Contact us at: sooddram@gmail.com

 

யாழ் வாக்காளருக்கு வாழ்த்துக்கள் / நன்றிகள்

(மாதவன் சஞ்சயன்)

தமிழர் அரசியல் தீர்வு யாழ்ப்பாணத்தவரை மையப்படுத்தியே ஏற்படும் என்ற துக்ளக் ஆசிருயர் சோ சொன்னது இன்னமும் என் நினையில் உள்ளதால், தேர்தல் முடிவை அதை வைத்தே பார்க்கிறேன். கூட்டமைப்பு வெல்லும் என்பது எதிர்பார்த்ததே. ஆனால் 5 ஆசனங்களை பெறும் எனவும் சிலவேளை 6 பெற வாய்ப்பு உண்டு என நான் எழுதி, 1ஐ ஈபிடிபி பெறும் என எழுத, சிலர் கூட்டமைப்புக்கு 3 என்று எழுதினர்.

20 வது கிடைத்தால் இறுதித் தீர்வு ? என்ற தலைப்பில் 23/07/2015ல் எழுதிய என் கட்டுரை பின் வருமாறு

""தற்போது உள்ள கள நிலவரப்படி யாழில் 5 வன்னியில் 3 திருமலையில் 2 மட்டக்களப்பில் 3 அம்பாறையில் 1 மொத்தம் 14 ஆசனங்கள் வருவதற்கான நிலைமையே எதிர்வு கூறப்படுகிறது. இதில் கூட இழப்புகளுக்கு சாத்தியம் உண்டு அப்படி என்றால் 20 பது எப்படி வரும்? தமிழர் தரப்பில் போட்டியிடும் பல அணிகள் ஒரு ஆசனம் கூட பெறாவிட்டாலும் கூட்டமைப்புக்கு கிடைக்கவேண்டிய கணிசமான வாக்குகளைத்தான் கிடைக்காமல் செய்யும். 2014ம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின் படி மொத்த வாக்களர்களில் எத்தனை வீதம் வாக்களிப்பில் கலந்து கொள்வார்கள், அதில் எத்தனை வீதத்தை கூட்டமைப்பு பெறும் என்ற அடிப்படையில் தேசியப்பட்டியல் ஆசனத்தில் 1 அல்லது 2 கிடைக்கலாம். அதை சேர்த்து கூட்டினாலும் 20 எப்படி வரும்? ஞானப்பால் உண்டவர் தான் விளக்கம் தரவேண்டும்"" .

எனது அந்த எதிர்வு கூறலுக்கு தன் அபிப்பிராயத்தை தெரிவித்த ஆசிரியர் எனக்கு அனுப்பிய, பின் நான் அவருக்கு அனுப்பிய பதிவு உங்கள் பார்வைக்கு.

மா ச!

"நான் ஊரில் இல்லை. எனக்கு என்னவோ 4+1+1+1. இதில் முன்னாள் பெண் அமைச்சரும், ஆண் அமைச்சரும் அடங்குவர். லிங்கத்தின் தனையன், வீட்டின் உரிமையாளர், சட்டம் படித்தவர், புலிகளின் வாரிசு, பொன்னரின் புதல்வர் வெல்வர் என்பதே என் கணிப்பு""
ஆர்

என எழுதியதற்கு என்பதில்

ஆசிரியர் !
தங்கள் கணிப்பு தான் பொதுவான நிலை. ஆனால் கடைசி சில தினங்களில் நிலைமை மாற்றமடையலாம்.
பிரச்சாரம் சூடு பிடித்து வாக்களிப்போர் வீதம் 70 - 80 ஆகும். உதயன் அதை உசுப்பேத்தி செய்யும். அதனால் கூட்டமைப்புக்கு வாய்ப்பு அதிகம். அதில் தமிழரசு மாவை, சுமந்திரன், சிறிதரன் நிச்சயம். சரவணபவன் அல்லது அருந்தவபாலன் அடுத்த நிலையில். புளட் சித்தார்த்தன் வெல்வார். ஸ்ரீகாந்தா இதுவரை அவரது ஆட்களே இறங்காத நிலை.

சுரேசை விட அனந்தராஜ் முன்னணியில். பதியப்பட்ட 529239 வாக்காளரில் 70 - 80 வீதமானவர் வாக்களித்தால் (3 3/4 லட்சம் முதல் 4 லட்சம் ) அதில் 5% ம் (18000 முதல் 21000) வாக்குகள் எடுக்காத கட்சி/குழு விலக்கப்படும். இதன்படி கூட்டமைப்பு, ஈபிடிபி க்கு மட்டுமே இது சாத்தியம்.

