Contact us at: sooddram@gmail.com

 

வேண்டாம் எரிகிற வீட்டில் எண்ணை ஊற்றும் செயல்

(மோகன்)

இலங்கைத்தமிழர்கள் நிம்மதியாக வாழக்கூடாது என்பதில் புலிகளுக்கு இருந்த ஒரே கொள்கையை தமிழ்நாட்டு புலிப்பினாமிகளும் அதன் எடுபிடி ஒரு சில சினிமா கூத்தாடிகளும் தங்கள் கொள்கையாக விடாப்பிடியாக பிடித்து வைத்திருக்கின்றனர். இவர்களில் சிலருக்கு இலங்கையில் என்ன நடந்தது? அல்லது என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்பதை அறியாதவர்கள். மற்றவர்கள் என்ன நடந்தாலும் தங்களுக்கு வரவேண்டிய பஞ்சப்படியில் எந்த பாதகமும் வரக்கூhடாது என்பதில் முனைப்பாக இருப்பவர்கள். இலங்கைத்தீவில் நடந்து முடிந்தது பாதகமோ? சாதகமோ? இலங்கைத்தமிழர்கள் அதனை மறந்து தங்கள் எதிர்காலமாவது நிம்மதியாக இருக்கட்டும் என்று ஏங்கி இருக்கும் இந்த சந்தர்ப்பத்தை எப்படியாவது கெடுத்து அதன் மூலம் புலம் பெயர் புலிப்பினாமிகளின் வசூலை பெருக்கி தங்களின் வசதிகளையையும் பெருக்கி கொள்ளலாம் என்ற சுயநலத்தனத்தில் முனைப்பாக செயல்படுகிறார்கள். இலங்கைதமிழர்களின் பேரலவங்களுக்கு புலிகள் எப்படிப்பட்ட மாபெரும் பொறுப்பாளிகளோ அதே அளவுக்கு அவர்களை ஊட்டி ஊதி வளர்த்த இந்த தமிழ்நாட்டு புலிப்பினாமி கூட்டங்களுக்கும் சேரும்.

பேசிப்பேசி காலத்தை ஓட்டி கழித்து வரும் இந்தக்கூட்டங்களுக்கு உருப்படியாக எதுவும் செய்யவும் தெரியாது. அப்படி செய்ய நினைப்பவர்களையும் பிடிக்காது. இலங்கைத்தமிழனுக்கு அமைதியான வாழ்வு கிடைத்துவிட்டால் தங்களுடைய சுகமான வாழ்வின் அத்திவாரம் உடைந்துவிடும் என்பதால் இலங்கைத்தமிழர்களை மேலும் அழிவுக்குள் இட்டுச்செல்வதே இவர்களின் ஒரே இலட்சியம். தமிழர்களுக்காக அல்லும் பகலும் குரல் கொடுப்பதாக அலட்டிக்கொள்ளும் இந்த சீமான்கள் தங்கள் சொந்தப்பணத்திலிருந்த(அப்படி ஒன்று இருந்தால்) ஒரு ஓருரூபாய் நாணயத்தை இந்தியாவில் அல்லல்படும் இலங்கைத்தமிழனுக்கு உதவி செய்த சரித்திரம் இதுவரை இல்லை. நடிகர் நடிகைகளை இலங்கைக்கு போகக்கூடாது என்று போராடுவதன் மூலம் என்ன சாதிக்க நினைத்தார்களோ இந்த சாணக்கியன்கள். அப்படி தடையை மீறிச்சென்றவர்கள்தான் இலங்கைத்தமிழர்களுக்காக பள்ளிக்கூடம், நூற்றுக்கணக்கான தமிழர்களுக்கு கண் அறுவைச்சிகிச்சைக்கான உதவி என பல நல்ல காரியங்களை தங்கள் சொந்தப்பணத்தில் செய்ய முன்வந்திருக்கிறார்கள். ஊர்ப்பணத்தில் அதுவும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போல புலம் பெயர் ஈழத்தமிழனின் பணத்தில் உடம்பு வளர்க்கும் இந்த ஜென்மங்களுக்கு அவர்களை கண்டிப்பதற்கு என்ன அருகதை இருக்கமுடியும்.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு எவரும் அல்லது எதுவும் போகக்கூடாது என்றால் முதலில் தாங்கள் இயக்கி, நடித்து கிழித்து வரும் கண்றாவி தமிழ்ப்படங்களை இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்பதில் தொடங்கட்டுமே. (இலங்கைத் தமிழர்களுக்கு செய்யும் மாபெரும் நல்லகாரியமாக இது ஒனறாவது இருக்கும்) ஏனெனின் தமிழ்ப்படங்களை வியாபார ரீதியாக இறக்குமதி செய்வதும் சிங்கள அரசுதான், அந்தப்படங்களை பார்த்து புண்ணியம் அடைபவர்களில் கணிசமான தொகையினர் சிங்கள மக்களும்தான். இல்லவே இல்லை உங்கள் உலகத்தரம் வாய்ந்த படங்களை இலங்கைத் தமிழர்கள் பார்த்துத்தான் தொலையணும் என்று அடம்பிடிப்பீர்களானால் அந்தத்தொழிலை பழம் நெடுமாறன் கையில் ஒப்படைத்து விடுங்கள் அவர் தனது வானரக்கூட்டம் சகிதம் படப்பெட்டிகளை யாழ்ப்பாண கடற்கரையோரம் பக்குவமாய் இறக்கிவிட்டு திரும்பிவரட்டும்.

