Contact us at: sooddram@gmail.com

 

தம்மை தாமே மலினப்படுத்தும் அரசியல் சதுரங்கம்

(மாதவன் சஞ்சயன்)

அண்மையில் நடந்த மின்னல் நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்துரனும் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துகொண்டனர். ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடலாக அமையும் என எதிபார்த்து ஏமாந்தேன். காரணம் அதற்கு சில வாரங்களுக்கு முன்பு தான் 20தாவது திருத்தம் பற்றி இவர்கள் கலந்துரையாடி தமது பாராளுமன்ற பிரதி நிதித்துவத்துக்கு பாதகம் வரக்கூடாது என ஒத்த முடிவு எடுத்தது போல எம் மக்கள் பிரச்சனையிலும் எதிர்காலத்தில் தமக்குள் ஏற்பட கூடிய இணக்க அரசியல் மூலம் ஒரு நல்ல முடிவை எப்படி பெறுவது என்பது பற்றி பேசுவர் என எதிர்பார்த்தேன்.

ஓர் விடயத்தை சீர்தூக்கி பார்க்க வாதம் புரியலாம் விதாண்டவாதம் பயனற்றது. அந்த நிகழ்ச்சியில் டக்ளஸ் அதைத்தான் செய்தார். தெற்குடன் இணக்க அரசியல் செய்யும் அவரால் தமிழர் தரப்புகளுடன் குறிப்பாக கூட்டமைப்புடன் எதிர்ப்பரசியல் செய்வதும் அவர்களை விமர்சிப்பதுமே நோக்கமாக காணப்பட்டது. எடுத்ததற்கெல்லாம் தன் சக்திக்குட்பட்டதை தான் செய்ததாக கூறும் அவருக்கு அடுத்தவர்களும் அவர்களால் முடிந்ததை செய்தனர் என்பதை ஏற்கும் மனநிலை காணப்படவில்லை.
 

70 களில் கொழும்பிலும் பின் 83ம் ஆண்டு கலவரத்தின் பின்பு மானிப்பாயிலும் (இங்கு சகல போராளிகளும் தம் முகாங்களை வைத்திருந்தனர்) வசித்த எனக்கு அறிமுகமான பலர் ஈபி, புளட், ஈரோஸ், புலி அமைப்பில் இருந்தததால் பல விடயங்கள் அறியக்கிடைத்தது.
கொழும்பில் இருக்கும் போது டக்ளசின் நண்பர்கள் பலரை எனக்கு தெரியும். (அப்போது அவர் தேவா எனவே அழைக்கப்பட்டார். தன்னுடன் கராட்டி பழகிய சிங்களவரான டக்ளசின் பெயரையே பின்னாளில் தன் பெயருடன் சேர்த்துக்கொண்டார் என பின்பு அறிந்தேன் )
எனவே அவர்கள் மூலம் டக்ளசின் பல ஆரம்பகால நடவடிக்கைகளை அறிந்தவன் என்ற வகையில் அவற்றை எந்தவித உள்நோக்கமும் இன்றி பதிவுசெய்கிறேன்.

கொழும்பில் வாடகை அறைகளில் வசித்த பலர் சந்திக்கும் இடமாக சாப்பாட்டு கடைகள் இருந்தன. மைசூர் கபே, காந்தி லொட்ஜ், முருகன் லொட்ஜ், வேலப்பன் கடை என வேலை நிமித்தம் கொழும்பில் வசித்தவரின் உணவகங்கள் பெரும்பாலும் இவைதான். இங்கு இரண்டு நாள் சந்திப்பின் பின் பலர் நண்பர்களாகிவிடுவர். அவ்வாறு அறிமுகமாகி எனது அறையை பங்குபோட்ட ஒருவர் தம் வயதொத்த தேவா மற்றும் தேவாவின் நண்பர்களின் கூட்டாளி. இளவயதிற் கேற்ற குழப்படிகள் அவர்களிடம் காணப்பட்டது.

