Contact us at: sooddram@gmail.com

 

சந்தை அரசியல் ! (மானிப்பாய் ரவுக்கை சந்தையின் மன ஆதங்கம்)

(மாதவன் சஞ்சயன்)

யாழ்ப்பாணத்தின் கொழும்பு 7 (Colombo 7) என்று குறிப்பிடப்படும் மானிப்பாயில் என்னை அழைக்கும் பெயர் ரவுக்கை சந்தை. மானிப்பாயை சேர்ந்த பலர் வெள்ளையர் காலத்திலேயே கொழும்பு சென்று உத்தியோகம், தொழில்துறை என்று கொடிகட்டி பறக்கும்போது கொழும்பு 7ல் உள்ள பான்ஸ் பிளேஸ், ரோஸ்மெட் பிளேஸ், வோட் பிளேஸ் என இலங்கையின் பிரதமார்கள், பெரும் பணக்காரர்கள் தொழிலதிபர்கள் வசித்த இடத்தில் அவர்களுக்கு சமமாக தாங்களும் பெரிய பங்களாக்களில் வசித்தால் மானிப்பாயாரை கொழும்பு 7 ஆட்கள் என்று பெருமையா அவர்களே சொல்லிக் கொள்வார்கள். இதே மாதிரியான மோகம் வவுனியாவிலும் ஏற்பட்டதன் விளைவு 'குருமன் காடு' என்றும் இடம் தற்போது 'குருமன் கார்டின்' (சினமன் கார்டின் போல்)ஆக மாறிவிட்டதாகவும் அறிந்தேன்.

இலங்கையின் முதலாவது மருத்துவ கல்வி வசதி கொண்ட கிரீன் மெமோரியல் வைத்தியசாலை மானிப்பாயில் தான் ஆரம்பிக்கப்பட்டது. மகாராஜா நிறுவனம், மஸ்கன்ஸ் நிறுவனம் என்று கொழும்பில் இருக்கும் பெரிய நிறுவனங்களை போல பல நிறுவனங்களை நிறுவி பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்பவர்களும் மானிப்பாயை பூர்வீகமாக கொண்டவர்கள் தான். யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசின் தலைவராய் இருந்த ஹன்டி மாஸ்டரும் மானிப்பாய்காரர் தான். அவர் போல பல கல்விமான்களை தந்தது மானிப்பாய் மண். புலிகளால் படுகொலை செய்யப்பட்ட கதிர்காமரும் மானிப்பைகாரர் தான். அட நடிகை ரம்பாவை மணமுடித்த கனடா தொழிலதிபர் பூர்வீகமும் மானிப்பாய் தான்.

இப்படி அடிக்கிகொண்டு போகக்கூடிய ஊரில் இருக்கும் என் நிலைமைதான் கவலைக்கிடம். அந்தக்காலத்தில் என்னிடம் இல்லை என்றால் தான் மருதனாமடம், சுண்ணாகம் சந்தைக்கு போவார்கள். அதுகூட பெண்கள் பூப்பெய்தும் பொது தேவைப்படும் விடத்தல் கோழி குஞ்சுக்குத் தான் என்னிடம் தட்டுப்பாடு வரும். மற்றப்படி அதிகாலை பிடிங்கிய மரக்கறி தோட்டத்தில் இருந்து நேரே என்னிடம் காலையே வந்துவிடும். கடலுணவு பிடிபட்ட சில மணித்தியாலத்துக்குள்ள வந்துவிடும். கலவாய் மீன் வாயை திறந்து திறந்து மூடும். சுறா துடிக்கும். திருக்கை வாலை அடிக்கும்.

அப்போது மரக்கறி வியாபாரம் செய்த செட்டி என்பவர் தான் என்னை குத்தகைக்கு எடுப்பார். அவரிடம் இல்லாத மரக்கறியை தான் மற்றவரிடம் வாங்கவேண்டும். இல்லாவிட்டால் கண்கெடுவார் என்னை விலத்தி அங்கால போகினம் என்று அவரிடம் திட்டு வாங்கவேண்டும். கொஞ்ச காலத்துக்கு பிறகு அவர் வியாபாரம் பழக்கின அவருடைய மருமகன் பிரிந்து சென்று கடைவிரித்த பின்பு புறுபுறுப்பு மட்டும்தான். எனது இடத்தில் முளைக்கீரை சிரிக்கும். மரவள்ளி மண் பூத்திருக்கும் கத்தரி வெண்டி தக்காளி என மரக்கறிகள் எல்லாம் தோட்டத்து தண்ணி காயாமல் எங்களை வாங்குங்கோ எண்டு வருபவரின் ஆசையை தூண்டும்.

