Contact us at: sooddram@gmail.com

 

வித்தியாதரன், ஸ்ரீ ராங்கா விபரீத வரவு

(மாதவன் சஞ்சயன்)

பெண்பார்க்கும் நிகழ்வில் தங்கையை காட்டிவிட்டு மணமேடையில் அக்கா அமர்வதுபோல, முன்னாள் புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகளை காட்டியும் மலையக பாட்டாளி மக்களை காட்டியும், தாம் பாராளுமன்றம் செல்ல தயாராகிவிட்டார்கள் தம்மை ஊடகவியலாளர்களாக அடையாளப்படுத்தும் வித்தியும், ரங்காவும். தன் பின்னால் முன்னாள் புலிகள் இருப்பதை காட்டி செய்த பேரம் படியாததால், தன் முயற்சியில் மனம் தளராத விக்ரமாதித்தன் போல அவர்களுக்கு தலைமை தாங்கும் சாட்டில் சுயேட்சையாக களம் காணவருகிறார் வித்தி.
புலிகளின் ஆயுத மௌனிப்புக்கு பின் வட மாகாண சபைக்கு தானே முதல்வர் வேட்பாளர் என செய்திகளை பரவவிட்ட வித்தி, இடையில் வந்த பாராளுமன்ற தேர்தலில் குறிவைத்தார். அப்போது கூட்டமைப்பு அவருக்கு ஆசனம் தர முன்வந்தபோது அதற்கு தடையாக வந்தது அவரது மைத்துனர் சப்ரா சரவணபவன். உதயன் உரிமையாளரின் தயவு தேவை என்பதால் மாகாண முதல்வர் பதவி உமக்குத்தான் என கூறி வித்தியை மைத்துனருக்கு விட்டுக்கொடுக்க செய்தார்கள். வித்தி சம்மதித்தாலும் அதுவரை ஆசிரியராக தான் கடமையாற்றிய உதயனை விட்டு விலகினார்.

வட மாகாண சபை தேர்தல் வந்தபோது முதல்வர் வேட்பாளராக விக்னேஸ்வரன் அறிவிக்கப்பட்டதால், அந்த பதவிக்கு காத்திருந்த வித்தி கோபத்தில் அந்த கட்சியின் கொழும்பு கிளையில் இருந்து பதவி விலகினார். இலவு காத்த கிளி நிலையில் என் எழுத்து ஆயுதம் எனும் புத்தகத்தில் புலிகளுக்கு தான் வழங்கிய ஆதரவை எழுத்தில் வடித்தார். புலம்பெயர் நாடுகளில் அதை வெளியிட்டு மேடைப்பிரசங்கம் செய்து தன் எதிர்கால திட்டத்துக்கு அத்திவாரம் இட்டார். அதுதான் எஞ்சிய புலிகளை கொண்டு ஒரு அரசியல் இயக்கம் தொடங்குவது, அதன்மூலம் தன் பாராளுமன்ற பிரவேசத்தை உறுதி செய்வது.

அதற்கான தயாரிப்பு வேலைகளை செய்தவரிடம் நிருபர்கள் தேர்தலில் போட்டியிட போகிறீர்களா எனக்கேட்ட போது, அது உடனடி சாத்தியமில்லை தற்போது புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகளை ஒருங்கிணைப்பது மட்டுமே தனது செயல்பாடு என கூறினார். அப்போது வித்திக்கு தெரியாது மகிந்தர் தனது பதவிக்காலம் முடியும் முன்பே தேர்தலை வைத்து மண்கவ்வி அதனால் வந்த நல்லாட்சி 1வருட காலத்துக்கு முன்பே பொது தேர்தலை நடத்துமேன்று. பொறுமையாக காரியம் சாதிக்க நினைத்தவருக்கு கலக்கம் ஏற்பட, அவசரகதியில் கூட்டமைப்பில் ஆசனம் கேட்டு புனர்வாழ்வு பெற்ற புலிகளின் போர்வையில் பேரம் பேசி மூக்குடைபட்டார்.

