Contact us at: sooddram@gmail.com

 

வடக்கில் சட்டத்தின் ஆட்சிஆரம்பம்

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிக்கு வாக்களித்த மக்கள், அதன் பலனை தற்போது அனுபவிக்க தொடங்கும் சூழலை, நீதிமன்றங்கள் தமது நடவடிக்கைகள் மூலம் ஏற்படுத்த தொடங்கிவிட்டன. இதுவரை நடந்த எத்தனையோ தேர்தல்களில் வாக்களித்ததன் மூலம் அவர்கள் பெற்றது, பெறாமல் போனது பற்றி எழுதி அவர்களின் வயிற்றெரிச்சலை கிழப்ப நான் விரும்பவில்லை. இம்முறை அவர்கள் அளித்த வாக்குகளால் அமைந்த நல்லாட்சியில், முன்பு கட்டப்பட்டிருந்த நீதியின் கரங்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டது. முன்பு இருந்த அரசியல் தலையீடு இப்போது இல்லை. மறைமுகமான அடக்குமுறைக்குள் மக்கள் மட்டுமல்ல, நிர்வாக கட்டமைப்புகளும் கடந்த காலத்தில் வடக்கில் அகப்பட்டிருந்தன.
பல சமூக சீர்கேடுகளை தட்டிக் கேட்கவோ தண்டனை வழங்கவோ முடியாத அளவுக்கு, ஏதோ ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரல் பின்புலத்தில் குற்றவாளிகளை காக்கும் கரங்களாக செயல்ப்பட்டது.

நீண்ட நாட்களாக காத்திருந்த மக்களுக்கு அவர்களின் வாக்குகள் ஆயுதமாக, அதை பாவித்து தீயதை விலக்கி நல்லதை பதவியில் ஏற்றினார்கள். அதுவரை சமூகவிரோத செயல் நடந்தால் செய்தவரை கைது செய்யும் முன் அவரது அரசியல் பின்புலம் பற்றி ஆராய்ந்தே நடவடிக்கை எடுக்கும் நிலை இருந்தது. அந்த தைரியம் தான் தீவகம் முதல், சாவகச்சேரி, கிளிநொச்சி, கனகராயன்குளம் வரை பாதக செயல்கள் நடந்தபோது கைது செய்யப்பட்டவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முற்பட்ட நீதிபதிகள் கூட இடமாற்றம் செய்யப்பட்டார்கள்.
மக்கள் பயத்தில் அரசல் புரசலாக தமக்குள் மட்டும் தாம் அறிந்ததை பேசிக்கொண்டார்கள். நல்லாட்சி வந்ததால்தான் புங்குடுதீவு வித்தியாவிற்கு நடந்த கொடுமைக்காக மக்களால் வீதிக்குவந்து போரடமுடிந்தது. அல்லது அதுவும் பத்தோடு பதினொன்றாக விசாரணை என்ற பெயரில் கிடப்பில் போடப்பட்டிருக்கும். அந்த சம்பவத்தில் கூட ஒருவரை தப்பவைக்க பதவி அல்லது பணம் முயன்று முடியாமல் போனதும் மக்களுக்கு கிடைத்த வெற்றி தான்.

தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி என்பதுபோல நாட்டின் தலைமையில் ஏற்பட்ட நல்லமாற்றம், தேவைப்பட்ட மாவட்டம் வடக்கு ஆகும். நீண்ட நெடிய யுத்தம் பல சீரழிவுகளுக்கு வித்திட்டு நிர்வாக கட்டமைப்பையே ஆட்டம்காண வைத்துவிட்டது.
அதை சட்டம் ஒழுங்கு மூலம் சீர்படுத்தும் செயலை நீதிமன்றங்கள் கையில் எடுத்திருப்பது நாளாந்த செய்திகளாக வந்த வண்ணம் உள்ளன. வக்கீல் வைத்து வாதாடி பிணையில் வந்து விடலாம் தீர்ப்பு வரும் வரை சுதந்திரமாக நடமாடி திரியலாம் என்ற நிலைக்கு ஆப்பு வைக்கின்றன இப்போது வழங்கப்படும் நீதிமன்ற தீர்ப்புகள்.

அண்மையில் முன்னாள் ஆசிரியர் தன்னிடம் ரியூசன் படித்த மாணவிகளுக்கு பாலியல் இம்சை கொடுத்ததாக கைது செய்யப்பட அவருக்காக வாதாடிய வக்கீல் அவர் நல்லவர் அப்படி செய்திருக்க மாட்டார் என கூறி பிணையில் விடும்படி கேட்க நீதவான் மறுத்துவிட்டார். அதேபோல ஆயுதங்களுடன் திரிந்த வாலிபர்களுக்கும் பிணை மறுக்கப்பட்டது.
இதற்கும் மேலாக தாமே விரும்பி ஏதோ காரணத்துக்காக ஹோட்டலில் ரூம் போட்டு தலை மறைவாக இருந்து தம்மை யாரோ கடத்திவிட்டதாக புரளி கிளப்பிய 2 இளம் பெண்களை விளக்கமறியலுக்கு அனுப்பினார் நீதிபதி. யாழில் பரவலாக காணப்படும் இன்ரநெட் நிலையங்களில் நடைபெறும் சீர்கேடுகளை சீர்செய்ய அவ்வாறு செயல்படும் நிலையங்களுக்கு சீல்வைக்கும் உத்தரவும் நீதவானால் பிறப்பிக்கப்பட்டது.