இலங்கைத்தமிழர்களை காப்பாற்ற என புலன(புலி) பெயர் தமிழர்களின் சில்லறைக்கு விலைபோன இந்த அவதார அரசியல்வாதிகள் எல்லோரும் சொந்த நாட்டின் செல்லாக்காசுகள். பக்கத்து வீடே அறிந்திராத பழ நெடுமாறன், நம்பி ஒப்படைத்ததை மனசாட்சியின்றி நாசமாக்கும் சீமான், துண்டை போட்டு தாண்டுவது போல கட்சிக்கு கட்சி தாவி அரசியல் நடத்தும் வீட்டிலே தெலுங்கன் வெளியிலே தமிழன் வை.கோ, தன் ஒரே மகனுக்கு அமைச்சர் பதவி என்ற ஒரே கொள்கையை மட்டும் கொண்ட ராமதாஸ் இவர்களுக்கு பக்க துணையாக தமிழும், தமிழர்களையும் கொண்டிராத தமிழ் சினிமாத்துறை, இந்த சினிமாக்காரர்கள் தமிழர்களாக இருந்தாலாவது நல்லது கெட்டதை அறிந்து தைரியமாக வெளியில் சொல்லலாம். ஆனால் பாவம் இவர்கள் பிழைப்புக்காக தமிழ்நாட்டை நம்பி இருப்பவர்கள் இவர்களை பொறுத்தவரை மற்றவர்களுக்கு எது சரியோ பிழையோ என்பதை விட தாங்கள் தப்பி பிழைப்பதற்க்கு எது சரியோ அதை சொல்வதையும் செய்வதையும் தவிர வேறு வழியில்லை. திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளவேண்டும் உங்களை வாழவைக்கும் சினிமாத்துறை இந்தியாவிலிலுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் ஒன்றை ஒன்று தங்கியுள்ளது. ஏன் பிற நாடுகளில் உங்கள் படம் திரையிடுவதற்க்கு தடை ஏற்ப்பட்டால் அதனால் உங்கள் எதிர்காலம் தான் பாதிக்கபடுமே தவிர வேறு எதுவும் நடந்துவிடாது, வேண்டிய பணத்திற்க்காக தமிழையும் தமிழனையையும் வைத்து பிழைப்பு நடத்துவர்களுக்கு பயந்து வேறு மாநில நடிகர்களின் படங்களை நீங்கள் உங்கள் மாநிலத்தில் தடை செய்தால் அதே நிலை உங்களுக்கும் ஏற்ப்படும் அப்பொழுது இந்த சந்தர்ப்பவாதிகள் உங்கள் பக்கம் இருக்கமாட்டார்கள்.

இங்கே இலங்கைத்தமிழர்கள் மேல் உண்மையான அன்பும் ஆதரவாகவும் உள்ள இந்திய மக்களே ஏராளம். இவர்களுக்கு இந்த சந்தர்ப்பவாத அரசியல் சூனியங்கள் புலிகளும் தமிழ்மக்களும் ஒன்று என்பது போல் முடிச்சுப்போட்டு பிழைப்பு நடத்துவதை விளங்கிக்கொள்ளாததே துரதி;ஸ்டம். அதுவே இலங்கைத் தமிழ்மக்களது அவலங்கள் நீண்டு கொண்டு போவதற்கு காரணியாகவும் அமைந்துவிடுகிறது.     முத்துக்குமார் போன்றவர்களின் மறைவால் இலங்கை தமிழ் மக்களுக்கு விளைந்த நன்மைகளென்று எதுவுமில்லை. மாறாக அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிரிவு துயரில் வாடி நிற்பதை தவிர.

அன்பான தமிழ்நாட்டு மக்களே!! நீங்கள் உடன்பிறப்புகளாக கருதும் இலங்கைத்தமிழர்களின் நிம்மதியான சுவீட்சமான வாழ்வு உங்கள் அன்பும் ஆதரவும் இல்லாமல் ஈடேறாது என்பதே உண்மை. அந்த மக்களுக்கு நன்மை தரும் விடயமாக கருதி உணர்சிகளுக்கும் பழிவாங்கலுக்கும் முன்னுரிமை தராமல் தனிநாட்டை தவிர்ந்த நல்லொதொரு தீர்வு திட்டத்திற்க்கு உங்கள் முழுமையான ஆதரவை தாருங்கள். அதன் தொடக்கமாக புலி ஆதரவு சக்திகளை புறக்கணியுங்கள். புலிகள் தமிழின விரோதிகள் மட்டுமல்ல மனித இன விரோதிகள் என்பதை மனதிலிட்டு செயற்படுங்கள். அதுவே நாளைய இந்தியாவும் வன்முறையற்ற நாடாக திகழ உங்கள் அர்ப்பணிப்புகளாகும்.

(மோகன்) (ஆடி 08, 2010)      

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com