Contact us at: sooddram@gmail.com

 

மேய்ச்சல்வெளி

(சுல்தான்)

தங்கள் பாதுகாப்பையும், உரிமைகளுடனான விடுதலை வாழ்வையும் பெற்றுக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் ஒரு சமூகம், ஒற்றுமைப்பட்டுக் கோரிக்கைகளை வைக்க வேண்டுமென்பதில் யாருக்கும் மறுகருத்து இருக்க முடியாது. அதுவே வெற்றியளிக்கும் என்பதும் யாவருமறிந்ததே. ஆனால், தமிழ்க்கட்சிகள் ஒரு நீடித்த ஒற்றுமைக்குத் தயாராகிவிடுவார்கள் என்று நம்புவது, அமெரிக்காவோ ஐ.நா. சபையோ வந்து நமக்குத் தீர்வைப் பெற்றுத் தந்துவிடாதா என்று ஆசைப்படுவதற்கு ஒப்பானதாகும். நம்மில் பெரும்பாலோர் இத்தகைய எளிய நம்பிக்கைகளுக்கு மேலதிகமாகச் சிந்திக்கும் சிரமத்தை ஏற்படுத்திக்கொள்ள விருப்பப்படாதவர்கள் என்பதும் உண்மையே.

தேர்தலுக்கும், தமிழ்மக்களின் உணர்ச்சிகர ஆதரவைத் தூண்டி வைத்திருப்பதற்கும் ஒற்றுமைக் கோஷத்தை எடுத்து விடுவதல்லால், அதன் அரசியல் தேவை-முக்கியத்துவம் குறித்துச் சிந்திக்க மனப்படாதவர்களாகவே நம் பிரதிநிதிகள் உள்ளார்கள். ஏனைய கட்சிகளெல்லாம் நம் கொள்கைகளை ஒப்புக்கொண்டு நம்மோடு வந்து இணைந்துவிடுவதே தமிழொற்றுமை ஆகும் என்பதே பெரும்பாலானவர்களின் ஒற்றுமை குறித்த எண்ணமாக உள்ளது.

வெவ்வேறு கட்சிகளின் தோற்றம் என்பதே கொள்கை வேறுபாடுகளினாலும், வழிமுறைகள் அணுகுமுறைகள் பற்றிய மாற்று யோசனைகளாலும் உருவானவைதான். கட்சிகள் மட்டும் என்றில்லை. ஒவ்வொரு தனி மனிதருமே சிறிய சிறிய அளவிலேனும் மற்றவர்களோடு ஒத்துப்போக முடியாத அபிப்பிராய விலகல்களோடு உள்ளவர்தான். வெவ்வேறு கருத்துகளைக் கொண்டிருக்கும் மனிதர்கள் தங்களுக்குள் ஒன்றுபடுகின்ற புள்ளிகளை இனங்கண்டே அவர்கள் இணைந்து ஒரு கட்சி உருவாகின்றது. அதுபோல, தனித்தனியாகப் பல்வேறு கொள்கைகளையும் உடைய கட்சிகள், ஒன்றுபடுகின்ற ஒருசில நிலைப்பாடுகளின் அடிப்படையிலேயே அவைகளுக்கிடையிலான ஐக்கியத்தை உருவாக்க முடியும்.

இந்த யதார்த்தத்தைக் கூடப் புரிந்துகொள்ள முடியாத பிரதிநிதிகளை தமிழ்மக்களாகிய நாம் தெரிவுசெய்து விட்டிருக்கிறோம். தங்கள் கட்சியின் நிலைப்பாடுகளை முழுவதுமாக ஏற்றுக்கொண்டவர்களுடனேயே ஒற்றுமைப்பட முடியும் என்பது முட்டாள்த்தனமான கருத்து மட்டுமல்ல உள்ளார்ந்த பாசிஸத்தன்மை கொண்டதுமாகும்.

ஐக்கியம் என்பது வேற்றுமைகளிடையே காணும் ஒற்றுமை மூலம் உருவாவதுதான். அவரவர் கட்சி நலன்களுக்கு சுயலாபங்களுக்கு மேலாக சமூக நலனையும் மக்கள் நலனையும் முன்னிறுத்தி யோசிக்கும்போதே ஐக்கியம் சாத்தியமாக முடியும். மக்களுக்கு மேலாக அவரவர் கட்சி நலனையும், அடுத்த தேர்தலுக்கான வாக்குகளையும் மனதிலிருத்திக்கொண்டு ஒற்றுமை பற்றி யோசித்தால் அச்சமும் மடமையும் விசாலமடையா மனதின் காழ்ப்புமே வெளிப்பட்டு நிற்கும்.

வெறும் படைபல வீரம் குறித்த உசார்மடத்தனப் பீத்தல்கள், மற்ற சமூகங்களையும் மக்களையும் கூட விலக்கி நம்மைத் தனிமைப்படுத்திய பயங்கரவாத செயற்பாடுகள், நமக்கு அப்பால் 'சரி' ஏதுமில்லை என்கிற பாசிஸ தற்குறித்தனம், ஆயுதங்களுக்குக் கீழ்ப்படுத்தி மக்களை நிறுத்திய ராணுவ வாதம் மூலம் தமிழ்மக்களின் உரிமைப் போராட்டத்தைத் தான்தோன்றித்தனமாக இழுத்துச் சென்று கவிழ்த்துக் கொட்டிவிட்டுத் தாமும் அழிந்துபட்டார்கள் புலிகள். பாடழிவு, அகதிமுகாம், கையேந்தல் வாழ்வு என்று சமூகத்தின் மனோபலத்தையே சிதைத்துவிட்டுச் சென்றார்கள். நாற்புறமும் சிதைந்து கிடக்கும் சந்தியில் நாம் நிற்கிறோம். திரும்ப நம்மை மீள்விக்கப் பாதை அமைத்துக் கொள்ள வேண்டிய தருணமிது. விவேகமும் நிதானமும் அர்ப்பணமும் விட்டுக்கொடுப்பும் கூடிய தலைமைத்துவப் பண்பை வெளிப்படுத்தித் தமிழ்வாழ்வை மீட்டுக்கொள்ளும் பாரிய சவால் முன்னாலிருக்கிறது.

