Contact us at: sooddram@gmail.com

 

வைக்கற் பட்டறையில் படுத்திருப்பவர்களே வழிவிடுங்கள் மற்றவர்களுக்கு

(மோகன்)

அசின் போன்றவர்களே அசல் மற்றதெல்லாம் நசல், தமிழனாய் இருந்தும் மனிதர்களாய் வாழாதவர்களை விட எந்த இனத்தில் பிறந்திருந்தாலும் மனித நேயம் கொண்டவர்களால்தான் மனித இனத்திற்க்கே பெருமை. அந்த பெருமையை சேர்த்தவர்களில் அசினும் ஒருவள். மனித உயிர்கள் எல்லாம் ஒன்று, அதன் ஆசாபாசங்கள், உணர்வுகள், இன்பங்கள், துன்பங்கள் எல்லாம் பொதுவானவையே. ஒரு உயிர் துன்பப்படும் போது இன மொழி பேதமின்றி துடித்து போவதே மனித இனம். அதனால்தான் இலங்கைத்தமிழர்களின் துயர் கண்டு அசின் போன்றவர்களின் மனம் உதவிட நினைத்தது. வெறுமனே ஒரே மொழி பேசும் இனத்தின் பேரால் இன்னொரு இனத்தின் அழிவை விரும்பி நிற்பதும் அதன் துயரத்தை கண்டு உள்ளூர ரசித்து நிற்பதும் மனிதர்களின் குணாம்சம் அல்ல. இவர்களை போன்றவர்கள் தமிழ் இனத்தில் பிறந்திருப்பதே அந்த இனத்திற்கு பெரிய அவமானம் அதைவிட அவர்களை தமிழ் இனத்தின் தலைவர்களாக கொண்டாடுவது அந்த இனத்திற்கு செய்யும் மாபெரும் துரோகம்.

இந்திய அரசியலை விட்டுவிடவும், தமிழ்நாட்டு அரசியலை எடுத்துக்கொண்டால் அது சினிமாவிலிருந்து உருவாகினது மட்டுமல்ல சினிமாவையையும் இதனையும் பிரிக்கவிடாது சினிமாவின் குடும்ப அரசியலாக தொடர்கிறது. ஆரோக்கியமான எண்ணம் உள்ளவர்கள் அறிவுஜீவிகள், மக்கள் மீது உண்மையான கரிசனை உள்ளவர்கள் யாராவது அரசியலுக்கு வர நினைத்தாலே போதும் வேற்றுமைப்பட்ட கழகங்களே ஒற்றுமைப்பட்டு விரட்டி அடிக்கும். தமிழ் சினிமா என்பது ஆண் ஆதிக்கத்தின் உறைவிடம் மேல் ஆதிக்க வர்கத்தினரின் இருப்பிடம் மொத்தத்தில் பாமர மக்களை தொடர்ந்து பத்தாம்பசலிகளாக பாதுகாக்கும் ஊடகம். விவசாயியாக, தொழிளாளியாக, மீனவனாக என அந்தந்த வர்க்கங்களுக்கு பாடுபடும் கதாநாயக வேடங்களில  ஏற்றிருப்பவர்கள் யாருமே அந்தந்த வர்க்கங்களை சார்ந்தவர்களாக இருக்கமாட்டார்கள் கிளைமாக்ஸ் காட்சியில் அவர்கள் மேல் வர்க்கத்தை சார்ந்தவாகளோகவோ அல்லது பணக்கார வர்க்கத்தை சார்ந்தவர்களோகவோ அவர்களின் பின்னணி காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

