Contact us at: sooddram@gmail.com

 

புலம்பெயர் சாட்டை உள்ளூர் கூத்தாடிகள் !

சுயநிர்ணயத்துடன் கூடிய சமஷ்டித் தீர்வை நோக்கி கூட்டமைப்பு பயணித்தால் அதனுடன் இணைந்து செயற்படத் தயார். திருவாய் மலர்ந்துள்ளார் கஜேந்திரன் பத்மினி சமேதர கஜேந்திர குமார் பொன்னம்பலம். ஆடிய காலும் பேசிய வாயும் ஓயாது என்பது இது தானோ ? அது தான் ஆகஸ்ட் 17ல் மக்கள் தங்கள் தீர்ப்பை தந்துவிட்டார்களே. மீண்டு என்ன நாட்டாமை தீர்ப்பை மாற்றி சொல்லு எனும் கோசம். புலம் பெயர் சாட்டை உங்களை அப்படி ஆட, பேச சொல்கிறதா ?

இங்கிருக்கும் மக்களை பற்றிய கரிசனை கொண்ட பல புலம்பெயர் உறவுகள் தம் வருமானத்தில் தம் சுக போகத்தை குறைத்து அனுப்பும் உதவியில் எத்தனையோ சிறுவர் இல்லங்கள், முதியோர் பராமரிப்புகள், இளையோர் சுயதொழில் உதவிகள், பெண் தலைமை குடும்பகளுக்கு நிவாரணங்கள், கற்றல் உபகரணங்கள், நன்னீர் தாங்கிகள் என இயன்ற உதவிகளை செய்வதன் மூலம் தான் மனிதம் வாழ்வதை உணர்கிறோம்.

ஆனால் தம் சொகுசான வாழ்வுக்கு தாய் மண்ணில் குழப்பம் இருந்தால் தான் தாம் அங்கு பிழைப்பு நடத்தலாம் அதை வைத்து நோகாமல் வீடுகள், வாகனங்கள், வெளிநாட்டு பயணங்கள் என அனுபவிக்க துடிக்கும் சில விசமிகள் விட்டெறியும் பணத்துக்கு அரசியல் பேசுவது கண்முன்னே நாம் கண்ட முள்ளிவாய்க்காலை மீண்டும் எம் மண்ணில் நிகழ்த்தவா என்ற கேள்வி தான் என்னுள் எழுகின்றது. ஏன் இந்த கொலை வெறி. பதவிக்காகவா?

2009ல் நீங்கள் மூவரும் செய்தது என்ன ? கஜேந்திரன் நோர்வேயில். பத்மினி லண்டனில் கஜேந்திரகுமார் கொழும்பில். ஏனைய எம்பி க்கள் பற்றி நான் பேச மாட்டேன். அவர்களில் எவரும் புலிகள் குறிப்பாக பிரபாகரன் காப்பாற்ற படவேண்டும் என்று இதய சுத்தியுடன் விரும்பியவர்கள் அல்ல. அவர் தலைமையை தங்கள் பதவியை தக்கவைக்க ஏற்றவர்கள். நீங்கள் மூவரும் தான் மக்களை தொடர்ந்தும் உசுப்பேத்தியவர்கள்.

40 ஆயிரம் சவப்பெட்டி தயார் பண்ண சொன்ன நோர்வே கஜேந்திரன், ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்த மக்களின் நிவாரண நடவடிக்கையில் ஈடுபட்ட சிவசக்தி ஆனந்தனிடம், தலைவரை விட்டு வந்த சனத்துக்கு உதவ வேண்டாம் என கூறி, அவரிடம் திட்டு வாங்கிய லண்டன் பத்மினி. பசிலுடன் கதைத்துவிட்டேன் வெள்ளை கொடியுடன் வாருங்கள் என கொழும்பில் இருந்து கூறிய கஜேந்திரகுமார், முள்ளிவாய்க்காலில் இல்லை. நாங்கள் இருந்தோம். நந்திக்கடலை நடந்து கடந்து வற்றாப்பளை அம்மனிடம் அடைக்கலமானோம்.

உங்களுக்கு வாக்களித்த பலர் நந்திக்கடல் கடக்க, அவர்கள் பிள்ளைகள் முள்ளிவாய்க்கால் மரண குழியில் விதைக்கப்பட, நீங்கள் மட்டும் பாதுகாப்பாய் இருந்தீர்கள். அதனால் தான் 2010ல் மட்டுமல்ல 2015 லும் கூட உங்களை நாங்கள் நம்பவில்லை. 2010ல் 6362 எடுத்த நீங்கள் இப்போது 15022 எடுத்தது உங்கள் வளர்ச்சி அல்ல. நாம் கூட்டி வந்த நீதிமான் எம் மக்களை குழப்ப உங்களோடு கூடி கும்மியடித்த சூழ்ச்சி. பிரேமானந்தா இசம்.

