Contact us at: sooddram@gmail.com

 

யாழில் ஏழு குதிரைகள்

அதை கைப்பற்ற களமிறங்கும் பல அணிகள் !

பிரபாகரன் முள்ளிவாய்க்கால் வரை அழைத்து சென்று இறுதியில் அதில் பலருக்கு கதிமோட்சம் கொடுத்ததன் பலாபலன் இந்த தேர்தலில் குடிசன மதிப்பீட்டின்படி சூரியனின் 7 குதிரைகள் (கதிர்கள்) போல யாழ் தேர்தல் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு 7 உறுப்பினர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும் நிலை. அந்த 7 குதிரைகளில் பாய்ந்து ஏறி பாராளுமன்ற கதிரைகளில் அமர போட்டி போடுபவர்கள் அதற்கு தம்மை தயார்படுத்த ஒன்றாய், பலவாய் அணி திரளுகின்றனர். 1977ல் இருந்த 11 ஆசனங்கள் யுத்த உயிரிழப்பு, இடப்பெயர்வு, புலம்பெயர்வு என்ற காரணிகளால் படிப்படியாக குறைந்து இன்று 7 ஆசனங்கள் ஆகிவிட்டது.

கல்வியை மூலதனமாக கொண்ட சமூகத்தின் இளையவர் கைகளில் கருவிகள் திணிக்கப்பட்டதால் ஏற்பட்ட நிலை இது. தரப்படுத்தல் என்ற எறிகணை யாழ் மாணவர்களின் மண்டையில் விழுந்த போது அதன் தாக்கம் மாணவர் பேரவையாகி, இளைஞர் பேரவையாகி, ஈழவிடுதலை இயக்கமாகி பின் பல்கிபெருகி பல இயக்கங்களாகி இறுதியில் தேவையற்ற, தவிர்த்திருக்க கூடிய லச்சக்கணக்கான உயிரிழப்புகளின் பின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டன.

அன்று அதிகாலையில் துலாமிதித்து தம் தோட்டங்களுக்கு நீர் இறைத்த தந்தைகளின் எதிர்பார்க்கை தன் மகன் பல்கலைகழகம் சென்று டாக்டராக, எஞ்சினியராக, பட்டதாரியாக வரவேண்டும் என்பதே. தாம் கருப்பட்டி தேநீர் அருந்திவிட்டு கண்முழித்து படிக்கும் மகனுக்கு பால் கொடுத்து பின் தாம் தூங்க சென்ற தாய்மாரின் கனவும் அதுதான். உத்தியோகம் புருசலட்சணம் அதுவும் துறைசார்ந்தவர்கள், அரச உத்தியோகத்தர்கள் மெச்சப்பட்ட காலம். அதற்கு பங்கம் வந்தபோது தான் மாணவர்கள் மனம் மாறினார்கள். பின் நடந்தவை அனைவரும் அறிந்த நிதர்சனம்.

எங்கு போட்டாலும் முளைக்கும் பனம்கொட்டைகள் போன்றவர் என கூறுவதில் பெருமைப்படும் யாழ் சமூகம் அது வெறும் தற்பெருமை அல்ல என்பதை இத்தனை இன்னல்களுக்குப் பின்பும் அவர்கள் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் தம் அறிவுத்திறனை வெளிக்காட்டி அதை நாசா வின்வெளி ஆராச்சிநிலையம் வரை நிரூபித்திருக்கிறார்கள். அந்த கல்விக்கு முக்கியதத்துவம் கொடுக்கும் சமூகத்தின் பாராளுமன்ற பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேட்பு மனு தாக்கல் செய்யும் இறுதித் தினம் எதிர்வரும் ஜூலை 13.

32 வருடங்களின் முன்பு இதே மாதத்தில் நிகழ்ந்த நிகழ்வுதான் இத்தனை அழிவுகளின் ஆரம்பபுள்ளியாக அமைந்ததும் நினைவில் கொள்ளவேண்டியதே. அன்றைய தலைமைகள் பலவழிகளில் பல போராட்டங்களால் முயன்றும் பெறமுடியாமல் தவறவிட்டதை பெற்றுத்தர இளையோர் அணிதிரண்டதும் இதே மாதத்தில் தான். அன்றிருந்த சூழல் அடியோடு மாறிவிட்டது. அன்று எம்மவர் பிரச்சனை இந்தியாவின் கவனத்துக்கு மட்டுமே வந்தது. இன்று அவ்வாறில்லை சர்வதேசத்தின் பேசுபொருளாக இந்து சமுத்திரத்தின் முத்து மிளிர்கின்றது ( Pearl of the Indian Ocean ).

