Contact us at: sooddram@gmail.com

 

இணக்க அரசியல் விருப்புத் தெரிவு அல்ல, சந்தர்ப்ப சூழ்நிலை !  

(மாதவன் சஞ்சயன்) 

இன்று தமிழர் அரசியல் பற்றி எழுதுபவர்கள் பலர் அதனை 1977 அல்லது 1990ல் இருந்து தான் அலசுகின்றனர். மன்னர் காலத்தை விட்டு விடுவோம். அதில் தொடங்கினால் ஆண்டபரம்பரை மீண்டும் ஆள நினைப்பதில் என்னகுறை என்ற கோசம் எழும். அதனால் வெள்ளையர் ஆட்சியில் அறிமுகமாகி இன்றுவரை எல்லோரும் தீர்வு தேடி ஓடிப்போகும் பாராளுமன்றத்துக்கான முதலாவது தேர்தல் நடந்த 1947 ல் இருந்து ஆரம்பிக்கின்றேன்.

சோல்பரி ஆணைக்குழுவில் ஜீ ஜீ பொன்னம்பலம் 50/50 கேட்டு முன்வைத்த யோசனை மறுக்கப்பட்ட பின் நடந்த தேர்தல் அது. தமிழ் காங்கிரஸ் யாழ் மாவட்டத்தில் 6 கிழக்கில் 1 ஆசனம் பெற்றதுடன் சோல்பரி அரசியல் அமைப்பை ஏற்று யுஎன்பி யில் போட்டியிட்ட சகல தமிழர்களும் மக்களால் நிராகரிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி தமிழ் மக்கள் சோல்பரி அரசியல் அமைப்பை நிராகரித்து விட்டனர் என பிரித்தானிய  குடியேற்ற செயலாளருக்கு ஜீ ஜீ தந்தி செய்தி அனுப்பினார்.

அதனை முறியடிக்க டி எஸ் சேனநாயக்க வவுனியா, மன்னாரில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற  சி. சுந்தரலிங்கம், சி. சிற்றம்பலம் என்ற இருவருக்கும் மந்திரி சபையில் இடமளித்து தான் தமிழரையும் அரவணைப்பவராக காட்ட முற்பட்டார். எம்மவர் விரலை வைத்தே எம் கண்ணை குத்தும் வித்தையை சேனநாயக்க அன்று செய்து காட்டினார். அது இன்றும் தொடர்கிறது.

ஆணைக்குழுவிடம் ஐம்பதுக்கு ஐம்பது கேட்டேன் கிடைக்கவில்லை. தேர்தலில் அதனை ஆதரித்து  பெரும்பான்மை தமிழ் மக்கள் தந்த தீர்ப்பை தெரிவித்தேன் ஆனால் எம்மவர் அரசுக்கு கொடுத்த ஆதவரால் என் சொல் சபையேறவில்லை. இனி என்  வழியும் இணங்கிப் பெறுவது தான். அதனால் ஏற்பேன் அமைச்சர் பதவி, என்பது தான் இணக்க அரசியலின் ஆரம்பம்.

அமைச்சு பதவி ஏற்றால் எமது பகுதிகளை அபிவிருத்தி செய்யலாம் அதேவேளை தமிழர்களின் அடிப்படை உரிமைகளை மீறாத வகையில் அரசு நடந்துகொள்ளும் என்ற தேசாதிபதி சேர் ஒலிவர் குணதிலகா கொடுத்த வாக்குறுதியையும் நம்பி கட்சியின் பெரும்பான்மை எதிர்ப்பையும் மீறி கே கனகரத்தினம், வி குமாரசாமி போன்ற சிலருடன் சேனநாயக்க அரசுடன் இணக்க அரசியல் செய்ய இணைந்தார் ஜீ ஜீ பொன்னம்பலம்.

பலன்களாக சீமெந்து, இராசயன, காகித, உப்பள தொழிற்சாலைகள் வந்தன. அதனால் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் கிடைத்தன. அதே நேரம் பல்லாயிரக்கணக்கான மலையக தமிழர் வாக்குரிமையும் பறிபோனது. அடிப்படை உரிமை மீறப்படாது என்ற வாக்குறுதி மீறப்பட்டபோது எதிர்க்க முடியவில்லை. இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாண சபை பிரிக்கப்பட்ட  போதும் இதுவே இணக்க அரசியலின் நிலை.  கண்ணை விற்று சித்திரம் வாங்கினால் பலனுண்டா ?.

