Contact us at: sooddram@gmail.com

 

ஓம் நாங்கள் சொல்லுறம் !

(மாதவன் சஞ்சயன்)

துன்பத்தில் இருந்தவர்கள் தம் துயர் தீர்க்க அப்பகுதியில் பதவியில் இருந்த ஒருவரை பார்க்க சென்றனர். அவரை சுற்றியிருந்த கூட்டம் அவர்களை பாடாத பாடு படுத்தியது. இன்று வா நாளைவா, இத்தனை மணிக்கு வா இந்த இடத்துக்கு வா, இன்னாரோடு வா அல்லது அவரது கடிதத்தோடு வா, என அலைக்கழிக்க பட்டு ஒருவாறு அவரை சந்தித்து தம் சங்கடங்களை கூறிய போது, பாக்கலாம் என கூறி அனுப்பியவர் பின் பார்க்கவே இல்லை. காலம் உருண்டது கஸ்டத்தில் இருந்து மீளும் நல்லசூழ்நிலை வந்தது. அதேவேளை சூழ்நிலை மாற்றத்தில் முன்பு அதிகாரம் செலுத்தியவரின் நிலை தலைகீளானது. மீண்டுவர, தான் முன்பு பாக்கலாம் என கூறி பார்க்காமல் விட்டவர் இடம் தேடி தன் அடிவருடிகளை அனுப்ப அவர்கள் குறைகளை தலைவர் தீர்ப்பார் என கூற, அவர்கள் ஓம் நாங்கள் சொல்லுறம் என்றனர். பின் தலைவரே நேரடியாக சென்று அவ்வாறு சொன்னபோதும் அவர்கள் ஓம் நாங்கள் சொல்லுறம் என்றனர்.

அடியாட்களிடமும், நேரடியாக வந்த தலைவரிடமும், ஓம் நாங்கள் சொல்லுறம் என்றவர்கள் வீட்டுள் சென்று நாட்காட்டியில் தாள்களை புரட்டி ஆகஸ்ட் 17 திகதி தாளை பார்த்து எதோ வாய்க்குள் முணு முணுத்தனர். கூடவே விநியோகிக்கபட்டிருந்த அட்டையும் பார்த்து அவ்வாறே செய்தனர். தேடிப்போன போது கிடைக்காதா கௌரவத்தை, வீடுதேடி வரவைத்த தேர்தல் திகதிக்கும், வாக்காளர் அட்டைக்கும் நன்றி சொன்னார்கள்.

தியேட்டருள் இருந்து கொண்டு படம்காட்டியவர்கள் இன்று வாக்கு பிச்சைகேட்டு தெரு புழுதி சகதி சாக்கடை எல்லாம் அலைந்து திரிகின்றனர். சண்டித்தன அரசியல் முடிவுக்கு வந்ததால் வேட்டியை மடித்து கட்டியபடி காடு கரம்பை எல்லாம் காலால் அளக்கின்றனர். அன்று கைகால் முறித்து மண்டை உடைத்தவர்கள், இன்று அதே தீவகத்தில் வாள்கொண்டு துரத்தப்படுகின்றனர். தம்மை தாக்குவதாக அறிக்கை விடுகின்றனர்.

வகை தொகை இன்றி மணலை அள்ளி நன்னீரை உவர் நீராக்க வழிசமைத்தவர், குடிநீர் பிரச்னையை தீர்ப்பது பற்றி பேசுகின்றனர். மனித உரிமை செயல்ப்பாட்டாளரா இருந்தவரை ஆசைக்காக அரசியலுக்கு இழுத்து வந்து புலிகளுக்கு இரையாக்கி, பெருநிதி ஈட்ட அவர் பெயரில் நிதியம் தொடங்கி, எல்லோர் வாயிலும் அவர் பெயரை இழிவாக பேச செய்து விட்டு, இன்று வடமராட்சியில் வாக்கு கேட்க புலம் பெயர்ந்த தமிழர்கள் கூட களத்தில்.

