Contact us at: sooddram@gmail.com

 

மட்டு மைந்தரின் மனமாற்றம் ?

மட்டக்கிளப்பு தமிழர் பிரதித்துவம் பாதிக்கப்பட கூடாது எனவே தமிழ் கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள் என திருவாய் மலர்ந்துள்ளார் கருணா அம்மான் எனும் முரளிதரன். நான் பெறும் வாக்கில் முஸ்லிம் ஒருவர் உறுப்பினராகும் நிலையை தவிர்க்கவே களம் இறங்கவில்லை என்கிறார் அருண் தம்பிமுத்து. கருணா எஸ்.எல்.எப்.பி உபதலைவராக, அருண் மட்டக்களப்பு அமைப்பாளராக மகிந்தவால் முன்பு நியமிக்கப்பட்டவர்கள். ஜனவரி 8ல் அடித்த சூறாவளியில் ஆலமரமே சாய்ந்தபின் அண்டிப்பிளைத்தவர் இனி விமோசனம் தேடும் நிலை. கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு தொகுதிகளை உள்ளடக்கியது மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம். 1977ல் கல்குடா 1, மட்டக்களப்பு 2, பட்டிருப்பு 1 என 4 இருந்து, தேர்தல் முறை மாற்றத்தால் 5 உறுப்பினர்களாக கூடியது. தமிழர் 76% முஸ்லிம்கள் 24% உள்ளதால் தமிழர் 4 முஸ்லிம் 1 என தெரிவு செய்யப்பட வேண்டும்.

ஆனால் கடந்த காலத்தில் இதே கருணா, அருண் வகையறாக்கள் செயல்பட்ட முறையால் தமிழர் பிரதி நிதித்துவம் பறிபோனது. நான் குறிப்பிடுவது இனவெறி அல்ல. அடுத்தவரை அழிக்க நினைப்பது தான் இனவெறி. தன் உரிமையை தக்கவைத்தல் இனப்பற்று. இன நல்லுறவு என்பது விட்டுக்கொடுத்தல். பறிகொடுத்தல் அல்ல. முஸ்லிம் கட்சிகள் வருமுன் தமிழரசு கட்சியில் முஸ்லிம்கள் போட்டியிட்டனர்.

மருதமுனை மசூர் மௌலானா தமிழரசு கட்சியால் செனட்டர் ஆக்கப்பட்டார். கல்முனை அஸ்ரப்பின் அரசியல் ஆசான் அமிர்தலிங்கம். அண்ணன் காலத்தில் தமிழீழம் கிடைக்கவிட்டாலும் இந்த தம்பி அதை பெற்றுத் தருவேன் என முழங்கிய அஸ்ரப் பின்னாளில் முஸ்லிம் காங்கிரசை ஸ்தாபித்தார். அது தவறல்ல. அது அவர் பெற்ற படிப்பினை. கறிவேப்பிலையாக இருந்த முஸ்லிம்களுக்கு அவர் கொடுத்த அரசியல் அங்கீகாரம்.

இனப்பற்றை, இன வாதம் / இனவெறி என கொள்ளாமல் அவரவர் வழியில் செல்வதே அரசியல் நாகரீகம். அதை குறை ஆயுளில் முடிந்து போன வடக்கு - கிழக்கு மாகாண சபையில் காண முடிந்தது. ஆளுந்தரப்பில் தமிழர் எதிர் தரப்பில் முஸ்லிம்கள் இருந்த போதும் தீர்மானங்களை எடுத்தபோது ஒத்துழைப்பு கொடுத்தர்கள். தமிழர் முஸ்லிம்களின் ஒன்றித்த செயல் பிரேமதாசாவை சிந்திக்க வைத்தது. புலிகள் அவரின் கனவை நனவாக்கினர்.

அவரவர் பங்கு அவரவருக்கு என்ற நிலை அண்மைக்கால அரசியலில் இல்லாமல் போனது. அத்துமீறல்கள், அபகரிப்புகள் அதிகரித்து கொண்டு செல்கின்றது. அதற்கு கோடரிக்காம்புகள் பயன்படுகின்றன. தமிழர் கட்சியில் முஸ்லிமோ முஸ்லிம் கட்சியில் தமிழரோ போட்டியிட்டு வென்றதான அண்மைய வரலாறு இல்லை. தேசிய கட்சிகளின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு விலை போய் தம் நிலை தாழ்ந்த தமிழர்கள் தான் மிக மிக அதிகம்.