உரிமை அரசியல் தன் ஆட்டத்தை ஆரம்பித்தது.  தெற்கில் சமஸ்டி கட்சி  (Federal Party) என்றும் வடக்கு கிழக்கில் தமிழ் அரசு கட்சி (Tamil Kingdom Party) என்றும் அடையாளப்படுத்தி அரசியல் செய்தது. வடக்கு கிழக்கில் பூரண உரிமையாளர் (sole Proprietor) தெற்கில் (Partnership) என இரு வேறுபட்ட நிலை. பலத்தை தாருங்கள் அதிகாரப்பகிர்வு பெற்றுவருவோம் என்றனர். இணக்கம் ஏற்பட்டது. பண்டா செல்வா ஒப்பமிட புத்தபிக்குகள் எதிர்த்தனர்.

அநகாரிக தர்மபாலா விதைத்து சென்ற தமிழர் பற்றிய பயம் புத்தபிக்குகளாலும் பேரினவாதிகளாலும் தமிழர் உரிமை விடயத்தில் எதிர்வினையாக செயல்பட்டது. தாம் பதவிக்கு வருவதற்கான அரசியல் விளையாட்டில் உதை படும் பந்தாக தமிழர் உரிமைகள் பேசுபொருளாகின. அதனால் தான் மாறி மாறி பதவிக்கு வந்த அரசுகளால் போடப்பட்ட ஒப்பந்தங்கள் நிறைவேற்ற படவில்லை. இணக்க அரசியலை தமிழர்களின் இரு பெரும் கட்சிகளும் அன்று செய்தன.

இணக்க அரசியல் மூலம் அபிவிருத்தி செய்தவரால் அரச அனுசரணை குடியேற்றங்களை தடுக்க முடியவில்லை. மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்படுவதற்கு துணைபோய் வடபகுதி மக்களுக்கு தீராத அவப்பெயரை ஏற்படுத்தித்தரத்தான் முடிந்தது. 1980 பதின் பிற்பகுதியில் ஜெயகாந்தன் கூறினார் உங்க யாழ்பாணத்தார் அப்போ எங்க ஆட்களை கள்ளத்தோணி என்றார்கள் இப்போ நீங்கள் தான் கள்ளத்தோணி என யதார்த்தமாக குறிப்பிட்டார். இணக்க அரசியல் மூலம் அதிகார அரசியல் என்றவர் திருகோணமலை கோணேசர் பூமியை புனித நகராக ஆக்கமுடியவில்லை.    

தென்னிலங்கை கட்சிகள் இரண்டும் பொங்கலில் பயறுபோல் தம்முடன் இணங்கும் தமிழர்களை தம் கட்சியில் மந்திரிகளாக வைத்திருந்தன. அவர்கள் எல்லோராலும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் எம் இளைஞர்களுக்கு கிடைத்தன. செல்லையா குமாரசூரியர் நியமன எம்பி. தபால் மந்திரி. அவரும்  ஆயிரக்கணகில் வேலைகள் கொடுத்தவர் தான்.

தேர்தல் அரசியல் இரண்டு இனங்களுக்கும் இடையில் பகைமையை வளர்ப்பதன் மூலமே செய்யப்பட்டது. ஊட்டி வளர்க்கப்பட்ட இனவாதம் இனக்கலவரங்களாக மாறிய போது தான் இடப்பெயர்வு அகதிநிலை உருவானது. அது ஆயுத போராட்டமாக மாறிய போதுதான் அழிவுகளும் ஆரம்பமானது. அதுவரை தினம் 5 தடவை புகையிரதம் வடக்கு தெற்கு இடையில் பயணித்தது. யாழ்ப்பணத்தில் 2ம் காட்சி படம் முடிந்து வீடு திரும்ப இரவு 12 மணி பட பஸ் கூட ஓடியது.

