Contact us at: sooddram@gmail.com

 

மாற்றத்துக்கான வாக்களிப்பு ஆகஸ்ட் 17ல்

(மாதவன் சஞ்சயன்)

தேர்தல் இரைச்சல்கள் ஓய்ந்து விட்டது. இதுவரை காதுகளை திறந்து வைத்திருந்த வாக்காளர்கள் இனி கண்மூடி சிந்திப்பர். தாம் வரித்துக் கொண்ட தலைவனுக்கு வாக்குப்போடுவோர், கல்லானாலும் கணவன் மணலானாலும் மனுசன் எனும் நிலையில் தான் இருப்பர். கூடிக்களிப்பவர் எனது பிள்ளை உனது பிள்ளை எமது பிள்ளைகள் என ஒருமித்தே இருப்பார். அலைபாய்பவர் பழம் நழுவி பாலில் விழும் என்ற கனவில் காத்திருப்பர். வீரகாவியம் பாடியவர் விழலுக்கு இறைத்த நீரா நாம் என ஏக்கத்தோடு காத்திருக்க, சில்லறைகள் திரிசங்கு நிலையில்.

குறித்த தொகை வாக்காளர் ஏக தலைவன் தான் வேண்டுமென்பார். அவர் கல்லோ மணலோ அவர்களின் ரட்சகன். கூட்டு குடும்பத்தில் அடிக்கடி வீட்டுக்குள் தான் சண்டை வெளியில் சமாதானம் என்பதால் வீட்டை விட்டு வெளியே போடமாட்டார்கள். அலைபாய்பவர் பக்கம் நிலை தடுமாறுவோர் நிழல் தேடி ஓடுவர். காவிய நாயர்கள் கால் பார்த்து, கை பார்த்து ஓரளவு அரவணைக்கப்படுவர். சில்லறைகள் தேர்தல் முகவர் கூட இன்றி பட்டை நாமம் தரிப்பார். இத்தனை குழப்பத்தில யானைகலா, வெத்திலை நாயகன் பக்கமும் கதிமோட்சம் வேண்டுவோர் செல்வது கணிசமாக இருக்கும்.

இன்றைய தேர்தல் முறையில் வாக்காளர்களுக்கு கட்சியை தெரிவு செய்வது தான் பிரச்சனையாக உள்ளது. தான் விரும்பும் கட்சியில் தனக்கு விருப்பமில்லாதவர் இருந்தால் அரிசியோடு உமி சுமக்கும் நிலை. இதுவே தான் விரும்புபவர் விரும்பா கட்சியில் இருந்தாலும் ஏற்படும் நிலை. ஜே ஆர் எனும் ஜனநாயக சர்வாதிகாரி எம் எல்லோர் தலையிலும் கட்டிச் சென்ற சிறுகுரங்கு தேர்தல் தோறும் எம் பிடரியை சொறிகிறது. 20வது திருத்தம் வரும் வரை இதுதான் எம் வாக்காளர் நிலை.

தனித் தொகுதி தேர்தல் என்றால், மனைவி மக்கள் வாக்கு கூட கிடைக்காத நிலை பலருக்கு உண்டு. காரணம் அவர்கள் குடும்பமே இங்கில்லாத நிலை. திருமணம் முடிக்காதவர் நிலையும் அது தான். அவரின் இரகசிய சினேகிதிகள், பிள்ளைகள் தமக்குள் போடும் மூத்தவள், இளையவள் சண்டையில் வாக்குகள் சிதறும். ஒருசிலர் மட்டுமே தம்பதி சமேதரராய் காட்சிதர முடியும். தேர்தலுக்காக கூட்டி வந்த மகனை மறைத்து விட்டு, கடத்தப்பட்டார் என கூறும் நாடகம் கூட ஒருவரின் விருப்பு வாக்கை குறைக்கவே.

அதனால் தான் தேர்தல் முறை மாற்றத்தை தடுக்க, கூடிக் கூடி பேசினார்கள். தனித் தனியாக சிகை அலங்கரிக்க தெரியாததால், வாக்காளரை மொத்தமாக மொட்டியடிக்கும் சூத்திரத்தை விட்டு விடக் கூடாது என்பதால் ஒற்றுமைப்பட்டார்கள். இதுவரை மக்கள் பிரச்சனைகள் எதிலும் தேர்தல் உட்பட ஒன்றுகூடாத இவர்கள், தம் எம் பி பதவியை தக்க வைக்க ஒரு கூரையின் கீழ் கூடி கும்மி அடிப்பர். மாசு நீர், தேவையற்ற ராணுவ பிரசன்னம், மக்கள் நில ஆக்கிரமிப்பு விடயத்தில் தனித் தவில் அடிப்பர்.