2ம் காட்சி சினிமா படம் பார்த்து வரும் அவருக்கு புறுபுறுத்தபடி கதவை திறப்பேன். 77 ம் ஆண்டு இனக்கலவரம் வரை அவர்கள் அப்படித்தான் இருந்தார்கள். பின் தேவா தமிழ் அகதிகள் புனர்வாழ்வு கழக நடவடிக்கையிலும், பனை அபிவிருத்தி சபை தலைவரின் தனிப்பட்ட செயலாளராகவும் செயல்படுவதாக கூறுவார். 78 ல் தேவா வீட்டுக்கு வெளிநாட்டில் இருந்து சிலர் வந்திருப்பதாகவும் அவர்களுடன் மாணவ அமைப்பொன்றில் தேவா செயல்பாடுவதாகவும் கூறி பின் தேவா பயிற்சிக்காக வெளிநாடு சென்றுவிட்டதாக கூறிய அவரின், தேவா பற்றிய செய்திகள் சில மாதங்கள் நின்றிருந்தது. மீண்டும் தேவா செய்திகள் வாசிக்க தொடங்கியவர் ஈழ போராட்டத்துக்கு புதிய அமைப்பு உருவாகி இருப்பதாகவும் தேவாவும் அதில் இணைந் திருப்பதாகவும் கூறி அதற்கான உறுப்பினர்களை இணைப்பதாக கூறினார். அன்று மின்னல் பார்த்துகொண்டிருந்த வேளை இவை யாவும் என் நினைவுக்கு வந்ததது. கூடவே நான் 83 கலவரத்தின் பின் மானிப்பாயில் வசித்த போது பழகிய இயக்க தோழர்கள் கூறியவையும் என் நினைவில் வந்தது.

தனது 17 வருட ஆயுத போராட்ட 20 வருட பாராளுமன்ற அனுபவம் பற்றி கூறுபவரின் 17 வருட ஆயுத போடாட்டத்தில் 1978ல் ஆரம்பித்த அவர் கூறும் போராட்ட வாழ்வு லெபனானில் பயிற்சி எடுத்து வந்து திருக்கோவில் வங்கி கொள்ளை முயற்சியில் (இது இயக்கத்தின் ஆரம்பகால கொள்கைக்கு முரணானது என கூறப்பட்டது) மக்களால் பிடிபட்டு மறியல் இருந்து வெளிவந்து பின் 1981ல் மீண்டும் பிடிபட்டு பனாகொடை வெலிக்கடை மட்டக்களப்பு என சிறைகள் மாறி 1983 மட்டுநகர் சிறை உடைப்பில் தப்பி இந்தியா பயணம்.
அங்கு இராணுவ தளபதியாக முகாம் நடத்தி 1985 ல் மண்ணுக்கு மீண்டார். 2ம் தடவை காரைநகர் கடற்படை முகாம் தாக்குதலுக்கு முழுநிலவு தினத்தில் (பௌர்ணமி) முன்னணி தோழர்களை மொத்தமாக அனுப்பி (டக்ளஸ் நேரடியாக கலந்து கொள்ளவில்லை) அது தோல்வியில் முடிந்தது மட்டுமல்ல பல ஆரம்பகால தோழர்களையும் பலி கொடுத்தார் (புலிகள் அமாவாசை இருட்டில் தான் தாக்குதல் நடத்துவார்கள்).