பலர் நேரத்துடன் வந்து மரக்கறி வாங்கினாலும் மீன்காரர் வரும்வரை 5 சத தந்தி பேப்பரை வாங்கி வாசித்து கொண்டு நிற்பார்கள். சில மீன்காரர் நேரத்துக்கு வந்தாலும் சிமியோன், செல்லையா, ரோசி வரும்வரை மீன் விற்கும் பக்கம் களை கட்டாது. அதிலும் செல்லையாவின் மோட்டார் சயிக்கிள் புடு புடு சத்தம் கேட்டால் பரபரப்பாகி விடுவர். செல்லையா சன்லையிற் பெட்டியில் கொண்டுவந்த மீன்களை கொட்டிய உடன் தள்ளு முள்ளு தொடங்கும்.
பாரை, விளை, கயல், மணலை, ஒட்டி, ஓரா, சீலா என வகை வகையாக கொட்டும் மீனில் யாரவது கைவைத்து எடுத்தால் சளாரென செல்லையாவின் வாளை மீன் அடிவிழும். என்ன மீன் வேண்டும் எத்தனை ரூபாவுக்கு வேண்டும் என்று காசை கொடுத்தல் செல்லையாதான் அவர்கள் கேட்டதை எடுத்துக்கொடுப்பார்.

பேசாமல் வாங்கிப்போவது தான் உசிதமானது. இல்லை என்றால் மீனை திருப்பித்தா என கேட்டு அவர்கள் கொடுத்த காசை செல்லையா திருப்பி கொடுத்து விடுவார். ஏனென்றால்அவர்கள் கொடுத்த காசுக்கு பெறுமதியான மீனைத்தான் செல்லையா கொடுத்திருப்பார். ரேக்கிற் ஒ லீவிற் ( Take it or Leave it ) என்று செல்லையா பாசையூர் பாதிரியார் உபயத்தில் ஆங்கிலம் பேசுவார்.

ரோசியிடம் வாய் கொடுத்தால் கிழி வாங்காமல் இறால் வாங்க யாராலும் முடியாது. இன்னம் கொஞ்ச இறால் கூட போடு என்று சொன்ன உடன் வாய் வெத்திலையை துப்பிவிட்டு ரோசியின் செந்தமிழ் அர்ச்சனை தொடங்கும். தினசரி நடக்கும் இவற்றுடன் புதன், சனி கிழமைகளில் மட்டும் ஆட்டுறச்சி கடை திறக்கும். அதிலும் மறிஆடா ? கிடாய்ஆடா ? கறுப்படா வெள்ளையாட? தாலையை காட்டு, தோலைக்காட்டு என, 1 இறாத்தல் இறச்சி வாங்குபவர் கூட பலத்த விசாரணை செய்வர். மரக்கறி மீன் பகுதியில் தினம் தினமும், இறச்சிக் கடையில் வாரத்தில் 2 நாளும் நடக்கும் இந்த கூத்துகள் பகல் வேளையிலும், இரவில் உள்ளே புகுந்து தெரு நாய்கள் தமக்குள் நடத்தும் சண்டை மற்றும் ஊளை கச்சேரியும் தான் எனது 24 மணிநேர நிகழ்ச்சி நிரல்.

சில நாட்கள் ஒரு சில பெரும் குடி மக்கள் நிறை வெறியில் வீட்டுக்கு போகாமல் மரக்கறிப்பக்க மேடையில் மல்லாந்து விடுவர். விடிகாலை வரும் செட்டி அவர்களுக்கு சுப்ரபாதம் பாடி ஈரச்சாக்கால் கலைத்து கலைத்து பூசையும் கொடுப்பார். அப்போது எனக்கு எதிர் பக்கம் வீதிவின் மறுகரையில் தான் கடைகள் இருந்ததால் பஸ்ஸில் போவோர் வருவோரெல்லாம் என் பக்கம் பார்க்காமல் போகமாட்டார். மானிப்பாய் சந்தையடி இறக்கம் என சொல்லி ஆட்கள் இறங்குவது எனக்கு பெருமை.