அப்படி பறந்து வந்த பறவை, எல்லாளன் சிலை, சங்கிலியன் சிலை, பண்டாரவன்னியன் சிலைகள் யாழில் வைத்தது பற்றி பேசியபோது, அருகில் நின்ற ஒட்டுசுட்டான் பயணி என்னிடம் கூறினார், கற்சிலை மடுவில் வெள்ளையரால் வைக்கப்பட்ட பண்டாரவன்னியன் நினைவு கல் அடித்து நொருக்கபட்ட போது மௌனம்காத்து நின்றவர்கள், அவருக்கு சிலை வைப்பது அவரை காட்டிக்கொடுத்த காக்கை வன்னியனின் செயலை விட மோசமானது என்று.

தமிழ் நாடு அரசு கொடுத்த வீட்டில் வாழ்ந்த கூட்டணியின் செயல் கேவலம் என்றால் அரச உதவியில் கொழும்பில் தாம் வீடுகள் வாங்கி இவர்கள் வாழும் வாழ்க்கையை என்னவென்பது. ஸ்ரீதர் தியேட்டர் முதல் மானிப்பாய் வீடு வரை உரிமையாளர் கேட்டும் திருப்பி கொடுக்காத இவர்கள் மக்கள் சொத்து மக்களுக்கே என மேடை போட்டு மேளம், அடித்து நாயனம் வாசிக்கின்றனர் இந்த பருவகால பறவைகள். (seasonal Birds).

மகிந்தரின் தாளம், பசிலின் பாசக்கயிறு இவையிரண்டும் இல்லாமல் போனதால் தான் வீணை மீண்டது என்ற, உண்மையை சொல்லாமல் வெத்திலையை துப்பிவிட்டேன் என வீராப்பு பேசுவது கோழைத்தனம் இல்லையா ? ராணுவ பிரசன்னம் பற்றி பதவியில் இருக்கும் போது காதுக்குள் கூட குசு குசுக்க வில்லை. இன்று தேவையற்ற ராணுவம் வெளியேற்ற படவேண்டும் என்பது வெறும் தேர்தல் கால பம்மாத்து அரசியல் விளையாட்டல்லவா?

ராணுவ பிரசன்னம் அவர்களின் இசைவுடன்தான் மாற்றமடையும். காரணம் நிரந்தர அரசியல் தீர்வுக்கு முன் எது நடந்தாலும் முகம் கொடுப்பது அவர்கள் தான். உயிர் இழப்புகளும் அவர்களுக்கு தான். அனந்தியே பாதுகாப்பு கேட்கும் போது பாதுகாப்பு படை தன் மீதான எந்த ஒரு தாக்குதல் பற்றிய கரிசனையில் தான் இருக்கவேண்டும். மக்கள் இடங்களை விட்டு, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அவர்கள் இருக்கத்தான் செய்வர்.

ராஜித செனாரத்தின கூறியது போல் மந்திரிசபை கூட்டங்களில் புட்டு தின்பது போல் இருந்து விட்டு, இப்போது தேர்தல் காலத்தில் மக்கள் முன் முக்குவதில் என்ன நியாயம். புகையிரதம் வராது என்றார்கள் நான் தானே அதில் ஏறி காங்கேசன்துறை வரை பயணித்தேன் என்றது, எதுவோ புற்றெடுக்க இது புகுந்தது போலத்தான் இருந்தது. நல்லவேளை புகையிரதத்தை கண்டு பிடித்த ஜோர்ஜ் ஸ் ரீபன்சன் மறுபிறவி நான்தான் என கூறவில்லை.

