Contact us at: sooddram@gmail.com

 

பத்மநாபா அணியின் தேர்தல் பணி

(மாதவன் சஞ்சயன்)

அன்று கோவில் திருவிழாவில் பங்கெடுக்கும் 8 கூட்டம் 10 கூட்டம் மேளதாளம் போல இன்று ஆகிவிட்டது யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட தேர்தல் கள நிலமை. கோவில் திருவிழாவில் 8 அல்லது 10 கூட்ட மேளதாளம் ஒரு எழுச்சி. அதனால் மக்களுக்கு ஏற்படுவது மன மகிழ்ச்சி. ஆனால் மக்கள் பிரதி நிதிகளை தெரிவு செய்யும் தேர்தல் ஒரு வேள்வி. வேள்வியில் தேவதைகளும் தோன்றலாம், துஷ்ட முனிகளும் வெளிப்படலாம். தேவதைகள் மக்களுக்கு வரப்பிரசாதமாகும், துஷ்ட முனிகள் அவர்களுக்கு மனச்சிதைவை ஏற்படுத்தி அவர்களை வாட்டி வதைக்கும். இன்று கோவில் திருவிழா போல் மாறிவிட்ட தேர்தலில் பலர் பங்கு போட நினைக்கும் அந்த 7 ஆசனங்களை துஷ்ட முனிகள் பெற்று விடக்கூடாது, அதற்கு தம் பங்களிப்பு பயன்பட கூடாது என இப்போதாவது முடிவெடுத்த பத்மநாபா ஈபி.ஆர்.எல்.எப் அந்த முடியை தமது கடந்த கால அனுபவத்தின் மூலம் தான் எடுத்திருப்பர் என்பது எனது அனுமானம்.

2010 பொது தேர்தலில் தனித்து போட்டியிட்ட அவர்களால் வெல்ல முடியவில்லை. அண்மைய மாகாண சபை தேர்தலில் அவர்கள் 1 வேட்பாளரை மட்டும் களமிறக்கினாலும் அவர்கள் சார்ந்த கூட்டில் அவர்களால் முன்னிலை வகிக்க முடியவில்லை. அதற்கு அவர்கள் கூறும் புறக்காரணிகளும் காரணம் என்பது மறுப்பதற்க்கில்லை. தேர்தல் அரசியலுக்கு முகம் கொடுக்கும் பலம் அவர்களிடம் இன்று இல்லை. அவர்களின் ஈழமாணவர் பொதுமன்றம், ஈபி.ஆர்.எல்.எப் கட்சிக்கான முன்னைய உழைப்புகள் இன்று அவர்கள் தலைமை வகிக்கும் கட்சிக்கு வாக்குகளாக மாற சூழ்நிலை மாற்றம் தேவை. நீண்ட நெடிய அவர்களின் பயணத்தில் தனிநபர் முரண்பாடுகள் பத்மநாபா இருக்கும் போதும் ஏற்பட்டாதால் ஒரு பகுதியினர் பிரிந்து சென்றாலும், கொள்கை முரண்பாட்டால் பிரிவு ஏற்பட்டது பத்மனாபாவின் படுகொலையின் பின்புதான். செயலூக்கம் அற்ற சுயநலமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தன்னைப்பற்றி மட்டும் கவலைப்பட்டதால் கட்சியை கட்டிக்காக்க தவறிவிட்டார்.

சிலர் ஒதுக்கப்பட்டார்கள் பலர் ஒதுங்கினார்கள். அதனால் தான் 1989ல் 7 ஆசனங்கள் பெற்ற கட்சி 1994ல் 1 ஆசனம் கூட பெறமுடியவில்லை. 2001ல் கூட சுரேஸ் பிரேமசந்திரனால் தேர்தலில் வெல்லமுடியவில்லை. பதவி ஆசை அவரை வவுனியாவில் வென்ற சிவசக்தி ஆனந்தனிடம் பதவி பிச்சை கேட்கவைத்து பிச்சை மறுப்பால் புலிவாலை பிடித்து 2004லில் தான் பாராளுமன்ற மீள் பிரவேசம் கிடைத்தது. அவரின் இந்த தகிடு தத்த செயலால் கொள்கை முரண்பாடு கொண்டவர்கள் தாம் கொண்ட கொள்கைப்படி தம் தலைவர் பெயரில் புதிய கட்சி தொடங்கி தம் அரசியல் பயணத்தை தொடர்ந்த போதும் தேர்தல் களத்தில் வாக்குகள் பெறக் கூடியதாக அவர்களின் முன்னைய உழைப்பு பயன்படாமல் போனதற்கு அது சுரேஸ் அணி நாபா அணி டக்ளஸ் கட்சி என்ற மூன்றாலும் பங்கிடப்படுவதும் அவர்கள் கூறும் புறக்காரணிகளில் ஒன்றுதான்.

