Contact us at: sooddram@gmail.com

 

விகடசங்கடம் – 4

- முனிதாசபூதன்

சகடமுனி:- ஓ! குமாஸ்த்தா இங்க வா!

குமாஸ்த்தாமுனி:- வந்தேன் குருவே! உத்தரவு என்னவோ!

சகடமுனி: நீ ஒன்றும் வெட்டிக் கிழிக்க வேண்டாம். எனது மண்டை ஒரு சங்கடத்தில் கிறங்கிப் போய்க் கிடக்கிறது. அதற்கு விடை காண எனக்கு உதவு அதுவே போதும்:

குமாஸ்த்தாமுனி:- இதென்ன சோதனை குருவே எல்லாம் தெரிந்த தங்களின் சங்கடத்தைத் தீர்க்க இந்த சொன்னதைச்செய்யும் சுப்பனுக்கு என்ன குருவே தெரியும்!

சகடமுனி: அடே குமாஸ்த்தா@ நீதான் விடிஞ்சா பொழுதுபட்டா பேப்பர் படிக்கிற கடைத்தெருக்கள் மாக்கெட்டுகள் தேத்தண்ணிக் கடைகள் கோயிலடிக் கூட்டங்கள் குழாயடி என்று சுத்தித்திரிகிற ஆள் குசுகுசுக்கள் முணுமுணுப்புக்கள் வாந்திகள் புரளிகள் என  ோட்டில போற காற்றில் மிதக்கிற சந்தியில கிடக்கிற சந்தையில நாறுகிற பலதும் பத்தும் உனக்குத்தான்  கனக்கத் தெரியும். முதலில் விஷயத்தைக் கேள் பிறகு உனக்குத் தெரிந்ததைச் சொல்லு.

குமாஸ்த்தாமுனி:- உத்தரவு! கூறுங்கள் குருவே!

சகடமுனி: அட சேமண குமாஸ்த்தா! ஏன்;! முன்னாள் நீதவான் விக்கினேஸ்வரன் திடீரென வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக்கப்பட்டார்?
அதுக்கு அவர் எப்படி ஒத்துக் கொண்டார்?
ஏப்படி இது நடந்தது?
என்ன காரணங்களுக்காக இது நடந்தது?
யாரின் வேண்டுதலின் பேரில் இது நடந்தது?
இந்த விடயத்துக்காக சம்பந்தர் யாரால் மடக்கப்பட்டார்?
சேனாதிராஜா இதற்காக எப்படி விட்டுக்கொடுக்க வைக்கப்பட்டார்;?
இந்த முதலமைச்சர் பதவி கனவுகளோடு கடந்த இரண்டு வருடங்களாக வாழ்ந்த பல பிரமுகர்கள் எப்படி தமது ஆசைகளை அடக்கி ஒடுக்கி ஒரே நாளிலேயெ சுருண்டு போனார்கள்?
இதுகள்தானப்பா என்ர மண்டையைக் குடைஞ்சு சங்கடப்படுத்திக் கொண்டிருக்குதுகள்.
சுமந்திரனும் சுரேஸ் பிரேமச்சந்திரனும் இதற்கான முன்கட்ட தயாரிப்பு வேலைகளையெல்லாம் நகர்த்தியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.  அதெல்லாவற்றுக்கும் மேலாக இன்றைய பதவி பணக்குவிப்பு அரசியற் காலகட்டத்தில் எந்த அளவுக்கு பப்பாவில் ஏத்தல்கள் கழுத்தறுப்புகள் முதுகில் குத்தல்கள் என பலதும் உள்ளன என்பதை திரு விக்கினேஸ்வரன் தெரிந்தேதான் இருப்பார். அதிலும் முக்கியமாக தன்னை ஏத்தி விடும் யாழ்ப்பாணகொழும்பு தமிழ்ப் பிரமுகர்கள் நண்டுகள் மாதிரி முன்னால ஏறவிட்டு பின்னால காலில் பிடித்து இழுத்து விழுத்துபவர்கள் என்பதையும் இந்தப் பிரமுகர்களும் அறிவுப் பிழைப்பாளிகளும்தான்  ிரபாகரனை உசுப்பேத்தியே முள்ளிவாய்க்காலில் உடல் ரணகளமாக மண்டை பிளந்து கிடக்க விட்டு மறந்து போனவர்கள் என்பதையும்  தெளிவாகப் புரிந்து வைத்திருக்கக் கூடிய அளவுக்கு திரு விக்கினேஸ்வரன் நன்கு தகவலறிவும் சிந்தனையறிவும் உடையவர்.

