Contact us at: sooddram@gmail.com

 

இனரீதியான பிரச்சினைகளை கடந்து தமிழ், சிஙகள, முஸ்லிம், மலையக மக்கள் ஒண்றிணைந்து ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியம்

'ஆறு கடக்கும் வரை அண்ணன், தம்பி கடந்தபின் நான் யாரோ நீயாரோ' எ;ன்று தமது காரியமானதும் நண்பர்களை மறந்து விடுபவர்கள் பற்றிச் சொல்லப்படுவதுண்டு. அரசியலில் இந்த வகையான நபர்களை, இந்த மாதிரியான சம்பவங்களை நாம் திரும்ப திரும்ப காண்கிறோம், கேள்விப்படுகிறோம். அதிகாராத்திற்கு வரும்வரை அரவணைப்பதும் உத்தரவாதங்களை வழங்குவதும் அதிகாரத்திற்கு வந்ததும் தூக்கி எறியப்படுவதும் சாதாரண நடைமுறையாக உள்ளது.  ஒரு குறித்த இலக்கினை எட்டுவதற்காக உருவாகின்ற அணி சேர்க்கைகள் பின்னர் உடைந்து உதிர்ந்து காலவதியாகிப்போன உலக வரலாறுகளும் உண்டு.
புலிகளின் ஏக பிரதிநிதித்துவ அகங்காரத்திற்கு எதிராக, ஜனநாயக விரோதப் போக்குக்கு எதிராக நாம் வௌ;வேறு காலகட்டங்களில் வௌ;வேறு சக்திகளுடன் இணைந்து போராடியிருக்கிறோம். இதற்காக நாங்கள் கைகோர்த்துக் கொண்ட பலர் ஏக பிரதிநிதித்துவ மோகம் கொண்டவர்களாகவும், பன்மைத்துவத்தை நிராகரிப்பவர்களாகவும் வளர்ந்த கசப்பான வரலாற்றையும், சுயலாபம், கட்சி நலன் என்ற குறுகிய எல்லைகளுக்குள் செயற்பட்டவர்களையும் சந்தித்திருக்கிறோம்.

இப்போது நாங்கள் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறோம். இந்த தேர்தலில் தமிழர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாரை ஆதரிப்பது என்பதை வெளிப்படையாகச் சொல்லுவதே தேர்தல் முடிவுகளை பாதிக்கும் என்ற கருத்து வலுவாக உள்ளது. இதனால். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது முடிவுகளை தாமதமாகவே அறிவித்தது எனவே, தமிழ் மக்களுடைய பிரசச்சினைக்கான தீர்வு குறித்து பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் இடம்பெறவில்லை என்று; விசனப்படுவது அர்த்தமற்றது. இந்த தேர்தலில் தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து பேசப்படாத சூழ்நிலை உருவாகியிருப்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பாதகமான அம்சம் ஏனெனில் தெரிவு செய்யப்படுகின்ற ஜனாதிபதிக்கோ அல்லது சம்பந்தப்பட்ட அணிகளுக்கோ தமிழ் மக்களுடைய பிரச்சினை குறித்து எந்த கடப்பாடும் கிடையாது.

எந்தவித இணக்கப்பாடும் கிடையாது. தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவும் தேவைப்படும் இன்றையை சூழலில் தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்ல முடியாதவர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான உறவை பகிரங்கப்படுத்துவதன் மூலமே சிங்கள மக்கள் மத்தியில் தமக்கு வாக்குச் சேகரிக்க முனைபவர்கள் சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்று தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பது சுலபமானதில்லை. இந்த மோசமான நிலைக்கு பேரினவாதிகள் மட்டும் காரணமல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் ஆயுதம் ஏந்தாத புலிகளாக நடந்துகொள்வதும் காரணமாகும். மேலும் 2009 க்கு பின்னர் கூட தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு சிங்கள மக்களின் ஆதரவை பெறுவதற்கான எந்த வேலைத்திட்டத்தினையும் முன்னெடுக்கவில்லை. ஐக்கிய இலங்கைக்குள் பிரச்சினைக்கு தீர்வுகாணப் தயார் எனக் கூறிக்கொள்பவர்கள் இந்த நாட்டின் சட்டவாக்க சபையின் பிரதிநிதிகளாக சிங்கள மக்களின் பிரச்சினைகள் குறித்துப் பேசிய வரலாறும் இல்லை.

