Contact us at: sooddram@gmail.com

 

கொழுக்கட்டையா? மோதகமா?

(அர்வின். ஜீ)

செய்தக்க அல்ல செயக் கெடும்
செய்தக்க செய்யாமை யானுற் கெடும்
- திருக்குறள்.

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெல்லப்போவது தற்போதைய ஜனாதிபதி மகிந்தவா? அல்லது முன்னாள் அமைச்சர் மைத்திரியா? ஜனவரி 09ம் திகதி தெரிந்துவிடும். மகிந்தவும் மைத்திரியும் நல்ல நண்பர்கள். இப்போது எதிர் எதிராக மக்கள் முன் ஜனாதிபதி வேட்பாளர்களாக நிற்கிறார்கள். தேர்தலின் பின் இவர்கள் இருவரும் தொடர்ந்து நண்பர்களாக இருப்பார்களா? அல்லது வென்றவர் தோற்றவரை பழிவாங்குவாரா? இதற்கும் புதிய ஜனாதிபதி அறிவிக்கப்பட்ட பின்னர் தெரிந்துவிடும்.

மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் ராஜபரிபாலணத்தை தலைமையேற்று நடாத்துவதற்கு மூன்றாவது முறையாகவும் விருப்பம்கொண்டுள்ளார். கடந்தகால அவரது ஆட்சிக்காலத்தில் சில அபிவிருத்திகள் நடைபெற்றாலும் பல பாதகமான சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக எந்த தீர்வும் எட்டப்படவில்லை என்பதும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான சிங்கள பௌத்த அடாவடித்தனமும் முஸ்லீம், தமிழ் - சிங்கள மக்களின் பெரும் ஏமாற்றமான அமைந்தது.

ஊடகச் சுதந்திரத்தைப் பொறுத்தவரை யுதத்தத்தின் போது நடைமுறையில் இருந்த கட்டுப்பாடு பின்னர் தளத்தப்படவில்லை. மாறாக அது அச்சுறுத்தும் அளவுக்கு வளர்ந்துவந்தது.

மேலும் ராஜபக்ச அங்கத்தவர்களின் அதிகார துஸ்பிரயோகம் மற்றும் அரசியல் அடாவடித்தனம். இவ்வாறான செயற்பாடுகள் சராசரி மனிதனுக்கு அதிகாரத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்தும் என்பதும் அதற்கெதிராக தனது உரிமையைப் பாவிக்கும் என்பதும் சமூகவிஞ்ஞானம்.

இதனால் பிரதான பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் பின்பலத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளார். இதற்கு பௌத்த சிங்கள பிற்போக்கு சக்திகளும் இடதுசாரிகள் எனத் தம்மைக் கூறிக்கொள்ளும் ஜேவிபியும் ஆதரவினைத் தெரிவித்துள்ளன. மேலும் பல முற்போக்கு பிற்போக்கு உதிரிகளும் ஆதரவினைத் தெரிவித்திருக்கிறார்கள்.

பொது வேட்பாளருக்கு தமிழ் தேசியக் கூத்தமைப்பும் தனது ஆதரவினைத் தெரிவித்திருக்கிறது. கூத்தமைப்பு தனது முடிவினை எட்டுவதற்கு முன்னதாக பொதுவேட்பாளர் மைத்திரியின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதற்குப் பெரும் திரளான தமிழ் மக்கள் அணிதிரண்டதால் மிரண்டுபோன கூத்தமைப்பு அவசரஅவசரமக தனது 'தகிடுதத்தோம்' விளையாட்டினை வெளிப்படுத்தியிருக்கிறது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஈவிரக்கமின்றி புலிகளைப் பூண்டோடு அழித்ததினால் புலன்பெயர்ந்த புலிவாலுகளும் தமிழ் தேசியவாதிகளும் மகிந்த ராஜபக்சவை மீண்டும் ஆட்சிபீடம் ஏறுவதை இதனால் தடுத்துவிட முடியும் என்பதையும் மகிந்தாவை சர்வதேச குற்றவியல் கூண்டில் நிறுத்துவதற்கும் இதுவொரு சந்தர்ப்பமாக கருதி பொதுவேட்பாளர் மைத்திரியை ஆதரிக்கின்றனர்.