ஈபிடிபி இம்முறை 30 ஆயிரத்தை தாண்டுவது கடினம். தீவக வாக்குகள் கைமாறும். காரைநகர் வியாபார சமூகம் இம்முறை சுமந்திரன் பக்கம். உபயம் துவாரகேஸ்வரன். அதனால் விஜயகலாவுக்கு வாய்ப்பு குறைவு.

"தென்னிலங்கை சூழல் மகிந்தவை ஆட்சி அமைக்க விடாது. மைத்திரி சந்திரிகா ரணில் கூட்டு நியாயமாக நடக்கும். இந்திய சர்வதேச அழுத்தம், அனுசரணையுடன் தீர்வு எட்டப்படும் அதற்கு மக்கள் வாக்களிப்பில் பெருமளவில் கலந்து கொள்ளவேண்டும்" என்ற எதிர்கால பேச்சு வடக்கில் வாக்களிப்பை அதிகரிக்கும். அதனால் கூட்டமைப்பு 6 ஈபிடிபி 1 என மாற வாய்ப்புண்டு. கூட்டமைப்பு 6ல் சுரேஸ் சிறிகாந்த வர சாத்தியம் மிகக் குறைவு.
- மா ச -

தீர்ப்பை எழுதிய நீங்கள் இன்னம் சில வாக்குகள் போட்டிருந்தால் 6 வதை கூட்டமைப்பு பெற்றிருக்கும். 60% வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக 5% -10% வாக்குகள் அளிக்கப்பட வில்லை என கூறப்படுவதை நான் ஏற்கவில்லை. மழை அல்ல மக்கள் மனநிலை மாற்றிய முதல்வர் செயல் என்பது என் குற்றச்சாட்டு. முதலில் நடுநிலை என்றார் பின் நழுவலான நிலைப்பாட்டை சொன்னார். ராமன், ராவணன், கூட வந்த குரங்கு எதுவானாலும் வரட்டும் எமக்கேன் பொல்லாப்பு என 5% -10% ஒதுங்கியதால் 7வது யுஎன்பிக்கு.

யுஎன்பிக்கு வாக்களித்தவர் சிந்தனையில் இருந்தது அமையப்போவது யுஎன்பி அரசு. வென்றால் கிடைக்கப் போவது அமைச்சு பதவி. அதை பெற்றால் பலனுண்டு என்ற கருத்தே, உங்கள் தெரிவு என ஊகிக்கிறேன். அதே வேளை 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்தவர் செய்த தவறுகளை பலர் வெறுத்தாலும் அவரால் கிடைத்த பல நன்மைகளை அனுபவித்தவர்கள் அவருக்கு நன்றி உணர்ச்சியுடன் வாக்களித்து வெல்ல வைத்தீர்கள்.

அதன் மூலம் வட்டுக்கோட்டையில் 1970ல் தோற்றபின் நன்றி கெட்ட தமிழ் சாதி என அமிர்தலிங்கம் திட்டியது போல டக்ளசும் உங்களை திட்டாமல் நன்றி மறவாமைக்கு வாழ்த்துக்கள். அதே வேளை கூஜாக்கள் இன்றி தனியாக போகும் போது, அடுத்த 5 வருடத்தில் 1ஐ எப்படி சிலவாக உயர்த்துவது என்ற நோக்கில் நிதானமாக நடப்பார். அவரை அந்த மாற்றத்துக்கு உட்படுத்தியமைக்கு வாழ்த்துக்கள். உங்களுக்கு நல்லவையே நடக்கும்.

என் கணிப்பின் படி யாழ் 5. வன்னி 3 அல்ல 4. திருமலை 2 அல்ல 1. மட்டக்களப்பு நான் கூறியபடி 3. அம்பாறை நான் கூறியபடி 1. மொத்தம் 14ம், 1அல்லது 2 தேசிய பட்டியல் என்றதில் 2 வந்து மொத்தம் 16 கிடைத்துள்ளது. இதை கூற மகிந்த போல் சாத்திரம் கேட்கவில்லை. பல மக்களை சந்தித்து பருத்திதுறை முதல் பட்டிப்பளை வரை பயணித்து தீவகத்தில் தங்கி சேகரித்த தகவல்களை கொண்டு ஊகித்தவை நண்பர்கள் உறுதிப்படுத்தியது.

குமாரின் குமாரனும், வித்தியாதரனும், விக்னேஸ்வரனும் வினை செய்திராவிட்டால் நிச்சயம் வடக்கின் நிலை வேறு விதமாக அமைந்திருக்கும். அதே போல் திருமலை, மட்டக்களப்பிலும் உள்ளிருந்து கொல்லும் வியாதியால் வந்த வினை. விருப்பு வாக்கு போட்டி கூட கட்சி மாறி வாக்களிக்கும் நிலைக்கு மட்டக்களப்பில் வாக்காளரை மனம் மாற்றியது. யாழில் டக்ளசுக்கு மட்டுமே கூட்டமைப்பு போல நிலையான வாக்குகள் உண்டு.

