூட்டனான உத்தரை மகன் தான் பின்பு ஆட்சி அமைத்தான்.

ஈழ போராட்ட வரலாறும் இதோடு ஒத்துப்போகும். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் கேடு என்பதை 2 இதிகாசங்களும் கூறிச்சென்றன. குகனோடு ஐவர் ஆனோம் சுக்கிரீவனுடன் அறுவரானோம் என கூறிய ராமர் சுக்கிரீவன் அண்ணன் வாலியை வதம் செய்த பின்புதான் அவ்வாறு கூறினான். விபூசணன் காட்டிக்கொடுத்ததால் ராவணன் பலவீனப் பட்டான். சகோதர படுகொலை, மற்றும் காட்டி கொடுப்பின் ஆரம்பம் ராமாயணம்.

அண்ணன் செயல் தவறு அதனால் எம் இனத்துக்கு வரும் அழிவு என கூறிய விபூசணனை விரட்டி விட்டான் ராவணன். அண்ணனை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் ஆனால் என் இனத்தை தண்டித்து விடாதீர்கள் என ராமரிடம் வாக்குறுதி வாங்கினான் விபூசணன். பாண்டவர் தன் சகோதரர் என தெரிந்தும் செஞ்சோற்று கடன் தீர்க்க வீழ்ந்து பட்டான் மாவீரன் கர்ணன். தன் வீரத்தை வேண்டுமென்றே கொச்சைப்படுத்திய, தான் எதிரியாக பார்த்த ஒருவனை தவிர சகோதரர் எவரையும் கொல்வதில்லை என்ற முடிவில் இருந்தான் கர்ணன்.

ஆயுதபோராட்டம் ஆரம்பிக்க அடலேறுகளின் மேடை பேச்சே காரணம். ஆண்ட தமிழா மீண்டும் ஆட்சி அமைக்கவா என இளைஞரை தூண்டியவர் அவர்களை வழி நடத்தவில்லை. பத்மவியூகத்தை உடைத்த அபிமன்யுகளுக்கு அவர்கள் ஆதரவு தரவில்லை. மேடை வீரர்கள் நிஜக்களத்தில் அகிம்சைவாதிகள் ஆனார்கள். சிறு பிள்ளை வேளாண்மை என ஏளனம் செய்து தம்மை முன்னிலைப்படுத்திய தீர்வுக்கு இந்தியாவில் தவம் கிடந்தனர்.

எதிர்கட்சி தலைவர் பதவி கொண்டு சந்தித்த எல்லா வெளிநாட்டு தூதுவரும் பிரிவினைக்கு ஆதரவு தரவில்லை அதனால் நிலைமைக்கு ஏற்ப நாம் மாவட்ட சபையை ஏற்றோம். இளைஞர்கள் குழப்பிய போதும் மக்கள் தேர்தலில் வாக்களித்தனர். அதிகாரத்துக்காக நாம் ஜே ஆர் உடன் பேசி, மீண்டு மீண்டும் பேசிக்கொண்டிருக்கும் போது சிலர் வைத்த கண்ணிவெடி 83 கலவரமாகியது. நாம் பாதை மாறக்கூடாது. டெல்லியுடன் பேசி, மீண்டும் மீண்டும் பேசி, நல்ல முடிவு காண்போம் அதுவரை எம்ஜிஆர் தந்த வீடுகளில் காத்திருப்போம் என இருந்துவிட்டானர்.

வழி காட்டல் இல்லா அபிமன்யுக்கள் தம் வீரத்தை தமக்குள் காட்டி சகோதர படுகொலையை ஆரம்பித்தனர். விபூசணன் எதிரிக்கு துணை நின்று தன்னை பாதுகாத்து கொண்டான். கர்ணன் பலரை தப்பிக்க விட்டான். கருணா போன்ற விபூசணரையும் ராதா என்ற கர்ணனையும் அறிந்தவர்களுக்கு தெரியும் அவர்களின் செயல்ப்பாடு. தம்மை நம்பிய போராளிகள் பலியாவதை இந்த விபூசணர்கள் பார்த்திருக்க மன்னாரில் ராதா பிடிபட்ட தோழர்களை தப்பிக்கவிட அதில் பலர் இன்றும் உயிருடன் உள்ளனர்.

