Contact us at: sooddram@gmail.com

 

தமது சக்தியை உணராதவர்களாக உழைக்கும் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

மேதினம்

முதலாளித்துவம் வளர்ச்சியுற்று தொழிற்சாலைகள் அதிகரித்துக் கொண்டிருந்த 1880 களில் நாளொன்றில் 12 தொடக்கம் 18 மணித்தியாலங்கள் வரை தொழிற்சாலைகளில் வேலை வாங்கப்பட்டு கசக்கிப் பிழியப்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணி நேர வேலை கேட்டு, உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கேட்டு வீதியில் இறங்கிப் போராடினார்கள். தொழிலாளர்களின் போராட்டங்களை முதலாளிகளும், முதலாளிகள் சார்பான ஆட்சியாளர்களும், ஆயுதப் படைகளை தொழிலாளர்கள் மீது ஏவிவிட்டு அவர்களது நியாயமான போராட்டங்களை அடக்கி ஒடுக்கின. இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் தொழிலாளர்கள் தமது ஒற்றுமையை பலமாகக் கொண்டு தொடர்ந்து போராடினார்கள், இரத்தம் சிந்தினார்கள், உயிரை அர்ப்பணித்தார்கள் இந்த அர்ப்பணிப்புக்களால் கிடைத்தவை தான் தொழிலாளர்களின் உரிமைகளும் மேதினமும் ஆகும். இன்று உழைக்கும் மக்களோடு, ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் என்று அனைவரும் நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால் போதும் என்ற உரிமையை அனுபவிக்கிறார்கள் என்றால் அது உலகத் தொழிலாளர்கள் உதிரம் சிந்திப் போராடிப் பெற்ற உரிமைகளில் ஒன்றாகும்.

1886 ஆம் ஆண்டு மே 3ம் தேதி அமெரிக்காவில் தொழிற்சாலை ஒன்றின் முன்னால் தமது உரிமைகளைக் கோரிப் போராடிய தொழிலாளர்கள் கூட்டம் ஒன்றை நடத்தினர். இந்தக் கூட்டத்தில், முதலாளிகள் சார்பாக பொலிசார் முன்னெச்சரிக்கை இன்றி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து சிகாகோவின்ஹேமார்கெட்சதுக்கத்தில் மே 4ம் திகதி தொழிலாளர்கள் திரண்டு மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற குண்டு வீச்சில் ஆர்ப்பாட்டத்தை அடக்க நினைத்த பொலிஸாரில், ஒருவர் கொல்லப்பட்டார் பலர் காயமடைந்தனர். இதனால் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமைதாங்கியஅனார்கிஸ்ட்என்ற தொழிலாளர் அமைப்பைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது. இவர்களில் 4 பேர் தூக்கிலிடப்பட்டனர். மற்றொருவர் சிறையில் தற்கொலை செய்துகொள்ள எஞ்சிய 3 பேரும் 6 ஆண்டு சிறைவாசத்தின் பின்னர் மன்னிப்பளித்து விடுவிக்கப்பட்டனர்.

1889 ஜூலை 14 அன்று பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ – இரண்டாம் அகிலம் என அழைக்கப்பட்டதுநடத்திய மாநாடு இடம்பெற்றது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இம் மாநாட்டில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கப்பட்டது.
1880 களில் இடம்பெற்ற அமெரிக்கத் தொழிலாளர்களின் எட்டு மணி நேர வேலைக்கான போராட்டங்களும், 1886 இல் சிகாகோ தொழிலாளர்களின் தியாகமும் இதனைத் தொடர்ந்து 1889 இல் பிரான்ஸில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றத்தின் தீர்மானமும் தான் இன்றைக்கு மே 1, உழைப்பாளர்களின் தினமாக எம்மால் அனுஷ்டிக்கப்பட காரணங்களாகும்.

1991 இல் நடைபெற்றசர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்மே 1ம் நாளை உலகத் தொழிலாளர்கள் தமது உரிமைகளை கோரிப் போராடும் சர்வதேச தொழிலாளர் தினமாகப் பிரகடனம் செய்தது.
ஆனாலும், மே 1ம் நாள் வேலைக்குச் செல்லாமல், தொழிலாளர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு தொழிலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. மே தினத்தன்று தொழிலாளர்கள் ஊர்வலங்கள், கூட்டங்களை நடத்துவதற்கு ஆட்சியாளர்கள் தடை விதித்தார்கள். இந்த உரிமையை பெற்றுக்கொள்வதற்கும் தொழிலாளர்கள் நீண்ட காலம் போராட வேண்டியிருந்தது.

