Contact us at: sooddram@gmail.com

 

பதவி வெறியில் பிரேமச்சந்திரன் பிதற்றல்!

(மாதவன் சஞ்சயன்)

ஓடிப்போனவனுக்கு 9ல் குரு. 10ல் வியாழன் பதியை விட்டு கிழப்பும் என சாத்திரகாரர் கூறுவார். அப்படி என்றால் பாராளுமன்றத்துக்கு தெரிவாகி அடுத்த 5 வருடங்கள் வடக்கு, கிழக்கில் இருந்து தெற்கு போபவருக்கு 9ல் குரு. பதவி பறி போய் புலம்புவருக்கு 10ல் வியாழன். வடக்கின் பனம் கொசு போல கிழக்கின் ஆட்காட்டி குருவிகளும் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தின. கிழக்கின் ஆட்காட்டிகள் அதன் செயலாளரை திட்ட, பனம் கொசு தமிழரசு கட்சியின் செயல் வெட்கம் கெட்ட தனமானது என கூறுகிறது.

கிழக்கில் வெளிப்பட்டது உள்கட்சி விவகாரம். தமிழரசு கட்சி செயலாளர் பதவி மாவையின் விருப்பில் துரைராஜசிங்கதுக்கு கொடுக்கப் பட்ட போதே சலசலப்பு ஏற்ப்பட்டது. மாவைக்கு தேவைப்பட்டது தலையாட்டி. அதன் விளைவு தான் 4 ஆசன ங்கள் கிடைத்திருக்க வேண்டிய மட்டுநகரில் 3 ஆசனங்கள் மட்டுமே கிடைத்த நிலைமை. கழுத்தறுப்புகள் 1 ஆசனத்தை காவு கொடுத்தது. வடக்கில் வெளிப்பட்டது சுரேசின் வெட்கம் கெட்ட பதவி வெறி போக்கிலி நியாயம்.

சுரேஸ் முன் வைத்தது அத்தனையும் பொய்யான தகவல்கள். போக்கிலி நியாயங்கள். பதவி வெறி பேச்சுக்கள். 1989ல் நடந்த தேர்தலின் போது கூட்டணியில் உதய சூரியன் சின்னத்தில் ஈபிஆர்எல்எப், டெலோ, ஈஎன்டிஎல்எப் கேட்க முடிவெடுத்து அமிர்தலிங்கம் போட்டியிடாது தேசிய பட்டியலில் வருவதாக ஒப்பந்தம். ஆனால் மட்டக்களப்பில் ஜோசப் பரராஜா சிங்கம் தனது விருப்பு இலக்கம் சாம் தம்பி முத்துவுக்கு பின் வருவதாக புலம்ப அமிர் வேட்பாளராக களம் இறங்கினார்.

அகர வரிசைப்படி அமிர் 1ம் இலக்கம் பெற்றார். தோற்றார். ஜோசப்பும் தோற்றார். சாம் வென்றார். தேசிய பட்டியல் 7 ஆசனங்கள் பெற்ற ஈபி க்கு உரித்தானது. அதை கேட்டு அபுயூசுப் அமிரிடம் அனுப்பி வைக்கப்பட்டார். அமிர் அது தனக்கு என்றார். கூட்டு ஒப்பந்தத்தை மீறி போட்டியிட்டு தோற்ற பின் அதை கேட்பது நியாயம் இல்லை என்ற போது, என் அரசியல் வாழ்வை குழிதோண்டி மண்மூடி புதைக்க முயல்கிறீர்களா என அமிர் சீற ஈபி தலைவர் தலையிட அமிர் தெரிவானார். தங்க முகுந்தனும் அருண் தம்பிமுத்துவும் இதை அறிவர்.

கூட்டு கட்சி தலைமைக்கு கொடுத்தது என்றால் ஏன் அபுயூசும் தலைமையில் சிலர் அதை கேட்டு அமிர் இடம் அனுப்பபட்டனர். 1989 ஜூலை அமிர் படுகொலை செய்யப்பட ஏனைய தலைவர்கள் இருக்க மாவை நியமிக்க படவில்லையா. மீண்டும் 1999 ல் நீலன் படுகொலை செய்யப்பட அதே தலைவர்களை விட்டு மாவை நியமிக்கப் படவில்லையா. அன்று தேசிய பட்டியல் நியமனத்துக்காக எந்த தலைவரும் உங்களை போல் அடிபடவும் இல்லை பத்திரிகையாளர் முன் பிதற்றவும் இல்லை.