எம்.ஜி.ஆர் படங்களில் பெரும்பான்மையானவை இப்படிப்பட்ட கருத்தையே கொண்டிருக்கும். கருத்தம்மா போன்ற படங்களை எடுத்த இயக்கினரும் மனதில் உறுதி வேண்டும் போன்ற பெண்களின் பெருமை சேர்க்கும் படங்களை எடுத்த இயக்கினரும் போன்றவர்களும் நிஜவாழ்க்கையில் பெண்கள் விடயத்தில் பலவீனமானவர்கள் என்பதை எந்தமக்களும் பாரதூரமாய் பார்ப்பதில்லை. சில தராதரமான படங்களை எடுத்த பாரதிராஜா தன்னுடைய இன்னொரு படமாகிய கொடிபறக்கிது படத்தில் ரஜனியை நோக்கி சுடப்படும் துப்பாக்கி குண்டுகளை ரஜனி தன் கழுத்து சங்கிலியினால் தடுத்து நிறுத்தும் காட்சிகளையும் எடுக்கமுடிகிறது. இது எதை காட்டுகிறது என்றால் பணம் பண்ணும் ஒரே நோக்கத்திற்க்காக மக்களுக்கு எந்தவிதமான கருத்துக்களையும் தருவதற்க்கு தயங்கமாட்டார்கள். அதை மக்களும் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை தெரிந்தும் வைத்திருக்கிறார்கள்.

சினிமாவுக்கும் பாமரமக்களுக்கும் உள்ள இடைவெளி போதாதென்று சினிமாவில் தோன்றும் காட்சிகளிலும் பாமரமக்களுக்கும் கதாநாயகாகளுக்கும் பெரிய இடைவெளியை தோற்றுவித்து சினிமாக்காரர்கள் ஏதோ தேவலோகத்தை சேர்ந்தவர்கள் போன்ற பிரமை உருவாக்கப்பட்டது. சினிமாவின் கதாநாயர்கள் நிஜவாழ்க்கையில் வில்லன்களை விட மோசமானவர்களாக இருந்தாலும் பாமரமக்கள் மத்தியில் அதன் உண்மைதன்மை விளங்கிக்கொள்ளப்படுவதில்லை. அந்தளவுக்கு சினிமாவின் காட்சிகள் அத்தனையும் நிஜம் என்று நம்பும் அளவுக்கு அவர்களின் பாமரத்தன்மை காப்பாற்றப்பட்டு வந்துகொண்டிருக்கிறது.

அதனால்தான் சினிமாவின் கதாநாயாகர்கள் அரசியலுக்கு வருவது இலகுவாகவும் பெரிய வரவேற்ப்புடனும் அமைந்து விடுகிறது. இதில் முக்கியமான வேதனை என்னவென்றால் உலகம் நாகரீகத்தின் உச்சத்தில் இருக்கும் இன்றைய நிலையிலும் தமிழ்நாட்டு அரசியலில் இது தொடர்ந்துகொண்டிருப்பதுதான். ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபட்டவர்களின் அந்தரங்க வாழ்க்கை அம்பலத்திற்க்கு வரும் போது ஆவேசப்படும் மக்கள் (அது ஒன்றிரண்டு என்று இருந்தால் கூட) தங்களை வழி நடத்தும் அரசியல்வாதிகளின் அந்தரங்கள் எவ்வளவு சாக்கடையாக இருந்தாலும் (ஒட்டுமொத்தமாக) எதுவித சங்கடமும் படமாட்டார்கள் அந்தளவுக்கு சினிமாவும் அரசியலும் மக்களை மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறது. 

