Contact us at: sooddram@gmail.com

 

நாடு கடந்த தமிழீழ தனிநாடு அரசின் மாண்புமிகு பிரதமர் திரு உருத்திரகுமாரின் கன்னியுரை இப்படியும் இருந்திருக்கலாம்

(மோகன்)

பெரும் மதிப்புக்குரிய ஆளுனர் அவர்களே, சர்ச்சைகளை சாதுரியமாக தீர்த்து வைக்கும் சக்தி படைத்த சபாநாயகர் அவர்களே, அவையினில் அமளிதுமளி பண்ணாமல் அமைதிகாக்கும் அன்புக்குரிய அமைச்சர் பெருமக்கள் அவர்களே, மற்றும் கௌரவ வேடத்தில் கௌரவமாக உட்காந்திருக்கும் உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்த வரலாறு படைத்த நாடு கடந்த தமிழீழ தனியரசின் மாண்புமிகு மதிப்புக்குரிய பிரதமராகிய நான் வணங்கிக்கொள்கிறேன்.

தமிழர் இல்லா ஊரில்லை தமிழருக்கென்று ஒரு ஊரில்லை என்ற நீணடகால ஏக்கத்தை தீர்த்து வைத்த இந்த வரலாற்று நாளில் என் கன்னியுரையை சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன், இந்த நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையிலே எங்கள் எல்லோரின் நேசத்திற்க்கும் மதிப்புக்கும் உரித்தான நமது தேசியத்தலைவரின் ஆத்மா சாந்தியடைய தொடங்கியிருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. தமிழர் இல்லா ஊரில்லை தமிழருக்கென்று ஒரு ஊரில்லை என்ற பெரும் ஏக்கம் என் மனதில் தோன்றியபோது நான் பட்ட துயர் சொல்லில் வடிக்கமுடியாது, அன்று நான் சபதம் எடுத்தேன் தமிழர் வாழும் நாடுகளிலெல்லாம் தமிழருக்கென்று தனியரசு அமைப்பதென்று பின்னர் அதன் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து பார்த்தபோது பொருளாதார ரீதியாக பாரிய தேவைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொண்டேன் என்னதான் புலம் பெயர்ந்த மக்கள் அள்ளிக்கொடுக்க தயாராக இருந்தாலும் அதனை தேவையில்லாமல் ஆற்றில் போடுவதில் எனக்கு உடன்பாடில்லை. எனவே இதற்கொரு மாற்று வழியை ஆராய்ந்து பார்த்தபோது தமிழர் வாழும் நாடுகளிலிலுள்ள மக்களுக்குள் போராட்ட மனப்பான்மையுள்ள தலைவர்களை தேர்ந்தெடுத்து உலகளாவிய ரீதியில் தமிழருக்கென்று தனியரசு உருவாக்குவதென்று முடிவெடுத்தேன் அதன் பலனைத்தான் இன்று நாம் கண்கூடாய் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

இத்தனை இலகுவாக தமிழருக்கென்று ஒரு தனியரசு அமைக்கமுடியும் என்ற உண்மை நமது தேசியத்தலைவருக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தால் அவர் தன்னையும் இழந்து தனக்கு முன்னால் பல ஆயிரம் மாவீரர்களையும் இழந்திருக்கமாட்டார் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. காலம் கடந்து நாம் அமைத்த இந்த தனியரசே நாம் மாவீரர்களுக்கு செய்த மாபெரும் காணிக்கையாக நினைத்து இதன் வழி தொடர உறுதியெடுப்போம். இந்த 'தனியரசு' அமைக்கும் முடிவெடுத்தபோது பலர் எள்ளி நகையாடினர் சிலர் துள்ளி குதித்தனர் இது முடியுமா என்று பலர் வாய் பிளந்து நின்றனர் இன்று அவர்களெல்லாம் வாய் மூடி நிற்க்கும் காட்சி என் கண் முன்னால் தெரிகின்றது, ஆனாலும் அவர்கள் மனம் ஆறவில்லை இந்த தனியரசால் தமிழருக்கென்ன லாபம் என்று விமர்சிக்க தொடங்கிவிட்டனர் அவர்களுக்கு தெரியாது தமிழருக்கு இருக்கும் ஒரே குறையும் ஏக்கமும் தமக்கென்று ஒரு அரசில்லையே, பிரதமராய் ஒரு தமிழரலில்லையே, அமைச்சர்கள் இல்லையே ஏன் ஒரு சபாநாயகர் கூட இல்லையே என்று, இன்று அவர்களின் கனவும் இலட்சியமும் தீர்ந்திருக்கம் வேளையிலும் கூட அவர்களுக்கு இதனால் என்ன லாபம் என்று குதர்க்கதனமாய் பிதற்றுகின்றனர்,