நரமாமிச பட்சனி அங்குலிமாலா புத்தர் போதனையில் மனம் மாறலாம், கலிங்கம் வென்ற அசோகன் போரை வெறுக்கலாம், எல்லாளனை வென்ற துட்டகெமுனு நினைவு தூபி அமைக்கலாம், மனு நீதி சோழன் பசுவுக்காக தன் மகனை தேர்காலில் நெரிக்கலாம், சிபி சக்கரவத்தி புறாவின் உயிர்காக்க தன் துடை அரிந்து வேடனுக்கு கொடுக்கலாம், ஆனால் எம் தமிழ் தலைவர் அவர் தம் ஆசையை, பதவி மோகத்தை எந்த கலத்திலும் எந்த சூழ் நிலையிலும் மாற்றத்துக்கு உற்படுத்தார். அதுவே அவர்களின் ஜனநாயகம்.

இந்த யதார்த்த சூழ்நிலையில் தான் வடக்கு கிழக்கு வாக்காளர்கள் எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டிய நிலை. துஷ்டரை கண்டால் தூர தூர என தேர்தலை பகிஸ்கரிக்கவும் கூடாது. அவ்வாறு செய்தால் புல்லுரிவிகள் எழுந்து எம் வேளாண்மையை நாசம் செய்துவிடும். நாம் விதைத்ததை நாமே அறுக்க வேண்டும். களைகளை வளரவிட்டதும் நாம் தான். விடுதலை என்ற பெயரில் விச விதைகளை கூட விருச்சமாக வளரவிட்டோம். அதன் பலனை அனுபவிக்கிறோம்.

இன்று ஏற்பட்டிருப்பது நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த பின்னான புதிய சூழ்நிலை. பல்வேறு நிலைகளை தாண்டி எமது பிரச்சனை புதிய சூழலில் பார்க்கப்படும் நிலை. ஒவ்வொரு தடவையும் நம்பி ஏமாந்தோம் என கூறி இனியும் அவ்வாறே என்ற முடிவுக்கு வரக்கூடாது. பேசியது 30 ஆண்டுகள் போராடியது 30 ஆண்டுகள் என்றால் இணைவதற்கு 5 ஆண்டுகள் கொடுத்தால் என்ன ? முன்பு பேசிப்பார்த்தோம் பின் மோதிப்பர்த்தோம் இனி ஒத்தோடித்தான் பார்ப்போமே.

இது இயலாமை அல்ல. எமக்குள் ஒற்றுமை ஏற்படாமை. அது என்றுமே ஏற்படாமைக்கு எம் முனோரான மன்னர்களே சாட்சி. அதனால் நாம் முயலாமையை செய்யக்கூடாது. அன்று வடக்கு கிழக்கு மாகாணசபையை உருவாக்க அந்த இளைஞர்கள் முயலாமல் இருந்திருந்தால் இன்றைய நிலை என்ன ? இன்று அதன் அத்திவாரத்தின் மேல் தானே கட்டிடங்களை கட்ட ஆலோசனை வழங்கப்படுகிறது. அதிகார பரவலாக்கலின் அடிப்படையாக அதைத்தானே கொள்கின்றனர்.

ஏற்கனவே இணக்க அரசியல் செய்தவர் சரணாகதி அரசியல் செய்து அதன் அர்த்தத்தையே கொச்சைப்படுத்தி விட்டார். எதிர்வரும் காலத்தில் எதிர்ப்பரசியல் செய்வது போல் காட்டுபவர் தனி மரம். அவர் தோப்பாக மாட்டார். வித்தி கூட்டிவருபவர் கேட்பது சமூகத்தில் அங்கீகாரம் புனர்வாழ்வு. தெற்கு கட்சிகளின் எடுபிடிகள் பெறப்போவது சலுகைகள். இதுவரை செய்த எதிர்ப்பை விட்டு வருபவர்கள் கூறுவது இன்றைய அக புற சூலில் பெறக்கூடிய, தவறவிட கூடாத சந்தர்ப்பங்கள்.