6 தடவை தங்கள் தலைவர் டக்ளஸ் மட்டுமே தொடர்ந்து வென்றதாக எழுதியது அவர் பின் தொடரும் அவரது ஆதரவாளர்களின் ஆர்வக்கோளாறு. தம் தலைவனை துதி பாடும் விசுவாசிகளுக்கு வரலாறு தெரியாமை. ஆனால் சுரேஸ் கள்ள ஆமை. மந்திரி பதவிக்காக ராஜ தந்திரி முன் கண் கலங்க வில்லையா. எம் பி ஆன பின்பும் மாகாண சபை அமர்வில் அமர்ந்து அந்த மாத சம்பளமும் எடுத்து பின் செயலாளர் விளக்கி வெளியேற்ற வில்லையா. என்னிடம் சாட்சிகள் உண்டு.

தம்பிக்கு மந்திரி பதவி கேட்டு கிடைக்காத கோபத்தில் மந்திரி பதவி ஏற்ற ஐந்கரநேசனை கட்சியில் இருந்து துரத்த வில்லையா. ஆரம்காலத்தில் இயக்கத்தில் ஈடுபாட்டுடன் செயல்ப்பட்ட, அதை அரசியல் கட்சியாக பதிவு செய்த, மாகாண அரசு அமைப்பது வரை அதை முன் நகர்த்திய எத்தனை பேர் இன்று உங்கள் அருகில் என கூற முடியுமா. அவர்கள் திருமலையில் மாகாண அரசை நடத்தி மக்களை கவர முயல நீங்கள் யாழ் நகரில் நடத்திய அராஜக தர்பாரை மறுப்பீர்களா.

இன்றைய கால கட்டத்தில் உங்களது சேவை மக்களுக்கு தேவை என பலர் கூறுவதாக கூறினீர்கள். அந்த பலர் கூட உங்களுடன் சிறு வயதில் செங்குந்தாவில் கிளித்தட்டு விளையாடியவர்கள் தானே. உங்களுக்கு கிரிக்கட் பிடிக்காது. காரணம் அம்பயர் அவுட் என்றால் மைதானத்தை விட்டு வெளியேற வேண்டும். மக்கள் உங்களை அவுட் ஆக்கி விட்டனர் பாராளுமன்றம் போகவேண்டாம் என்று. டக்ளஸ் சேவை தேவை என்று விரும்பித்தான் மக்கள் அவரை முன் கதவால் அனுப்பி உள்ளனர்.

நீங்களோ பின் கதவால் போக முயல்கிறீர்கள். அன்று சுமந்திரனை பின் கதவால் வந்தவர் என நக்கலடித்து விட்டு இன்று நாக்கை தொங்கப் போட்டபடி அந்த வாசலை எட்டிப் பார்க்கிறீர்கள். இன்று வெட்டி நியாயம் பேசும் நீங்கள் 2010ல் பேராசிரியர் சிற்றம்பலத்துக்கு கொடுக்கப்படாத போது ஏன் குரல் கொடுக்கவில்லை. சித்தார்த்தன் சங்கரியை ஏன் அரவணைக்கவில்லை. தமிழ் மக்கள் நலனில் உங்களுக்கு மட்டும் தான் அக்கறை இருப்பதாக நீங்கள் கூறினாலும் உங்களுக்கு உங்கள் நலனில் மட்டுமே அக்கறை என்பதை உங்கள் தோழர்கள் கூறினர்.

உங்களிடம் ஒரு கேள்வி. சர்வதேச விசாரணை கூட வேண்டாம், தற்போது பதில் கூற புலிகள் இல்லாததால் உள்ளூர் விசாரணையை 1987ல் இருந்து ஆரம்பிக்க கோரிக்கை வைப்பீர்களா. யாழில் நீங்கள் செய்த செய்வித்த சம்பவங்கள் உட்பட மட்டக்களப்புக்கு ராசிக் என்பவர் தலைமையில் தோழர்களை ராணுவத்துடன் செயல்ப்பட நீங்கள் அனுப்பிவைத்த செயலை மறுப்பீர்களா, நியாயப் படுத்துவீர்களா. கோடிக்கணக்கான பணத்தை உங்கள் தர்மராஜ கணக்குப் பிள்ளையுடன் சேர்ந்து காணிகளாய் வீடுகளாய் மாற்றியதை தோழர்கள் அறிவார்களா.

பதவி தந்த தோழர்களை கழட்டி விட்ட நீங்களா மக்களுக்கு சேவை செய்ய போகிறீர்கள். சேவையின் பலனை நம் கண் முன் பெற்றது டக்ளஸ் மட்டுமே. எவருமே டக்ளஸ் தோற்க வேண்டும் என விரும்பவில்லை. அவர் திருந்த வேண்டும் என்றே விமர்சித்தார்கள். அவரின் வெற்றிக்கான அவரது கடும் உழைப்பு பலன் தந்தது. நீங்களும் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் உங்கள் கட்சியை தனித்து போட்டியிட வைத்து ஒரு சபையை ஆவது கைப் பற்றுவீர்களா. ஆக்கிய சோற்றுக்கு ஆட்டையை போடும் உங்களால் அது முடியவே முடியாது.

(மாதவன் சஞ்சயன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com