உண்மையில் இவர் புலிகளை பிரதிநிதிப்படுத்தவில்லை. தன்னை நிலை நிறுத்த, தான் பாராளுமன்றம் போகவே புலித்தலைவன் ஆகிறார். அவ்வாறில்லை எனில் அதை நிரூபிக்க தேர்தல் பரப்புரையில், அவரது சுயேட்சை குழு சின்னமான சிலந்திக்கு வாக்களித்து விருப்பு வாக்கில் தனது இலக்கத்தை தவிர்த்து, புலி போராளிகளுக்கு வாக்களிக்கும் படி மக்களிடம் வேண்டிக்கேட்பாரா ? அப்போது நிரூபணமாகும் இவர் இதய சுத்தியுடன் வந்துள்ளாரா அல்லது தனது நீண்டகால கனவை நனவாக்க வந்துள்ளாரா என்பது. தனது எழுத்து மூலம் பலரை ஆயுதம் எந்த செய்தவர் அதில் ஒருவரையாவது பாராளுமன்றம் செல்ல செய்வாரா இந்த ஊடகப்புலி. வெறுமனே அவர்களுக்கு அரசியல் ஞானம் போதாது மொழியாற்றல் இல்லை என சாக்குப்போக்கு சொல்ல கூடாது.

ஏற்கனவே பல முன்னாள் போராளிகள் பாராளுமன்றம் சென்று ஆற்றும் கனதியான உரைகளை பார்த்துள்ளோம். மொழி ஒரு பிரச்சனையே கிடையாது பெரும்பாலும் சிங்கள உறுப்பினர் தமது மொழியில் பேசும் போது எமது உறுப்பினர் மட்டும் ஆங்கிலத்தில் பேசவேண்டிய அவசியமில்லை. உடனடி மொழி பெயர்ப்பு வசதி மற்றும் ஹன்சாட் இருக்கிறது. ஆகவே ஒருங்கிணைப்பளராக மட்டும் வித்தி செயல்ப்படுவார இல்லை சுயநலமாக செயல்ப்பட்டு கூட்டமைப்பின் வாக்கை சிதறடிப்பரா?

ரங்கா அவரை விட கில்லாடி. வித்தி புலிகளுடன் சென்று கூட்டமைப்பில் இடம் கேட்டால் ரங்கா பாட்டாளி மக்கள் தன் பின்னால் எனசக்தி ரிவி யில் பூச்சாண்டி காட்டியே தேசியப்பட்டியலில் இடம் பிடித்துவிட்டார். தேர்தல் அறிவிக்கபட்ட தினம் தொடக்கம் சக்தி ரிவி செய்தியில் ரங்கா பற்றிய செய்தி வராத நாளோ, அல்லது வன்னிமாவட்ட குறைபாடுகள் பற்றிய செய்திகளோ, அல்லது மலையகத்தில் வாழ்கின்ற மக்களின் பிரச்சனைகள் பற்றிய செய்திகளோ வராத நாளே இல்லை. இங்குதான் அவரது கில்லாடித்தனம் அவருக்கு வெற்றியை தந்தது.

இந்த நாட்டில் ஏற்கனவே பதியப்பட்டிருந்த சிங்கள கட்சியை ஏதோ பொருள் வாங்குவது போல பல லட்சம் பணம் கொடுத்து வாங்கி அதன் தலைவராக மாறிய ஒரே ஒரு அரசியல்வாதி ரங்கா மட்டுமே. பு ரவசி பெரமுன என்ற கட்சிதான் பிரஜைகள் முன்னணி. அதை வாங்கிய ரங்கா ராஜமகேந்திரனின் (மகராஜாநிறுவன தலைவர் ) செல்லப்பிள்ளை. ரணிலின் தத்துப்பிள்ளையாக யு என் பி கூட்டில் இணைந்து 2010 தேர்தலில் நுவரேலியா மாவட்டத்தில் வென்று பாராளுமன்றம் சென்றார்.