அதற்கு காரணம் இதயசுத்தியுடன் போராடிய இளைஞர்கள் தான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இன்று அவர்களில் ஒரு பகுதியினருக்கு பாராளுமன்றம் செல்லும் அனுமதி மறுக்கப் படுவதாகவும் செய்திகள் வருகின்றன. முன்னாள் போராளிகளின் கோரிக்கையை ஏற்காது மறுப்பவர்களும் முன்னாள் போராளிகள் தான். கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்பது இதுதானோ? அல்லது ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பது என்பது இதுதானோ?

அன்று அவர்களின் ஆசீர்வாதத்துடன் மீட்சி பெற்ற சுரேஸ் இன்று அவர்கள் தோற்றுவிட்டால் தாங்கமுடியாது என கூறுவது ஏற்புடையதல்ல. போராளியின் மனைவி அனந்திக்கு விழுந்த 87 ஆயிரம் வாக்கில் கண்வைத்து நெல்லுக்கிறைக்கும் நீர் புல்லுக்கும் பொசியும் என கணக்கிட்டு தனக்கு கிடைத்த 2 ஆசனத்தில் ஒன்றை அனந்திக்கு கொடுக்க முன்வந்தவரின் இந்த கூற்று சுயநலம் கொண்டது. நல்லவேளை கிழக்கின் தளபதி கரிகாலன் மற்றும் சிவராம் இன்று இல்லை. கொக்கட்டிசோலை வரை அவரிடம் ஆசீர்வாதம் பெற சிவராமுடன் தான் சுரேஸ் சென்றார்.

சுரேஸ் கட்சி ஆசனத்தில் பாராளுமன்றம் புகுந்த சிறிதரன் கூட வந்தவர்கள் முன்னாள் புலிபோராளிகள் அல்ல என சாட்சியம் சொல்கிறார். இவர்கள் நிஜ புலிகள் அல்ல வித்தியாதரனின் (வித்தி தான் பாராளுமன்றம் செல்லும்) விருப்பு தெரிவு என்கிறார்.
5 தேர்தல் மாவட்டங்களில் ( யாழ், வன்னி, திருமலை. மட்டக்களப்பு, அம்பாறை) தலா 1 வருக்கு அங்கத்துவம் கேட்டதன் சூட்சுமம், வன்னியில் அழிவுகள் அரங்கேறியதாலும், கிழக்கில் வன்னித் தலைமைமேல் கருணா, பிள்ளையானால் வெறுப்பு விதைக்கப்பட்டதாலும், யாழில் மட்டுமே புலிப்பரணியை ஒலிக்கலாம் அதன் மூலம் பாராளுமன்றம் செல்லலாம் என்ற வித்தியின் உள்ளக்கிடக்கையை சிறிதரன் போட்டு உடைக்கிறார்.

அதே வேளை தனது கட்சியில் போட்டியிட வருமாறு அவர்களுக்கு ஆனந்தசங்கரி அழைப்பு விடுத்துள்ளார். எவர் போட்டியிட்டாலும் அந்த 7 ஐ த்தான் கைப்பற்றமுடியும். இதில் யாருக்கு எத்தனை என்பதை எதிர்வு கூற முடியாத அளவிற்கு பலமுனைப்போட்டி. குறைந்தது 7அணிகளாவது களம்காணும் நிலை. ஒவ்வொரு அணியும் 7 + 3 என 10 பேரை களமிறக்கினால் 70 வேட்பாளர்களும் 7 குதிரைகளின் மேல் ஏறத்தான் முயல்வார்கள் . சிலர் மட்டும் தம் கட்சி தலைவர்களை வெல்லவைக்க முயல்வார்கள். மற்றப்படி உள்குத்து வேலைகளும் நடந்தேறும்.

இங்கு வாக்களர்களின் தெரிவு எப்படி அமையுமென்பது ஓரளவு ஊகிக்க கூடியதே. பலரை பலகாலம் ஏமாற்றலாம் சிலரை சிலகாலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எல்லாக்காலமும் ஏமாற்றமுடியாது என்பது இம்முறை தேர்தலில் நிரூபணமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணிகள் களமிறக்கும் வேட்பாளர்கள் பற்றிய விபரங்கள் மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்கும்.

அந்தளவுக்கு நாம் என்ன செய்தோம் என்பதை கூறுவதை விட மற்றவர்கள் எதை செய்யவில்லை என்ற விளக்கங்கள் போதியளவு மக்களுக்கு ஒவ்வொரு அணியாலும் விளக்கி கூறப்படும். கற்ற சமூகம், கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமூகம், பட்டறிவுள்ள சமூகம் சரியாக சிந்திக்கும். சிந்திக்கவேண்டு. அதன் படி செயல்ப்படும். செயல்ப்படவேண்டும்.
(மாதவன் சஞ்சயன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com