எதிர்க்கட்சி இல்லா அரசாங்கம் ஆரோக்கியமில்லாத ஆட்சியைத்தான் நடத்தமுடியும் என்பது எங்களுக்கும் தெரியும், எங்களுக்கு எதிர்க்கட்சி என்று எதுவும் இல்லாத போனாலும் உதிரிகளாக பல எதிரிகள் கட்சிகளாக இயங்காமல் கோஷ்டிகளாக இயங்குகின்றனர் அவர்களின் கோஷங்களிலிலுள்ள நல்லது கெட்டதை ஆராய்ந்து ஆட்சி நடத்தும் மனப்பக்குவம் எமக்கு உண்டென்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். இன்று எமக்கு முன்னால் பல ஆயிரம் கடமைகள் அணிவகுத்து நின்றாலும் நமது உடனடி கடமைகள் என்று சில முண்டியடித்து முன் நிற்க்கின்றன, இவை அனைத்துக்கும் நிதியின் தேவையே முக்கியமாகிறது. ஆதலால் இங்கு அமர்ந்திருக்கும் அங்கத்தவர்கள் அனைவரும் தங்கள் நாடுகளுக்கு திரும்பியவுடன் பகுதி நேரமில்லாமல் முழு நேரமாய் தொகுதி வாரியாய் நிதி திரட்டுவதில் தங்களை அர்ப்பணித்து கொள்ளவேண்டும். புலம் பெயர்நத மக்கள் இறுதி நேர யுத்தத்தின் போது இரவு பகல் பாராமல் வீதிகளில் இறங்கி போராடி அதன் பலன் கிட்டாமல் மனம் வெந்து கிடக்கிறார்கள் ஆதலால் எனிமேலும் அவர்கள் மீது பாரிய சுமைகளை சுமக்க வைக்காமல் அவர்கள் உங்களை நாடி வந்து நிதி தருவதற்க்கு முன்பாக நீங்களே அவர்களை தேடிச்சென்று நிதிகளை பெற்றுக்கொள்ளுமாறு அன்புக்கட்டளை இடுகின்றேன். உங்களுக்கே தெரியும் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அமைச்சுகளுக்கு தரப்பட்டிருக்கும் தலைப்புக்களுக்கு உங்களுக்கே என்ன அர்த்தம் என்று தெரியாது, இன்று இதுவே இந்த தனியரசின் உடனடி கடமையாகிறது இதற்க்காக பகுதி நேர பாடமெடுத்து உங்களுக்கு அர்த்தங்களை தெரியவைப்பதிலிருந்து நிதியின் தேவை முன்னிற்க்கின்றுது. நமது தாயகத்தில் அல்லறும் முன்னால் போராளிகளும் அவர்கள் தம் குடும்பத்தினருக்கும் நாம் இங்கிருந்து நேரடியாக நிதி உதவி செய்யமுடியாது என்று தெரிந்திருந்தாலும் அதற்க்கான நிதியை புலம் பெயர்ந்த மக்களிடமிருந்து திரட்டாமல் இருப்பது அது அந்த மக்களுக்கு செய்யும் மிகப்பெரும் துரோகமாகும் அதனை புலம் பெயர்ந்த மக்களும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதனை அவர்கள் 'வணங்காமண்' கப்பல் விடயத்தில் நிரூபித்து காட்டியிருக்கிறார்கள் எனவே இதற்க்கான நிதியை திரட்டி வெளிநாடுகளில் வர்த்தக நிலையங்களாகவோ, அடுக்குமாடி கட்டிடங்களாகவோ நாம் முதலீடு செய்து சிறிது காலம்  'காலம்' கனிந்து வருமா? என்று பார்ப்போம் அதே வேளையில் இனவாத சிங்கள அரசுக்கு இந்த மக்களுக்குரிய புனர் வாழ்வை வழங்கும்படி நெருக்குதல் கொடுப்போம் ஒருவேளை நமது நெருக்குதால் எமது மக்கள் புனர்வாழ்வு பெற்றுவிட்டால் நாம் முதலீடு செய்த வர்த்தக நிலையங்கள், அடுக்குமாடி கட்டிடங்கள் போன்றவற்றை இதுவரை காலமும் இரவுபகலாய் பொறுப்பேற்று தங்களை இந்த புனித போராட்டத்தில் அர்ப்பணித்  அந்த தியாகிகளுக்கு ஒரு கணிசமான தொகையை வழங்கி விட்டு மிகுதி ஏதும் இருந்தால் இந்த நாடு கடந்த அரசின் கயானாவில் வைப்பு செய்வோம். நாம் முதலீடுகளை பொறுப்பேற்க்கும் நபர்களை தெரிவு செய்யும் போது முடிந்தவரை முன்னாள் பொறுப்பாளிகளை தவிர்த்து புதியவர்களுக்கு சந்தர்பம் கொடுப்பதில் முன்னுருமை வழங்குவதில் அவதானமாக இருக்கவேண்டும் ஏனெனின் எமது மக்களின் நிதி ஒரு சில பேருக்குள் சுருங்கிவிடக்கூhடாது. இத்தருணத்தில் புலம் பெயர்ந்த மக்களிடம் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன் நமது நாடு கடந்த அரசின் மிகக்கடுமையான கொள்கை இலஞ்சமாகவோ, அன்பளிப்பாகவோ பணம் வாங்குவதும், கொடுப்பதும் ஆதலால் நீங்கள் கொடுக்கும் நிதி நீண்ட கால கடன் அடிப்படையில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்பதனை நீங்கள் மனதில் கொள்ளவேண்டும். நீங்கள் உங்களுக்கான குறைந்தபட்சம் இரண்டு தலைமுறைகளுக்கான வாரிசுகளின் விபரங்களை நிதி சேகரிப்பவர்களிடம் வழங்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், அந்த வாரிசுகளிடமிருந்து அடுத்த இரண்டு தலைமுறைகளுக்கான வாரிசுகளுக்கான விபரம் சேகரிக்கபடும்.