தமிழ் மக்களுக்கெதிரான குற்றங்களை புரிந்த, தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து பேசப்படாத, பேசத் தயாரில்லாத வேட்பாளர்களை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யும் இந்த தேர்தலை பகிஸ்கரிப்பதா?  அரசியல் தீர்வு, சிங்கள குடியேறறம், இராணுவ தலையீடு, பாதுகாப்பு வலயம், கைதிகளின் விடுதலை போன்ற தமிழ் மக்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்துகின்ற ஒரு ஜனாதிபதி வேட்பாளர் வாய்த்திருப்பாரானால் தமிழ் மக்களின் தெரிவு இலகுவானதாக இருந்திருக்கும். ஆனால் துர்ப்பாக்கியம் ஆட்சியதிகாரத்துக்கு வரும் வாய்ப்புள்ள இரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுமே சிறுபான்மையினரின் பிரச்சினைகள் குறித்துப் பேசவில்லை. எனவே இருவரையும் நிராகரிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.


தமிழர்கள் இந்த தேர்தலைப் பகிஸ்கரித்தாலும், ஜனவரி 9 ம் திகதி ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடுவார். அடுத்துவரும் 6 ஆண்டுகள் அவர் இந்த நாட்டினை பரிபாலனம் செய்யும் அதிகாரத்தைப் பெற்றிருப்பார். மஹிந்த ராஜபக்ஸ தேர்ந்தெடுக்கப்பட்டால் அடுத்து வரும் 8 ஆண்டுகள் அவரே ஆட்சிஅதிகாரத்திலிருப்பார். எனவே, இவர்களது ஆளுகையின் கீழ் இவர்களது சிந்தனைகளாலும் திட்டங்களாலும் விளையும் நன்மை தீமைகளால் பாதிப்புக்கு உள்ளாகப் போகும் தமிழ் மக்கள் இவர்களை தெரிவு செய்யும் விடயத்தில் மட்டும் ஒதுங்கியிருப்பது சரியானதா?

மஹிந்த ராஜபக்ஸவிற்கும், மைத்திரிபால சிறிசேனாவிற்கும் வித்தியாசம் இல்லை. மேதகமும், கொழுக்கட்டையும் போல உள்ளுடன் ஒன்றுதான் என்பவர்களும் இராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன இராமனுடன் வந்த குரங்கு ஆண்டாலும் எங்களுக்கு ஒன்றுதான் என்று எளிமைப்படுத்தப்பட முடியாது. நிறைவேற்று அதிகாரம் என்பது பல்வேறு பிரச்சினைகள், பல்வேறு பரிமாணங்களுடன் தொடர்புடையது.
ஒவ்வொருவரதும் உணவு, உடை, உறையுள், தனிநபர் வருமானம்;, இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு, விவசாயிகளின் விளைபொருட்களுக்கான விலை, உங்கள் பிள்ளைகளின் கல்விக்காக செலவிடப்படும் தொகை, இந்த நாட்டில் எத்தனை பேருக்கு ஒரு வைத்தியர் பணிபுரிவார் என்பவற்றைத் தீர்மானிக்கும் சர்வ வல்லமையும் ஜனாதிபதியின் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருப்பது இந்த நாட்டின் அரசியல் முறைமை என்றுள்ளபோது இந்த விவகாரங்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு அக்கறை இல்லாமல் இருக்கலாம்.

