Contact us at: sooddram@gmail.com

 

கருத்துக் கூறல் காரணிகள் !

(மாதவன் சஞ்சயன்)

தனிப்பட்ட விடயங்களில் கருத்துக் கூறுவதும் அரசியல் விடயங்களில் கருத்துக் கூறுவதும் ஒரே மாதிரியானது அல்ல. தனிப்பட்ட ஒரு சம்பவம் பற்றிய கருத்து சில தினங்களில் வாராத்தில் மாதத்தில் மாற்றத்துக்கு உள்ளாகலாம். ஆனால் அரசியல் கருத்து குறிப்பாக தேர்தல் காலத்தில் கூறும் கருத்தினால் ஏற்படும் விளைவை அடுத்த தேர்தல் வரை காத்திருந்து தான் மாற்றத்துக்கு உட்படுத்தலாம். அது சரியான அல்லது தவறானதாகவும் அமையலாம்.

அரசியல் கருத்துகள் சுயவிருப்பு கருத்து, யதார்த்த கருத்து, விருப்பு கலந்த யதார்த்த கருத்து என அமைவதுண்டு. சுயவிருப்பு கருத்து தான் விரும்பும் தலைவனை அவர் சார்ந்த கட்சியை முனிலைப் படுத்தி கூறப்படுவது. யதார்த்த நிலை கருத்து கள நிலவரத்தை உள்ளது உள்ளபடி கூறுவது. விருப்பு கலந்த யதார்த்த கருத்து கள நிலவரத்தை கூறுவதோடு தம் விருப்பப்படி முடிவுகள் வந்தால் நல்லது என்ற நோக்கில் கூறுவது.

சுயவிருப்பு கருத்து பக்க சார்பாக இருப்பது தவறில்லை. ஆனால் அது தம்மை போற்றியும் எதிரணியை தூற்றியும் கூறப்படலாகாது. யதார்த்த கருத்து பெரும்பாலும் பொது கருத்துக் கணிப்புகளாக அமைபவை. அவை கூட சிலவேளைகளில் முடிவுகளில் தாக்கம் செலுத்துவதுண்டு. பொய்த்து போவதும் உண்டு. விருப்புடன் கூடிய யதார்த்த நிலை கருத்து பெரும்பாலும் சரியாவதும் அந்த கருத்தை கூறுவதற்கான காரணத்தை எழுதினால் பழிகேட்பதும் சகஜம்.

அண்மையில் நடந்த தேர்தல் பற்றி என் விருப்பு கலந்த யதார்த்த கருத்துகளையே முன்வைத்தேன். அதற்கு காரணம் கடந்த கால சம்பவங்கள். போராளிகள் என்பதால் தலையில் வைத்து கொண்டாடவோ அல்லது கனவான்கள் என்பதால் வால்பிடிக்கவோ நான் தயாராய் இல்லை. மக்கள் போராளிகளால் நடத்தப்பட்ட விதம் கனவான்கள் மக்களை ஏமாற்றிய விதம் இரண்டையும் பார்த்து தாக்கமா, ஏமாற்றமா என்ற பார்வையில் ஏமாற்றம் பரவாயில்லை என்பதே என் முடிவு.

பெரும்பான்மை மக்களின் மனநிலை ஒரு நாள் வாக்களித்து விட்டு பின் 5 வருடங்கள் ஏமாந்தாலும் பரவாயில்லை என்பதே. பல துன்பியல் சம்பவங்களை பார்ப்பதை, கேள்விப்படுவதை அனுபவிப்பதை தவிர்ப்பதே அவர்தம் நிலை. எங்கும் எதிலும் நீக்கமற நீண்ட அதிகாரத்தின் கைகள் தன் கைத்தடிகளை தான் முன் நிறுத்தியது. ஆயுதங்கள் மட்டுமல்ல மக்களின் குரல்களும் மௌனிக்கப்பட்டன. அதிகாரம் தலைவிரித்து ஆடியது. கைத்தடிகள் தாளம் போட்டது.

