Contact us at: sooddram@gmail.com

 

ஒன்றும் (1) அதனை முன்னிலைப்படுத்தும் பூச்சியங்களும் (0) !

(மாதவன் சஞ்சயன்)

எத்தனை பூச்சியங்கள் சேர்ந்தாலும் அதற்கு பெறுமதி கிடையாது. உ+ம் 0+0 = 0 என்ற முடிவு தான் வரும். இதனுடன் 1 சேர்ந்தால் பெறுமதி வரும். அதில் கூட 1ஐ முன்னிலைப் படுத்தினால் மட்டுமே பெறுமதி கூடும். உ+ம் 1க்கு பின் 0 போட்டால் 10 ஆகும். அதை விடுத்து 1க்கு முன் எத்தனை பூச்சியங்கள் போட்டாலும் அது பெறுமதியை கூட்டாது. (01 அல்லது 001 எனவே இருக்கும்) வலிமையான 1ன் பின் வலிமையற்ற பூச்சியங்கள் சேர்ந்து 1ஐ வலிமைப்படுத்துவதன் மூலம் தம்மையும் வலிமைப்படுத்தி கொள்ளும். மகிந்த என்ற 1ஐ முன்னிலைப்படுத்தி அதன் மூலம் தம்மை பலப்படுத்த பல பூச்சியங்கள் தேர்தல் மேடைகளில் சபதமெடுக்க தொடங்கிவிட்டன. மகிந்தவை அடுத்த பிரதமராக்குவோம், அதன் மூலம் மீண்டும் அவரை ஜனாதிபதி ஆக்குவோம். தனித்து ஆட்சி அமைப்போம். தேசிய அரசாங்கம் அமைக்க விடமாட்டோம். தடுத்தால் சுனாமியை உருவாக்குவோம் என தேர்தல் மேடைகளில் சன்னத மாடுகின்றன இந்த பூச்சியங்கள்.

மகிந்த பதவியில் இல்லை என்றால் இவர்களுக்கு மறுவாழ்வு இல்லை. அநேகருக்கு சிறை வாழ்வு நிச்சயம். தாம் கடந்த காலத்தில் அரசியலில் சேர்த்த சொத்துக்களை அனுபவிக்முடியாமல், படோடாப வாழ்வு வாழ முடியாமல், அதிகார மமதையில் நினைத்ததை செய்ய முடியாமல் எங்கும் எதிலும் 10%, 20% கமிசன் பெறமுடியாமல், இதுவரை தாம் அனுபவித்த உல்லாச வாழ்க்கையை பறிகொடுத்து மணி அடித்தால் சோறு வாங்கும் மறியல் வாழ்க்கை தான் கிடைக்கும்.

தேர்தல்களில் தாம் மக்களுக்கு முன்பு செய்த சேவைகளை, இனி செய்யப்போகும் போகும் சேவைகளை சொல்லித்தான் வாக்குகேட்பது வழமை. இங்கு புதுமையாக ஒருவருரை பதவியில் அமர்த்த துடிக்கும் இவர்களின் செயல் விநோதமானது மட்டுமல்ல விபரீதமானது. மகிந்தவை பிரதமாராக்க அவர்கள் முயன்றாலும் அவரை எப்படி ஜனாதிபதியாக்குவது?
பதவியில் இருக்கும் ஜனாதிபதியை சட்டப்படி அகற்ற உள்ள வழி அவ்வளவு இலகுவானதல்ல. ஜனாதிபதி பதவியில் இருப்பவர் இயற்கை அல்லது செயற்கை மரணம் அடைந்தால் மட்டுமே பிரதமர் பதவியில் இருப்பவர் மிகுதியாக இருக்கும் பதவிக்காலம் வரை ஜனாதிபதியாக செயல்படமுடியும். பிரேமதாச அகாலமரணம் அடைந்த பின் டி பி விஜயதுங்க பதவிக்கு வந்தது அவ்வாறுதான்.

19வது திருத்த சட்டம் பிரதமருக்கு அதிக அதிகாரங்களை கொடுத்திருந்தாலும் ஜனாதிபதியின் அதிகாரம் முழுமையாக குறைக்கப்படவில்லை. அந்த அதிகாரங்களை கொண்டு தன் முன்னாள் கூட்டு களவாணிகளை காப்பாற்ற மகிந்த முயன்றால் ஜனாதிபதி தனது அதிகாரங்களை பாவித்து அதனை தடுக்க முயல்வார். அப்போது மகிந்த பிரதமராக இருந்தால் ஜனாதிபதிக்கு எதிராக என்ன செய்ய முடியும். இவர்கள் கூறுவது போல மகிந்த ஜனாதிபதி ஆவதற்கு இன்று சுகதேகியாக காணப்படும் மைத்திரி தீடீரென தீரா நோய்க்கு ஆளாகி புத்தபதம் அடையவேண்டும், அல்லது அவரை ???. அதனால் தான் மைத்திரியின் உயிருக்கு ஆபத்து உள்ளாதாக செய்திகள் வெளிவரத் தொடங்கி உள்ளன.