எங்கு பேசினாலும் சொர்க்க வாசல் திறக்கப்படும், ஒளிமயமான வாழ்க்கை கிடைக்கும் என்பவரின் ஓமந்தை சொர்க்க வாசல், தேர்தல் காலங்களில் மட்டுமே மக்களுக்கு திறப்பதும் பின்னு மூடுவதும் தெரியாதா ? அலிபாபாக்கள் போகும் போது மட்டும் நேர்பாதை தடுப்புகள் திறந்திடு சீசே என்றதும் திறக்கும். பாவப்பட்ட மக்கள் சுற்றி வளைத்து இறங்கி, ஏறித்தான் பயணத்தை தொடரவேண்டும் என்பதே யதார்த்தம்.

வடக்கின் வசந்தம் சகலருக்கும் இலவச மின் இணைப்பு என கூறினாலும், பசிலின் கடைக்கண் பார்வை இன்றி நிதி பகிரப்படாத நிலை. மகிந்தவிடம் குறைப்பட்டால் அவர் மகேஸ்வரி நிதியம் பற்றி கவனத்தில் கொள்ள மாட்டேன் என்பார். பெருநிதி ஈட்டும் வழி இருக்க, வசந்தம் தம் பக்கம் வீசும் வழிகிடைக்கும் போது மண்ணில் பொன் விளை விக்கும் வித்தையை செய்ய முற்பட்டவரால், மக்களுக்கு ஒழி மயமான நிலை எப்படி வரும். இதுதான் புலுடா அரசியலா ?

தலைவரை போற்றல் தவறல்ல. ஆனால் பொய்யுரைத்தல் அழகல்ல. தலைவரால் எட்டப்பட்டதே 13 வது திருத்தும் என்று பொய் உரைத்தவருக்கு நன்கு தெரியும், தலைவர் அப்போது ஈழ சிறுவனை காசுக்காக கடத்தி சென்னை மத்திய சிறையில் இருந்தது. அவர் மட்டுமல்ல அவர் தலைவரும் வரலாற்றை திரிவு படுத்துகிறார். தனது தம்பியும் காணாமல் போனதாகவும் அது பற்றி தானும் அரசின் முடிவை எதிர் பார்ப்பதாகவும்.

13 வது திருத்தச்சட்டத்தினால் உருவான இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையை குறை கூறும் பேச்சையே இவரின் முதல் தெரிவான வடமகாண சபையின் முதல் எதிர் கட்சித் தலைவர் தனது கன்னியுரையில் உரைத்திருந்தார். தலைவரின் ஏற்புடன் எழுதிக் கொடுக்கப்பட்ட உரையை தற்போது கொலைக் குற்றத்திற்காக சிறையில் இருப்பவர் வாசித்தார் என்பது வேறு விடயம். (தற்போதைய எதிர கடசித் தலைவர் பாவம் நல்லவர். இவரைப்போல் பல நல்லவர்கள் பலர் உண்டு). தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட வடமகாணசபை அமர்வுகளில் இது போன்ற பேச்சுக்களில் ஈடுபடுவது இல்லை(இதற்காக அவர்கள் பெரிய சுத்தம் என்று அர்த்தம் அல்ல).

மாநில சுயாட்சித் தலைவரின் பிழையான செயற்பாட்டை ஒரே அமைப்பில் இருக்கும் போது தைரியமாக விமர்சிக்கும் வரதர் முதல் அமைச்சராக்கப்பட்ட கடுப்பு இனால் இன்று வரை பட்டி தொட்டியெல்லாம் இணைந்த வடக்கு கிழக்கு மகாண சபையை நடத்த தெரியவில்லை என்று கூறித்திரிபவரிடம் எங்கே நேர்மையை எதிர்பார்க்க முடியும். பாவம் அவர்தான் என்ன செய்வார் அன்றைய காலகட்டத்தில் இணைந்த வடக்கு கிழக்கு மகாணசபையை இல்லாது ஒழிக்கும் பிரேமதாசாவின் வேலைத்திட்டத்தில் புலிகளும், இவர்களும்தானெ இரு குழல் துப்பாக்கியாக பிரேமதாஸ ‘அவர்’ களினால் பாவிகப்பட்வர்கள். இவரிகளிடம் வெறு எதை எதிர்பார்க்க முடியும். முதல் அமைச்சர் கனவு இறுதி வரை கனவாகிப் போட ஏமாற்றம் இவரை வாட்டும் போது இவரிடம் நிதானத்தை எதிர்பாரக்க முடியாது.