எனவே அன்பார்ந்த உறுப்பினர்களே! நீங்கள் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அமைச்சுகளின் பொறுப்புகளை எப்படி செயல்படுத்துவது என்று எண்ணி அங்கலாய்க்கவேண்டாம் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அமைச்சுகளின் தலைப்புகள் மட்டுமே வேறுபட்டிருக்கும் ஆனால் எல்லா அமைச்சுகளின் பொறுப்பும் நிதி சேகரிப்பதே அதில் நீங்கள் திறம்பட செயலாற்றி நீங்கள் மக்களின்; தொண்டர்கள் என்பதை அவர்களிடம் நிரூபித்து காட்டுங்கள். மக்களின் வீடு வீடாய் சென்று கதவை தட்டி நிற்க்காவிட்டால் எந்த மக்களால் நீங்கள் தேர்ந்தெடுக்கபட்டீர்களோ அதே மக்களால் நீங்கள் தூக்கியெறியப்படுவீர்கள் என்பதை மனதில் நிறுத்தி செயலாற்றுங்கள். நாடு கடந்த தமிழீழ அரசின் உருவாக்கத்தில் உங்கள் பங்கு நின்றுவிடப்போவதில்லை இதை கொண்டு நடத்துவதிலேயே உங்கள் பாரிய பங்கு காத்திருக்கிறது.