தான் பதவியில் நீண்ட காலம் நிலைத்திருப்பதற்க்காக மகிந்த சிந்தனை மூலம் விலைகொடுத்து வாங்கப்பட்டு தொடர்ந்தும் பராமரிக்கப்பட்ட இந்த பூச்சியங்கள் கூட, முன்பு மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர்கள் தான். அப்போது அவர்கள் பூச்சியங்கள் இல்லை.
கொள்கையை விற்று சுயநலத்தால் கூட்டு களவாணிகளாக மாறியதால் தான் இன்று பூச்சியங்கள் ஆகி, தம்மை தக்கவைக்க மகிந்தவின் (1ன்) பின் சென்று தம் சொந்த வாக்காளரை சந்திக்க வேண்டிய நிலை. தவறு செய்தவர்கள் அதிலிருந்து தப்பிக்க கொலையும் செய்விப்பர். அப்படித்தான் அவர்களால் மகிந்தவை ஜனாதிபதியாக்க முடியும். அவர்களுக்கு வேறு வழி உண்டா ???.

இந்த பூச்சியங்களை வைத்து கொண்டு இராச்சியத்தை ஆள மீண்டும் முயற்சிக்கும் மகிந்த கூட தனது கடந்த தேர்தல் தோல்விக்கான காரணம் தான் பதவியில் அமர்த்தியவர்களின் அதிகாரா துஸ்பிரயோகம், எங்கும் ஊழல், எதிலும் கமிஷன், சமூகச்சீர்கேட்டில் ஈடுபட்டமை என அவர்கள் விட்ட பல்வேறு தவறுகளை கவனத்தில் கொள்ளாது அவற்றை களைய முற்படாது அதே ஊழல்வாதிகள் விடுத்த அழைப்பை ஏற்றே தேர்தல் களம் காண வருகிறார்.
என்னைச் சுற்றி கள்ளவர்கள், காடையர்கள், எதினோல் மற்றும் ஹெரோயின் கடத்தல்காரர், மக்கள் பணத்தை கொள்ளை அடித்தவர் இருந்த போதும் நான் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் அவர்களை காப்பற்றினேன் என்ற அவரின் ஒப்புதல் வாக்குமூலம் இப்போது தேர்தல் மேடைகளில் மக்களின் அனுதாபம் பெறமட்டுமே கூறப்படுகிறது.

நீ சுத்தமானவன் என்றால் ஏன் அந்த அசுத்தங்களை அரவணைத்து கொண்டு மீண்டும் மேடையேறினாய் என மகிந்தவின் முகத்துக்கு நேரே கேட்கும் திராணி வாக்காளருக்கு இல்லாமல் போகலாம். ஆனால் வாக்குச்சீட்டில் புள்ளடி இடும் அந்த ஒரு கணம் துணிவுடன் தான் முடிவெடுப்பர். வேட்டுகளுக்கு (bullet )மக்கள் எப்போதும் வாக்குகளால்(ballot) தான் பதிலடி கொடுப்பார்கள்.

தனது 24 வயதில் அரசியல் தான் தனது எதிர்காலம் என முடிவெடுத்த மகிந்த மக்களின் மனநிலை அறிந்தவரான அனுபவப்பட்ட அரசியல்வாதி என்பதால்தான் 6 வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வை அவர்களுக்கு மீண்டும் நினைவூட்டி அதற்கு பின் தான் விட்ட தவறுகளை மூடி மறைக்க முயல்கிறார். எவர் எப்படிபட்டவரோ அவர்கள் தந்த ஆதரவில் கிடைத்த பெரும்பான்மை தான் எதிர்கட்சிகளின் வாயை மூடி வெல்ல முடியாதவர் என புகழப்பட்ட புலிகளுக்கு முள்ளிவாய்க்காலிலும் பிரபாகரனுக்கு நந்திக்கடலிலும் முடிவுரை எழுத எனக்கு உதவியது என முழக்கமிடுகிறார்.