பின்னாளில் தமக்கு வருமானம் கிடைக்கும் என்பதால் என் முன்பக்கத்தை மூடி கட்டிடங்களை கட்டி விட்டனர். அந்த கட்டிடங்கள் கட்டப்பட்டதால் எனது இடப்பரப்பு குறைந்து ஏற்பட்ட இடநெருக்கடியில் சிக்கி சீரழிந்து சீர்கெட்ட நிலையில் என்னிடம் வருபவர்கள் அலிபாபா குகைக்குள் புகுவது போல புதுந்துதான் என்னிடம் வரும் நிலை. பஸ் பயணிகள் கூட இப்போது என்னை மறந்து சுந்தர்சன் கடையடி இறக்கம் என எனது இடத்தில் இறங்கி சுந்தர்சனுக்கு விளம்பரம் தேடிக்கொடுக்கிறார்கள். முன்னுக்கு வந்த செவியை பின்னுக்கு வந்த கொம்பு மறைத்து விட்டது.

இத்தனைக்கும் காரணம் எம்மவரின் ஏட்டிக்கு போட்டி அரசியல் காழ்ப்புணர்ச்சிதான். என்னடா எனக்கும் அரசியல் தெரிகிறது என எண்ணுகிறீர்களா? இந்த மடம் போனால் சந்தைமடம் என்று காய் கறி மீன் வாங்க வருபவர்கள் பேசும் அரசியல் மேடையே நான்தானே. எம்மவரில் கொள்கைவாதி யார்?, குழப்பல்வாதி யார்?, அரசின் கைக்கூலி யார்?, கால்கூலி யார்? என்பது முதல் அவர்களின் தனிநபர் ஒழுக்கக்கோவை பற்றியெல்லாம் கிசு கிசுப்பதும் குசுகுசுப்பதும் என் காதுபடத்தானே. அதனால் வந்த அரசியல் அறிவு.

வலி தென் மேற்கு பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் தான் நான் இருக்கிறேன். அந்த சபை அண்மைக்காலம் வரை இருப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில். என்னை புனரமைக்க, புதுப்பொலிவுற செய்ய அவர்கள் முடிவெடுத்தனர். வேறு விடயங்களில் அவர்களுக்குள் புடுங்குப்பாடு இருந்தாலும் எனது விடயத்தில் ஒன்றுபட்டனர். காரணம் சபைக்கு வருமானம் மட்டுமல்ல கூடவே அரசியல் ஆதாயமும். தமது காலத்தில் தான் நான் புதுப்பொலிவு பெற்றேன் என கூறியே எதிர்வரும் தேர்தலில் வாக்கு பெறலாம் அல்லவா.

அதே காரணத்தால் தான் அவர்களுக்கு அந்த நிதியை ஒதுக்க வேண்டிய மாவட்ட அபிவிருத்திக்கு பொறுப்பானவர், நிதி ஒதுக்குவதில் முட்டுக்கட்டையாக செயல்ப்பட்டார் என்ற குற்றச்சாட்டும் என் காதுபட பேசப்பட்டது. காரணம் அவர் வேறு கட்சி சார்ந்தவர் என்பது மட்டுமல்ல எது நடந்தாலும், எவ்வாறு நடந்தாலும், எப்படி நடந்தாலும் அது தன் கட்சி மூலம், தன் தலைமையின் கீழ் மட்டுமே நடக்கவேண்டும் எனும் அவரது மனநிலை என்றும் என் காதுபட குசுகுசுக்கப்பட்டது. திருமண வீடு என்றால் அவர்தான் மாலை மரியாதைக்குரிய மாப்பிள்ளை. மரண வீடு என்றால் கூட அவர்தான் மாலை போட்ட பிணம். அதனால் தான் நான் இன்றுவரை புதுப்பொலிவு பெற முடியவில்லையாம்.

மானிப்பாய் பெருமைகளில் நான் சொல்ல மறந்த ஒன்று தான் என் நினைவுக்கு வருகிறது. போராட்ட காலத்தில் சகல இயக்கங்களும் தம் முகாம்களை வைத்துருந்தது மானிப்பாயில் தான். அப்போது என் முன்பக்கத்தை மறைக்கும் கட்டிடங்கள் இல்லாததால் ஜீப் வண்டிகளில் முன்னாலும் உள்ளேயும் இருப்பவர்கள் AK 47 உடனும் பின்னால் இருக்கும் இருவர் LMG யை வெளியே நீட்டியபடி செல்வதை பார்த்திருக்கிறேன்.

