Contact us at: sooddram@gmail.com

 

இன்று போராட முடியாதவரின் போக்கிடம் பாராளுமன்றமா ?

(மாதவன் சஞ்சயன்)

ஏனோ தெரியவில்லை மக்களுக்கு மட்டுமல்ல முன்னாள் போராளிகளுக்கும் புனர்வாழ்வு பெற்றுக் கொடுக்க ஒரே வழி தாம் பாராளுமன்றம் செல்வதுதான் எனும் எண்ணக்கரு, ஆயுதப்போராட்டம்தான் முடிந்த முடிவு என்று புறப்பட்ட அன்றைய இளைஞர்களின் இன்றைய மனதில் பதிந்துவிட்டது. தேர்தல் வந்துவிட்டால் போதும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எம் மக்களுக்காக, எம் முன்னாள் போராளிகளுக்காக, தாம் தான் பாராளுமன்றம் போகவேண்டும் என கூறிக்கொண்டு வாக்கு கேட்க பலர் அணிகளாக களம் இறங்குவார்கள். 1977 வரை தேர்தல் செலவு, போட்டியிடுபவரின் சொந்த பணமாகும். அதனால் தான் அப்போது அமிர்தலிங்கம் ஒவ்வொரு தேர்தலின் போதும் பண்ணாகத்தில் தன் காணிளை ஈடுவைப்பது அல்லது விற்பது போன்ற நிகழ்வுகள் நடந்தேறின.

பாராளுமன்ற அமர்வுகளுக்கு செல்ல இலவச ரயில் பாஸ், அவசர கூட்டங்களுக்கு மட்டும் பலாலியில் இருந்து விமான பயணம். அவர்களில் அநேகமானோர் வக்கீல் தொழிலும் செய்ததால் பாராளுமன்ற சம்பளம் அவர்களுக்கு வெறும் ஜுஜிப்பி. ஆனால் 1977ல் பிரதமராக வந்த ஜே ஆர் பாராளுமன்றங்களின் தாய் (Mother of Parliament) எனும் அபிவுருத்தியடைந்த பணக்கார நாடான பெரிய பிரித்தானியாவின் பாராளுமன்ற சலுகைகளை, அதுவரை பாணுக்கே கியூ வில் நின்ற மக்களுக்கு எதுவும் செய்யாமல் அவர்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளுக்கு கொடுத்தார்.

முதலில் அவர் கொடுத்தது மிற்சுபிசி பச்சைகலர் ஜீப்கள். அந்த ஜீப்பில் வந்த எம்பிகளை, கேட்டது தமிழ் ஈழம் கொண்டுவந்தது ஜப்பான் ஜீப் என நக்கலடித்ததும் அன்று இளைஞர்களாக இருந்த இவர்கள்தான். வசதிகள் கூடக் கூட சேவை மனப்பான்மை குறைந்து வியாபார எண்ணம் மேலோங்கியது. ஜே ஆர் கடைப்பிடித்த திறந்த பொருளாதார கொள்கையால் இறக்குமதி கதவு திறக்கப்பட ஆதரவாளருக்கு சலுகைள் பெற்ருக்கொடுக்கும் முன்முயற்சியை தொடங்கினர். அதன் மூலம் கட்சிக்கு நிதி பின் தேர்தல் காலசெலவினம் என பயனடைந்த ஆதரவாளர்கள் தம் பங்களிப்பை செய்தனர்.