நமது நாட்டில் 1960 களில் இத்தகைய அடக்குமுறையை எதிர்கொண்ட, அதற்கெதிராகப் போராடிய தலைவர்கள், தொழிலாளர்கள் நம்மத்தியில் இன்றும் உள்ளனர். 1990 களில் மேதினம் புலிகளின் பலத்தை பறைசாற்றுகின்ற தினமாகவே கொண்டாடப்பட்டது. புலிகளைத் தவிர வேறெந்த அமைப்பும் மேதினத்தை அனுஷ்டிக்க புலிகள் அனுமதிக்கவில்லை. மே தினத்தை அனுஷ்டிக்க விரும்புவர்கள் புலிகள் நடாத்தும் மேதின நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். மே 1ம் நாள் கூட்டுறவு சங்கங்கள் உட்பட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்தவர்களும்ஊர்திகள்” “பதாகைகளுடன்புலிகளின் மேதினத்தில் பங்கேற்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இதே பாணியில் இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஊர்திகளோடு மேதினத்தில் பங்கேற்குமாறு யாழ் மாவட்டத்தில் தமது அதிகாரத்தின் கீழ் உள்ள உள்ளுராட்சி மன்றங்களைப் பணித்திருக்கிறது.

மேதினத்தை கொச்சைப் படுத்தும் வகையில் மேதின நிகழ்வுகள் இடம்பெற்றுவருவதும் வரலாறாகி வருகிறது. வருடத்தின் 364 நாளிலும் நம்நாட்டு தொழிலாளர் விவசாயிகள், கூலி உழைப்பாளர்கள் போன்ற ஒரே விதமான துன்பங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்கின்ற உழைகை;கும் மக்களை ஏறெடுத்தும் பார்க்காதவர்கள் ஏன், இந்த நாட்டின் தொழிலாளர், விவசாயிகளுக்கு எதிராகச் செயற்படுபவர்கள் கூட மே தினத்தன்று தொழிலாளர் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்களாக மேடையில் நின்று முழங்குகிறார்கள்.
மே 1ம் திகதி தொழிலாளர் தினம் பல்வேறு தரப்பினராலும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், மே 2ம் திகதி தொழிலாளர்கள் விவசாயிகள் வழக்கம் போன்று பிரச்சினைகளை எதிர்கொள்ள நேர்வது வழமையாகிவிட்டது.

தமது பலத்தை தொழிலாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தமது பிரச்சினைகளுக்காக தாங்களே போராட வேண்டும்.

அன்றைக்கு பெரும் தொகையான தொழிலாளர்கள் தொழிற்சாலைகளில் ஒரே கூரையின் கீழ் பணி புரிந்தார்கள் அனைவரும் ஒரே மாதிரியான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தார்கள் அவற்றுக்கெதிராக அணிதிரண்டு போராடினார்கள்.

இன்றைக்கும் உடல் உழைப்பை விற்கின்ற தொழிலாளர்களுக்கு பல இடங்களில் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை, வேலைகளுக்குப் பொருத்தமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை. வேலை செய்ய முடியாமல் போகும் காலத்தில் அவர்களுக்கு உபயோகமாகும் என சட்டரீதியாக்கப்பட்டுள்ளஊழியர் சேமலாப நிதிதொழில் வழங்குநர்களால் செலுத்தப்படாது ஏமாற்றப்படுதல், வேலை உத்தரவாதம் இன்மை தொழில் வழங்குபவர்கள் நினைத்தமாத்திரத்தில் வேலையை விட்டு நீக்கிவிடல் இவ்வாறு தொழிலாளர்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கின்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த போதும் தொழிலாளர்கள் ஒரு அணியாக அமைப்பாக்கப்படாதவர்களாக, கூட்டாக தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக, தமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண போராட முடியாதவர்களாக, தொழிற் சங்க ரீதியில் வலிமை பெற்றவர்களாக இல்லாமலிருக்கிறார்கள்.

தொழிலாளர்களின் உரிமைகளுக்காக ஒருமித்து குரல் கொடுக்க வேண்டிய தொழிற்சங்கங்கள் கட்சி ரீதியான தொழிற்சங்கங்களாக மாறி தொழிலாளர்களை கூறு போட்டிருக்கிறது.

ஒரு காலத்தில் இங்கு சுருட்டு சுற்றும் தொழிலாளர்களுக்கு சங்கம் இருந்தது. இப்போது பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளது. ஆனால் பேக்கரி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பரந்த, பலமான சங்கம் கிடையாது. வர்த்தகர்களுக்கு சங்கம் இருக்கிறது. வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பலம் வாய்ந்த சங்கம் கிடையாது. நம் மத்தியில் காணப்படும் மீனவர் சங்கங்கள், மினிபஸ் சங்கங்கள், சிகை அலங்கரிப்பாளர் சங்கம் எல்லாமே உடமையாளர்களும், உடல் உழைப்பை விற்பவர்களும் ஒன்றாய் இணைக்கப்பட்டிருக்கும் சங்கங்கள்.

பல இடங்களில் உடல் உழைப்பை விற்கும் தொழிலாளர்கள் சங்கம் அமைக்க முற்பட்டால் வேலையை இழக்கும் அபாயம் நிலவுகிறது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்களது தொழிற்சாங்க உரிமைகளை நிலைநாட்டுவதற்காகக் குரல்கொடுக்கக் கூடிய, அவர்களுக்குப் பக்கபலமாய் நிற்கக் கூடிய அமைப்புக்கள் இல்லை. மேதினத்தை பிரமாண்டமாகக் கொண்டாடுபவர்கள் இந்த விடயங்களில் ஆர்வம் காட்டுவதில்லை.