இங்குள்ள சாதாரண தமிழ் மக்கள் உழைக்கும் மக்கள், மேற்படி விவகாரங்களில் அக்கறை செலுத்தாமலிருக்க முடியாது. இந்த விவகாரங்கள் செவ்வனே இடம்பெறாத போது, முறைகேடுகள் நிலவும்போது, பாரபட்சம் காட்டப்படும் போது தமிழ் மக்களும் பாதிக்கப்படுவார்கள். அவ்வாறு பாதிப்புக்கள் ஏற்படும் போது தட்டிக் கேட்கின்ற, வீதியில் இறங்கி போராடுவதற்கான ஜனநாயக உரிமை மக்களுக்கு வேண்டும், இவற்றை அச்சமின்றி வெளிக்கொண்டுவருகின்ற ஊடகத்துறை வேண்டும். தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டம் கூடுவதற்கு பொலிஸ் அனுமதி மறுத்ததை கண்டிப்பவர்கள், இந்த அராஜகத்தை ஒழிக்க போராடுவோம் என்று மக்களுக்கு அறைகூவல் விடுப்பவர்கள் இந்த காவல்துறையை வழிநடத்தும் அரசுத் தலைவரை தெரிவு செய்யும் வாய்ப்பு கிட்டும்போது வாழாவிருங்கள் என்கிறார்கள்.  தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஆவன செய்வதும் அதிகாரப்பகிர்வு தொடர்பாகவோ, சமஷ்டி தொடர்பாகவோ, சுயநிர்ணய உரிமை தொடர்பாகவோ பேசுவதற்கான இடத்தை ஏற்படுத்தித் தரும். சூழலை தகவமைத்துக் கொள்வதும் தமிழ் தலைமைகளின் கடமைதான்.

தேர்தலை பகிஸ்கரிக்குமாறு அல்லது தமிழர்களின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்கின்ற சிறிதுங்க ஜெயசூரியாவுக்கு கொள்கை அடிப்படையில் ஆதரவு வழங்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மாகாண சபை உறுப்பினருமான ரெலோ இயக்கத்தை சேர்ந்த சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கம் போட்டியிட்டதை எனது வெற்றிக்கு உதவுவதற்காகத்தானே நீங்கள் போட்டியிட்டீர்கள் என்று பலர் முன்னிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்ததையும் மறந்து அவர் மீண்டும் இவ்வாறு கூறியுள்ளார். சரத் பொன்சேகாவிற்கு கிடைக்கவிருந்த தமிழ் மக்களின் வாக்குகளை சிவாஜிலிங்கம் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டு தடுத்ததையே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

சிறிதுங்க ஜயசூரியா அவர்கள் உண்மையாகவே தமிழர்கள் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை உடையவர்கள் என்பதை அங்கீகரிக்கும் ஒருவராக இருக்கலாம். ஆனால், எதிர்வரும் 9ம் திகதி இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரப்போகிறவர்கள் ஒன்று மஹிந்த ராஜபக்ஸ அல்லது மைத்திரிபால சிறிசேனா என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிப்பது போல பிரிந்துபோகும் சுயநிர்ணய உரிமையை நினைத்துக்கொண்டு வாக்களித்து விட்டு தேர்ந்தெடுக்கப்படுகின்ற ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் அடிப்படை உரிமைகளையும் பறிகொடுத்து, அன்றாடப் பிரச்சினைகளுக்கும தீர்வுகாணமுடியாமல் நிற்பதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
தமிழர்களின் தனிநாட்டு கோரிக்கையை அங்கீகரிப்பதாகக் கூட ஒருவர் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட முடியும். தமக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றால் அவர்களது வாக்குகள் எதிரணிக்கு கிடைக்காமல் செய்வதற்காக, வாக்குகளை பிரிப்பதற்காக புதுப்புது வாக்குறுதிகளுடன் வேட்பாளர்களை நிறுத்துவது. ஏதிரணிக்கு ஆதரவான பிரதேசங்களிலிருந்து மக்கள் வாக்களிக்கச் செல்வதை தடுப்பது போன்ற, ஏற்கனவே அறிந்த, அனுபவித்த தந்திரங்களுக்குப் பலியாகுவதாகவே தேர்தல் பகிஸ்கரிப்பும், பிரிந்துபோகும் சுயநிர்ணய உரிமையை தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியதற்காக வாக்களிப்பதும் முடியும்.