கூட்டமைப்பில் உங்கள் விருப்பு தெரிவுக்கு என் நன்றிகள். அவர்களில் யாரையும் எனக்கு தெரியாது. ஆனால் அவர்கள் செயல்பாட்டை அறிவேன். தலைமைக்கு தலையிடி கொடாதவர்கள். கருத்து மோதல் கட்சிக்குள் தான் நடக்கவேண்டும். வெளியில் வந்து கட்சி அறிவித்த தம் முன் முயற்சியை அது அவர்கள் கருத்து என பேச்சாளர் என்பதால் தான் நினைத்ததை எல்லாம் பேசி மக்களை குழப்பியவரை அவரின் வீட்துக்கு அனுப்பிவிட்டீர்கள்.

எப்படி கழட்டி விடுவது என திண்டாடிய கூட்டில் இருந்த ஏனையவர்களின் பிரச்னையை நீங்கள் தீர்த்து வைத்துள்ளீர்கள். அதற்கு என் நன்றிகள். ஏனென்றால் அவர்கள் இயக்கமாக இருந்த போதே அறிந்தவன் நான். கூட்டணிக்கு சமமாக முத்தவெளியில் கூட்டம் நடத்தியவர்கள். மக்களை அணிதிரட்டி போராட்ட வடிவத்தை முன்னெடுக்க முனைந்தவர்கள், சில காட்சிப்பிழையால் இன்று சின்னாபின்னமாகி சிதறியது இவரால் தான்.

தன்னை தன் குடும்நலனை முன்னிறுத்தி, மக்கள் முன் மேடைப்பிரசங்க அரசியல் செய்த இந்த வாய்ச்சொல் வீரரை உங்கள் வாக்கு எனும் ஆயுதத்தால் வீழ்த்தி விட்டீர்கள். இன்று அவர் தோல்வி கண்டு, அன்று அவரால் கைவிடப்பட்ட தோழர்கள் தீபாவளி கொண்டாடி இருப்பார்கள். தனித்து சென்றால் இவரின் தம்பியின் வாக்கு தவிர சில 100 வாக்குகள் கூட பெற முடியாது, அன்று கபடமாக கூட்டமைப்பில் புகுந்து வென்றவரின் முகத்திரை இன்று கிழிந்தது.

நன்றே செய்தீர் அதை நல்ல சூழலில் செய்தீர். நல்லதே நடக்கும். உங்களுக்கு என் வாழ்த்துக்கள் நன்றிகள்.

மாதவன் சஞ்சயன்

பின் இணைப்பு :

வரலாற்றை திரிவு படுத்தும் திருந்தாத ???????

இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவரை கால தமிழ்த் தலைவர்களில் தொடர்ச்சியாக ஆறாவது தடவையாகவும் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களே. நடந்து முடிந்த தேர்தலிலும் வெற்றியீட்டிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இத்தகைய வரலாற்றுச் சாதனையோடு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
1994 ஆம் ஆண்டு யாழ்.நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட இவர் தொடர்ச்சியாக 2000, 2001, 2004, 2010, 2015 ஆம் ஆண்டுகள் என தோல்வியை தழுவாமல் தடைகளுக்கு மத்தியிலும் வெற்றிபெற்று வந்திருக்கின்றார். இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவரை கால தமிழ்த் தலைவர்களில் எவரும் தோல்வியின்றி தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட வரலாறு இல்லை என்று அரசியல் நோக்கர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது ஈபிடிபி இணைய செய்தி.

தமிழ் தலைவர் மட்டுநகர் சொல்லின் செல்வர் செல்லையா இராஜதுரை 1956, 1960மார்ச், 1960ஜூலை, 1965, 1970, 1977 தொடக்கம் 1989 வரை மட்டக்களப்பு தொகுதியில் அரச ஆதரவின்றி, அரசபடை பாதுகாப்பின்றி, தேசிய கட்சியின் சின்னத்தில் இன்றி, அடுத்தவர் விருப்பு வாக்கை பங்கு போடாமல், தேர்தல் மாவட்டத்தில் அல்லாமல் மட்டக்களப்பு தனித் தேர்தல் தொகுதியில், தமிழரசு கட்சி வீட்டு சின்னத்தில் 1956 - 1977 வரை தொடர்ந்து 5 தடவைகள் 21 வருடங்கள், 1977ல் கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் வென்று 1989 வரை 12 வருடங்களும் மொத்தம் 33 வருடங்கள் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.

இது வரலாறு.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com