Contact us at: sooddram@gmail.com

 

சம்மந்தர் வாக்கு பலிக்குமா ?

(மாதவன் சஞ்சயன்)

20 ஆசனங்கள் தாருங்கள் 2016ல் தீர்வுத்திட்டம் எட்டப்படும். யாழில் 7 ஆசனங்களும் கூட்டமைப்பு வசமாகும். வன்னியில் 4 திருமலையில் 3 மட்டக்களப்பில் 4 அம்பாறையில் 2 என பெறுவதற்கான வாய்ப்பு உண்டு எனவே எமக்கு வாக்களித்து அமோக வெற்றியடைய செய்து அமைய இருக்கும் நல்லாட்சியில் எம்மை பேரம் பேசும் சக்தியாக மாற்றுங்கள். இந்த சந்தர்பத்தை நாம் சரியாக பயன் படுத்துவோம் என பரப்புரை செய்கிறார் சம்மந்தர்.

சூசகமாக பேசுகிறாரோ என எண்ண தோன்றுகிறது. 2016ல் தீர்வு திட்டம் எட்டப்படும் என்றால், அதனை தீர்வு கிடைத்துவிடும் என அர்த்தப்படுத்த கூடாது. என்ன தீர்வு என்பதற்கான இணக்கப்பாடு எட்டப்படும் என்பதாகவே அர்த்தப்படுத்த வேண்டும். பண்டாவுடனும், டட்லியுடனும் இணக்கம் ஏற்டப்பட்டது. ஆனால் அவை செயல் வடிவம் பெறவில்லை. காரணம் தெற்கின் இரு கட்சிகளும் அதனை செயல்படுத்த விடாமல் எதிர்த்தமை.

சம்மந்தர் குறிப்பிடும் நல்லாட்சி என்பது மைத்திரி தலைமையிலான தேசிய அரசாங்கம். இதுவரை வந்துள்ள கணிப்புகள் மைத்திரியின் எதிர்பார்க்கைக்கு சாதகமாகவே அமைவதால் அதில் சம்மந்தப்படுபவர், நாட்டின் எதிர்காலம் பற்றி சிந்திப்பவர், சர்வதேச நிலைப்பாட்டைஅறிந்தவர், குறிப்பாக இந்தியா ஆலோசனையை கவனத்தில் கொள்பவர், தமிழர் பிரச்சனைக்கான ஒரு பொது இணக்கப்பாட்டுக்கு வரும் சாத்தியம் உண்டு.

அவ்வாறு எட்டப்படும் இணக்கப்பாட்டை ஜே வி பி, மற்றும் இடதுசாரிகள் எதிர்க்கும் சாத்தியம் மிகவும் அரிது. இனப்பிரச்சனைக்கான தீர்வில், அவர்களிடம் ஒரு தெளிவான பார்வையுண்டு. அதை மீறாத தீர்வு திட்டத்தை அவர்கள் எதிர்க்க மாட்டார்கள். மகிந்தவை முன்னிலைபடுத்தி போட்டியிடும் சிலர் தோல்வியடைவர் எனவும் வெல்பவரில் பலர் மைதிரியுடன் இணைவர் எனவும் எதிர்வு கூறப்படுகிறது. நல்லாட்சி நீடித்து நிலைக்கலாம்.

தேர்தல் அறிக்கையில் கூறியதை ஒரே அமர்வில் நடைமுறைப்படுத்த முடியாது. ஆனால் தொடர்செயல்ப்பாட்டின் மூலம் அதை முன்னோக்கி நகர்த்தலாம். கடந்த காலத்தை போலல்லாது புதிய சூழல் உருவாகும் போது, அதற்கேற்ப எம் செயல்பாட்டை முன்னெடுக்கலாம் என்பது அவரது நிலைப்பாடாக காணப்படுகிறது. கடந்த காலங்களை போலல்லாது ஒரு புதிய சூழ்நிலை உருவாகும் என பலரும் நம்புவதும் யதார்த்த நிலை.

யாழில் 7 ஆசனங்களும் கூட்டமைப்பு வசமாகும் மற்றவர்கள் 5% வாக்கு கூட பெறமாட்டார்கள் என சுமந்திரன் கூறுகிறார். அவர் களநிலைமை அறிந்து கூறுகிறாரா அல்லது சம்மந்தரை வழிமொழிகிறாரா தெரியவில்லை. 70 - 80 வீத வாக்குகள் பதிவானால் அவர் கூறும் 5% ம் 18000 - 24000 ஆகும். அதை பெறும் நிலை டக்ளசுக்கு கூடவா இல்லை ? தீவக வாக்குகள் குறைந்தாலும் அதுவா அவர் நிலை? பொறுத்திருந்து பார்ப்போம்.