இந்த நாட்டிலேயே இரண்டு கட்சிகள் தான் இருக்க முடியும் பிராந்தியக் கட்சிகள் இந்த தேசியக் கட்சிகளுடன் இணைந்து செயற்படலாம் என்ற கருத்தின் அடிப்படையில் நுணுக்கமாக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து சிறுபான்மை இனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் பிராந்திய கட்சிகள் எச்சரிக்கையுடன் செயற்படாதிருக்க முடியாது.
சிறுபான்மையினரின் உரிமைகளை வலியுறுத்தும் கட்சிகளுக்குப் பதிலாக இலகுவாக கையாளத்தக்க, குறுகிய நோக்கங் கொண்ட தனி நபர்களை வளர்த்து விடுவதுடன் சிறுபான்மையினரின் அரசியல் கோரிக்கைகளை திசை திருப்புவது, வலுவிழக்கச் செய்வது மலினப்படுத்துவது. சிறுபான்மை இனங்கள் மத்தியில் பிராந்திய கட்சிகளை, இனங்களை கூறு போடுவதற்கு அனைத்து அரச வளங்களையும் பயன்படுத்துவது வளர்ந்துவரும் இந்த போக்குகள் ஆபத்தானவை.

பொது எதிரணியினர் ஏற்பாடு செய்யும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் புகுந்து குழப்பம் விழைவிப்பது, கலைஞர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல், பொது எதிரணிக்கு ஆதரவளிக்க முன்வந்த சோலங்காராச்சி போன்றவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில், புலிகள் இதர கட்சிகள் அமைப்புக்கள் அச்சுறுத்த எடுத்த நடவடிக்கைகளின் சாயலே தெரிகிறது.
நெடுந்தீவிலிருந்து ஈபிடிபி காரியாலயங்களை அகற்றுவதற்கு கஜேந்திரன் தலைமையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களும், கைதடியில் ஆனந்தசங்கரி அவர்கள் தலைமையிலான தேர்தல் பிரச்சார வாகனங்களை அடித்து நொருக்கிய புலிகளின் கைவண்ணமும் இதே வகைப்பட்டவையாகும் இந்த ஜனநாயக விரோதப் போக்குகளுடன் உடன்பட முடியாத, அவற்றை எதிர்த்துக் குரல்கொடுத்த எவரும் புலிகளின் பிடியிலிருந்து நாட்டை, தமிழ் மக்களை மீட்பதற்காக போரை நடாத்தியதாக கூறியவர்களிடமிருந்து இத்தகைய அராஜகங்களை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இந்த நாட்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஏன் சிங்கள மக்களுக்கும் மிகப்பெரிய நன்மை  வடக்கு கிழக்கில் பாரபட்சமின்றி போக்குவரத்து, (வீதிகள், பாலங்கள்), மின்சாரம், சுகாதாரம், கல்வி, நிர்வாகம் போன்ற துறைகளில் பெருமளவு உட்கட்டுமானங்கள் அபிவிருத்தியடைந்திருக்கின்றன என்பதையும் யாரும் மறுக்க முடியாது.