அவரின் பல்வேறுபட்ட நடவடிக்கையால் ராணுவ பிரிவிற்கும் அரசியல் பிரிவிற்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை தீர்க்க வந்த ஈ.பி.ஆர்.எல்.எப் செயளாளர் நாயகத்தால் யாழ் ராணுவ தளபதியாக கபூர் என்பவர் நியமிக்கப்பட்டார். அதை ஏற்காத டக்ளஸ் 1986 ல் இந்தியா சென்ற வேளை அங்கு நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் பொதுமகன் கொல்லப்பட கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். அப்போது இயக்கத்துக்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால் மத்தியகுழு முடிவின்படி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
பின் புளட்டில் இருந்து பிரிந்த ராஜன் போன்றவருடன் சிறிது காலம் கூட்டுவைத்து ஈ என் டி எல் எப் என இயங்கினார். அது முறிவடைய பணத்தேவைக்காக கப்பம் கேட்டு இலங்கை சிறுவனை கடத்திய குற்றசாட்டில் மீண்டும் 1990வரை சென்னை மத்திய சிறையில்.
1990ல் ஜாமீனில் இலங்கை வந்து பிரேமதாசா, ரஞ்சன் விஜயரட்ன அனுசரணையில் ராணுவம், கடல்படையின் பாதுகாப்புடன், 1994 வரை தீவகத்தில் செயல்ப்பட்டார். அந்த காலத்தில் தான் ஈ பி டி பி எனும் இயக்கம் அரசியல் கட்சியாகவும் பதிவுசெய்யப்பட்டது.

1978ல் தொடங்கிய அவரது போராட்ட வாழ்க்கையில் அவர் கூறும் 17 வருட போராட்ட வாழ்வின் பெரும்பான்மை அனுபவம் இவைதான். 1994ல் தொடங்கியது அவர் கூறும் பாராளுமன்ற அரசியல் அனுபவம். அப்போது தீவகம் தவிர வடக்கில் தேர்தல் நடத்த முடியாதவாறு புலிகளின் ஆளுமை இருந்தது. முழு நாட்டுக்குமான தேர்தல் நடத்தாமல்
தேசிய பட்டியலை பகிரமுடியாது. எனவே யாழ் மாவட்ட தேர்தல் வாக்களிப்பு கொத்தணி முறையில் தீவகத்தில் மட்டும் நடத்தபட்டது. ஈ பி டி பி வீணை சின்னத்தில் போட்டியிட ஜனாதிபதி டி பி விஜயதுங்க அனுமதிக்காததால் சுயேட்சையாகவே போட்டியிட்டனர்.
புத்தளத்தில் வசித்த வடக்கில் இருந்து புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் வாக்கில் ஒரு முஸ்லிம் காங்கிரஸ் உறப்பினர் தெரிவாக மிகுதி சுயேட்சை குழுவில் இருந்த ஈ பி டி பி உறுப்பினர் வசமானது.

ஈ பி டி பி இன் பாராளுமன்ற பிரவேசத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது புலிகள் தான். ஆரம்ப தேர்தலில்கூட தன் கட்சி, சின்னம் என்பவற்றை பயன்படுத்த முடியாத நிலைமை தென்னிலங்கை கட்சியால் ஈ பி டி பி க்கு ஏற்பட்டது. சந்திரிகா மட்டுமே அவ்வாறு செய்யவில்லை. ஆனால் மகிந்தரின் ஆட்சிகாலம் முழுவதும் வீணை சின்னதிற்கு வெற்றிலை மாற்றீடானது தான் நாம் கண்கூடாக கண்டது. சந்திரிகா கூட பலவீனமான பாராளுமன்றத்தை கொண்டிருந்த போதும் ஆரம்பத்தில் ஈ பி டி பி யை உள்வாங்கவில்லை. புலிகளுடனான மோதல் ஏற்பட்ட பின்பு ராவய பத்திரிகை விக்டர் ஐவன் போன்றவர்களின் முன்முயற்சியால் தனது தீர்வு பொதியை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அவர்களை உள்வாங்கினார். 2001ம் ஆண்டு தேர்தலின் பின்புதான் அமைச்சு பதவி கொடுக்கப்பட்டது.