வன்னியில் கூட்டமைப்பு வாக்குகளை குறைக்க பல அணிகள் களத்தில். குறிப்பாக மலையகத்தை பூர்வீகமாக கொண்ட, கலவரங்களால் இடம் பெயர்ந்து வன்னி காடுகளை களனிகளாக்கிய தமிழர், தாம் சரிநிகராக நடத்தப்படவில்லை என்ற ஆதங்கத்தில் மகிந்தவின் கைத்தடி ரங்காவின் வலையில் விழுந்துவிட்ட நிலை. அதே வேளை சென்ற தடவை ரிசாத்துக்கு போட்ட பல தமிழர், மீண்டுவரும் நிலையும் காணப்படுகிறது.

சென்ற தடவை போலல்லாது முஸ்லிம் வாக்குகளும் வன்னியில் பிரிபடும் நிலை. ரிசாத்தை எதிர்ப்பவர் அவரின் முன்னாள் பங்காளி. முஸ்லிம் காங்கிரசும் முடிந்தவரை பங்கு பிரிக்கும். மும் முனை மோதல் 1 முஸ்லிமை வெல்லவைக்கும். இது தமக்கு சாதகமாகும் என்பதே கூட்டமைப்பின் எதிர்பார்ப்பு. ஏனெனில் மற்ற தமிழர் தரப்பு எவையுமே, யாழில் குறிப்பிட்ட வாக்கு வங்கியை வைத்திருக்கும் டக்ளஸ் நிலையில் இல்லை.

திருமலையில் 2 ஆசனங்களை பெற்றே தீருவது என கங்கணம் கட்டி தனது விருப்பு வாக்கை விடுத்து வீட்டுக்கு வாக்களியுங்கள் என்கிறார் வேட்பாளர் யசீந்திரா. சம்மந்தரின் இலக்கம் மட்டுமே கூறப்படுகிறது. இளையவர் பலர் தீவிர பிரச்சார நடவடிக்கையில். மூதூர், கிண்ணியா முஸ்லிம்களிடம் வீட்டுக்கு வாக்களித்தால் கிடைக்கும் மேலதிக தேசிய பட்டியல் ஆசனம் உங்களுக்கே என கூறி திருமலைக்கு 3 என்ற சூத்திரம் வகுக்கிறார் சம்மந்தர்.

மட்டக்களப்பிலும் கூடுதலான வாக்கு வங்கி வேறு எந்த கட்சிக்கும் இல்லை. பிள்ளையான் ஒருசில ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெறும் நிலை. ஊரவன் மாமன் மச்சான் என சில ஆயிரம் வாக்குகள் சிதறினாலும் இம்முறை கூட்டமைப்பு எதிர்பார்க்கும் 4 ஐ எட்டமுடியும். அங்கும் ஓட்டமாவடி அமீரலி, ஏறாவூர் அலிசாகிர் மொளலானா, காத்தான்குடி ஹிஸ்புல்லா முஸ்லிம்களின் வாக்குகளை பங்குபோடும் கைங்கரியத்தை செவ்வனே செய்வர்.

அம்பாறையில் அதி உச்ச மோதல் முஸ்லிம் கட்சிகளிடையே தான். ஹக்கீமை விட ரிசாத் தனது கட்சி வெல்ல கடும் பிரயத்தனத்தில். அதாவுல்லா அதற்கு மேல் வாக்கு சிதறடிப்பில். மகிந்த அணிக்கான முஸ்லிம் வாக்குகள் குறையும் நிலை. அதே வேளை 2010 ல் 26895 வாக்குகளை பெற்று 1 ஆசனம் பெற்ற கூட்டமைப்பு 2012ல் மாகாண சபை தேர்தலில் 44749 வாக்குகள் பெற்றமை கவனத்தில் கொள்ளப்பட்டே 2 ஆசனங்கள் எதிர்பார்க்கப் படுகிறதா ?

இந்த தேர்தலில் பழையதை கிளறுபவர்களும், புதிய எதிர்பார்க்கை உடையவர்களுமான, நிலையில் தான் தமிழர் நிலை உள்ளது. தீர்வு உள்ளிருந்து வராது அது வெளி அழுத்தத்தால் மட்டுமே ஏற்படும் என்பதற்கு 13வது அரசியல் திருத்தம் சாட்சி. அது முழுமை பெறாமைக்கு புலிகள் தான் காரணம். அதிகாரங்கள் போதவில்லை என்றாலும், அந்த தேர்தலில் போட்டியிட வேண்டாமென அமிர்தலிங்கத்தை சம்மந்தர் தடுத்ததற்கும் புலிகள் தான் காரணம்.