யுத்தம் காரணமாக உட்கட்டுமானங்கள் அழிக்கப்பட்டதுடன் நீண்ட காலம் புதிய நிர்மாணிப்புக்களோ, புனரமைப்புக்களோ இடம்பெறவில்லை. வடக்கு கிழக்கிலுள்ள மாவட்டங்களிலிருந்து அரசுக்கு கிடைத்து வந்த வருமானங்கள் வீழ்ச்சியடைந்திருந்தது. அரச நிர்வாகம் முற்றாகச் சீர்குலைந்திருந்த பிரதேசத்தில் இவற்றை இன்றைய காலத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிகள், குடிமக்களின் தேவைகளின் நிமித்தம் கட்டியெழுப்பப்புவது அதிகாரத்திற்கு வரும் அரசாங்கத்தின் பொறுப்பும் தேவையுமாகும்.
இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த 1988 காலப்பகுதியிலும் தடைப்பட்டிருந்த யாழ்ப்பாணத்திற்கான புகையிரதச் சேவை மீண்டும் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அன்று இதனை ஒரு பாரிய அபிவிருத்தி திட்டமாக யாரும் பார்க்கவுமில்லை, பேசவுமில்லை.

யுத்தம் காரணமாக மீண்டும் தடைப்பட்டுப்போன புகையிரதச் சேவை இப்போது வடபகுதி மக்களுக்கு கிட்டியிருப்பது மக்களின் போக்குவரத்தை இலகுவாக்கியிருப்பது உண்மை நேரடியாகவும், மறைமுகமாகவும் (கச்சான் விற்பவர் தொடக்கம் முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் வரை) வேலைவாய்ப்புக்களையும் ஏற்படுத்தியிருக்கிறது அதேவேளை நீண்டகாலத்தின் பின் இந்தப் புகையிரதச் சேவை அரசாங்கத்திற்கு வருமானத்தை தந்துகொண்டிருப்பதும் உண்மை.

யுத்தத்திற்குப் பின்னரான இந்த மீள்கட்டுமானங்கள், புனர்நிர்மாணப் பணிகளுக்காக பெருமளவு நிதி உதவிகளையும், கடன்களையும் உலக நாடுகள், சர்வதேச நிறுவனங்கள் வழங்கியிருக்கின்றன. இந்த உட்கட்டுமானங்கள் மக்களுக்கு அத்தியாவசியமானவை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களின் ஜீவனோபாயத்திற்கான வருமானத்தை பெறுவதற்கும், அவர்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்குமான நேரடியான தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தக்கூடிய அபிவிருத்தித் திட்டங்கள், ஒவ்வொரு பிரஜைக்கும் அல்லது வேலைவாய்ப்பற்றிருக்கும் இளைஞர் யுவதிகள் வருடத்தின் பாதி நாட்களுக்காயினும் வேலை கிடைப்பதற்கு உத்தரவாதமளிக்கும் திட்டங்களின் அவசியம் உணரப்படவில்லை.

விவசாயமும், மீன்பிடியும் பிரதான தொழிலாக உள்ள இந்த பிரதேசத்தில் இவற்றை மேம்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடும், வேலைத்திட்டங்களும் என்ன? அதிகார துஸ்பிரயோகமும், ஊழலும் இந்த உழைக்கும் மக்களின் மேம்பாட்டுக்கு அரசு ஒதுக்கின்ற மானியங்கள், உதவிகள் கூட உண்மையான பயனாளிகளை சென்றடைவதற்கான வழிகளை அடைத்து நிற்கின்றன.

கணிசமானவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கி, வடக்கில் இயங்கி வந்த காங்கேசன் சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை என்பன செயலிழந்துள்ள நிலையில் இளைஞர் யுவதிகளுக்கான உற்பத்தி சார்ந்த வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கான எந்தத் திட்டமும் நடைமுறைக்கு வரவில்லை.
வீதி அபிவிருத்தி போன்ற உட்கட்டுமானங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்களில் பெறப்படும் கமிஷன் பொதுவாகவே நாட்டில் இடம்பெறுவதாகக் குறிப்பிடப்படும் இலஞ்சம் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நிராகரிக்கப்படக் கூடியவை அல்ல.

