Contact us at: sooddram@gmail.com

 

20  வது கிடைத்தால் இறுதித் தீர்வு ?

(மாதவன் சஞ்சயன்)

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்களில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 20 ஆசனங்கள் கிடைத்தால், 2016ல் தமிழ் மக்களுக்கான தீர்வு பெறப்படும் என்றும் அத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது அரசியல் பயணத்தை முடித்துக்கொள்ளும் என்றும், திருமலையில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய திரு சம்மந்தன் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்கள் மொத்தமாக 29 உறுப்பினர்களை கொண்டது. அதில் 20 ஐ தமக்கு தரும்படி கூட்டமைப்பின் தலைவர் கேட்கிறார். யாழில் 7, வன்னியில் 6, திருமலையில் 4, மட்டக்களப்பில் 4, அம்பாறையில் 7 என மொத்தம் 29 உறுப்பினர்களில் 20 பேரை, கூட்டமைப்புக்கு வாக்களிப்பதன் மூலம் தெரிவு செய்ய, வாக்காளருக்கு அழைப்பு விடுக்கிறார் அதன் தலைவர்.

தற்போது உள்ள கள நிலவரப்படி யாழில் 5 வன்னியில் 3 திருமலையில் 2 மட்டக்களப்பில் 3 அம்பாறையில் 1 மொத்தம் 14 ஆசனங்கள் வருவதற்கான நிலைமையே எதிர்வு கூறப்படுகிறது. இதில் கூட இழப்புகளுக்கு சாத்தியம் உண்டு அப்படி என்றால் 20 பது எப்படி வரும்? தமிழர் தரப்பில் போட்டியிடும் பல அணிகள் ஒரு ஆசனம் கூட பெறாவிட்டாலும் கூட்டமைப்புக்கு கிடைக்கவேண்டிய கணிசமான வாக்குகளைத்தான் கிடைக்காமல் செய்யும். 2014ம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின் படி மொத்த வாக்களர்களில் எத்தனை வீதம் வாக்களிப்பில் கலந்து கொள்வார்கள், அதில் எத்தனை வீதத்தை கூட்டமைப்பு பெறும் என்ற அடிப்படையில் தேசியப்பட்டியல் ஆசனத்தில் 1 அல்லது 2 கிடக்கலாம். அதை சேர்த்து கூட்டினாலும் 20 வது எப்படி வரும்? ஞானப்பால் உண்டவர் தான் விளக்கம் தரவேண்டும்.

மிகப்பெரிய வயல் வெளியூடாக வறுமைப்பட்ட ஒருவன் தன் மகனுடன் நடந்து சென்றான். நன்றாக செழித்து வளர்ந்து முற்றிய கதிர்களுடன் அறுவடைக்கு காத்திருந்த வயலை பார்த்த மகன் ஆசையுடன் அப்பா இதில் அரைவாசி வயலாவது எமக்கு சொந்தமாக இருந்தால் எமது பிரச்சனைகளுக்கு எல்லாம் விடிவு வந்து விடும் அல்லவா என்றான். ஆத்திரமடைந்த தகப்பன் தன் மகனின் பிடரியில் விட்டான் ஒரு அறை. மலைத்து நின்ற மகனிடம் விசரா ஆசைப்படுவதுதான் படுகிறாய் முழுவயலும் எமக்கு சொந்தமாக வேண்டும் என ஆசைப்படு என்றானாம். அவன் தந்தையை போல் முழுவதையும் அல்லாமல் முக்கால் பங்கைத்தான் வாக்காளரிடம் சம்மந்தர் கேட்கிறார்.

தாம் முன்வைக்கப்போகும் தீர்வு திட்டத்தில் கூட பெரும்பான்மை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய, அவர்களால் தரக்கூடிய, ஒரே நாட்டுள் இணைந்து வாழக்கூடிய, கௌரவமான தீர்வைத்தான் நாம் முன்வைப்போம் என சம்மந்தரும் சுமந்திரனும் அண்மைக்காலமாக சொல்லி வருகின்றனர். அதே போன்றே 29 ஆசனங்களையும் தாருங்கள் என கேட்டாலும் கிடைக்காது என்ற யதார்த்த நிலையில், 20 ஐ கேட்கிறார். அதனை வாக்காளர் வழங்கவேண்டும் என்றால் அவரின் வேட்பாளர்களின் தேர்தல் கால நடவடிக்கை வாக்காளர்களுக்கு உத்வேகத்தை கூட்டி அவர்களை வாக்குச்சாவடிக்கு வரவைக்கவேண்டும்.
கூட்டமைப்புக்கு என்று அதிலும் குறிப்பாக தமிழரசு கட்சிக்கென்று ஒரு வாக்கு வங்கி உண்டு. அதனுடன் கூட்டில் இணைந்த கட்சிகள் கூட குறிப்பிடக்கூடிய அளவு ஆதரவாளர்களை வைத்துள்ளனர். மொத்தத்தில் கூட்டமைப்புக்கு மிகப்பெரிய வாக்கு வங்கி இருப்பதை நான் கூறி அறியவேண்டிய நிலையில் எவரும் இல்லை.