பெரும்பாலான புலம் பெயர்ந்த மக்களுக்கு தமிழ் மக்களுக்கான தனிநாடு எமது சொந்த மண்ணிலேயே அமையவேண்டும் என்ற அவா இன்னமும் தணியாத தாகமா இருக்கின்றது என்பதை நாம் விளங்கிக்கொள்ளாமல் இல்லை. எங்களுக்கும் அந்த ஆசை இல்லாமல் இல்லை. ஒருவேளை அதற்ககான சந்தர்ப்பம் கடைசிவரை இல்லாது போய்விட்டால் எமது கனவுகள் நிராசையாக விடக்கூடாது என்பதற்க்காகவே இந்த நாடு கடந்த தனியரசு என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். ஆனானப்பட்ட தேசியத்தலைவராலேயே முடியாமல் போன ஒன்றை தேசம் விட்டு ஓடி வந்து எங்களால் முடித்து காட்டமுடியுமா என்பதை சிந்தித்து பார்க்கவேண்டும் அதற்காக சிங்கள அரசிடம் மண்டியிட்டு போனதென்று அர்த்தமில்லை சிங்கள தலைவர்களெல்லாம் புலம் பெயர்ந்த நாடுகளுக்கு விஜயம் செய்யும் ஒவ்வொரு வேளையிலும் ஆர்ப்பாட்டம் செய்து எங்கள் கோபங்களை இப்போதைக்கு தீர்த்து கொள்வதே எங்கள் உடல் நலத்திற்கு ஏற்ற ஒன்று. இல்லாதுவிட்டால் துரோகக் குழுக்களால் நாம் அழைக்கபடுவது போல் உண்மையிலேயே புலன் பெயர்ந்த மக்களாக மாறிவிடும் சாத்தியக்கூறுகள் உண்டு.

இன்னும் சிலர் நாம் சிங்கள அரசின் கைக்கூலிகளாக மாறிவிடும் சாத்தியக்கூறு உண்டு என்பதை கே.பியை மேற்க்கோள் காட்டி குற்றம் சுமத்துகின்றனர் நாம் தேசியத்தலைவரின் வழிகாட்டலில் வளர்ந்தவர்கள் அவரின் ராஜதந்திர நடவடிக்கைகளை முழுமையாக அறிந்தவர்கள் எங்களுக்கு வெளிப்படையான எதிரி சிங்கள அரசைவிட எங்களுக்குள் ஒளிந்துகிடக்கும் ஒட்டுண்ணி குழுக்களின் வளர்ச்சியே ஆபத்தானது என்பதை தேசியத்தலைவர் அன்றே அறிந்திருந்தலால்தான் இந்திய இராணுவம் எமது மண்ணை விட்டுச்சென்ற அடுத்தநிமிடமே அன்றைய ஜனாதிபதி பிரேமதாசாவின் உதவி பெற்று இந்த ஒட்டுண்ணி குழுக்களை அழித்தவர் அந்த ராஜதந்திரத்தை இன்றும் நாம் மறக்கவில்லை, இன்றும் அதேபோல் அதே ஒட்டுண்ணி குழுக்கள் ஒன்றுபட்டு வளர்ச்சியடையும் நிலைமை தோன்றியுள்ளது எனவே அவர்களின் வளர்ச்சியை தடுப்பதற்க்கு நாம் சில ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்க்கொள்வது தவிர்க்கமுடியாமல் போகலாம். நீங்கள் ஒன்றை மட்டும் கற்ப்பனை பண்ணி பாருங்கள் தலைவர் வாழ்ந்த மண்ணில் இந்த ஒட்டுண்ணிகளின் கைகள் ஓங்கிவிட்டால் அந்த தலைவரின் ஆத்மா எவ்வளவு வேதனைப்படும், நாங்கள் ஏற்க்கனவே எங்களுக்குள் வேறுபட்டு தலைவரின் ஆத்மாவை அந்தரத்தில் அலையவிட்டுவிட்டோம் மேலும் அந்த ஆத்மாவை காயப்படுத்தவேண்டுமா? தலைவர் அவர்களின் ஆத்மாவின் நிம்மதிக்காகவே எமது அனைத்து நடவடிக்கைகளும் அமையும் என்பதை மட்டும் நீங்கள் மனதில் கொள்ளவேண்டும்.