ஆயுத போராட்ட காலத்தில் போராளிகளுக்கு உணவு, உடை, தங்குமிட வசதி என்பது பெரும் பிரச்சனையாக இருந்தபோதும் அவர்கள் சோர்ந்து போகவில்லை. கொண்ட லட்சியத்துக்காக அனைத்தையும் தங்கிக்கொண்டார்கள். அது திசை மாறி போனபோது அவர்கள் எடுப்பார் கை பிள்ளை போலானார்கள். பின் ஒப்பந்தத்தை ஏற்க புலிகளுக்கு மாதம் 50 லட்சம் இந்தியா கொடுத்தது. பின்பு நடந்த மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கும் தேவைப்பட்டதை இந்தியாவே கொடுத்தது. எந்த கட்சியின் வேட்பாளரும் தம் சொந்தப் பணத்தில் போட்டியிடவில்லை. ஆயுத போராட்டத்தை கைவிட்ட பின்பு புற்றீசல் போல புறப்பட்டவர்களால் பதியப்பட்ட கட்சிகள் எல்லாமே சம்மந்தப்பட்டவரின் நிதிப்பங்களிபில் தான் பாராளுமன்றம் சென்றன. இதில் எதிரியிடம் பணம், பாதுகாப்பு பெற்றுக்கொண்டு பாராளுமன்றம் சென்றவர்களும் உள்ளடங்குவர். பஜரோக்கள், இன்ர கூளர் வாகனங்கள், பி எம் டபிள் யு, பாராடாக்கள் என தீர்வையற்ற அதிசொகுசு வாகனங்களில், அன்று சாதாரண வசதிகள் கொண்ட ஜீப்பை பெற்றவர்களை நக்கலடித்த அன்றைய இளைஞர்கள் இன்று பவனி வருகின்றனர்.

மக்களின் மறுக்கப்பட்ட உரிமைக்காக ஆயுதமேந்திய இவர்கள் இன்று தாம் நடத்திய யுத்தத்தால் ஏற்பட்ட அழிவுகளுக்கு புனர்வாழ்வு பெறச்சென்ற இடத்தில் தம்மை புனரமைத்துக்கொண்டனர். இன்று அதே பாதையில் தம்மையும் கூட்டிச்செல்லும்படி ஆயுதங்களை மௌனிக்க செய்தவர்களும் விண்ணப்பித்து மறுக்கப்பட்டதால் தனித்து போவதாக அறிக்கை வருகிறது.

தன் எழுத்து எனும் ஆயுதத்தால், தலைவர் விடமாட்டார் புலிகள் தோற்க்கமாட்டர்கள் என பல இளைஞர்களை போராட தூண்டி பலிகொடுத்த மரணவியாபாரி வித்தியாதரனை பாராளுமன்றம் அனுப்பி புனர்வாழ்வு பெறப்போகிறார்களாம். அதனை ஆயிரம் பூக்கள் மலரட்டும் என வரவேற்பவருக்கு தெரியும், அவர்களின் வருகை கூட்டமைப்புக்கு தான் சேதாரம் என்பதும், அதனால் தன் இருப்பு பலப்படும் என்பதும்.
தனித்து போகாதீர்கள் எனது கட்சிக்கு வாருங்கள் என்பவரும் அதனால் கிடைக்ககூடிய வாக்குகளை கொண்டாவது வென்றுவிடலாம் என்ற உள்நோக்கம் கொண்டவரே. மாகாண சபையில் தன் கடமை முடிந்து விட்டதால் இனி பாராளுமன்றம் போக புறப்பட்ட முன்னாள் போராளியின் மனைவி தன் சுயபாதுகாப்பு கருதி இந்த முன்னாள் போராளிகளை அரவணைக்கவில்லை.

இங்கு எழும் கேள்வி யுத்தத்தால் பாதிப்பாடைந்த நிர்க்கதியான பொதுமக்கள் மற்றும் அனைத்து போராளிகளின் புனர்வாழ்வுக்கும் ஒரு சிலரின் பாராளுமன்ற பிரவேசம் தான் தீர்வுதருமா. அப்படி என்றால் எங்களை வெல்லவையுங்கள் யாழ்ப்பாணத்தை சிங்கப்பூராக்கி காட்டுவேன், சொர்க்கவாசலை திறந்து விடுவேன் என கூறி வென்றவரால் அதை நடத்திக்காட்ட முடியவில்லை.

 வடக்கின் வசந்தத்தில் யாழின் பெருவீதிகளில் ஒன்றான ஓட்டுமடம் சந்தி முதல் ஆனைக் கோட்டை, மானிப்பாய், சங்கானை ஊடக காரைநகர் செல்லும் வீதி கூட இன்னமும் காப்பற் வீதியாக மாறவில்லை. ஆற்றில் போவதை அள்ளிக் குடிக்கத்தான் அது பயன்பட்டது. அதற்குத்தான இவர்களும் ஆசைப்படுகிறார்கள் ?

(மாதவன் சஞ்சயன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com