சென்ற மாகாண சபை தேர்தலில் 30 ஆசனங்கள் கிடைக்கும் என்ற தனது எதிர்வு கூறல் நிகழ்ந்தது பற்றி நினைவுகூரும் சம்மந்தர் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். அது வடக்கா தெற்கா எம்மை ஆழ்வது என்ற மனநிலையில் மக்களை வாக்களிக்க செய்தது. அப்போது விருப்பு வாக்கு வேட்டையில் நடந்த பல உள்குத்து வேலைகள் அவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்திய போதும் போடு புள்ளடி வீட்டுக்கு நேரே என்பதே அவர்கள் நினைவில் நின்றது. அதனால் தான் வெத்திலைக்கு போட்டால் சொர்க்கவாசல் திறக்கும் என கூறிய மகிந்த அணியிடம் ஆட்சியை கொடுக்கவில்லை.

தாம் முன்பு துலா ஓடி நீரிறைத்து மிளகாய், உருளைகிழங்கு, மரக்கறி, முந்திரிகை தோட்டம் செய்து சிந்திய தம் வியர்வையால் கட்டிய வீடு இழந்து, தம் பிள்ளைகளுடன் மழை ஒழுக்குடன் கூடிய தகரக் கூரை முகாமில் மழைக்கால சேற்றில் சொந்த மண்ணில் அகதியாக வாழ்ந்தாலும், வசதிகளுக்காக அடக்குமுறைக்குள் வாழவிரும்பாதவர் உத்வேகம் அது.
அவ்வாறான நிலைமை இன்று இதுவரை காணப்படவில்லை. அவர்கள் தெரிவு செய்யும் பிரதி நிதிகள் செல்லும் திசை தெற்கு. கூற்றுவன் (யமன்) திசை. சாவித்திரி தன் கணவனின் உயிரை வாதாடி பெற்றுவந்தது போல தமது உரிமைகளுக்காக போராடி பெறுவார்களா? அல்லது வழமைபோல தமக்கு வாய்க்கரிசிதானா? எனும் சந்தேகம் இதுவரை அவர்களை ஆதரித்த மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் வாக்குகளை மாற்று அணிகளுக்கு போடும் மனநிலை தோன்ற வாய்ப்பு உண்டு.

உள்நாட்டில் தீர்வு தேடி, பின் இயலாமல் இந்தியாயை கூட்டிவந்து, இப்போது சர்வதேசத்திடம் முறையிடும் நிலைமை. 1977ல் உள்நாட்டில் தீர்க்க மக்கள் வாக்களித்தனர். 1983 தொடக்கம் 2009 வரை போராட்டத்துக்கு ஆதரவளித்தனர். இன்று அவர்களிடம், சர்வதேசத்திடம் முறையிட்டு தீர்வை பெறத்தான் 20 ஐ தாருங்கள் 2016ல் அரசியல் தீர்வை பெற்றுத்தருகிறோம் அத்துடன் போனசாக (Bonus) கூட்டமைப்பு தன் அரசியல் பயணத்தை முடித்துக்கொள்ளும் என்ற அறிவிப்பு. அதனை ஏற்று அனைவரும் கூட்டமைப்புக்கு வாக்களிப்போம் வாருங்கள். தீர்வு கிடைக்கும் என்பதற்காக அல்ல அவர்கள் தரும் போனசிற்காக.

தமிழர் தரப்பிடம் ஒரு பழக்கம் உண்டு நிறைவேற்ற முடியாத அல்லது நிறைவேறாத கோரிக்யை முன்வைத்தல் அது எதிர் தரப்பினர் மட்டும் அல்ல தமது தரப்பினரிடமும். இம்முறையும் அதையேதான் முன்வைக்கின்றனர். இதனால் தொடர்ந்தும் கேட்டோம்...... நீங்கள் தரவில்லை எனவே எம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று கையை விரித்த படி இன்னொரு தேர்தலை எதிர் நோக்கி காத்திருப்பர். மீண்டும் அடுத்த தேர்தலிலும் தமிழ் மக்களிடம் ஆணையைக் கோரியே நிற்பர் பரம்ம்பரை பரம்பரையாக இவ்வாறு பிழைப்பு ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது இருக்கத்தான் போகின்றது. பாவம்  தமிழ் மக்கள். தமிழர்களிடம் இருக்கும் STM (குறுங்கால ஞாபக சக்தி) (Short Term Memory)மீண்டும் அடுத்த தேர்தல் வரும்போது நித்திரையால் எழும்பி கண்ணை கசக்கியபடி வீட்டுக்கு நேரெ புள்ளடியை போட்டுவிட்டு அடுத்த பொங்கல் தமிழ் ஈழத்தில்தான் நடைபெறும் என்று நம்பிக்கொண்டு காத்திருப்பர்.
(மாதவன் சஞ்சயன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com