Contact us at: sooddram@gmail.com

 

'பித்... தூ'

(ஒற்றைக்காதுடையசெவியன்.)

1.

'சித்திரகுப்தா என்ன பம்முகிறாய்?''இவரை எங்கு தள்ளவதென்று......''அவளையா நரகத்துக்குள் தள்ளு பாவிகளின் அதுவும் மகாபாவியின் கைகளால் சாப்பிட்டவர்களை நரகத்துக்குள் தள்ளுவதுதான் மேல்லோகத்தின் நீதி''பிரபு, அவர் மகாபாவியின் கைகளால் சாப்பிடாவிட்டால் 'நல்ல' சாப்பாடெல்ல போட்டிருப்பார்கள். எனவே அவருக்கான தீர்ப்பை தாங்கள் சற்று 'கொன்சிடர்' பண்ணவேண்டும்''நீர் அடிக்கடி பூலோகத்துக்குப் போய்வருவதால் தமிழை மறக்கிறீர் என்று பார்த்தால் புத்தியுமா பேதலிச்சப் போச்சு?''மகாபிரபு, அப்படியொரு பிள்ளையைப் பெற்றதற்காக அவர் அக்கடி மனம் நொந்து அழுதிருக்கிறார். அத்துடன் உமையாளின் திருநாமத்தைக் கொண்டிருப்பதால் தாங்கள் சற்று இரக்கம் காட்டவேண்டும் என்று பணிவுடன் விண்ணப்பிக்கிறேன்''என்ன நீ அவளுக்காக 'றெக்கிமென்ட்'... யோவ் உன்னோடு சேந்து சேந்து எனக்கும் ஆங்கில வியாதி தொந்திக்கொண்டுட்டுது. சரி அப்படியொரு பிள்ளைய அவளுடைய வயிற்றில் படைத்த பிரமாவினுடைய குற்றம்... என்ன கொடுப்புக்குள்ள சிரிக்கிற...''வேலுப்பி...''யோவ்... பிரம்மா, வேலுப்பிள்ளை ஊடாக படைத்தார். நீர் பிரம்மாவிடம் சென்று ஒரு கடிதம் வாங்கிவா''பிரபு, வயசான காலத்தில என்னெயேன் இப்படி அலைக்கழிக்கிறீர். பிரம்மாவோ 'வெரி பிசிமான்' எந்த அகலியுடன் களவா கலவுறதுக்கு மாறவேடம் போட்டுக்கொண்டு அலையிறாரோ தெரியாது. அல்லது அவரை ஐயன் கலைத்துக்கொண்ருப்பாரோ தெரியாது. அவருக்கு இரவு பகலா படைக்கிறதுதான் வேலை. அப்படி அவர் படுக்கிற இடத்தை கண்டுபிடித்தாலும் அவர் வெளிவர எத்தனைநாள் காத்திருக்க வேண்டுமோ தெரியாது''சும்மா தொணதொணத்துக்கொண்டிராமல் அலுவலப்பாரும்''பிரபு...''சித்திரகுப்தா...' கர்ச்சித்தான் யமன்.

2.