இந்த நிலையில் சற்று மாறுபட்ட சூழலில் தேர்தல் வந்தது. வழமை போல் வாய்பேச்சில் தம்மை பல்லக்கில் ஏற்றுவோம் என்பவர்கள் இறுதியில் தம்மை கால் நடையாகத்தான் அனுப்புவார்கள் என்பது மக்ககளுக்கு தெரியும். ஆனால் அவர்களின் கால் ஒடித்து அனுப்பமாட்டார்கள் என்பதும் அவர்களுக்கு தெரியும். அதேவேளை தமக்காக எதிரியுடன் மோதியவர்கள் பின் தம்மையே அடக்கி ஆண்டபோது அவர்களை எதிர்க்கவும் முடியவில்லை. காலம் கனியும் என காத்திருந்தார்கள்.

அந்த யதார்த்த சூழலை புரிந்து கொண்டு என் விருப்பும் கலந்த கருத்துகளை கட்டுரையாக்கினேன். என் விருப்பு 1983 க்கு முந்திய நிலை மீண்டும் எம் மண்ணில் ஏற்படவேண்டும் என்பதே. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் போல இயக்கங்களில் இணைந்தவன் எல்லாம் போரளியானது அப்போது தான். ஆயுதங்கள் தமக்கு அரணாகும் என்றே மக்கள் அவர்களை அரவணைத்தார்கள் ஆனால் அவர்களே எமனாக மாறியபோது வெறுத்தார்கள்.

அழிவிற்கு பின் அபிவிருத்தி வேண்டி நின்வர்கள் அதை முன்னிலைப் படுத்தியவருக்கு வாக்களித்தார்கள். வென்று வந்தவர்கள் ஆடிய கண் மண் தெரியாத ஆட்டத்தை வெறுத்தார்கள். மக்கள் ஆணை மக்களுக்கு சேவை செய்யவே. அமைச்சர் தனக்கு பலன் தரும் வேலைகளை மட்டும் அதிகாரிகளை கொண்டு செய்விக்க அல்ல. பல்கலைகழக நடவடிக்கைகள் கல்விமான்கள் செய்யவேண்டியது. கல்லா மாக்கள் அல்ல. மாநகர சபை கடைகள் ஏல கட்டைப் பஞ்சாயத்தை வியாபாரிகள் விரும்பவில்லை.

விடுதலை என்ற பெயரில் எம் மக்கள் வீடுகளில், கடைகளில் கொள்ளையடித்து கோவில் சங்கை கூட களவெடுத்து அதன் பின் ஆரம்பித்த அரசியல், அதிகாரம் கிடைத்ததும் மக்கள் தலையில் மண்ணை போட்டது. ஒரு கண்ணுக்கு வெண்ணெய் மறு கண்ணுக்கு சுண்ணாம்பும் போல நன்மையையும் தீமையும் கலந்தே நடந்தது. தாம் போட்ட வாக்கை கொள்ளையடித்து பின் தம் பக்கம் திரும்பி கூட பாக்கதவரை பற்றி எண்ணாத மக்கள் அதே வாக்குகளால் அதிகாரம் பெற்றவரின் ஆட்டத்தை அடக்க காத்திருந்தார்கள்.

கனவான்களை விட பிச்சை வேண்டாம் நாயை பிடி என சொல்லவைத்தவர்கள் போராளிகள் என்ற பெயரில் புகுந்துவிட்ட சில வேட்டையன்கள். வேறு தொழில் செய்ய தெரியாதவர்கள். அதற்கான தகுதியும் இல்லாதவர்கள். அதற்காக கனவான்கள் எல்லாம் கலாநிதிகள் அல்ல கண்ணியவான்களும் அல்ல. அவர்களில் கல்லா நிதிகளும் உண்டு களவாணிகளும் உண்டு. முன்னையவர் வேட்டை நாய்கள் போல் எங்கும் பாய்வர். பின்னையவர் வீட்டு நாய்போல் கிடைத்ததை தாம் மட்டும் உண்டு கொழுப்பர்.