பெண் பிடி சாமியை கும்பிட்ட, இந்திய நீதிமன்ற தீர்ப்பை மறுதலித்த, மாகாண முதல்வரின் முதுகிலும் உள்ள புலம் பெயர் சாட்டை அடையாளம் விரைவில் வெளிவரும். கம்பவருதியே மலரும் இணையத்தில் அவர் சொந்த புத்தி, சுயபுத்தி இன்றி செயல்ப்படுபவர் என்று எழுதினார். முதல்வர் அமெரிக்க, லண்டன் விஜயத்தின் பின் எமக்கு கூறியதை அவரது முடிவு என நாம் எப்படி நம்புவது ? எல்லாம் சுயநல புலம் பெயர் சாட்டை செய்வித்த மாயமே.

உங்கள் கொள்கை, கோட்பாடு, செயல், சிந்தனை அத்தனையும் தேர்தல் காலத்தில் மேடைபோட்டு நீங்கள் கூறியதை கேட்டு, பார்த்து தெளிந்த மக்களே உங்களில் ஒருவரை கூட தெரிவு செய்யவில்லை. தங்கள் அலுவல்களை தாங்களே பார்க்கும் வல்லமை உள்ள மக்கள் தமது நாளாந்த நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்பவர்களை தான் ஏற்கமாட்டார்கள். அதே வேளை தம் இன்னல்களை தீர்த்தவரை ஆதரிப்பவரும் உண்டு.

கூட்டமைப்பின் வெற்றியும், டக்ளசின் வெற்றியும் அதை தான் சொல்கிறது. ஆகவே கொள்கை / தேவை என 2 பிரிவு முடிவெடுக்க இடையில் வந்த சூடு கசக்கிகளை மக்கள் நிராகரித்தனர். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படும் கொள்கை மூலம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனவும், தேவை வேண்டுவோருக்கு உதவுதல் எனவும் 2 அணிகள் இன்று இருக்கின்ற போது, இரண்டும் கெட்டான்களை மக்கள் நிராகரிக்கத் தான் செய்வார்கள்.

ஆரம்பத்தில் யாழ் முடிவு 5+2 என எழுதியது 5 கூட்டமைப்பு 2 ஈபிடிபி என்றே. 2 ஈபிடிபி யில் 1 அவர்களின் நிரந்தர வாக்கு வங்கி கணக்கு மற்றது 2010 தொடக்கம் சந்திரகுமாரின் கிளிநொச்சி பிரசன்னம். 2010ல் கூட்டில் கிளிநொச்சியில் பெற்றது 3367. 2015ல் தனித்து பெற்றது 6417. தீவகத்தில் மட்டுமே 3934 மற்ற 9 தொகுதியிலும் 3000க்குள். குட்டிச்சாத்தான் என சிறிதரன் திட்டியும் சேவை பெற்ற மக்கள் நன்றிக் கடனாக வாக்களித்தனர்.

கொள்கையும் இல்லை. சேவையும் இல்லை. மாகாண சபை தேர்தலிலும் இல்லை. ஜனாதிபதி தேர்தலில் பகிஸ்கரிப்பு. என இருந்துவிட்டு பாராளுமன்ற தேர்தலுக்கு கடைவிரித்து விலை போகவில்லை உங்கள் சரக்கு. இப்போது உங்கள் சரக்கையும் சேர்த்து விற்றால் தருவோம் விலைக்கழிவு என விண்ணாளம் பேசுவதை விடுத்து உங்கள் செயல்பாட்டை மக்களை நோக்கி திருப்புங்கள். தேவையற்ற கோசங்களை நிறுத்துங்கள்.

அன்னிய செலவாணியை அகதி முகாம் நோக்கி திருப்புங்கள். அரசாலோ மாகாண சபையாலோ மட்டும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியாது. நாளாந்த தேவைகள் நிறையவே உண்டு. மந்திரியாய் இருந்த டக்ளஸ் கூட பசிலின் கடைப்பார்வை இன்றி காரியமாற்ற முடியவில்லை. இன்று வென்றவர்கள் உடனடியாக மந்திரிகளாகும் சாத்தியம் இல்லை. 67 வருட பொறுமை 1 வருடத்தில் தீர்க்கப்படும் (?) வரை பொறுத்திருங்கள்.

அதுவரை உங்கள் நிதி மூலங்களை அகதிகள் புனர்வாழ்வுக்கு செலவிடுங்கள். உங்கள் புலம் பெயர் சாட்டைகளிடம் சொல்லுங்கள் இங்கு பல தேவைகள் உள்ளன. அதை தீர்ப்பதும் இங்குள்ள மக்களை மண்ணில் தக்கவைக்கும். மீள் குடியேற்றம் நடக்கும். அடுத்த குடிசன மதிப்பீட்டில் யாழ் ஆசனங்கள் கூடும். அதன் பின் நடக்கும் தேர்தலுக்குள் தீர்வு கிடைக்காவிட்டால் எங்கள் பாராளுமன்ற கனவு நனவாகும் என்று.

(மாதவன் சஞ்சயன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com