அதன் பின் சென்ற 09-01-2015 வரை டக்ளஸ் மத்தியில் அமைச்சராகவே இருந்துள்ளார்.
இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை பேசி பெறமுடியாது (அவர் இப்போது கூறும் இணக்க அரசியல்) என்பதால் தான் மற்றவர்கள் போல் ஆயுத போராளியாகி பின்பு கிடைத்த பட்டறிவால் இணக்க அரசியலில் தடம்பதித்ததாக டக்ளஸ் கூறுகிறார். 1994 முதல் 2001 வரை அவர் செய்த இணக்க அரசியலை விட்டுவிடுவோம். அது அவர் தென்னிலங்கை அரசியலுக்குள் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள தேவைப்பட்ட காலம். 2001 முதல் 2015 வரை அவர் மத்தியுடன் செய்த இணக்க அரசியல் மூலம் எம் மக்களுக்கு பெற்றுத்தந்த அரசியல் அதிகாரங்கள் என்ன என்ற கேள்விக்கு ஒன்றும் இல்லை என்ற பதில் தான் கிடைக்கும்.

புலிகள் இவர் மீதான கொலைவெறி தாக்குதலை பல தடவை நடத்தியுள்ளனர். அந்த அநுதாபம் தெற்கில் இவர்மீது ஒரு மென்போக்கை தோற்றுவித்தது. ஈழத்தை ஆயுதபோராட்டத்தின் மூலம் அடைய முற்பட்டு முடியாமல் அபிவிருத்திக்காக இணக்க அரசியல் செய்வதாக கூறும் டக்ளஸ் அதனை தன் கட்சிசார் நலனுக்கா அல்லது அதிகார பகிர்வுக்கா பயன் படுத்தினார்? இணக்க அரசியலின் பிதாமகன் தான் தான் என தன்னையும் தன்னை பின் தொடர்பவர்களையும் எண்ணவைக்கும் அவருக்கு ஏற்கனவே இணக்க அரசியல் செய்தவர்களின் வரலாறு தெரியாதா? ஆரம்பத்தில் தந்தை செல்வா செய்ய முற்பட்டது இணக்க அரசியல் தான். அவர் அதிகார பகிர்வுடனான அபிவிருத்தியை கேட்க அதை தர தெற்கு உடன்படாததால் அவரால் இணங்க முடியவில்லை.

60 வருடங்களாக எதை சாதித்தீர்கள் என சுமந்திரனிடம் கேட்ட டக்ளஸ் அந்த 60 ஆண்டுகளுள் அவர் பங்குபற்றிய 37 வருட ஆயுத, பாராளுமன்ற செயல்பாடுகளும் உள்ளடங்கும் என்பதை கணக்கில் கொள்ளவேண்டும். தன் அரசியல் பலத்துக்கேற்ப பல அபிவிருத்திகளை இணக்க அரசியல் மூலம் பெற்று தந்ததாக கூறும் டக்ளசுக்கு முன்பே தமிழ் காங்கிரஸ் மத்தியுடன் இணங்கி ஒரு சிலர் மந்திரியானதால் சீமெந்து, இரசாயன, காகித, உப்பளம், இல்மனைற் தொழிற்சாலைகள் என அபிவிருத்தியோடு சம்மந்தப்பட்ட விடயங்கள் எம்மண்ணில் இடம்பெற்றன. அதே காலகட்டத்தில் தான் கல்லோயா, கந்தளாய், பதவியா என அரச அனுசரணை சிங்கள குடியேற்ற திட்டங்களும் வந்தன. எம் மண்ணில் அபிவிருத்தி ஒருபுறமும் நில ஆக்கிரமிப்பு, மொழிக் கொள்கை என்பன மறுபுறமும் நடந்தேறின. அதனால் தான் டக்ளஸ் போன்றவர்கள் ஆயுதம் ஏந்தும் நிலை ஏற்பட்டது.