குளத்தை கலக்கி கொக்கிடம் கொடுக்கும் செயலை செய்தவர்களில் இருவர், இந்த தேர்தலில் விடுத்திருக்கும் அறிவிப்பு அவர்களின் பட்டறிவால் அன்றி, நம்பியவர்களால் கைவிடப்பட்டதால் என்றாலும், எடுத்த முடிவு, தெரிவித்த தருணம் வரவேற்கத்தக்கது. குறிப்பாக ஜாடிக்குள் அடைக்கப்பட்ட பிசாசு வெளிவர சாத்தான்கள் உதவியதால் அவரின் அடிவருடிகள் தமக்கு விழும் வாக்குகளால் மற்ற இனத்தவரை வெல்ல வைக்கும் நிலையை, இந்த அறிவிப்பு மாற்றும்.

பிள்ளையான் பெறும் விருப்பு வாக்கு அவர் எம் பி யாக போதாவிட்டால், அது மேலதிக முஸ்லிம் உறுப்பினரை வெல்லவைக்கும். 4 தமிழர் 1 முஸ்லிம் எனும் நிலையை மாற்றும். இது போன்றே உதிரி தமிழர் எடுக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழருக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உறுப்பினரை பறிகொடுக்க செய்யும். அந்த வகையில் கருணா, அருண் போல அடுத்தவரும் யதார்த்தத்தை உணர்ந்து உடன் முடிவெடுக்க வேண்டும்.

தற்போதைய நிலைமை தமிழ் கூட்டமைப்பு 3 + 1 போனஸ் பெறும் என பேசப்பட்டாலும் வாக்களிக்கும் முறை பற்றிய விளக்கம் தமிழர் தரப்பில் போதவில்லை. முஸ்லிகள் தொழுகை முடிந்த பின் அடுத்த கடைமையாக அதை செய்வதால் தெளிவாக உள்ளனர். படுவான்கரையில் இன்று நான் சந்தித்த பலர் விருப்பு இலக்கத்தில் தெளிவாக உள்ளனர். ஆனால் சின்னம் பற்றி குழப்பம். உறவுகள் பல கட்சிகளில் போட்டியிடுவதால் இன்னிலை.

யாழ் நோயே இங்கும். விருப்பு வாக்குப் போட்டி குழப்பத்தின் உச்சம். "எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறான், இவன் ரொம்ப நல்லவன்டா" எனும் வடிவேலு கொமடிபோல ஏற்கனவே விட்ட தவறை திருத்தாமல் மீண்டும் சுயநல விருப்பில் இனத்தின் பங்கை பறிகொடுக்கிறார்கள். அதை விடுத்தது 4 உறுப்பினரை வெல்ல உங்கள் உறவுகள், ஆதரவாளர்களுக்கு மட்டுமல்ல மக்களுக்கும், சின்னத்துக்கு முதல் புள்ளடிபோட அறிவுறுத்த வேண்டும்.

1977ல் இதே போன்று தேர்தல் காலத்தில் மட்டக்களப்பில் இருக்கும் போது நடந்த ஒரு சம்பவம் நினைவில். அது தமிழ் ஈழத்துக்கு ஆதரவு கேட்டு நடந்த தேர்தல். கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு தனி தொகுதிகளாக இருந்த போது நடந்தது. எங்கும் கூட்டணி வெல்லும் எனும் நிலையில் கல்குடா காலை வாரியது. உங்கள் தொகுதிக்கு மந்திரி வேண்டாமா ? என்ற ஜே ஆரின் பிரச்சாரத்தில் வெறும் 500 வாக்குகளால் கூட்டணி வேட்பாளர் சம்மந்தமூர்த்தி தோற்று, கே.டபிள்யு.தேவநாயகம் வென்றார், மந்திரியானார்.

மட்டக்களப்பில் கோடரிக்காம்பான காசி ஆனந்தன் எம்மவர் தலையில் மட்டுமல்ல எம் சகோதர இனத்தின் தலையிலும் மண்ணை அள்ளிப்போட முனைந்தார். 2 அங்கத்தவர் தேர்தல் தொகுதியில் 1 தமிழர் 1 முஸ்லிம் வரவேண்டும். தன்னை வளர்த்த ராஜதுரையை எதிர்த்த காசி அவரை வீழ்த்த நினைத்தார். அப்போது அவரால் துரோகி என தூற்றப்பட்ட ராஜன் செல்வநாயகம் மட்டுமே அதை தடுத்தார். யானை பரீத் மீரா லெப்பை வென்றார்.