தம்பி கடத்தபட்டது புலிகளால் என்பதும் இந்திய அமைதிப்படை வந்த சிலவாரங்களில் அது நடந்ததென்பதும் அவருக்கு நன்கு தெரியும். காணாமல் போனோர் பற்றி எவர் முறையிட்டாலும் உடனே ஒரு படத்தை காட்டி உங்கள் வேதனை எனக்கு புரியும் என் தம்பியும் காணாமல் போனவர் தான், அரசிடம் நானும் விசாரணை கேட்டுள்ளேன் என ஆற்றில் தொலைத்ததை குளத்தில் தேடுவது போல கதை அளப்பார். தொண்டரும் அப்படியே.

1986 ல் ரெலோவை புலிகள் தாக்கி அழிக்க முற்பட்ட போது போது யாழ்பாணத்தில் வெள்ளைக் கொடி கட்டிய வாகனத்தில் யாழ் வீதியெங்கும் பவனி வந்து கிட்டு உடன் கொஞ்சிக் குலாவித் திரிந்தவர் இவர். பின்பு இலங்கை இந்திய சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டதும் தன்னை அமைப்பிலிருந்து வெளியேற்றிய ஈபிஆர்எல்எவ் இன் ஏக உரிமையாளன் நான்தான் என்ற துண்டுப் பிரசுரத்துடன் தன் தம்பியை முந்தி அனுப்பி; ஈபிஆர்எல்எவ் இன் கோட்டையான சாவச்சேரியில் பொய்மையை பரப்ப முற்பட்ட போது புலிகளால் தன் தம்பி கொல்லப்படும் வரை இவரும் இன்னொரு பாலகுமாராகதான் புலிகளுடன் உறவை வைத்திருக்க விரும்பினார். வைத்திருந்தார் என்பது மிகச்சிலருக்குத்தான் தெரியும். இதனால் தான் இவருக்கு தெரியாமலே சிறீ சபாரத்தினத்தை காப்பாற்றும் நடவடிக்கை முன்பு மேற்கொள்ளப்பட்டது என்பது மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சித் தலைவருக்கு தெரிந்த உண்மை.

கீரை கடைக்கும் எதிர் கடை வேண்டும். மாகாண சபையில் எதிர்கட்சி தலைவர் கூறும் நல்ல விடயங்களை மாற்று கட்சி உறுப்பினர்கள் மனதார ஏற்கின்றனர். குழுக்களின் பிரதி தலைவர் செய்த சேவைகளை மக்கள் சிலாகித்து பேசுகின்றனர். அறிவியல் நகரம் பற்றி கல்விமான்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். அவை வாக்குகளாக மாறவேண்டுமானால் நீங்கள் போடவேண்டிய கடை கீரை கடை. நாற்றமடிக்கும் அழுகிய பழக்கடை அல்ல.

நீங்கள் இதுவரை செய்த சேவைகளை பட்டியல் இடுங்கள். நீங்கள் விட்ட தவறுகளை அதிலிருந்து கழித்து விட்டு மக்கள் உங்களுக்கு வாக்களிப்பர். நீங்கள் விதைத்தது உங்களுக்கானது என திடமாக நம்புங்கள். அதை விடுத்தது அதிகாரத்தில் இருக்கும் போது ஆடாத ஆட்டம் ஆடி விட்டு, வாக்கு கேட்க மட்டும் வாசல் தேடி சென்று, உங்களுக்கு தெரிந்தவர் களையும் எங்களுக்கு போடசொல்லும்படி கேட்டால் அவர்கள் ஓம் நாங்கள் சொல்லுறம் என்றுதான் சொல்வார்கள்.

(மாதவன் சஞ்சயன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com