அந்த தேர்தலுக்கு முன்பும் மலையக மக்களின் பிரச்சனைகளை மையப்படுத்தியே அவரது மின்னல் நிகழ்ச்சி உட்பட சக்தி ரிவி செய்திகளும் அமைந்தன. ஊடக வலிமையால் வென்று வந்த ரங்கா மகிந்தரின் உள் வீட்டு பிள்ளையாவார். நாமலுடன் கிளிநொச்சி வவுனியா முல்லைத்தீவு மன்னார் என கூடிக்குலவி திரிந்தார். அதேவேளை தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பல கலாச்சார மண்டபங்களையும் தனது தொகுதியில் கட்டிக்கொடுத்து மாணவர் கல்விக்கும் பெண்கள் சுயதொழிலுக்கும் அதனை பயன்படசெய்தார். அதைச்சொல்லியே ஏனைய மலையக அரசியல் வாதிகளை தன் நிகழ்ச்சி மூலம் தாறுமாறாய் விமர்சனமும் செய்தார்.

இவரின் இந்தப்போக்கால் இம்முறை அவரை தமது கூட்டில் இணைக்க ரணில் விரும்பவில்லை. மின்னலின் தாக்குதல் ரணிலுக்கு எதிராக திரும்பியது. கட்சிகளை உடைப்பதில் ரணிலுக்கு நிகர் ரணிலே என தான் நடத்தும் தனது நிகழ்ச்சி மூலம் ரணிலை விமர்சித்தார். அதேவேளை இனக்கலவரங்களால் மலையகத்தை விட்டு வெளியேறி வன்னியில் குடியேறிய மக்களின் மீட்பராக தன்னை முன்னிலைப்படுத்தி சக்தி ரிவி நியூசில் அங்கு வாழும் மலையகத்தில் இருந்து வந்து குடியேறிய மக்களை ரங்கா சேர்தான் எங்களுக்கு வேணும் என சொல்லவைத்தார். ஊடகத்தை வைத்து அரசியல் நடத்துவதில் ரங்காவுக்கு நிகர் ரங்காதான்.

வன்னியிலும் நுவரேலியாவிலும் அவரது பிரைஜைகள் முன்னணி போட்டியிடும் என, தேர்தல் அறிக்கை வந்தது முதல் தினம் தினம் சக்தி செய்தி வாசித்தது. இப்போது வவுனியாவிலும் நுவரெலியாவிலும் பிரஜைகள் முன்னணி போட்டியிடுகின்றது. ரங்கா போட்டியிடாமலே பாராளுமன்றம் செல்வதை உறுதி செய்து கொண்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசியப்பட்டியலில் உள்ள 9 தாவது பெயர் ஜெயரத்தினம் ஸ்ரீ ரங்கா. மலையகத்தில் உள்ள ஆதரவையும் வன்னியில் வாழும் அவர்களின் உறவுகளுக்கு தான் மலையகத்தில் செய்த சேவைகளையும் காட்டி பிரஜைகள் முன்னணியில் அவர்களை போட்டியிடவைத்து ஆசனம் கிடக்காவிட்டலும் நுவரேலியாவில் யு என் பி க்கு கிடைக்க கூடிய வாக்குகளை குறைத்தும் வன்னியில் கூட்டமைப்பு மற்றும் ரிசாத் பதியுதீனுக்கு கிடக்கும் வாக்குகளை சிதறடித்தும் ஜனாதிபதி தேர்தலில் தோற்ற பின் என்னை தோற்கடித்தது வடக்கு கிழக்கு மலையக தமிழரும் முஸ்லிம்களும் என கூறிய மகிந்தவின் மனப்புண்ணுக்கு மருந்திடவே ரங்காவின் இந்த தில்லாலங்கடித்தனம். அதற்கான பிரதியுபகாரமே தேசியப்பட்டியலில் நவக்கிரக நிலை (9 வது பெயர்)
"ஊடக தர்மம் என்று ஒண்டு உண்டாம். அது தனக்கு தனக்கென்றால் படக்கு படக்கு என்று அடிக்குமாம்".
(மாதவன் சஞ்சயன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com