பல படகுகளை தனி உடமையாக வைத்திருப்பவர்களிடம் உழைப்பை விற்கும் தமிழ்நாட்டின் வறிய மீனவர்களே கடல் எல்லையை தாண்டிவந்து மீன்பிடியில் ஈடுபட்டு எமது மீனவர்களின் வயிற்றில் அடிப்பதோடு தாமும் அடிபட்டும், சிறைப்பட்டும் துன்பங்களை அனுபவிக்கிறார்கள் அரசும், மீனவர் சங்கங்களும் இந்த மீனவர்களுக்காகப் போராடுவது போலத் தென்பட்டாலும் அங்கு புதைந்து கிடப்பது படகு உரிமையாளர்களின் நலன்களே.
இதேபோன்று பல ஏக்கர் கணக்கான வயல் நிலங்களை, வயல் வேலைக்கான இயந்திரங்களை உடமையாகக் கொண்டிருப்பவர்களும், ஓரிரு ஏக்கர் நிலத்தை குத்தகைக்குப் பெற்றுப் பயிரிடுபவர்களும் ஒன்றிணைந்ததாகவே விவசாயிகள் சங்கங்கள் உள்ளன. இந்த நிலங்களில் உடலுழைப்பை விற்கம் கூலி விவசாயிகள் ஒன்றிணைந்த, அவர்களின் நலன் பேணும் அமைப்புக்கள் எதுவும் இல்லை.

மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள் போன்ற எந்த வசதிகளும் கிட்டாமல் தன் வாழ்நாளை முடித்துக்கொள்ளும் தொழிலாளர்கள், விவசாயிகளின் வாழ்வில் மாறுதலை ஏற்படுத்த வேண்டும்.
இலவசக் கல்வி உத்தரவாம் உள்ளபோதும் எந்தனையோ தொழிலாளர்கள், விவசாயிகள் முகங்கொடுக்கும் வாழ்க்கைச் சுமைகளால், நெருக்கடிகளால் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை வளமாக்கும் கல்விச் செல்வத்தை வழங்க முடியாதவர்களாய் இருக்கிறார்கள், இன்னொரு சாரார் ஏதோ பாடசாலைக்கு போய் வருகிறார்கள் என்ற நிலையிருக்கிறதே தவிர அவர்கள் கல்வி கற்பதன் பயனை எட்டமுடியாதவர்களாய் இருக்கிறார்கள் சுகாதார வசதிகளுக்காக எமது அரசாங்க வைத்தியசாலைகளையே நம்பியிருக்கும் தொழிலாளர்களும், விவசாயிகளும் சந்திக்க நேரும் அவமானம், அவலம் சொல்லுந்தரமன்று அரச போக்வுரத்தோ, தனியார் துறை போக்குவரத்தோ இவர்கள் வாழும் பிரதேசங்களை சென்றடைய இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ தெரியவில்லை.

அரசாங்க அலுவலகங்களிலும், கிராம சேவகர் அலுவலகங்களிலும் அவர்களுக்கிருக்கும் சமூகப் பெறுமானம் என்ன என்பதை மதிப்பிட முடியும். எல்லா இடங்களிலும், எல்லாவிதத்திலும் ஏமாற்றப்படுவதும், வஞ்சிக்கப்படுவதும் இந்த அடித்தட்டு மக்களே! தமது பிரச்சினைகளை வெளிப்படுத்தத் தெரியாத குரலற்றவர்களாக, ஒன்றிணைக்கப்பட்ட தமது சக்தியை உணராதவர்களாக இந்த உழைக்கும் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இத்தனைக்கும் மத்தியில் தான் நாங்கள் உலகத் தொழிலாளர் தினத்தை அனுஷ்டித்துக்கொண்டிருக்கிறோம். ஊர்திகளும், ஆரவாரங்களும், போலித்தனங்களும் தொழிலாளர், விவசாயிகளின் வாழ்வில் எந்த மறுமலர்ச்சியையும் ஏற்படுத்திவிடாது.

உண்மையாகவே தொழிலாளர் விவசாயிகளின் மீது கரிசனையுள்ளவர்கள , அவர்களின் மேம்பாடுக்காக உழைப்பவர்கள், மேதினத்தில் மட்டுமல்ல வாழ்நாளில் பெரும்பகுதியை அதற்காக அர்ப்பணித்தவர்கள், வாழ்வின் கடமையாக ஏற்றுக்கொண்டுவிட்டவர்கள் இல்லாமல் இல்லை.

இத்தகையவர்கள் தொழிலாளர் விவசாயிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள், துயரங்களை அடையாளம் கண்டு தொழிலாளர், விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி,; தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதிரிகளாயிருக்கும் உழைக்கும் மக்கள் ஒன்றிணைய வேண்டும், அமைப்பாகச் செயற்பட வேண்டும் என்ற உந்துதலை அளிக்குமானால் மேதினம் அனுஷ்டிக்கப்படுவது அர்த்தமுடையதாகும்.

தோழர். மோகன்

01.05.2014

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com