Contact us at: sooddram@gmail.com

 

சிவஞானம் சிறிதரன் ! கேள்விகளால் ஒரு வேள்வி !

(மாதவன் சஞ்சயன்) 

நீங்கள் பெற்ற விருப்பு வாக்குகள் என்னை திகைப்பில் ஆழ்த்தியது. அவ்வளவு தூரம் உங்கள் மீது அவதூறுகள் பரப்பப்பட்டது. நீங்களும் சளைத்தவர் அல்ல. சந்திரகுமாரை குட்டிச்சாத்தான் என திட்டித்  தீர்த்தீர்கள். அவர் உங்கள் வாக்கு வங்கியில் கைவைத்து விடுவார் என்ற நோக்கில் நீங்கள் அப்படி செய்தீர்கள். 1977 தேர்தலில் கிளிநொச்சி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்த குமாரசூரியரை சிறிமாவின் குசினி மந்திரி என சங்கரி திட்டினார். 

ஆனால் நீங்கள் திட்டியதை விட பல மோசமான திட்டுகளை,  நீங்கள் வாங்கிவிட்டு எப்படி இத்தனை விருப்புகளை பெற்றீர்கள். இரணைமடு நீர்விடயத்தில் ஈபிடிபி உங்களை கிழி கிழி என்று கிழித்தார்கள். முதல்வர் மதில் மேல் பூனை போல் இருந்தார். பிரதேச வாதம் உங்கள் மீது பாய்ந்தது. நெடுந்தீவில் பிறந்து யாழில் படித்து வட்டக்கச்சியில் வாழும் நீங்கள் யாழ்ப்பாணத்துக்கு தண்ணீர் கொடுக்க மறுக்கும் மா பாவி ஆனீர்கள்.

அன்று இரணைமடு தண்ணீர் விடயத்தில் யாழ் திட்டியது. கிளிநொச்சி வாழ்த்தியது. இன்று தேர்தல் கால வினோதம் கிளிநொச்சி விருப்பு 38 ஆயிரம். யாழ் விருப்பு 34 ஆயிரம். மொத்தம் 72 ஆயிரம் இது எப்படி சாத்தியம். உங்கள் யாழ் பாதி கிளிநொச்சி பாதி கலந்து வாழ்ந்த வாழ்க்கை என்பதாலா. அல்லது உங்கள் மீது சுமத்தப்பட்டவை பொய்கள் என்பதை நீங்கள் தேர்தல் மேடைகளில் விளக்கி சொன்னதை நம்பியதாலா.  

சாவகச்சேரி தொகுதியில் தொடர்ந்து 6 தடவைகள் வென்ற வி என் நவரட்ணம் வழி வந்த அதிபரை அவர் பின்னால் வந்தவர் குழிபறித்து ஆசனம் பெற்றதாக அதிபர் ஆதரவாளர் புலம்ப, நீங்களோ கூட வந்தவர் விருப்பை கூட்ட உதவியதாக கூறப்படுகிறது. உங்களைப் பற்றி எத்தனையோ செய்திகளை சங்கரி உட்பட பலர் கூற கேட்ட எனக்கு இந்த செயல் நீ ரொம்ப நல்லவன்டா என சொல்லத் தோன்றுகிறது. இதே போல் உங்கள் மண்ணில் நல்லது செய்த சந்திரகுமாரை குட்டிச்சாத்தான் என திட்டியது ஏற்புடையதல்ல.

வித்தி கூட்டி வந்தவரை ஏன் செத்து மடியவில்லை என கேட்டதாகவும் செய்தி வந்தது. பிரபாகரன் என்  தலைவன் என கூறும் நீங்கள் அவர் வழி சென்றவர்களை இழிவு படுத்தியதால் உங்கள் அரசியல் அஸ்தமனம் ஆரம்பம் என பேசப்பட, நீங்களோ அதி கூடிய விருப்புடன் முதல் நிலையில் வந்தது எப்படி. உங்கள் தேர்தல் மேடைகளில் முழங்கிய எல்லோரும் முன்னாள் புலிகள் அல்லது ஆதரவாளர்கள் என்பதாலா. அப்படி என்றால் வித்தி எலி நீங்கள் புலியா. 