மக்களுக்கு கடிக்கும் நாய்களை விட குரைக்கும் நாய்களைத் தான் பிடிக்கும். கடிநாய் வீட்டுக்காரரையும் கடிப்பதுண்டு. குரைக்கும் நாயால் சேதாரம் இல்லை. தமக்கு தருபவர்களை விட தம்மிடம் இருப்பதை பறிப்பவர்களை மக்களுக்கு பிடிக்காது. தம் பகுதிகளை வளப்படுத்தாது போனாலும் பரவாயில்லை இயற்கை வளங்களை பாழாக்கி பணம் பண்ணும் செயலை தடுக்கவே தம் வாக்குகளை ஆயுதமாக்க காத்திருந்தனர்.

அதே வேளை பலனடைந்த மக்கள் தொடர்ந்தும் ஆதரிக்க காத்திருந்தார்கள் என்பதும் உண்மை. அதனால் தான் கீரைக் கடையின் எதிர்க்கடை பற்றிய என் கணிப்பு 1ஆசனம் ஆகும். இவர்கள் செய்த நன்மைகளை அறிந்த பலர் இவர்களின் அத்துமீறல்களை அறியாதவர்கள். அவர்களில் சிலர் வெளிவரும் உண்மை செய்திகளை வதந்திகள் திட்டமிட்டு பரப்பப் படுபவை காழ்ப்புணர்ச்சியில் எழுதப்படுபவை என வியாக்கியானம் செய்பவர்கள். விஸ்வாச சுய விருப்பினால் விட்டுக் கொடாமல் வாதிடுபவர்கள். கள நிலை அறியாதவர்கள்.

உலகின் எந்த மூலையில் இருந்தும் செய்திகள் அறியலாம். ஆனால் உண்மையான மக்கள் மனநிலை அறிய ஊரில் சாதாரண மக்களை சந்திக்க வேண்டும். ஆதரவாளர்களை அல்ல. செய்மதி ஜாம்பவானான அமெரிக்காவின் கழுகு பார்வைக்கு புலப்படாமல் போனது பொக்ரானில் இந்தியா நடத்திய அணுகுண்டு பரிசோதனை. அதனை நிகழ்த்திக் காட்டியவர் மர்கூம் (அமரர்) டாக்டர் அப்துல் கலாம். அது சாத்தியமாகக் காரணம் அவருக்கு இருந்த கள கால நிலை அறிவு. தேர்தல் காலத்தில் எனக்கு இருந்தது கள மக்கள் மனநிலை அறிவு.

புதிய அரசு, புதிய சூழல், சிந்திப்பதற்கு நிறைய நேரம், தவறுகளை திருத்த நல்லவாய்ப்பு. மந்திரியானால் கூட இனி அதிகார மீறலுக்கு நல்லாட்சி இடம் தராது. எதிர் வரிசையில் அமர்ந்தால் தவறுகளை சுட்டிக் காட்டி வீட்டுக்காரரை தூங்காமல் பார்த்துக் கொள்ளலாம், வட மாகாண எதிர்க்கட்சி தலைவர் செய்வது போல. அப்படி செய்தும் அங்கு சிலர் தூங்குகிறார்கள் முதல்வர் உட்பட. 5வருட உழைப்பு அடுத்த தேர்தல் முடிவில் சாதகம் தரும்படி மக்கள் சேவகம் செய்யுங்கள். பாதகம் தவிர்த்து.

சயிக்கிளும் வேண்டாம் சிலந்தியும் வேண்டாம் என்று வீட்டுக்கு வாக்கு போட்டது கூட அவர்களின் மாற்றத்தினால் தான். நடைமுறை சத்தியமான விடயத்தை கொள்கையாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லி இணங்கப் போகிறோம் கேட்ட சம உரிமை கிடைத்தால் ஒரு நாட்டில் கூடி வாழ்வோம் உங்கள் விருப்பத்தை வாக்குகளால் தெரிவியுங்கள் என்றனர். மக்களின் யதார்த்த நிலை அறிந்த என் விருப்பும் அதுவாகவே இருந்தது. 5 வருடம் முடிய நான் தேரிலா? தெருவிலா? அல்லது விதிப்படி பாடையிலா? தெரிந்தவன் பரமனே. இந்த பாமரன் அல்ல.

(மாதவன் சஞ்சயன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com