துரதிஸ்டவசமாக இயல்பாகவே மாற்றத்தை விரும்பும் மனித இயல்பூக்கம் கொண்டவர்களும் மகிந்தவின் குடும்ப ஆட்சியை அகற்றிவிடவேண்டும் என்பதால் பொதுவேட்பாளர் கூடாரத்துக்குள் ஒதுங்கவேண்டியேற்பட்டிருக்கிறது. அதேவேளை முற்போக்கு சிந்தனையும் மாக்சிஸ சிந்தனையின்பால் ஈர்க்கப்பட்டவர்களும் மைத்திரியின் பக்கம் சாய்ந்திருப்பதில் அவர்களது நியாயமும் கவனிக்கப்பட வேண்டியதே.

மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக களமிறக்குவதும் அதற்கு முற்போக்கு பிற்போக்கு அணியின் சக்திகளைப் பெற்றுக்கொள்வதன் மூலமே அது சாத்தியப்படும். இதனை நன்குணர்ந்த முன்னால் ஜனாதிபதி சந்திரிகா முன்னின்று செயற்பாட்டார்.

இலங்கை வரலாற்றில், இலங்கைத் தமிழ்பேசும் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு முற்போக்கான தீர்வினை முன்வைத்த அரசியல் தலைவி சந்திரிகா. மற்றும் அவரது நம்பிக்கைக்குரியவர்கள் (அரசியல் நெருக்குதலால் அது வெட்டி சிதைக்கப்பட்டதை ஒரு புறம் வைத்துக்கொள்வோம்) பின்புலத்தில் இருக்கும்போது தமிழர் பிரச்சினைக்கு மட்டுமல்ல முஸ்லீம்களின் பிரச்சினைக்கும் ஒரு சுமூகமான தீர்வு எட்டப்படாதா? என்ற நப்பாசை யாருக்குத்தான் தோன்றாது?

ஒருவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் கை ஓங்கி, பொதுவேட்பாளர் கூட்டணியிலுள்ள முற்போக்கு சக்திகள் ஓரம்கட்டப்படலாம். ஆனால் மற்றத்தை விரும்பும் மனங்கள் சாதகமான சிந்தனைகளையும் செயற்பாடுகளையுமே நாடும்.

எனவே இடதுசாரி பாரம்பரியத்தைக்கொண்ட பொதுசன ஐக்கிய முன்னணி வேட்பாளர் என்பதற்காகவோ ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசாங்கத்தை நிறுவியதற்காகவோ மகிந்தவை ஆதரிக்கும் இடதுசாரிகள், எதிரணி மீதும் எதிரணி சார்பான,வர்கள் மீதும் சேறள்ளிப் பூசுவதைவிடுத்து அரசியல் ரீதியான தர்க்கங்களை முன்வைத்தால் ஆரோக்கியமான, நகரீகமான அரசியல் கலாசாரமாவது நம்மிடையே மிஞ்சும்.

எது எப்படியோ? ராஜபச்ச குடும்பம் மீண்டும் ஆட்சிபீடம் ஏறும் தப்பவெப்ப நிலைமைகளே தென்படுகின்றன. இதற்கு தர்க்கரீதியான அரசியல் விளக்கம் என்னிடமில்லை. கீழ்மட்ட உறுப்பினர்கள், பெரும்பாலான மக்கள் அவர் பக்கம் இருப்பதாலோ இல்லையோ அவரிடம் அதிகாரம் இருக்கிறது. அது ஒன்றே போதுமானது அல்ல என்றாலும் அதுவும் இன்றியமையாதது. சொற்ப வாக்கு வித்தியாசத்தில் மகிந்த ராஜபக்ச குடும்பம் மீண்டும் ஆட்சி பீடம் ஏறும்.

வாழ்க
வாழ்க வழமுடன்
வளர்க நின் கோலும் கோத்திரமும்
மக்களையும் கொஞ்சம் வழவிடுங்கள்.

திருக்குறனின் பொருள்: செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும். செய்ய வேண்டியதைச் செய்யாமல் விடாலும் கேடு ஏற்படும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com