நாடு கடந்த அரசைப்போல் ஒரு சிலர் பிரித்தானியாவில் 'நாடு கடந்த நல்லூர்' என்ற ஒன்றை உருவாக்கப்போவதாக சேதியறிந்தேன். அவர்களின் இந்த செயல் இந்த நாடு கடந்த அரசை அவமானப்படுத்துவது போல் அமைகிறது, இப்படியே போனால் நல்லூரைத்தொடர்ந்து எல்லா ஊர்களும் நாடு கடந்து வந்துவிடும், அதனைத்தொடர்ந்து சிங்கள ஊர்கள் எல்லாம் எமது மண்ணை ஆக்கிரமித்துவிடும் எனவே இந்த ஆபத்தான நிலைமையை உணர்ந்து அவர்களை செயல்படுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்,

இறுதியாக சிங்கள அரசை எச்சரித்து வேண்டிக்கொள்வது எல்லாம் எங்கள் ஆயதப்போர் மௌனித்துப்போனதால் நாம் இந்த முடிவை எடுப்பது தவிர்க்கமுடியாது என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள், ஒரு சிலர் எண்ணுவது போல் புலம் பெயர்ந்த நாட்டிலுள்ள புலிகளின் சொத்துகளை பராமரிக்கும் ஓர் அறக்கட்டளை தான் இந்த நாடு கடந்த தமிழீழ அரசு ஆகவே என்னையும் நண்பர் கே.பியை போல் கண்ணை கட்டி கடத்தி செல்லுவதன் மூலம் இதன் சொத்துகளை அபகரிக்கலாம் என்று மனப்பால் குடிக்கவேண்டாம், நாங்கள் யார், எங்கள் நோக்கம் என்ன, எங்களால் என்ன செய்யமுடியும், நாங்கள் எதுவரை செல்லமுடியும் எனபதையெல்லாம் இதோ நான் இப்பொழுது உட்கார்ந்திருக்கிற பதவியில் இருக்க வேண்டியவரும் எனது நீண்ட கால நண்பரும் எனது நலனில் அக்கறையுள்ளவருமான கே.பி அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். நமது தனியரசு இப்பொழுது அரும்பாக பூத்திருக்கிறது இது காய்த்து கனியாக வரும்போதுதான் இதன் முழுப்பயனும் எல்லோருக்கும் கிட்டும் அதாவது எமது மக்களுக்கு கிட்டும் அதன் பிறகு என்னை கடத்தி சென்றாலும் எனது நோக்கம் நிறைவேறியது என்ற நிம்மதியோடு எனது மிகுதி வாழ்நாளை கழிப்பேன்.

என் மதிப்புக்குரிய உறுப்பினர்களே! எனது உரையை இதுவரை பொறுமையாக கேட்டதற்க்கு நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்து விடைபெறுகிறேன்

வாழ்க நாடு கடந்த தமிழீழ அரசு ஓங்குக அதன் புகழ் உலகமெல்லாம்

கேட்டு எழுதியவர்

மோகன், தை 30, 2011

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com