அன்று பொடியள் எம் மக்களுக்கு மண்ணுக்கு மீட்பர்களாவர் என சந்தோசப்பட்டேன் இன்று அவர்களில் ஒருவரே நான் மீளுருப்பெறுவதை தடுப்பவர் என கேள்விப்பட்டு வேதனைப்பட்டேன். விடுதலைக்காக உயிரை கொடுக்க துணிந்தவர் அரசியலுக்காக விடாக்கண்டர் ஆகிவிட்டனர். அதனால் தான் அமரர் ஜெயகாந்தன் அரசியல் ஒரு சாக்கடை என்றரா ? இதுவும் மரக்கறி வாங்க வந்தவர்கள் கூறியவை தான்.

 நேற்று வந்தவர்கள் நடத்திய அரசியல் அரங்கில் ஒருவர் சங்கானை சந்தைக்கு முன்னாள் அமைச்சர் வந்தவராம் குறை நிறைகளை கேட்டவராம் என கூற மற்றவர் அடேயப்பா உது என்ன புதுசே தேர்தல் வந்தால் காடு கரம்பைக்கை இருக்கிற ஆக்களையும் தேடிப்போய் குறை நிறை விசாரிப்பினம். இவ்வளவு நாளும் அவங்களுக்கு போட்டு என்னத்தை கண்டனியள் இந்த முறை பலத்தை எங்களுக்கு தங்கோ சிங்கப்பூரை யாழ்ப்பாணம் கொண்டு வருவம் எண்டும் சொல்லுவினம். உப்பிடித்தான் போன மாகாண சபை தேர்தலில உந்த சங்கானை சந்தைக்கு ரணிலை கூட்டி வந்து ஏற்கனவே திறந்திருந்த கட்டிடத்த திறந்து கூத்துக் காட்டினவர் மகேஸ்வரன் தம்பி துவாரகேஸ்வரன்.

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி சொன்னமாதிரி அரசியலில இது சஜமப்பா. அதுவும் தேர்தல் காலத்தில் இது சர்வ சாதாரணமப்பா. வாக்குத்தான் அவர்கள் நோக்கமப்பா. விட்டுப்போட்டு நீ காசு கொடுத்து வாங்கின மீனை கொண்டுபோய் நேரத்துக்கு மனிசியிற்ற குடப்பா. பிறகு அதுவும் இப்ப நடக்கிற அரசியல் போல நாறி உதவாமப் போகுமப்பா. என்று சொல்லிப் போனார்.

அரசியல் காரணங்களால் சீரழிந்து போயுள்ள என்மீதும் கால்பதித்து எனக்கு மீட்சி தர, நான் புதுப்பொலிவு பெற இராமாயணத்தில் முனிவரின் சாபத்தால் கல்லாய் கிடந்த அகலிகையை தன் பாதம் பதித்து மறுவாழ்வு பெற்று பொலிவுறச் செய்த இராமரை போல் ஒருவருக்காக நான் காத்துக்கிடக்கிறேன். இராமனா? இராவணனா? யார் வருவார் என்ற பெருமூச்சுடன் முடிக்கிறேன்.

ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள வந்து ஏதும் செய்வார்கள் என்று எதிர்பார்த்த எனக்கு ஆண்ட பரம்பரைதானே பிரச்சனையின் அடி வடிவம்......???? மீண்டும் ஏன் ஆண்ட பரம்பரையை இழுக்கின்றாய் என்று கேட்பது என் காதில் கேட்காமலும் இல்லை!

குறிப்பு: மானிப்பாய் சந்தையின் இந்த ஆதங்கம் அதன் பயன் பாட்டாளனான எனக்கு மட்டுமல்ல இதுவரை ஜனநாயகப்படி தமக்கு பிடித்த கட்சியினர்க்கு வாக்களித்த அனைத்து பயன் பாட்டாளர்களுக்கும் உண்டு. எதிரிக்கு சகுனப்பிழை ஏற்படுத்த தனது மூக்கை அறுப்பது போல தான் சார்ந்த சமூகத்துக்கு கிடைக்க வேண்டியதை அரசியலுக்காக தடுப்பவர்கள் பொதுக்களத்தில் நின்று தாம் விட்ட தவறுகளை திருத்த வேண்டும். அவர்கள் திருந்தவேண்டும். ஆகஸ்ட் 17 முடிவல்ல ஆரம்பம்.
(மாதவன் சஞ்சயன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com