நமக்குள் வளர்ந்த பாசிஸத்திற்கும் ராணுவவாதத்திற்கும் இடம்விட்டு சமூக முதுகெலும்பை முறிக்கத் துணைபோனவர்களாக நம்மில் பலர் இருந்தோம். பிழையை வளர விட்டுப் பீழையுண்டாக்கிய தவறை நம்மிடம் வைத்துக்கொண்டு இப்போது யுத்தத்தில் வென்றுவிட்டவர்களைக் கரித்துக்கொட்டி என்ன ஆகப்போகிறது? இப்போதேனும் விவேகமான நகர்வுகளுக்கு நாம் யோசிக்க வேண்டாமா?

உடனடித் தேவையாக ஒரு நடைமுறைச் சாத்தியமான தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இன்று எல்லாத் தமிழ்மக்களினதும் பொது எதிர்பார்ப்பல்லவா? இதற்கு ஆவேசப்பட்டு விரோதத்தைக் கக்கும் அதே பழைய வீரப்பேச்சுக்களால் ஆகுவது என்ன என்று இனியும் நாம் சிந்திக்க வேண்டாமா? வாக்குகளுக்கும், வாய்சாலகத்தைக் காட்டவும் என வெறுமனே குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டிருக்கும் இனரோசப் பேச்சுக்களால், இன்னுமின்னும் நாம் இருந்த இடத்தை விட்டுக் கீழே கீழே வழுக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதே யதார்த்தமல்லவா? பிடிக்கக் கிடைக்கும் சந்தர்ப்பங்களை நழுவ விட்டுச் சும்மா பீற்றிக் கொண்டிருக்கும் அரசியலால் மக்கள் அடைந்தது என்ன? இப்போதேனும் ஒன்றுகூடி யோசிக்க வேண்டாமா?

இதற்கு மேலும் கற்பனை ரதங்களில் மக்களை ஏமாற்றி அழைத்துச் செல்லாமல், சாத்தியமான ஒரு தீர்வுக்கு தமிழ்க்கட்சிகள் முதலில் ஒன்றுபட்ட முடிவுக்கு வரப் பேசுதல் வேண்டும். அனைவரும் ஒன்றுபடும் புள்ளிகளை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். தங்கள் தங்களுக்குள்ள சமூக அக்கறை மற்றும் மக்கள் நலனுக்காக ஒவ்வொருவரும் விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பது என்ன என்பதை உணர்த்தியாக வேண்டும். இன்றைய சூழ்நிலையைக் கடக்க இதன் உடனடி அவசியம் உணரப்படா விட்டால், நாம் இன்னும் கீழே போய் நின்றுதான் வீரமுழக்கம் இடவேண்டி வரும்.

நடந்துகொண்டிருப்பவற்றைத் தடுக்க அல்லது அதன் தீவிரத்தைக் குறைத்து அடுத்த கட்டத்திற்கு நகர, முதலில் இன்று தமிழ்க்கட்சிகள் ஒன்றுபடக் கூடிய விடயங்களையேனும் கண்டு தொடங்குதல், நாம் இன்னும் பாடுகேடான நிலைமைக்குப் போய்ப் பின் அரற்றுதலைத் தவிர்க்க உதவும். அரச தரப்பை தீர்வுக்கு வலியுறுத்துவதற்கும், தமிழ் மக்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பையேனும் பூர்த்தி செய்யும் விதமாக அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கும், தமிழ்க்கட்சிகளிடம் உள்ள இணக்கப்புள்ளிகளை அவர்கள் தம்மிடையே கலந்துபேசிக் கண்டுகொள்வதே இன்றைய முதல்படி.

ஒன்றுபட்ட கோரிக்கைகள் எவையெவையாக இருக்க முடியும் எனத் தமக்குள் ஒரு முடிவுக்கு வருவதும், அதில் உறுதியை வெளிப்படுத்தி நிற்பதும், அரச தரப்பிற்கு குறைந்தபட்சம் அதிலிருந்தே பேச்சைத் தொடங்க வேண்டிய நிர்ப்பந்தத்தை அளிக்கும். அதைவிடுத்து, வேறு யாரேனும் மூலம் அரசுக்கு நிர்ப்பந்தத்தை அளித்து நாம் தமிழீழத்திற்குச் சென்றுவிடலாம் என்ற கனவையே இன்னமும் காட்டி ஏமாற்றிக் கொண்டிருக்க முனைந்தால், 'உள்ளதும் போச்சுதடா' அனுபவமே தொடராகும்.

ஒன்றுபடக் கூடிய புள்ளிகளை விட்டுவிட்டு கொள்கை வேறுபாடுகளிலேயே தொங்கிக்கொண்டு, தத்தம் பிரமுகத்தனத்தையும் பதவிகளையும் பாதுகாக்க பராதிப்படுகிறவர்களின் அரசியல் ஞானத்தையும் சமூக அக்கறையையும் நாம் இனங்கண்டுகொள்ள வேண்டும். நம் வாழ்வை இன்னுமின்னும் என்ன செய்யக் கருதி இருக்கிறார்கள் என்பதைக் கேட்டாக வேண்டும்.

(சுல்தான்) (தை 24, 2011)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com