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி எனும் கருணாநிதியின் சுலோகத்தை சுவீகரித்த டக்ளஸ் அதனுடன் பிரிக்க முடியாத வடக்கு கிழக்கு தாயகம் என ஆரம்பத்தில் கூறிவந்தார்.
இன்று அவர் கூறும் அவரின் 20 வருட இணக்க அரசியல் காலத்துள் தான் கிழக்கு பிரிக்கப்பட்டது. ஜே ஆர் அதை இணைத்த முறை சட்டவலிதற்றது என்றே நீதிமன்றம் வியாக்கியானம் செய்தது. அப்போது அதை மீண்டும் சட்டரீதியாக இணைப்பதற்கு வேண்டிய ஏற்பாட்டை ஜனாதிபதி மகிந்தவை கொண்டு தனது இணக்க அரசியல் மூலம் செய்விக்க டக்ளசால் முடியவில்லை. சலுகைகளை பெறுபவர்களால் உரிமைக்காக வாதாட முடியாது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.

அன்று அந்த இணைந்த சபையை உருவாக்கிய ஈ பி ஆர் எல் எப் பொன்னான வாய்ப்பை தவறவிட்டதாக அந்த நிகழ்ச்சியில் கூறிய டக்ளஸ் தான் தவறவிட்ட சந்தர்ப்பங்களை நினைவில் கொள்ளவேண்டும். புலிகள் அரசியல் காரணங்களால் அதை ஏற்கவில்லை என கூறிய அவருக்கு அதே அரசியல் காரணங்களால் தான் அந்த சபையை தொடர்ந்து நடத்த முடியவில்லை என்பது புரியவில்லையா? பிரேமதாசாவின் அனுசரணையில் அரசியல் செய்ய தொடங்கிய அவருக்கு இந்திய இலங்கை ஒப்பந்தம், மாகாணசபை முறைமை, அதிகார பகிர்வு என்பவற்றில் பிரேமதாசாவின் நிலைப்பாடு தெரியாதா?

650 வது மின்னல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கருணா புலிகளின் முழுமையான நோக்கம் வட-கிழக்கு மாகாண சபையை செயலிழக்க செய்வதுதான் என பகிரங்கமாக கூறியதை ஏற்கும் மனப்பக்குவம் டக்ளசுக்கு இவ்வளவு பட்டறிவுக்கு பின்பும் வராதது ஏன். தான் வளர்ந்து வந்த பாசறையை வசைபாடுவது தான் அவரது அரசியல் நாகரிகமா? தனது அரசியல் சக்திக்கேற்ப தான் சாதித் அறிவியல் நகரம் பற்றி அந்த நிகழ்ச்சியில் பெருமைப்பட்ட அவர் அடுத்தவர்கள் சாதித்தவைகளை ஏற்காது சிறுமைப்படுத்திய செயல் அவரின் அரசியல் காள்புணர்ச்சியையே வெளிக்காட்டியது.

அன்று அமைக்கபட்ட வட - கிழக்கு மாகாண சபை செயல்பட்ட விதம் அதில் அமைச்சு செயலாளர்களாக செயல்பட்ட இலங்கை நிர்வாக சேவை முதல்தர அதிகாரிகள், அவர்களின் செயல்பாட்டால் அன்று தென்னிலங்கைக்கு ஏற்பட்ட கலக்கம் என்பன பற்றி நீறுபூத்த நெருப்பாக இருக்கும் என் நினைவுகளை பிறிதொரு சந்தர்ப்பத்தில் பதிவுசெய்வேன்.
சந்திரிகாவின் தீர்வு திட்டத்தை யு என் பி யுடன் எதிர்த்ததாக கூட்டணி மீது குற்றம்சாட்டிய டக்ளசுக்கு அதில் நடந்த உள்குத்து வேலை தெரியாதா?