 முதலில் ஈபி.ஆர்.எல்.எப் இயக்கத்தில் இருந்து பிரிந்து உருவான ஈ.பி.டி.பி தன் செயல்பாட்டால் 1994ல் யாழ் மாவட்ட உறுப்பினர்களை தனதாக்கி கொண்டது. விமர்சனங்களுக்கப்பால் அவர்கள் தமது அரசியல் பாதை இது தான் என வகுத்துக்கொண்டனர். அதனால் தொடர்ந்த தேர்தல்களில் ஈ.பி.டி.பி 2010 பொது தேர்தல் மற்றும் 2013 வட மாகாண சபை தேர்தலை தவிர ஏனையவற்றில் தனித்து போடியிட்டு தம்மை தக்கவைத்துள்ளது. எதிர்வரும் தேர்தலிலும் தனித்து போட்டியிடுகிறது.

மாணவர் பேரவை, இளைஞர் பேரவைக்கு பின் பேரெழுச்சியுடன் இயங்கியது ஈழமாணவர் பொது மன்றம். அதன் தோற்றத்தில் வளர்ச்சியில் எழுச்சிமிகு போராட்டங்களில் பங்குபற்றியவர்களை கொண்டவையாக தான் இந்த 3 கட்சிகளும் உள்ளன. அன்று ஓரணியாக இருந்த போது அமிர்தலிங்கம் கோலோச்சிய தமிழர் விடுதலை கூட்டணிக்கே சவாலாக இருந்த இவர்கள் இன்று தனி நபர் செயல்ப்பாடு, சுயநலம், மற்றும் கொள்கை முரண்பாடு காரணமாக முரண்பட்டு நிற்கின்றனர்.

சுரேஸ் தன் சுயநலத்தால் இருக்குமிடம் விட்டு அகலமாட்டார். அது அவரின் இருப்பு நிலைக்கு ஆபத்தானது. எதிர்வரும் தேர்தலில் அவரின் நிலை இதுவரை கவலைக்கிடம். டக்ளசை பொறுத்தவரை அவர் தனது விடாமுயற்சியால் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் நிலை இதுவரை உறுதியாக உள்ளது.அவர் தனக்கென்று ஒரு வாக்கு வங்கியை பரவலாக வைத்திருக்கிறார். மேலும் 5 தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடுவதும் ஒருவித உற்சாகத்தை அவரது உறுப்பினர்களுக்கு கொடுக்கும். அது அவரது அரசியல் இருப்பை தொடரச் செய்ய உதவலாம். ஆனால் சுரேசின் நிலை அப்படியல்ல. கரணம் தப்பினால் மரணம் தான்.

அவ்வாறன சூழ்நிலை ஏற்பட்டால் பத்மநாபா அணி முன்னிலை பெறலாம். அதற்கு இம்முறை அவர்கள் தேர்தலில் பங்குபெறாமை உதவலாம். சுரேசை தவிர அந்த அணியில் இருப்பவர்கள் எவரும் பிரபாகரனுடன் உள்ளார்ந்தமாக உறவாடியவர்கள் அல்ல. தலைமையின் பதவி ஆசைக்கு துணை போனவர்கள். தன்னை முன்னிலைப்படுத்த முந்திரிக்கொட்டை போல முந்திக்கொண்டு செயல்படும் சுரேஸ் பற்றி பல உண்மை சம்பவங்கள் உண்டு. அதனால் இயக்கத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகளும் உண்டு. காரைநகர் கடல் படை முகாம் 1வது தாக்குதல், கிளிநொச்சி பொலிஸ்நிலைய தாக்குதல் ( சுரேஸ் நேரடியாக பங்குபெறுவதில்லை) முதல் பிரேமதாசாவை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய கொண்டு வரப்பட இருந்த பிரேரணையில் முன்யோசனை இன்றி முந்திக்கொண்டு கையொப்பம் இட்டதால் பின்பு கட்சி உறுப்பினர்களை அரச புலனாய்வினரின் விருந்தினராக்கி தான் மட்டும் சிராவஸ்த்தியில் பாதுகாப்பு தேடியவர்.