கௌரவ விக்கினேஸ்வரன் தமது எழுபது கால வாழ்விலும் முப்பது வருடகால சட்டத்துறை நீதித்துறை அநுபவங்களினூடாகவும் கற்றுக்கொண்டிருக்கக்கூடியது எப்படி நோகாமல் நொங்கு தின்பது என்பதைத்தான்.
 
எந்த நோவுமில்லாமல் முதலமைச்சர் பதவி கிடைத்தாலும் பிறகு அது பல்லுடைக்கிறதாக தாடை எலும்பு முறிக்கிறதாக மட்டுமல்ல மூளை நரம்பு தெறிக்கிறதாகத்தான் இருக்கும் என்பதைத் தெரியாமலா இந்தக் களத்தில் இறங்கியிருக்கிறார். நிச்சயமாக அவர் தெரியாமல் இறங்கியிருக்கிறார் என்று கூற முடியாது.
 
ஒரு பதவியில் தொடர்ந்து இருப்பதானால் எவ்வளவு நெளிய வேணும் எப்படியெல்லாம் சுழிக்க வேணும் என்னவாறெல்லாம் வழிய வேணும் என்பதிலெல்லாம் அவர் நீதவான் பதவி காலத்தில் அத்துபடியாகவே கத்து வைத்திருப்பார்
 
ஆனாலும் இந்த முதலமைச்சர் பதவிக் கதிரையில் உட்கார்ந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒவ்வொரு கட்சிக்காரரும் கழுகுகள் மாதிரிக் காலில பிடித்து இழுப்பார்கள்

வெளிநாட்டுப் புலிப்பிரமுகர்கள் கூட்டம்; அரசாங்கத்தை சர்வதேச அரங்கில் அம்பலத்தும்படுத்தும் வகையிலேயே இவர் செயற்பட வேணுமென நெருக்கடி கொடுக்கும்

13வது திருத்தத்தில் அதிகாரங்கள் தொடர்பாக சுமந்திரன் இவர் பெயரில் வழக்குகள் போட்டு தனது தொழிலுக்கும் தொடர்புகளுக்கும் தேவையான புகழை மேலும் பெருக்கிக்கொள்ள காவலிருக்கிறார்
 
சுரேஷ் பிரேமச்சந்திரன் மாகாணசபையைக் கொண்டு புலி ஆதரவுத் தீர்மானங்களை அடுத்தடுத்து நிறைவேற்றி வெளிநாட்டுப் புலிகளிடமிருந்து பெட்டிபெட்டியாகக் எதிர்பார்த்து காத்திருக்;கிறார்.

கௌரவ விக்கினேஸ்வரன் நியாயமான காரணங்களுக்காக அரசைப் பாராட்டினாலோ அரச அமைச்சர்கள் பங்கேற்கும் விழாக்களில் நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலோ அவர் தமிழினத் துரோகிப் பட்டத்துக்கு உள்ளாக அதிக நேரமெடுக்காது.

அதேவேளை அவர் அரசாங்கத்தோடு தமிழ்த்தேசிய சண்டித்தன கொழுவல் அரசியலில் காலத்தைப் போக்குவாரானால் தமிழ் அரசியலில் புகழ் தேடிக் கொள்ளலாம் ஆனால் அவரது மாகாண அரசாங்கத்தால் மக்களுக்கு எந்தவித நன்மையும் செய்ய முடியாது. தமிழ் இனவாத அரசியலில் மூழ்கடிக்கப்பட்டு விடுவார். ஆனால் அவர் தனது சொந்த வீட்டில் நிம்மதியாக தூங்க முடியாது. தனிப்பட்ட உறவுகள் முன்னால் தலையைத் தொங்கப் போட்டுத்தான் நடக்க வேண்டும்.
 
இப்படி திரு விக்கினேஸ்வரன் அனைத்துத் திசைகளிலிருந்தும் ஒன்றுக்கு ஒன்று பொருந்தாத நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டியேற்படும்.

கடைசியில் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற கட்டத்தைத்தான் அவர் சந்திக்க வேண்டியிருக்கும்.