நீலன், பீரிஸ், கேதீஸ்வரன் தயாரித்த பொதி, யு என் பி பார்வைக்கு அனுப்பப்பட அவர்கள் அதில் பலவற்றை நீக்கும்படி கூற சிலவற்றை நீக்கிய பின்பு அது சமர்ப்பிக்கப்பட்டபோது அதிகாரங்கள் அதிகம் என கூறியே யு என் பி எதிர்த்தது. ஆரம்பத்தில் இருந்ததை விட அதிகாரங்கள் குறைவு என்பதால் தான் கூட்டணி அதனை எதிர்த்தது. அந்த பொதியை அன்று ஏற்றிருந்தால் இன்று எம்மில் பலர் உயிருடன் இருந்திருக்க மாட்டோம் என அண்மையில் திரு சம்மந்தர் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். புலிகளின் துப்பாக்கிகள் பலரை மௌனிக்க செய்த காலம் அது.

ஒருவர் தன் இயலாமையை ஒத்துக்கொண்ட பின் அவர்களை இழிவு படுத்தல் சிறுமையிலும் சிறுமை. உண்மை நிலை அறிந்தும் டக்ளஸ் அந்த நிகழ்ச்சியில் அதுபற்றி குறிப்பிட்ட போது சுமந்திரன் அதைப்பற்றி வாதிடாது ஏற்றுக்கொண்ட போதும் கூட்டணி ஆதரித்திருந்தாலும் 3 ல் 2 பெரும்பான்மை இல்லாததால் அதை நிறைவேற்றியிருக்க முடியாது என்ற உண்மையையும் டக்ளசுக்கு தெளிவு படுத்தினார்.

சிறைகளில் தடுத்து வைத்திருப்போர் விடுவிப்பு, மக்களின் காணிகள் விடுவிப்பு பற்றி சுமந்திரன் கூறிய எதையும் ஏற்காத டக்ளஸ் தொடர்ந்தும் விதாண்டவாதம் தான் புரிந்தார்.
யுத்தம் முடிவிற்கு வந்து 6 வருடங்களுக்கு மேலாகியும் தன் இணக்க அரசியலால் செய்து முடித்திருக்காத விடயங்களை, 9-1-2015 ல் வந்த புதிய ஆட்சியின் தேசிய சபையில் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பு, நிகழ்ச்சி ஒளிபரப்பான 21-06-2015 வரையான 130 நாட்களுள் ஏன் முடிக்கவில்லை என கேட்டது விநோதமானது.

தான் மட்டும் தன் அரசியல் பலத்துக்கேற்ப படிப்படியாக விடயங்களை கையாண்டதாக அந்த நிகழ்ச்சியில் கூறிய அவர் அடுத்தவர் மட்டும் அனுமான் போல் திடீர் விஸ்வரூபம் எடுக்கவேண்டும் என மக்கள் தொலைகாட்சியில் விமர்சிப்பது அரசியல் நோக்கம் கொண்டது.
சுமந்திரன் தாம் இதுவரை மேற்கொண்ட முன் முயற்சிகள் அதனால் கிடைத்த பலன்கள், கிடைக்ககூடிய பலாபலன்கள் பற்றி தெரிவித்த போதும் ஏற்கும் மனப்பக்குவத்தை இன்னமும் டக்ளஸ் வளர்த்துக்கொள்ளவில்லை என்பது வெளிப்படையாக தெரிந்தது. 19 தாவது திருத்த சட்டத்தில் பன்முகத்தன்மை (Pluralistic Character)என்ற பதம் உள்ளடக்கப்பட்டுள்ளது என்ற விடயத்தை அந்த நிகழ்ச்சியில் தான் அறிந்து கொண்ட டக்ளசிற்கு அதன் தமிழ், ஆங்கில அர்த்தத்ததை புரியவைக்க சுமந்திரன் முயன்றபோதும் டக்ளஸ் விதாண்டவாதம் புரிந்தார்.