நீங்கள் யாரோ எவரோ எப்படிப் பட்டவரோ இன்னும் 5 வருடங்கள் கிளிநொச்சி உங்கள் பராமரிப்பில். இதில் 20 வது திருத்தும் வந்து தொகுதிவாரி தேர்தல் முறை வந்தால் அதற்கான அத்திவாரம் போடும் நிலை  உங்கள் கையில். 1977ல் குமாரசூரியரை துரத்திய சங்கரியின் பச்சை ஜப்பான் ஜீப் பெரும்பாலும் திருவையாற்றை நோக்கியே செல்லும். காரணம் அவரது காணிகளும், உதவியாளர் கிருஸ்னராஜாவும் இருந்தது அங்குதான்.

மின் இணைப்பும் தொலை பேசி தொடர்பும் அவர் இடம் வரை புதிதாக போடப்பட்டது. கிளிநொச்சி (குளத்தடி) மகாவித்தியாலத்தில் பேசிய சங்கரி இங்கிருந்து யாராவது பல்கலைகழகம் போனால், என் செலவில் படிப்பிப்பேன் என்றார். அங்கு ஏ ல் வரை படித்த மாணவன் 2ம் முறை வெற்றிபெற, யாழ் லோகநாதன் ரியூடரியில் படித்து பல்கலைகழக அனுமதி பெற்று சங்கரியிடம் போக, அவர் தம்பி நீர் பாடசாலையால் சோதனை எடுக்கவில்லை என உதவவில்லை.

கி மு 5 கி பி 13 நூற்றாண்டில் கிளிநொச்சி ராஜராட்டையின் கீழ் இருந்து பின் யாழ்ப்பாண ராச்சியதுள் வந்தது. மிக நீண்ட காலம் யாழ்ப்பாண மாவட்டத்தின் கீழ் இருந்த கிளிநொச்சி 1984ல் தான் தனிமாவட்ட அந்தஸ்த்தை பெற்றது. அதன் முழுப்பெருமையும் தன்னைத்தான் சாரும் என மார்தட்டும் வீரசிங்கம் ஆனந்தசங்கரியை நீங்கள் விரட்டியதால் தான் தேர்தலில் கொழும்பில் போட்டியிடுவதாக அவர் சக்தி ரிவியில் புலம்பினார்.   

சந்திரகுமாரை துரத்திய உங்கள்  சேவை வட்டக்கச்சி என சுருங்குமா அல்லது, கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி என சம பார்வை பெறுமா. தேர்தலில் உழைத்த இளைஞர்கள் சிலரின்  அரச உத்தியோக கனவை நிறைவேற்றிவிட்டு மற்றவர்களை இவர்களுக்கு ராணுவ புலனாய்வு அச்சுறுத்தல் உண்டு என கடிதம் கொடுத்து அகதிகளாக புலம் பெயர செய்வீர்களா.

அல்லது அரச உத்தியோகம் புருச லச்சணம் என நினைக்கும் மாணவரை, தேர்தலில் தெருவில் இறங்கி உங்களுக்கு வாக்கு கேட்ட வடக்கின் கல்வி அமைச்சரை கொண்டு, வட்டக்கச்சி விவசாய கல்லூரியை குண்டசாலை / மகா இலுப்பள்ளமை போல் தரமுயர்த்தி அவர்களை கற்க வைத்து விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக மாற்றப்போகிறீர்களா.

இணைய யுகத்தில் கணனி வந்து களனி குறைகிறது. காட்டில் வேலை செய்பவனை கேவலமாகவும் கணணியில் வேலை செய்பவனை கௌரவமாகவும் நினைப்பவர்களுக்கு தெரிவதில்லை 'அரிசியை' இன்டர்நெட்டில் டவுன்லோட் செய்ய முடியாது என்றவரின் யதார்த்தம் புரிகிறதா. அதற்கு இன்று கிளிநொச்சியில் காணப்படும் கள சூழ்நிலையை மாற்றி அமைப்பீர்களா.    