அது முதல் திடீர் திடீர் என காணாமல் போன தோழர்கள் பலரைப்பற்றி பாராளுமன்றில் பேசுவதோடு சரி. வீண் வம்பை விலைக்கு வாங்க அவரது விளக்கமற்ற செயலே காரணம். உண்மையில் பெரும்பான்மையோர் கையோப்பமிட்டு சபாநாயகரிடம் கையளித்தாலும் அது அவரால் ஓடர் பேப்பரில் போடப்படாவிட்டல் விவாதத்துக்கு எடுக்கு முன் பாராளுமன்றத்தை இடைநிறுத்தி வைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. அதை செய்து தான் பிரேமதாசா தன்னை தக்கவைத்தார். பின் தன்னை எதிர்த்த கட்சியினரை பழிவாங்கினார். அதன் விளைவாக முந்திரிக்கொட்டையும் தன கட்சி உறுப்பினரை அதற்கு பலி கொடுத்தார். இவை எல்லாம் அறிந்தும் அவரோடு இருப்பவர்கள் அவர் இம்முறை தோல்வியை தழுவினால் தம்மை சீரமைக்க மீண்டும் ஓரணியாக வர வாய்ப்புகள் உண்டு.

அதற்கு இம்முறை தேர்தலில் பங்குபெறுவதில்லை என்ற பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முடிவு மிகவும் தீர்க்க தரிசனமானது. இதனை இயலாமை என சிலர் எண்ணலாம். ஆனால் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழநிலை எதிபார்க்கப்படும் சூழல் ஜனநாய வழி போராட்டங்களுக்கு உகந்ததாகவே பார்க்கப்படுகிறது.
இன்று வேறு வேறு அணிகளில் இருந்தாலும் அடிப்படை கொள்கையில் ஒன்றுபட்டவர்களாக தான் ஆரம்பகால ஈ.பி.ஆர்.எல்.எப் தோழர்கள் இருக்கிறார்கள். ஒரு சில சுயநலம் கொண்டவரால் சிதறுண்ட அமைப்பு ஓரணியில் மீளுருவாக்கம்பெற, களநிலவரம் கருதி இம்முறை தேர்தலில் பங்குபற்றாமல் இருக்க அவர்கள் எடுத்த முடிவு அவர்களின் பலவீனமல்ல. காலத்தின் கட்டாயம்.

இறுதியாக ஒருவரைப் பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும். ஆமாம் அது முன்னாள் வடக்கு கிழக்கு முதல் அமைச்சர் அ. வரதராஜப்பெருமாள் பற்றி. பத்தமநாபா தெரிவு செய்த சரியான, திறமையான ஜனநாயக சூழலில் தேர்தல் முறைமைக்கு உட்டபட்ட போராளி, இராஜதந்திரி. மக்களுக்கு மிகவும் வேண்டியவராக இருக்கும் வரதர் கட்சித் தலைவர்கள்  யாருக்கும் வேண்டியவராக இங்கு இல்லை. இவரின் வருகை தமது இருப்பை இல்லாமல் செய்துவிடும் என்பதில் சகல தமிழ் கட்சிகளும், கட்சித் தலைவர்களும் ஒருமித்த கண்ணோட்டத்தில் இருக்கின்றனர். இன்னும் சிறப்பாக பயத்துடன் இருக்கின்றனர் என்று கூறலாம். வரதரின் தூரநோக்குப் பார்வை, அரசாட்சிபற்றிய தீர்க்க தரிசனம், திறமை, செயற்பாடு, அர்பணிப்பு, செயலூக்கம், தொடர்புகள் "அப்படி" இருப்பதே இதற்குக் காரணம் ஆகும் என்பதை இவ்விடத்தில் குறிப்பிடாமல் விட முடியவில்லை.
(மாதவன் சஞ்சயன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com