சந்திரிகாவின் தீர்வை எரித்த போதும் வெறுமனே பார்திருந்ததும் அதனால் தான். புலிகள் இருக்கும் வரை அவரால் மட்டுமல்ல எவராலும் சுயமாக செயல் பட முடியவில்லை என்பதிலும் உண்மை இல்லாமல் இல்லை. 13ஐ அமுல்படுத்த புலிகளுக்கு பின்பான காலத்தில், இந்தியா அழுத்தம் கொடுத்தாலும் அதை முழுமைப்படுத்த சீனாவின் அனுசரணை பெற்ற மகிந்த சம்மதிக்கவில்லை, என்பதற்கு வடமாகாண சபை முதல்வர் சாட்சி.

பழையதை பேசி பயனில்லை என்பதால், புதிய சூழ்நிலை பற்றி பார்ப்பது பலன்தருமானால் அதுவே நலமானது. இருப்பது மாகாண முறைமை. அதற்கு போதாது அதிகாரா வரம்பு. வரப்புயர நீர் உயர்வது போல அதிகார பகிர்வுக்கு முதலில் பேசவேண்டும். அதனால் நிலைமை மாறும். நீர் உயர நெல் உயர்வது போல அதிகாரங்கள் பகிரப்படும். அதனால் ஆட்சி உரிமை ஏற்படும். நெல் உயர கோன் உயர்வது போல் முதல்வருக்கான அதிகாரங்கள் கூடும். அதன்மூலம் அந்த மாகாணத்தின் மக்களின் விருப்பு வெறுப்புகளை கையாளும் நிலை உருவாகி குடி உயரும்.

இத்தனை அழிவிற்கு பின்பும் மீண்டும் 13 தானா என கேட்பவர், ஏற்கனவே இருக்கும் அத்திவாரத்தின் மீது கட்டிடத்தை கட்டுவதா அல்லது கிளறி எடுத்து விட்டு புதிதாக அதே இடத்தில் மீண்டும் ஆரம்பிப்பதா என்பதை கூறவேண்டும். எமக்கான தீர்வை நாம் தான் எட்டுவோம் என்று கூறிய பிரபாகரன் எட்டிய இடம் எது? அவரை விடவா அதிக பலம் கொண்டவராக தேசியம் பேசுபவர்கள் இருக்கின்றனர். பூவரசம் பீப்பீ நாதஸ்வரமாகாது.

கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்கள் பலரால் பல்வேறு காரணங்களால் தவறவிடப்பட்டன. தமிழ் அரசு எதிர் தமிழ் காங்கிரஸ். பண்டா எதிர் ஜே ஆர். டட்லி எதிர் சிறிமா. கூட்டணி எதிர் இளைஞர்கள். இயக்கங்கள் எதிர் இயக்கங்கள். இந்தியா எதிர் புலிகள். பெருமாள் எதிர் பிரேமதாசா. சந்திரிகா எதிர் ரணில். பிரபாகரன் எதிர் கருணா. புலிகள் எதிர் சர்வதேசம். இத்தனை எதிர் களை கண்டநாம் எதிர் பார்ப்பது நல்லாட்சியில் இணக்கத்தை மட்டுமே.

அதற்க்கான சந்தர்ப்பம் தரும்படி கேட்கிறார் சம்மந்தர். இன்று அவருக்கு அச்சுறுத்தல் இல்லை குண்டு துளைக்காத வாகன தேவையில்லை அதி உயர் பாதகாப்பு அவரை சுற்றி இல்லை. அதனால் இந்த வயதிலும் யாழ், வன்னி, திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை என சுற்றி சுழன்று தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். தாம் விட்ட தவறுக்கு பிராயச்சித்தம் தேடுக்கின்றார் என கூறுவோரும் உண்டு. அதில் தவறில்லை.

என் முயற்சி, என் முடிவு, எவரது அழுத்தமும் எனக்கில்லை, ஏற்றதொரு தீர்வை பெற்றுத்தருவேன் தாருங்கள் 20 ஐ என தன் இறுதிக் காலத்தில், ஓய்வு பெறும் நேரத்தில் ஓடி ஓடி கேட்கிறார். எங்கு எத்தனை ஆசனம் என்ற எதிர்வு கூறலை வாக்களர் மனதில்நம்பிக்கை ஏற்பட விதைக்கிறார். இதன் உளவியல் தாக்கம் இறுதி நேரத்தில் முடிவெடுக்கும் வாக்களரின் (Floating votes )மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆகஸ்ட் 18ல் பதில் கிடைக்கும்.

(மாதவன் சஞ்சயன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com