ராவணனை வெல்ல உதவிய விபூசணன் கோரிக்கைப்படி மக்களை மட்டுமல்ல ராவணன் சேனையையும் ராமன் விட்டு விட்டான். விபூசணனிடம் ஆட்சியை கையளித்தான். தான் கேட்டபடி மக்களையும் சரணடைந்த பிரபாகரன் குடும்பம் உட்பட வெள்ளை கொடி புலிகளையும் விட்டு விடாமல் கொன்றோளித்ததாக இன்று புலம்புகிறார் தேசிய பட்டியலில் தன் பெயர் இல்லை என்றவுடன் இந்த கலியுக விபூசணன் கருணா.

மக்களுக்காக தாம் ஆயுதம் ஏந்தியதாக கூறி இன்று அரசியல்வாதிகளான எவரும் ஜனநாயக அரசியலுக்கு விரும்பி வரவில்லை. ஆயுதங்கள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டபின் இயலாமையால் அவர்கள் எடுத்த புது அவதாரம் அது. டக்ளஸ், சுரேஸ், செல்வம், பிள்ளையான், கருணா முதல் இன்று வித்தியாதரன் தேர்தல் கேட்க கூட்டி வரும் முன்னாள் புலி துளசிக்கும் இது பொருந்தும்.

புலிகளிடம் தோழரை பலிகொடுத்து தான் மட்டும் தப்பி இந்திய ஆதரவில் மாகாணசபை பின் பாராளுமன்றம் போன ஜனநாயகவாதி சுரேஸ். டெலோ செல்வம் வழியும் அதுவே. ஒரு ராணுவ தாக்குதலில் கூட நேரடியாக பங்குபெறாத தளபதி டக்ளஸ், சென்னை மத்திய சிறையில் இருந்து பிணையில் வந்து பிரேமதாவின் தேவைக்கு பயன்பட்ட ஜனநாயவாதி. டக்ளஸ் தீவகத்தில் ரஞ்சன் விஜயரத்தின பாதுகாப்புக்காக ஏ கே 47 உடன் தோன்றும் படம் பார்த்தது பற்றி தயான் ஜயதிலக எழுதியுள்ளார்.

வன்னிப்புலி தாக்கியதில் மீனகத்தைவிட்டு மௌலான வாகனத்தில் தப்பிவந்த ஜனநாயகவாதி தான் கருணா. பொலன்னறுவை காட்டில் ராணுவ பாதுகாப்பில் இயங்கி மகிந்தரின் தேவைக்காக முதல்வரான ஜனநாயகவாதி பிள்ளையான். ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதால் ஜனநாயகத்துக்கு வரமுயல்பவர் துளசி. இவர்கள் யாருமே விரும்பி வரவில்லை. அவர்களின் இயலாமை, சூழ்நிலையே அன்றி விருப்புத் தெரிவல்ல.
வாலி அரவணைத்திருந்தால் சகோதர படுகொலை நடந்திராது. ராவணன் செவிமடுத்திருந்தால் துரோகம் நிகழ்ந்திராது. இன்று அது கலியுகத்திலும் தொடர்ந்திராது. அதே வேளை பல கர்ணன்கள் எதிரியிடம் இருந்திருந்தால் கந்தன் கருணை படுகொலை உட்பட நடந்த அத்தனை சம்பவங்களும் நடைபெற்றிராது. நம்மவர் பலர் சொந்த மண்ணில் இல்லாவிட்டலும் புலம்பெயர் மண்ணிலாவது உயிரோடு இருந்திருப்பர்.
(மாதவன் சஞ்சயன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com