சினிமா சுவரொட்டிகளுக்கும் அரசியல்வாதிகளின் பிறந்தநாள், சாதனைப்பட்டியல், வாழ்க கோசங்கள் போன்ற சுவரொட்டிகள் மற்றும் எழுத்துக்களால் நிரப்பட்டிருக்கும் சுவர்களுக்கு நடுவில் மூச்சு திணறி வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு சொந்த சிந்தனைக்கான நேரம் அரிதாகிவிட்டது. மக்களின் இந்த கிணற்று தவளை வாழ்வுக்கு ஊடகங்களும் பெரும் பங்கை வகுத்து கொடுக்கின்றன. இதனால் அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள் சொல்வதெல்லாம் வேதவாக்குகளாக எந்தவித மறுப்புமின்றி மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்தவகையில்தான் இலங்கை தமிழர் பிரச்சனையும் தமிழ்நாட்டு தமிழ்மக்களால் விளங்கிக்கொள்ளப்பட்டது. இந்திய அரசியல்வாதிகளும் சரி சினிமாக்காரர்களும் சரி இலங்கை தமிழர் பிரச்சனையை தங்கள் சுயலாபங்களுக்கு ஏற்ப்பவே பயன்படுத்திவருகிறார்கள். (இதற்கு விதிவிலக்காக இருப்பவர்களும் இல்லாமலும் இல்லை இதில் துரதிஸ்டம் என்னவென்றால் இவர்களின் பேச்சு மக்களிடம் எடுபடுவதில்லை.) இப்படிப்பட்ட சுயநலபோக்கு தலைவாகளால் கைளாளப்படும் இலங்கைத்தமிழர் பிரச்சனை சிக்கலை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது. இலங்கைத்தமிழர்கள் மீது அக்கறைப்படுவதாக காட்டிக்கொண்டு அவர்களின் அவலமான வாழ்வுக்கு வித்திடுகிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இலங்கையிலுள்ள தமிழ்மக்கள் எதை விரும்புகிறார்கள் அல்லது எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை இவர்களில் யாரும் புரிந்து கொண்டிருப்பதாக தெரியவில்லை மாறாக புலம்பெயர் புலிப்பினாமிகளால் சொல்லப்படுவதையே இலங்கைத்தமிழர் பிரச்சனையாக வரிந்து கட்டிக்கொண்டிருக்கிறார்கள். எந்த மக்கள் பாதிக்கபட்டார்கள் என்பதற்காக இலங்கைக்கு நடிக நடிகைகள் போகக்கூடாது என்று தடைபேட்டார்களோ அப்படி தடையை மீறி சென்றவர்களுக்கு அதே மக்களால் ஒரு சிறிதளவேனும் எதிர்ப்பு கிளப்பப்படாதது மட்டுமல்ல அவர்கள் ஓரளவிற்க்கு வரவேற்க்கப்பட்டார்கள் என்பதே உண்மை.

தமிழ்பேசும் மக்களின் அபிலாசைகளை தெரிந்து கொள்ள விரும்பாமல் புலம் பெயர் புலிப்பினாமிகளிடம் வாங்கப்பட்ட பணத்திற்காக என்ன வேலை சொல்லப்பட்டதோ அதை இலங்கை வாழ் தமிழர்களிடம் திணிக்கபார்க்கிறார்கள். இதை தமிழ், தமிழன் என்ற ஆயுதம் கொண்டு மிரட்டுவதன் மூலம் சாதிக்கபார்க்கிறார்கள். இது தவறென்று தெரிந்திருந்தாலும் பலர் நமக்கேன் வம்பென்று வாய்மூடி இருக்கின்றார்கள். இதுவரை காலமும் இலங்கை தமிழர்களின் துயரத்திற்க்கு இன்னொரு தமிழன் (புலிகள்) தான் காரணம் இன்று அதே துயரம் நீண்டு கொண்டு போவதற்க்கு இன்னுமொரு தமிழன் (தமிழ்நாட்டு புலிப்பினாமிகள்) தான் காரணமாக இருக்கபோகிறான். 

இங்கே அசின் போன்ற தனிப்பட்டவர்களின் முயற்சி சிறியதாயினும் அதுவே இலங்கை இந்திய உறவு, இலங்கை தமிழர்களின் நல்வாழ்வு போன்றவற்றிக்கு பெரிய முன்னுதாரணம் இதை பின்பற்றி இலங்கை தமிழர் வாழ்வுக்கு விளக்கேற்றி வைக்க மனம் இல்லாவிட்டாலும் மௌனமாய் இருந்து இலங்கைத்தமிழர்களுக்கு கிடைக்கக்கூடிய நல்ல சந்தர்ப்பத்தை கெடுக்காமல் இருக்க முயற்சி பண்ணுவார்களா?

(மோகன்) (ஆடி 19, 2010)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com