அப்புக்காத்துகள் ஆடி முடிக்க ஆயுததாரிகள் ஆட்டம் ஆரம்பமானது. தமிழ் ஈழம் தான் முடிந்த முடிவு என ஆரம்பித்து முள்ளிவாய்க்காலில் முடிந்து போனது. இதன் போது தான் பேரழிவுகள், இடப்பெயர்வு, புலப்பெயர்வு, உயர்பாதுகாப்பு வலயம், மக்கள் வாழ்ந்த நிலப்பறிப்பு, அகதிமுகாம் வாழ்க்கை போன்ற இன்றைய ஒட்டுமொத்த நிலைமைக்கும் வித்திடப்பட்டது. அதற்கான பொறுப்பை அப்புக்காத்துகளும் ஆயுதமேந்தியவர்களும் ஏற்கத்தான் வேண்டும்.

ஆலமரத்தை வேர்களும் விழுதுகளும் தான் தக்கவைக்கின்றன. நான்தான் ஆதாரம் என வேரும் இல்லை தாங்குவது நான்தான் என விழுதும் வீம்பு பண்ணி வேரை வெட்டினால் மரம் படும். விழுதை வெட்டினால் கிளைகள் முறியும். தமிழ் அரசியல் எனும் ஆலமரத்தின் நிலையம் அதுதான். அழிவுகளுக்கு காரணமானவர்களே மீள் எழுச்சிக்கும் நிலைமைக்கேற்றவாறு தம் செயல்பாட்டை செய்யவேண்டும். விருப்பங்களுக்கு யதார்த்தங்களை பலி கொடுக்க கூடாது. அதைத்தான் இதுவரை இணக்க அரசியல் செய்த எல்லோரும் செய்தனர்.

ஜீ ஜீ பொன்னம்பலம் அபிவிருத்தி மூலம் செல்வநாயகம் அதிகார பகிர்வு மூலம் வரதராஜபெருமாள் மாகாண சபை மூலம் செய்த அரசியலிலும் அபிவிருத்திகள் நடந்தன ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் கிடைத்தன. எதுவுமே முழுமை பெறவில்லை. நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. காரணம் பிளவு பட்டிருந்த தென்னிலங்கை அரசியல் சூழ்நிலை. ஒருவர் தமிழருடன் போட்ட ஒப்பந்தத்தை எதிர்ப்பதன் மூலமே அடுத்தவர் அரசமைக்க முடியும் என்ற நிலைமை.

எனவே முன்னையவர் எவரும் இணக்க அரசியல் செய்யவில்லை என கூறமுடியாது. ஆனால் இனியும் பொறுக்க முடியாது என்ற நிலை வந்தபோது அவர்களால் விட்டு வெளியேற முடிந்தது. காரணம் அவர்கள் அரசின் பராமரிப்பில் தம்மையும் தம்மை சார்ந்தவரையும் வைத்திருக்கவில்லை. அவர்கள் பற்றிய கோப்புகளும் (Files) அரசிடம் இருக்கவில்லை. மடியில் கனம் இல்லாததால் அவர்களால் தொடர்ந்து அரசியலில் பயணிக்க முடிந்தது.

சுதந்திரத்துக்கு பின் முதல் தடவையாக இப்போது தோன்றி இருக்கும் நிலைமை தொடருமானால் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் இணைந்த அரசை 6 மாதங்கள் பார்த்துவிட்டோம். இனி அமையும் அரசு நிச்சயம் தேசிய அரசு என்ற முன்மொழிவும் கேட்கிறது. தென்னிலங்கை ஒன்றுபட்டால் அரசியல் தீர்வை எட்டமுடியும். ஆகஸ்ட் 17 பல அராஜகங்கள் இல்லாது ஒழிந்து நல்ல எதிர்காலத்தை அமைக்கும் நாளாக அமைய வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்க்கை.

அதற்கு ஏற்றால் போல இந்திய மற்றும் சர்வதேச நிலைப்பாட்டிற்கு அமைய தமது விருப்பங்களை சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றத்துக்குட்படுத்த அனுபவப்பட்டவர்கள் முடிவெடுத்துள்ளனர். வீம்பு பண்ணி நாமிளந்தது அதிகம் அதை தொடர்ந்தால் மேலும் வரும் நெருக்குவாரம் என்பதால் தான் நட்புக்கரம் நீள்கிறது. அதை பற்றிப்பிடிப்பவர்கள் ஏட்டிக்கு போட்டியாக எம்மால் மட்டும் தான் பிள்ளையார் பிடிக்கலாம் நீங்கள் பிடித்தால் குரங்காகிவிடும் என கூச்சல் போடக்கூடாது      

(மாதவன் சஞ்சயன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com