அரசாங்கத்தில் பல்வேறு துறைகளுக்குமான அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருப்பினும் எல்லா துறைகளிலும் இடம்பெறும் வேலைத்திட்டங்களுக்கான பாரிய நிதி ஒதுக்கீடுகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாகவே மேற்கொள்ளப்படுவது குறித்த குமுறல்கள் தான் குடும்ப ஆட்சி என்ற குற்றச்சாட்டு எழுவதற்கும், அரசாங்கத்திற்குள்ளேயே அதிருப்திகள் தோன்றுவதற்கும் மூலகாரணமாக இருந்திருக்கிறது. அரசிலிருந்து வெளியேறியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ண அமைச்சுக்களுக்காக ஒதுக்கப்படும் நிதியில் 73 வீதம் ராஜபக்ஸ குடும்பத்தை சேர்ந்தவர்களின் பொறுப்பின் கீழுள்ள அமைச்சுக்களுக்கே ஒதுக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த நாட்டையும், இனங்களை கடந்து நாட்டு மக்களையும் நேசிப்பவர்கள் இந்தப் போக்கை ஆதரிக்கவியலாது.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வந்த திஸ்ஸ அத்தநாயக்கா சுகாதார அமைச்சராக்கப்பட்டுள்ளார்.

ஆனால், இந்த அரசாங்கத்தில் பங்காளிகளான இடதுசாரிக்கட்சிகள் சுகாதார அமைச்சைக் கோரியபோதும் ஒதுக்கிக் கொடுக்கப்படவில்லை. ஏகாதிபத்திய நலன்களுக்கு துணைபோகாது, இந்த நாட்டின் மீதும், மக்கள் மீதும் வேறெந்த அரசியல் தலைவர்களைக் காட்டிலும் பற்றுடையவர்களாகவும், இனங்களிற்கிடையே நல்லிணக்கத்திற்காக உண்மையாகப் பாடுபடுபவர்களாகவும், இந்த நாட்டு பிரிவினைக்கு எதிராகவும், ஐக்கியத்திற்காகவும் ஊழல் இலஞ்சம் என்பவற்றுக்கு ஆட்படாதவர்களாகவும் காலாகாலமாக அhப்பணிப்போடு செயற்பட்டு வந்த, நீண்டகாலமாகவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிகளாயுள்ள அனுபவமும், ஆற்றலும் வாய்ந்த இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களுக்கு, சிறுபான்மை இனங்களின் கட்சித் தலைவர்களுக்கு இந்த அரசாங்கத்தில் வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் இந்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும், நோக்கங்களையும் புலப்படுத்துகிறது. இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் சிரேஷ்ட அமைச்சர்களாக்கப்பட்டு ஓய்வளிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த அனுபவங்கள் ஆளுந்தரப்பு பொது எதிரணியினர் மீது தெரிவித்துவரும் குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மையை, தேர்தல் கால வாக்குறுதிகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்துகிறது.  முதலாளித்துவ ஜனநாயகத்தின் பண்பான சட்டவாக்கம், நிர்வாகம், நீதி ஆகிய துறைகள் ஒன்றன் மீது ஒன்று ஆதிக்கம் செலுத்துவது தவிர்க்கப்படாமையால் சர்வாதிகார போக்கு தலைதூக்கியிருக்கிறது.

திவிநெகும சட்ட வரைபு மாகாண சபைகளின் அதிகாரத்தில் தலையீடு செய்வதால் மாகாண சபையின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் நீதிமன்றம்; அறிவுறுத்தியது. வடக்கில் ஆளுநரிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டால் போதாது மாகாண சபையின் ஒப்புதல் அவசியம் என்ற மனுவிற்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. புpரதம நீதியரசர் மீது கொண்டுவரப்பட்ட குற்றப் பிரேரணைக்கும், அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கும் மூலகாரணம் என்பதை நாடே அறியும். புதிய பிரதம நீதியரசரை ஜனாதிபதி நியமித்துக்கொண்டார். அரசியலமைப்பு சட்டத்தில் 17 வது திருத்தச்சட்டம் நீக்கப்பட்டு 18 வது திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கையகப்படுத்திக்கொண்ட மேலதிக நிறைவேற்றதிகாரமே இவற்றைச் சாத்தியமாக்கியது.