தினம் தினம் மரணஓலம் கேட்ட கிராமங்களில் மங்கல ஓசை கேட்கவைத்தேன். பேரூந்தில் புகைவண்டியில் பயமின்றி பயணிக்கும் சூழ்நிலையை உருவாக்கினேன். காலை வேலைக்கு போனவர் மாலை வீட்டுக்கு உயிருடனா உடலமாகவா திரும்பி வருவர் என்ற உங்கள் பயத்தை போக்கினேன். யுத்தகளத்தில் செத்து மடிந்தவரின் சிதைந்த உடலங்கள் என கூறி சீல்வைத்து வந்த சவப்பெட்டிகளை கட்டி அழும் நிலைலைக்கு முடிவு கட்டினேன்.
என நினைவூட்டல் பேச்சால் மக்களை மதிமயக்கி 6 வருடம் பின் நோக்க செய்கிறார். அதன் மூலம் அடுத்து வந்த ஆண்டுகளில் நடந்தவற்றை தான் செய்த அபிவிருத்தி பற்றி மட்டும் நினைக்க செய்கிறார். அராஜகங்களை அராஜகவாதிகளை மறக்க செய்கிறார்.

புலிகளை வென்றதற்கான பரிசை மக்கள் அவருக்கு 2010ல் வழங்கிவிட்டனர். அபிவிருத்தி ஒருபுறமும் அராஜகம் மறுபுறமும் நடந்ததை மறக்காது அதற்கான தங்கள் தீர்ப்பை 2015 ஆரம்பத்தில் கொடுத்துவிட்டனர். அன்று மெதமுல்லையில் என்னை தோற்கடித்தவர் சிறுபான்மையினர் என இனவாதம் கக்கியபோதே அவர் தன் சுயரூபத்தை முழு நாட்டுக்கும் வெளிக்காட்டிவிட்டார். 2005ல் இந்த நாட்டில் பெரும்பான்மை சிறுபான்மை என்று ஒன்று இல்லை என்றவர் 10 வருடங்களின் பின் இனவாதம் பேசினார்.

எல்லா வாதத்துக்கும் மருந்திருக்கலாம் ஆனால் இனவாதத்துக்கு எவரிடமும் மருந்தில்லை.
அது வந்து விட்டால் பலவற்றை முடக்கிவிடும். மதியை மயக்கிவிடும். அழிவை அரவணைக்கும். அராஜகத்துக்கு துணை நிற்கும். அதை நன்கு அறிந்து தான் அதை தன் ஆயுதமாக எடுத்து தன்னை சுற்றி உள்ள அராஜகவாதிகளான பூச்சியங்களை அரவணைத்தபடி மக்கள் முன்னால் மகிந்த மேடை ஏறுகிறார்.

அபிவிருத்திகளுக்கு மயங்காத மக்கள் புலிகள் அமைப்பு மீளுருப்பெறும் என்று சொன்னால், மீண்டும் நாட்டை பிரிக்க புலம்பெயர் தமிழர் அணிதிரள்கிறார்கள் என சொன்னால், சர்வதேசம் அதற்கு உதவுகிறது என சொன்னால், அதை தடுக்க முயலும் என்னை இல்லாமல் செய்ய மிரிகானைக்கு வெள்ளை வான் வந்துவிட்டது என சொன்னால் மக்கள் பயப்பீதியில் மகிந்தவும் அவர்பின் அணிதிரளும் பூச்சியங்களும் செய்த எல்லாவற்றையும் மறந்து தம்மை ஆட்சிபீடம் ஏற்றுவர் என்ற இவர்களின் எதிர்பார்க்கையின் தீர்ப்பு நாள் ஆகஸ்ட் 17, 2015.

என்னவோ.............! இதே (1) ஒன்றையும், (0) பூச்சியங்களையும் புலிகளிடத்திலும் நான் கண்டதை இவ்விடத்தில் குறிப்பிட முடியாமல் தவிர்க்க முடியவில்லை. இங்கும் புலிகளின் தமிழ் மக்களிடம் ஆதரவைப் பெறும் ஆயுதமாக இருந்ததும் தமிழ் இனவாதம் தான். இதற்கு மகிந்தா 'தாய் நாட்டைக் காப்பாற்றுவென்' என்று மேடையெங்கும் பேரினவாதம் கக்குவது போல் போல் 'தமிழீழத்தைப் பெற்றுத் தருவேன்' என்று குறும் தேசியவாதக் கோஷத்தை பிரபாகரனும் முன்னிலைப்படுத்தப்படுத்தி சிங்களவரையும், முஸ்லீம்களையும், ஏன் கேள்வி கேட்ட தமிழரையும் கொன்றதுதான் புலிகளின் ஆயுதம் தாங்கிய வரலாறு. ஏன் இன்றைக்கு தேர்தலில் நிற்கும் தமிழர் தரப்பு யாவருக்கும் இந்த ஒன்றும்(1) பூச்சியமும்(0) பொருந்தியே நிற்கின்றது*.
(மாதவன் சஞ்சயன்)

* - ஆதாரம் இக்கட்டுரைக்கு அடுத்ததாக உள்ள செய்தியை வாசிக்கவும்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com