சந்திரிகாவின் தீர்வு திட்டவரைபை கூட்டணி எரித்தது தனக்கு தெரியாது என கூறிய ரங்காவிடம் நீங்கள் இப்போது தான் பாராளுமன்றம் வந்தீர்கள் நான் 20 வருடமாக இருக்கிறேன் என ஏற்கனவே டக்ளஸ் கூறிய பதிலை கவனத்தில் எடுத்து பன்முகத்தன்மை பற்றிய விளக்கம் கொடுத்தபோது சுமந்திரன் நாசூக்காக டக்ளசிடம் 20 வருடங்கள் பாராளுமன்றத்தில் இருந்தால் போதாது அங்கு வெளியிடப் படுவனவற்றை படித்து விளங்கிக் கொள்ளவேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

எல்லாவற்றிற்கும் மேலாக எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் காணிகள் விடுவிப்பு சம்மந்தமான நீதிமன்ற தீர்ப்பு வந்ததாக சுமந்திரன் கூற யாருடைய ஆட்சியில் வந்தது என டக்ளஸ் உள்ளார்ந்த பெருமிதத்துடன் கேட்டதன் மூலம் மகிந்த ஆட்சி காலத்தில் நீதித்துறை அரசியல் தலையீடு கொண்டதாக இருந்தது என்பதை அதன் மந்திரிசபை அமைச்சரான தன் வாக்குமூலமாக பதிவு செய்தார்.

இணக்க அரசியல் செய்த டக்ளசை ஒரு அடையாள சின்னமாகவே அரசுகள் பயன்படுத்தின. வடக்கின் தமிழர் தம் அமைச்சர் என அகிலத்திற்கு காட்டவே அவர் பயன்பட்டார். ஆனால் ஆரம்பத்தில் தன் தலைமையில் அவர் அமைக்க விரும்பிய இடைக்கால நிர்வாக சபையை கூட அவரை அமைக்க விடவில்லை. புலிகள் இருந்தபோதே பிள்ளையானை கிழக்கின் முதல்வராக்கிய சிங்களத்தின் தந்திரம் புலிகள் மௌனிக்கப்பட்ட பின் கூட டக்ளசிற்கு வடமாகாண சபையை கிடைக்காமல் செய்தது. இத்தனை விட்டுக்கொடுப்புகளுடன் தான் டக்ளஸ் தன் இணக்க அரசியலை செய்துள்ளார்.

அதனால் தான் அதிகார பகிர்வு விடயத்தில் அமைச்சரவை அமைச்சராக இருந்த அவரால் ஆளுமை செலுத்த முடியவில்லை. அபிவிருத்தி விடயங்களில் கூட அவர் முன்வைத்த கோரிக்கைகள் முளுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இராணுவ தலையீட்டுக்கு அவரும் விதிவிலக்கல்ல. அதனால் தான் தேர்தல் காலங்களில் மட்டும் மையிலிட்டி மக்களை அழைத்து சென்று அவர்களின் காணிகளை காட்டுவதும் ஓமந்தை சோதனை சாவடியை திறந்து விடுவதுமான நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடந்தேறின.

பொது வாழ்க்கையில் ஒருவர் செய்யும் நல்ல விடயங்களை மக்கள் மட்டுமல்ல வரலாறும் மறப்பதில்லை. ஆனால் நான் மட்டும் தான் செய்தேன் எனும் இறுமாப்பும் நிலைப்பதில்லை.
வரலாறு சகலதையும் பதிவு செய்யும். அரசியல் காழ்ப்புணர்ச்சி எம் காதுகளை கேட்கவிடாது கண்களை பார்க்கவிடாது. ஆரோக்கியமான அரசியலுக்கு அடுத்தவர் சாதித்ததை பார்த்தும் கேட்டும், பாராட்டி பேசும் பண்பு வேண்டும்.

"வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்" என்கிறார் திருவள்ளுவர் (குறள் 471) .
இதன் விளக்கம் *அடுத்தவருடன் பொருந்திய முறையில் நடக்காமல், தன் வலிமையையும் அளந்தறியாமல், தன்னைப் பெருமையாக வியந்து கொண்டு செயல்படுபவன் விரைவில் வீழ்ச்சியை சந்திப்பான் * பொழிப்புரை டாக்டர் மு வரதராசன்
(மாதவன் சஞ்சயன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com