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண ஜனாதிபதியால் சர்வகட்சி குழு நியமிக்கப்பட்டது இதன் தலைவராக அமைச்சர் திஸ்ஸவிதாரன ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். பல்வேறு சிரமங்கள் மத்தியில் இந்தக் குழுவின் சார்பில் அமைச்சர் திஸ்ஸ விதாரண சமர்ப்பித்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டது. இதன்பின்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவில் திஸ்ஸவிதாரணவும் இல்லை. இந்தநாட்டின் சிறுபான்மை இனங்களில் ஒன்றான முஸ்லிம் மக்களின் தலைவர் ரவூப் ஹக்கீமும் இடம்பெறவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்ட இந்த நடவடிக்கை தற்செயலானதா?

பல்வேறு அமைப்புக்களின் வௌ;வேறு கொள்கைளை கொண்டிருக்கும் உள்நோக்கங்களை கொண்டிருக்கும் பொது எதிரணியினால் ஒரு அமைப்பில்லாத தனிநபரான பொது எதிரணி வேட்பாளரினால் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட அம்சங்களை நிறைவேற்ற முடியுமா?  பொது எதிரணியினர் விடுத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டபட்டுள்ள பணிகளை, திட்டங்களை நிறைவேற்றுவார்களானால் மகிழ்ச்சிக்குரியதாகும். அவ்வாறு நிறைவேற்றாமல் கூட போகலாம். இன்றைக்கு பதவியிலுள்ள அரசாங்கம் 2005 இலும் 2010 இலும் பங்காளிக் கட்சிகளுக்கும் மக்களுக்கும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என நம்பினோம் ஆனால் நடக்காமல் போனது போல.

மாற்றத்தை ஏற்படுத்த விரும்புபவர்கள் இன்றுள்ள ஜனாதிபதியை மாற்ற வேண்டும் என்பது குறித்தும் கொண்டுவர விரும்புகின்ற ஜனாதிபதி எத்தகையவராயிருக்க வேண்டும் என்பது குறித்தும் தெளிவுடையவர்களாக இருப்பது அவசியம். தற்போதைய ஜனாதிபதி போர்க்குற்றம் புரிந்துவிட்டார் என்பதாலோ, புலிகளை தோற்கடித்து விட்டார் என்பதாலே இந்த மாற்றம் அவசியம் என்பது எமது கருத்தில்லை. யுத்தத்தின் பின்னரான இந்த அரசின் போக்கும், அதன் திட்டங்கள் பற்றிய அதிருப்தியுயே எம்மை எதிரணியை நோக்கித் தள்ளியுள்ளது. பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவார் என்ற அதீத நம்பிக்கையும் எமக்கில்லை.
பொது எதிரணி உண்மையான மாற்றாகாது, அவர்களால் எதையும் செய்ய முடியாது., எதையும் செய்ய மாட்டார்கள் என்ற எடுகோள்களிலிருந்துகொண்டு இப்போதைய ஜனாதிபதி ஆட்சியில் கிடைத்த அனுபவங்கள், ஆட்சி தொடர்பான விமர்சனங்கள், அதிருப்திகளின் மீது செயற்படாதிருக்க முடியாது.

இந்த அரசாங்கத்தின் திட்டங்களும், போக்கும், நடவடிக்கைகளும் இந்த நாட்டுக்கும், மக்களுக்கும், சிறுபான்மை இனங்களுக்கும் முழு நாட்டு மக்களுக்கும் ஏற்படுத்திவரும் பாதகமான விளைவுகளை தடுத்து நிறுத்துவது இனரீதியான பிரச்சினைகளுக்கான தீர்வு என்ற எல்லைகளை கடந்து தமிழ், சிஙகள, முஸ்லிம், மலையக மக்கள் அனைவரின் முன்னாலும் இன்றுள்ள கடமையாகும்.
(மோகன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com