Contact us at: sooddram@gmail.com

 

திருத்தவே முடியாத தமிழ் தேசிய கூட்டமைப்பும், திருந்தவே விரும்பாத தமிழ் மக்களும்

(மோகன்)

இந்தியாவில் அதுவும் பொதுவா தமிழ்நாட்டில் சிலவேளைகளில் ஆளும் கட்சிகள் திடீரென பெரும் தோல்விகளை சந்திப்பதற்க்கு முக்கிய காரணம் அக்கட்சிகள் ஆட்சி காலத்தில் நடத்திய அட்டூழியங்களும் அடாவடிதனங்களுமே, இதனால் எதிர்கட்சிகள் வெற்றிபெறுகின்றன. இந்த கட்சி போனால் போதும் என்று நினைத்து மக்கள் ஓட்டு போடுவார்களே தவிர, தங்கள் ஓட்டுக்களால் வெற்றி பெறப்போகிற கட்சி தங்களை காக்க வருகின்ற கடவுளாக நினைப்பதில்லை. அது நினைத்தாலும் நடக்காதது என்றும் அவர்களுக்கும் தெரியும். தெரிந்திருந்தும் தமிழ்நாடு இந்த கழகங்களால் எவ்வளவு தூரம் பின் தங்கி போனாலும் கவலைப்படாது மாறிமாறி ஆள வரும் கழகங்களை மக்கள் மாற்ற நினைப்பதுவுமில்லை ஏன் மாற்றவும் விரும்புவதில்லை. அவர்களை பொறுத்தவரை இந்த இரண்டு கழகங்களை தவிர்த்து வேறு ஒரு கட்சிக்கு வாக்களித்தால் அது தங்களை தமிழின துரொகிகளாக அடையாளம் காட்டி விடுமோ என்ற ஒரு பயம். அதனால் இந்த கழகங்களுக்கு மாறி மாறி ஓட்டுப்போடுவது தங்கள் தலையெழுத்தென்று சிவனேன்று இருந்து விடுவார்கள்.

இதே போலத்தான் இலங்கை தமிழர்களினது பிரச்சனை இதுவரை காலமும் தீர்ந்து போகாது நீடித்து நிலைப்பதற்க்கு காரணம் மாறிமாறி ஆளும் சிங்கள ஆட்சியாளர்கள் மேல் இருக்கின்ற வெறுப்புக்கு பழிவாங்கல் நினைப்புடனேயே இதுவரை காலமும் தங்கள் ஓட்டுக்களை வீணடித்து வந்திருக்கிறார்கள். இலங்கை தமிழ் அரசியல்வாதிகளும் இதை பயன்படுத்தி மக்களிடம் பழிவாங்கல் உணர்வை மேலும் ஊட்டி வளர்த்து பதவிக்கு வந்த பின்பு மீனுக்கு தலையையும் பாம்புக்கு வாலையையும் காட்டி ஆட்சிகாலத்தை சிவனேன்னு ஓட்டிட்டு மறுபடியும் அதே பழிவாங்கும் ஆவேச அரசியலை மக்களிடம் திணிக்கவருவார்கள்.

வெண்ணை திரண்டு வரும் போது சாடியை உடைப்பதும், நல்லது நடக்கும் தறுவாயில் அதை எட்டி தள்ளுவதும் தமிழ் மக்களின் உடன் பிறந்த குணங்கள். இதுவரை காலமும் தமிழ் பேசும் மக்கள் அளித்த வாக்குகள் எல்லாம் தங்கள் இரண்டு கண்களை இழந்தாலும் எதிரிக்கு சகுனம் பிழைத்தால் போதும் என்ற நப்பாசைகளுக்கே. மகிந்தாவிற்கு எதிராக பொன்சேகவுக்கு ஓட்டுப்போட்டது தமிழ் பேசும் மக்களது அந்த அதி மேதாவித்தன செயலில் ஒன்று.

அகிலம் முழுவதுமே எங்களுக்கு சார்பாக இருந்த ஒரு தருணத்தில் நாம் எங்களுக்கு கிடைக்கக்கூடிய ஆகக்கூடுதலான அதிகாரங்களை பெற்றிருக்க கூடிய அந்த நல்ல சந்தர்ப்பத்தை சர்வ சாதாரணமாக நழுவவிட்டு இன்று அஞ்சுக்கும், பத்துக்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இன்னமும் இதற்கான காரணத்தை அறிய விரும்பாமல் வெறும் உணர்சிகளுக்கு அடிமைபட்டு சண்டித்தன முறையிலேயே எல்லாவற்றையும் பெற்று விடலாம் என்ற பத்தாம் பசலி கொள்கையிலேயே உறுதியாய் இருக்கிறார்கள்.

தமிழர் விடுதலைக்கூட்டணி முதல் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரை ஏறத்தாழ அவர்களது ஐம்பது வருடகால அரசியல் வாழ்க்கையில் தமிழ் பேசும் மக்களுக்கென்று ஒரு துரும்பைக்கூட பெற்றுத்தரவில்லை. இருந்தாலும் அதைப்பற்றி அலசி ஆராய எந்த தமிழ் மக்களும் விரும்புவதில்லை. ஏனென்றால் எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டுமானால் இவர்களுக்குதான் ஓட்டு போட்டாக வேண்டுமென்ற அவ்வளவு துடிப்பு.

இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் கிடைத்த மாகாணசபையை புலிகள் குழப்பியடித்தபோதும் தமிழ் மக்கள் மௌனம் காத்தார்கள். ஏனென்றால் புலிகளுக்கு பிடிக்காத ஒன்று தங்களுக்கு தேவையில்லையென்று. சந்திரிகா அரசினால் சமர்பிக்கபட்ட அரசியல் தீர்வை புலிகளின் சேவர்களாகிய தமிழ் கூட்டமைப்பினால் கிழித்தெறியப்பட்ட போதும் இதே மக்கள் மௌனம் காத்தார்கள் ஏனெறால் அதுவும் புலிகளால் விரும்பபடாத ஒன்று. நோர்வேயின் சமாதான உடன்படிக்கை வீணடிக்கபட்டபோதும் இதே மௌனம் ஏனென்றால் புலிகளின் உள் மனதில் வேறொன்று இருக்கிறாப்போல அதை நாம கெடுக்கலாகாது என்ற பயபக்தி.

இன்று மாகாணசபையைவிட, சந்திரிகாவின் அரசியல் தீர்வைவிட, ஏன் நோர்வே அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் அதிகாரங்களை விட, இன்னமும் அதைவிட குறைவாக ஒருவேளை இந்த அரசுக்கும், தமிழ் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சு வார்த்தையின் போது உறுதி செய்யப்பட்டால் அதை எங்கள் மக்கள் சந்தோசத்துடன் ஏற்றுக்கொள்வார்கள். ஏனென்றால் அவர்களுக்கு, தங்களுக்கு கிடைக்கும் அதிகாரத்தை விட அது யார் மூலம் கிடைப்பது என்பதிலேயே அதிக திருப்தி.

கூட்டமைப்பு என்றுமே சந்தர்ப்பவாத அரசியலையே நடத்தி வந்திருக்கிறது. புலிகளின் சேவர்களாக வாழத்தொடங்கி இன்று தமிழ் கட்சிகளுக்கு இடையில் ஒற்றுமையை குழப்புவது வரை தமிழ் பேசும் மக்களது எந்தவித நன்மை தீமையை பற்றி அக்கறை படாமலேயே நடந்து கொள்கிறது. இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட பல அப்பாவி மக்களின் மரணங்களுக்கு புலிகளுக்கும் மிகப்பாரிய பங்கு இருந்தது என்று தெரிந்து வைத்திருந்தும் புலிகளை நோக்கி அந்த அப்பாவி மக்களை விட்டுவிடுங்கள் என்ற கேட்க விரும்பவில்லை. ஒருவேளை புலிகள் கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டால் தங்கள் எதிர்காலமும் சுகபோகமும் பறி போய்விடுமோ என்ற சுயநலத்தினால் பல அப்பாவி மக்களின் உயிர்களை துச்சமாக மதிர்த்தவர்களா அந்த மக்களுக்காக தங்கள் பதவிகளை துச்சமாக மதித்து மகிந்தா அரசுடன் போராடி அதிகாரங்களை பெற்றுத்தருவார்களா என்று சிந்தித்து பார்க்கவேண்டும்.

இன்று கூட்டமைப்பு அரசுடன் பல அமர்வுகளை நிறைவேற்றிவிட்டது, ஆனால் அந்த அமர்வின் போது தமிழ் பேசும் மக்கள் சார்பாக என்னென்ன அதிகாரங்கள் கேட்க்கபட்டது என்று அவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கும் தெரியாது, ஏன் அவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்களுக்கே கூட தெரியாது. இன்னும் பல அமர்வுகள் தொடரலாம், ஏன் அடுத்த மாகாணசபை தேர்தல் வரை கூட தொடரலாம், ஆனால் நம்மக்கள் ஏன் என்று கேள்வி கேட்காமல் மீண்டும் அவர்களையே தேர்ந்தெடுப்பார்கள் ஏனெனின் எம்மக்களுக்கு தேவை அதிகாரம் அல்ல எதிரிக்கு நேரும் அவமானம்.

பல சகாப்தங்களாக தொடர்ந்து கொண்டிருக்கும் இலங்கை தமிழர் பிரச்சனையில் மாகாணசபை ஆட்சி ஒன்றே ஒரு மாபெரும் சந்தர்ப்பமாக திகழ்ந்தது அதை பெற வழிவகுத்து தந்தவர்களையும், சிலகாலம் நீடித்த அந்த ஆட்சியை சிறப்பாக செயல்பட வைப்பதற்காய் தங்களை அர்ப்பணித்தவர்களையும் மக்கள் எண்ணிப்பார்ப்பதன் மூலம் தான் தமிழ் பேசும் தங்கள் எதிர்கால வாழ்வை அர்த்தமுள்ளதாக்கலாம். தமிழ் மக்கள் சிந்திப்பார்களா.....? செயற்படுவார்களா....?

(மோகன்) (ஆடி 12, 2011)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com