கேள்வியின் நாயகனே என் கேள்விகள் உங்களை கொச்சைப்படுத்த அல்ல. நான் தெளிவு பெற. புத்தி தெரிந்த நாள் முதல் அண்ணன் அமிர் முதல் அண்மைய அமைச்சர் வரை எத்தனையோ பார்த்துவிட்டேன். தமிழ் ஈழம் என்றவரும் சிங்கப்பூர் என்றவரும் கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவைகளாகவே முடிந்து போயினர். புதிய சூழல் புதிய தலைமை இதில் நீங்கள் விதைப்பதாவது எங்கள் வீடு வந்து சேருமா என்பதே என் கேள்வி.

தமிழ் நாட்டின் நெற் களஞ்சியம் தஞ்சை போல யாழ் குடா நாட்டின் நெற் களஞ்சியம் கிளிநொச்சி. 1936ல் காடுகள் அழித்து களனிகள் ஆக்கப்பட்டது. குடியேற்றறங்கள் ஏற்படுத்தபட்ட போது குடாநாட்டில் இருந்து அதிலும் பெரும் பான்மையாக தீவகத்தில் இருந்தே மக்கள் குடியேறினர். 7 குளங்களில் இருந்து நீர்பாசனம் பெற்று நெல் வயல்கள் பசுமை பூத்த காலம் முன்பு இருந்தது.

1970ல் விஸ்வமாடு தருமபுரம் திருவையாறு வட்டக்கச்சி என மேட்டு நிலங்கள் படித்த வாலிபர் திட்டத்தில் மிளகாய் தோட்டத்தால் பசுமை பூத்திருந்தது. அன்று இளைஞர்கள் தோட்டம் செய்து கல் வீடுகள் கட்டி சொத்துக்களுடன் தம் சொந்தங்களுடன் சொந்தக்காலில் வாழ்ந்தனர். யுத்த சூழலில் குளங்கள் பராமரிக்க படாமல் களணிகள் காய்ந்து கிடக்கின்றன. தோட்ட காணிகளில் புழுதி பறக்கிறது.

கடல் மீனுக்கு எல்லை இல்லை. பருவகாலத்தில் பெய்யும் மழை நீருக்கும் தனி பாதையில்லை. பள்ளம் நோக்கி ஓடும் அதற்கு அணை போட்டால் ஏரி அல்லது குளம். கட்டுப்பட்டால் களனியில். மீறினால் கடலில். இது இயற்கை நியதி. ஒரு துளி மழை நீரையும் கடலில் கலக்க விடேன் என்ற பராக்கிரமபாகு செய்தது போல் செயல்பட்டு ஏற்கனவே இருப்பவை பலப்படுத்தப்பட வேண்டும் புதியவை உருவாக்கப்பட வேண்டும். ஏரிகளை பாதுகாத்தால் நன்னீர் மீன்வளர்ப்பு நல்ல பலன் தரும்

40 ஆயிரம் ஏக்கர் களனிகளில் 2 போக வேளாண்மை செய்ய இரணை மடு குளத்தை திருத்த வேண்டும். புலிகள் உடைத்த கல்மடு குளம் சீர் செய்யப்பட வேண்டும். வன்னேரி, கரியாலைநாகபடுவான், கனகாம்பிகை புதுமுறிப்பு குளங்கள் மீள் கட்டுமானம் செய்யப்படவேண்டும். கரும்பு செய்கைக்கு அக்கராயன் குளம் பலப்படுத்த படவேண்டும். இத்தனையும் செய்ய ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் வடக்கின் முதல்வர் மூலம் திட்டங்கள் சமர்ப்பிக்கப் படவேண்டும்.

முன்பு திருநகர் பக்கம் மிகப்பெரிய கோழிப்பண்ணை இருந்தது. பின்பு அந்த இடத்தை கோழிப்பண்ணை என்று பெயரிட்டு அழைப்பது மட்டுமே. கோழி மேய்த்தாலும் கவர்மாண்டில் மேய்க்க வேண்டும் என நினைப்பவருக்கு தமிழ்நாடு நாமக்கல் போல அரச உதவி கோழிப்பண்ணை அமைத்தால் ஆயிரக்கணக்கானவர் தொழில் பெறுவார். புலம் பெயர் உறவுகளுக்கு கிளிநொச்சி நாட்டுக்கோழி ஏற்றுமதி செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும் அங்குள்ள  நம்மவர் நன்மையடைவர். 