ராஜன் கடைசி தினங்களில் நிலைமையை உணர்ந்து, எனக்கு வாக்களிக்க விரும்புவோர் அதை ராஜதுரைக்கு போடுங்கள் என சொல்லி ஒரு கல்லில் 3 மாங்காய் அடித்தார். 1. 1956 முதல் தொடர்ந்து வென்ற மண்ணின் மைந்தன் ராஜதுரையை வெல்ல வைத்தார். 2. சுயநல காசியை தோற்க செய்தார், 3. சகோதர முஸ்லிம்களிடம் தமிழர் பற்றிய நம்பிக்கையை விதைத்தார். காசி ஆனந்தனோ உறவு முறை சகோதரியை மணந்து சமூக சீரழிவுக்கு வித்திட்டார்.

ஏறாவூர் பரீத் மீரா லெப்பை வென்றது தனி முஸ்லிம் வாக்குகளால் மட்டுமல்ல. தமிழர்கள் பலர் அவருக்கு வாக்கு போட்டனர். அதற்கு காரணம் அவரது வாப்பாவின் மீசாங் கட்டை. முஸ்லிம்கள் ஜனாசா நல்லடக்கம் செய்யபட்ட இடத்தில நடப்படுவது. அவரின் வாப்பா பிரபல விசமுறி வைத்தியராக இருந்தவர். அப்போது இனம்பாரது எல்லோருக்கும் இலவசமாக விசகடி வைத்தியம் பார்த்தவர்.

படுவான் கரை வயல்களில் பாம்பு கடித்தால் தூக்கி கொண்டு ஓடுவது பரீத்தின் வாப்பாவிடம் தான். அவர் மௌத்தான பின் அவரது ஜனாசா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவர் தெரிவு செய்து வைத்திருந்த மீசாங்கட்டை நடப்பட்டது. பின்னாளில் அதன் மீது கடிபட்ட இடத்தை வைத்தால் அது விசத்தை உறிஞ்சுவதாக அயல் கிராமங்களில் பேசப்பட்டது. அயல்கிராம தமிழரே பரீத்துக்கு வாக்களித்தனர்.

அன்று அவர்களின் அந்த முடிவு எம்மை ஒரு பாதக செயலில் இருந்தும் காப்பாற்றியது. மட்டக்களப்பு 2 அங்கத்தவரில் 1 தமிழர் 1 முஸ்லிம் எனவே பகிரப்பட வேண்டும். ராஜன் தனது வாக்குகளை ராஜதுரைக்கு போடும்படி சொல்லியதால், தமிழர்களில் ஒரு பகுதியினர் பரீத்துக்கு போட்டதால், காசி ஆனந்தன் தோற்றார். இல்லையெனில் அங்கு 2 தமிழர்கள் வென்று முஸ்லிம்களின் பங்கை பறித்த பழி எமக்கு ஏற்பட்டிருக்கும்.

இன்று தெற்கு கட்சிகள் தமிழர் பலத்தை குறைக்க செய்யும் செயல் தான் தமது கூட்டுக்குள் தமிழரை இடம் பெறச்செய்து வாக்குகளை சிதறடிப்பது, பணம் கொடுத்து பல சுயேட்சைகளை களம் இறக்குவது. இதனால் பலனடைய போவது சிங்களத்துடன் தேன்நிலவுக்கு போகும் சுயவிருப்பு முஸ்லிம்கள் தான். அதை தவிர்க்க தமிழர் கூடியவரை ஒரு சின்னத்துக்கு வாக்களித்தால் மட்டுமே 4 தமிழர் 1 முஸ்லிம் என்ற நியாயமான பகிர்வு எட்டப்படும்.

தமிழர் தங்கள் இருப்பை தக்க வைத்தலே வெற்றிக்கான முதல் படி. தனி மரம் தோப்பாகாது. அது விசமரம் என்றால் அழிவு தான் வரும். வளர விடாமல் முறித்து விடுவது வாக்களர் கையில். அதற்க்கான நாள் ஆகஸ்ட் 17.

மாதவன் சஞ்சயன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com