இதில் கனதியானது எது என தெரிவு செய்வதை தவிர வேறு வழி இன்று இல்லை. அதில் ஒன்றும் இதில் ஒன்றுமாக பல நண்டுகளை பாராளுமன்றம் அனுப்பினால் அதில் ஒன்று அடுத்தன் காலை மேலேற விடாமல் இழுத்தபடிதான் இருக்கும். கடல் நண்டுகள் பல சந்தர்ப்பங்களை தவறவிட்டது வலையில் அகப்பட்டதால். இன்று வலைஅறுந்து, வீசியவரும் இல்லை. ஆத்து நண்டுகள் ஓடிக் குதித்தது எதிரியின் குளத்தில். சுதந்திரம் அடைந்த கடல் நண்டுகள் சர்வதேச கடலில் கலந்து விட்டன. அதனால் தம் போக்கை மாற்றிவிட்டன.

வைத்தல் குடுமி அடித்தால் மொட்டை என கடந்து விட்ட 67 வருட வரலாற்றில் இன்னுமொரு 5 ஆண்டுகள் போனாலென்ன. எதுவும் கிடைக்கவிட்டாலும், நல்லாட்சியில் புதிய இளம் தலை முறையினரை சுயமாக சிந்திக்க செய்து, அவர்கள் பின்புலத்தில் இயங்கி, தாம் முன்பு விட்ட தவறுகளை இதய சுத்தியோடு விமர்சித்து, எம் பழைய அரசியல்வாதிகளும் போராளிகளும் செயல்ப்பட்டால், அடுத்த தேர்தலாவது இந்த நாட்டில் எம் இனம் பெருமையுறும் தலைவர்களை தெரிவு செய்வதாக அமையும்.

அவ்வாறு செயல்ப்படக்கூடியவர் தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர் தேசத்திலும் காத்துக்கிடக்கின்றனர். வெள்ளை வான்களும் அரச துதி பாடிகளும் அவர்களை தலை மறைவில் வைத்திருகின்றன. பல்கலைகழகத்துள் கூட ஞானசூனியங்கள் ஆட்டம் போட்டன. மகா வம்சம் திரிவு படுத்தி எழுதப்பட்டது என்ற குற்றச்சட்டு உண்டு. இங்கு அதற்கு மேல் ஒருபடி போய் பல வருட ஆயுத, பல வருட அரசியல் போராட்ட வரலாறு தனக்கே உரித்தானது என கூறும் பிதாமகனின் பிதற்றலை மறுத்துரைக்க முடியாத நிலை.

இதை மாற்றத்தான் நாம் முதல் வாக்கை கட்சிக்கு போடவேண்டும். அந்த கட்சியில் உள்ள எமக்கு பிடிக்காத, உண்டு கொழுத்த வண்டு முருகன் வென்று விட கூடாதென மூட்டை பூச்சிகளுக்கு பயந்து வீட்டை கொளுத்தக் கூடாது. முதலில் நிலத்தை கையகப்படுத்டுவோம் பின்பு ஆழ உழுது நல்விதைகளை விதைப்போம். ஏற்கனவே பல விடுதலை போராளிகள், தலைவர்கள் இந்த மண்ணுக்கு உரமாகி விட்டனர். காலம் கனிந்துவிட்டது, களை நாசினி அடிக்க. ஆகஸ்ட் 17 ஓரணியில் திரளுங்கள் எதிர்வரும் காலத்தைகுறைநீக்கி நிறைவாக்க.

எங்களின் ஜனநாயக கடமை வாக்களிப்பது. ஜனவரி 8ல் முழு நாட்டுக்குமான மாற்றத்துக்காக வீதிக்கு வந்தோம். மெதனமுல வீட்டுக்கு மகிந்தவை அனுப்பும் செயலில் பங்கெடுத்தோம். மைத்திரி எம் மண்ணில் இன்று எம் வீட்டு யன்னல்களை திறந்து காற்று வரும் சூழலை செய்துள்ளார். அதேபோல் அனைவரும் கூடிய வீதத்தில் (80 - 90%) வாக்களித்தால் எம் வீட்டு கதவுகளை நாம் பயமின்றி திறக்கலாம். முடங்கி கிடக்கும் இளைஞர்கள் யுவதிகளுக்கு உண்மையான அரசியல் ஞானத்தை ஊட்டலாம். ஆகஸ்ட் 17 அனைவரும் வாக்களிப்பீர் மாற்றம் வேண்டி.

(மாதவன் சஞ்சயன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com