புலம்பெயர் தேசத்தில் பூநகரி மொட்டை கறுப்பன் என கேரளத்து அரிசி விற்பதாக செய்தி படித்தேன். சிங்களம் மட்டுமல்ல கேரளமும் எம்மை சுரண்டுவதை நிறுத்த ஒரு வழி உண்டு. பூநகரி மொட்டை கறுப்பனை மொத்தமாக வாங்கி சிறு பொதி செய்து புலம்பெயர் நாடுகளுக்கு அனுப்பினால் நெல்லுக்கு நல்ல விலையும் கொடுக்கலாம். பல பெண் தலைமை குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பும் கொடுக்கலாம். புலம் பெயர் உறவுகளின் மனதிலும் இடம் பிடிக்கலாம். 

எங்கள் வளமான காடுகளை அழித்தவர்கள் நாசமாய் போக. நீங்கள் உங்கள் மாணவர்களை கொண்டு மர நடுகையை ஊக்குவியுங்கள். மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் குளம் நிரம்பி களனி விதைப்போம் நெல் மணி கண்டு வளம் பெறுவோம் என்பதை பாலர் வகுப்பு பாடமாக்குங்கள். எங்கள் காடுகளில் மீண்டும் முதிரை  பாலை வீரை தேக்கு என அடர்ந்து வளரட்டும். யானையும் கரடியும் மானும் மரையும் மயிலும் முயலும் கூடி பெருகட்டும். சிறுத்தையும் நரியும் இப்போது வேண்டாம். 

முன்னாள் அமைச்சர் முடிக்காமல் போன ஆனையிறவு உப்பளம் பரந்தன் ரசாயன தொழிற்சாலை போர்க்கால வேகத்தில் மீண்டு வர வேண்டும். ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் அதற்குள் மூடிக்கிடக்கிறது. இத்தனையும் செய்ய உங்களுக்கு பக்கபலம் பல உண்டு. வடக்கின் முதல்வர் உட்பட அமைச்சர்கள் அனைவரும் உங்களவர். மத்தியும் மாகாணமும் ஒரு புள்ளியில் சந்தித்தால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை.

நீங்கள் ஒரு விவசாயி மகன் / விவசாயி. நீங்கள் இணையப்போகும் நல்லாட்சியின் நாயகன் மைத்திரி ஒரு விவசாயி மகன் / விவசாயம் படித்தவர். இரணை மடு தண்ணியில் உங்களுக்கு அரணாக நின்ற ஐங்கரநேசன் வடக்கின் விவசாய மந்திரி. எல்லாவற்றிக்கும் மேல் உங்களுக்கு வாக்களித்தவர்களில் மிகப் பெரும்பான்மையினர் விவசாயிகள். எனவே கிளிநொச்சி விவசாய பூமியில் 5 வருடத்தில் நீங்கள் செய்யப்போவது சாதனையா அல்லது அடங்கா தமிழன் என ஆர்ப்பரித்து தரப்போகும் வேதனையா.

விஜயகலாவிற்ன் வெற்றிக்கு பின்னால் இருக்கும் 'எம் ஊர்க்கார்' என்பது போன்ற பலம் உங்களுக்கும் உண்டு என்பதை உங்கள் தொப்புள் கொடி உறவுகளால் நான் அறிவேன். ஆனாலும் ........! 'ஊரில் உழாத மாடு எப்படி வன்னியில் உழும்' அல்லது 'காடு கரம்பையில் உழாத மாடு எப்படி களனியில் உழும்' என்ற எம் முதியோர் மொழி என் மனத்தில் வந்து போவதை என்னால் என்னமோ நிறுத்த முடியவில்லை

(மாதவன் சஞ்சயன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com