அதிகாரங்களும் இல்லாத அரசாங்க ஒத்துழைப்பும் கிடைக்க முடியாத ஒன்று என்பது மட்டுமல்ல அரசாங்கம் தரும் நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டிய முதலமைச்சர் பதவியே இது. யாதொன்றும ; அறியேன் பராபரமே என்று இவர் கதறினாலும் எல்லாப்பழியும் இவருக்கே என்பதே இந்த முதலமைச்சர் பதவி. அத்துடன் சுற்றி சேர்ந்துள்ளவர்களோ குரங்கு அப்பம் பிரிப்பது போல தன்னை பிரித்து மேய்ந்து விடுவார்கள் என்பதையெல்லாம் தெரிந்திருக்கக் கூடிய புரிந்து கொள்ளக் கூடிய   ஒருவர் எப்படி இப்படிப்பட்ட இந்த முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டார் என்றுதான் என்னால் புரியமுடியாத சங்கடமாக உள்ளது.

குமாஸ்த்தாமுனி- குருவேஏனக்கும் ஒரே குழப்பமாகத்தான் இருக்கு. ஆனால் நான் சேர்த்த சில செய்திகளை நீங்கள் கேட்டால் சிலவேளை இந்த சங்கடத்துக்கு விடையைக் கண்டு பிடித்து விடுவீர்கள்;.

சகடமுனி:- அதென்ன செய்திகள்

குமாஸ்த்தாமுனி:- குருவே! இந்தியா சொல்லித்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னை முதலமைச்சர் ஆக்கியது என்றில்லை என்று கூறியிருக்கிறார். இதைப்பார்த்தால் எங்கப்பன் குதிருக்கள் இல்லை என்ற மாதிரியில்லையா சம்பந்தர் மஹிந்த ராஜபக்ஷாவைக் கடைசியாகத் தனியாகச் சந்தித்து மூன்று நாட்களிலேயே சம்பந்தர் இந்தத் திடீர் முடிவைத் தமிழரசுக் கட்சிக்காரர்கள் மீது திணித்தார். திரு விக்கினேஸ்வரன் தமிழ் நாட்டுத் தலைவர்கள் தங்களுக்கு உதவ வேண்டுமே தவிர அவர்கள் அரசியல் சரியான குழப்பங்களை ஏற்படுத்தி இலங்கைத் தமிழர்கள் மீது எந்தவொரு அரசியற் தீர்வையும் திணிக்கக்கூடாது என கோத்தபாயா மாதிரி எச்சரிக்கையும் விடுத்துள்ளார் திரு. விக்ினேஸ்வரனின் இரண்டு பிள்ளைகளும் புலி  தேசியத்துக்கே ஒவ்வாத வகையில் சிங்களவர்களையே மணம் முடித்திருக்கிறார்கள்: மேலும் திரு விக்கினேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்தவின் மிகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமான அமைச்சர் வாசுதேவா நாணயக்காராவின் நெருங்கிய உறவினர். குருவே இதுகளைத் தொகுத்துப் பார்க்க தங்களது சங்கடத்துக்கு ஏதாவது விடைமருந்து புலப்படுகிறதா!

சகடமுனி:- சபாஷ் குமாஸ்த்தா! புதினங்கள் தேடும் உனது குணத்துக்கு எனது பாராட்டுக்கள்: நீ சொல்லுபவற்றைப் பார்க்கையில் இந்தியாவுக்கு இதில் ஏதும் பங்கில்லை என்று தெரிகிறது. ஆனால் நிச்சயமாக மஹிந்தவுக்கு நிச்சயமாகப் பங்கிருக்கிறது என்றே புரிய வேண்டியிருக்கிறது. ஆதனால்தான் சேனாதிராஜா சுரேஷ் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் சரவணபவன் சிவிகெ சிவஞானம் ஆகியோர் பெட்டிப்பாம்பாக அடங்கிப் போய்விட்டார்கள் என்பது புரிகிறது. அப்ப கௌரவ விக்கினேஸ்வரன் முதலமைச்சர் கதிரையில உட்கார முதலிலேயே டபுள் விளையாட்டில இறங்கி விட்டாரா! அப்படியே வைத்துக் கொண்டாலும் குமாஸ்த்தா! திரு விக்கினேஸ்வரன் எத்தன மாதங்களுக்குத்தான் மஹிந்தவுக்கு நல்ல தம்பியாக இருப்பார்? அப்படியிருந்தாரென்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காரரின் தமிழின மாவீர அரசியல் அவரை சும்மா விட்டுவிடுமா? என்று புதிய சங்கடங்கள் என் தலையைச் சுற்றுகின்றன. 

(நன்றி: தேனி இணையம்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com