கல்லூரிகளுக்கு அருகில் ஐஸ்கிரீம் உட்பட தின்பண்டங்கள் விற்பவர்களை கண்காணிப்பதுடன் பாடசாலை தொடங்கும், முடிவடையும் நேரங்களில் கூடி நின்று மாணவிகளை சுமாட் போணில் படம்பிடிக்கும் மன்மத ராசாக்களும் தற்போது கம்பி எண்ணுகிறார்கள். ஆலயங்களில் திருவிழா என்ற பேரில் களியாட்ட நிகழ்ச்சி நடத்துவது, பரீட்சைக்கு படிக்கும் மாணவர்களை குழப்பும் ஒலிபெருக்கி பாவனைத்தடை என அதிரடி நடவடிக்கைள் பெற்றோர் மனதில் நிம்மதியை தந்துள்ளது.சமுதாய சீரழிவோடு வியாபார சீரழிவையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்வது அண்மைய தீர்ப்பில் தெரிகிறது. இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் வந்து யாழில் பட்டுசேலை வியாபாரத்தில் ஈடுபட்ட இந்திய வியாபாரிகளை நாடுகடத்தும் நீதிமன்ற உத்தரவு பல லட்சம் முதலீடு செய்து வரிசெலுத்தி இறக்குமதி செய்து வியாபாரம் செய்யும் உள்ளூர் புடவை வியாபாரிகளின் வயிற்றில் பால்வார்த்துள்ளது.

போதைவஸ்த்து கடத்தல்காரர், விற்பவர்கள், கஞ்சா பாவிப்பவர் பொது இடங்களில் மதுபவானை எல்லாவற்றுக்கும் அதிரடி நடவடிக்கை எடுக்கும் கடும் உத்தரவை யாழ் மேநீதிமன்ற நீதிபதி பொலிசாருக்கு வழங்கியுள்ளார். கடந்த காலத்தில் அரசியல் அதிகார தலையீட்டல் கடமையை செய்ய முடியாதிருந்த பொலிஸார் இப்போது தினம் தினம் கஞ்சா கசிப்பு போதைப்பொருள் வியாபாரிகள், சந்திச் சண்டியர்கள், ஆயுத கோஸ்டிகள் என அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த பிணை மறுப்புடன் சிறைசெல்கின்றனர் சமூகவிரோதிகள்.

யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அரசியல் கட்சிகளிடம் வேட்புமனு தாக்கல் தினத்தன்று பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திதுள்ளார்  இது முன்பு நடந்த தேர்தல் கால அத்துமீறல்கள் இம்முறை நடக்காது என்ற நம்பிக்கையை வாக்காளருக்கு நிச்சயம் ஏற்படுத்தும். அதனால் வாக்களிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும். ஜனநாயகத்தின் அடிப்படை கடமை தேர்தல்களில் வாக்களிப்பது. அதற்கு இனி இடையூறு இல்லை.
கடந்த காலத்தில் நடந்த சமூகவிரோத செயல்கள் அராஜகங்கள் விதிமீறல்கள் என்பவற்றிக்கு தனிப்பட்ட ரீதியில் தனிநபர்கள் மீதோ, கட்சிகள் மீதோ, யாரும் யார் மீதும் குற்றம் சுமத்தி தப்பிக்க முடியாது. நாம் எல்லோரும் எதோ வகையில் தவறிளைத்தவர்களே. சமூகவிரோத செயலில் ஈடுபடுபவரும் நம்மவரே.

இதுவரை அன்னையர் தினம், மகளிர் தினம், காதலர் தினம் கொண்டாடிய எம்நாட்டில் நல்லாட்சியின் நாயகனான ஜனாதிபதி மைத்திரி ஜூலை 9 முதல் ஆகஸ்ட் 8 வரை போதைப்பொருள் ஒழிப்பு மாதமாக பிரகடனப் படுத்தி உள்ளார். அந்த காலத்தை விரிவுபடுத்தி காமபோதை, அதிகார போதை, புகழ் போதை கொண்டவருக்கும் பாடம் படிப்பிக்கும் தினமான ஆகஸ்ட் 17 பொது தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதன் மூலம் நல்ல தீர்ப்பு எழுத வேண்டும். எமது சமூகத்தின் விடிவுக்கு ஜனவரி 8 ஆரம்ப புள்ளியாகட்டும். தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற தமிழர் நம்பிக்கை பலிதமாகட்டும். எதிர்வரும் தேர்தல் முடிவு அதற்கு வழிசமைக்கட்டும். இன்றைய சூழ்நிலை தொடருமானால் நாமனைவரும் நிமிர்ந்து நிற்க்கலாம். பாதி தின்கின்ற போதினில் தட்டிப்பறித்தால் மீண்டும் பாழ்பட்டுப்போவோம்.

(மாதவன் சஞ்சயன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com