'பூவோடையும் பொட்டாடையும் போகவேணுமெண்டு நான் கேட்காத கடவுளில்ல பிடிக்காத விரதமில்ல ஆனால் நீங்கள் என்ன ஏமாத்திப்போட்டு வந்திட்டியள் என்ன?''போடி பைத்தியக்காரி நீ அழித்தல் கடவுள், அதுதான் உன்ர மேனிட்ட மன்றாடியிருந்தியென்றால் நீ நினைத்தபடி நடந்திருக்கும்''நீங்களும்தான் அவன்ர கையாள சாப்பிட்டனியள்''ம்.. எங்கள வைச்சு சாப்பாடு போட்டான், மற்றவளத்தால துரோகிகளையும் வைச்சு நல்ல சாப்பாடு போட்டான். என்ன அதுகள் பாவங்கள் வாய்விட்டு அழுதுதுகள், குழறிச்சுதுகள் நான் மனதுக்குள் அழுதன், குமுறினன்''என்னங்க பிரிச்சுப் பேசுறியள்''நான் நினைச்சன் பெத்தமனம் பித்தென்று''நல்ல பித்துத்தான் போங்க. என்னங்க நீங்கள், இந்தியாவில இருந்து வெளிக்கிட சம்மதிச்சிருந்தக்கூடாது''போடி பைத்தியக்காரி என்ர சம்மதத்த எவன் கேட்டவன். நோர்வேகாரன் வந்து இனியொரு பிரச்சினையும் இல்ல வெளிக்கிடுங்கோ ஊருக்கு என்று சொன்னான் நானும் ஊரில போய் சாவமென்று வெளிக்கிட்டன் ...ம்...  கொணந்து கண்ணக்கட்டி வன்னி காட்டுக்குள்ள விட்டுட்டாங்கள், ஆனால் நீ கொடுத்துவைச்சனி ஊரிலேயே செத்திருக்கிற''அதுசரி அவன கண்டனியளே''என்னடி' பதறினார் கிழவர்.

'என்னங்க இப்படி வேத்துப்போச்சு, அவன கண்டனியளோ என்றுதானே கேட்னான்''செத்துப்போன என்னை பிழைக்கவைக்கப்பார்த்தியே அவனை என்னெண்டு இஞ்ச விடுவாங்கள். ம்... 'நல்ல' பித்தென்ற இப்ப....''ஆமாங்க பெத்தமனம்''உன்னையெல்லாம் திருத்தவே முடியாது''என்ன இருந்தாலும்....''என்ன? என்ன இருந்தாலும்! உவன் என்னத்த மிச்சம் பிடிச்சவன் ஆ..! இருந்ததெல்லாத்தையும் அழிச்சான். ஊரான் வீட்டு சொத்தெல்லாத்தையும் அழிச்சான் என்றால் ஊரான் வீட்டு பச்சைப்பிள்ளைகளைக் கூட விட்டுவைக்க அவனுக்கு மனம் வரல்லையே... பாவி.. படுபாவி''......''இப்ப என்னத்துக்கு வானளவு கண்ணீர் வடிக்கிற''இப்படி ஒருபிள்ளய பெத்ததுக்காக அழுறன். வயிற எரியுதுங்க''க்கும்... இப்படி ஒரு பிள்ளையை பெத்ததுக்காக உன்ன தலேலை தூக்கிவைச்சு கொண்டாடுதுகள் வெளிநாட்டுச் சனம். தமிழீழத்தின் அன்னை என்றாங்கள். தேசத்தின் தாய் என்றாங்கள். ஆ... ஆ... புரட்சி கவிதைய பாடுறானுகள். தமிழ், உரிமை, சுதந்திரம் என்று பாட்டுகளாக கேட்கிறாங்கள் என்ன கொடுமை... உன்னையும் வைச்சு காசு பண்ணுறாங்கள்''இஞ்ச பேப்பரிருக்கே, ரேடியோ கேட்கலாமே''எல்லா கண்றாவியும் இஞ்ச இருக்கு. அதிலதான் அவன் அங்க இருக்கிறான் என்று கிடக்கு. அதனாலதான் நான் இஞ்ச நிம்மதியா இருக்கிறன். நீ என்னடா எண்ட...''நான் கேள்விப்பட்டன் ஆள மேல அனுப்பியாச்செண்டு''பைத்தியக்காரி சனம் பாயுறதுக்கு முன்னமே அவன் பாஞ்சிருப்பான். உன்ர மகனல்லே''மற்றப் பிள்ளயலெல்லாம் உங்கட பிள்ள இவன் மட்டும் என்ர பிள்ள... ம்...''அதுதான் அவ...''அதவிடுங்க இப்ப ஆளெங்க''பாஞ்சிருப்பான்''நீங்கள் கண்டனியளோ''பாஞ்சிருப்பான் எண்டுதானே சொல்லுறன்''அவன் அங்கயுமில்ல இங்கயுமில்ல எண்டால் பின்ன எங்க''அவன் எங்கயும் இல்லாமலிருந்தால்தான் சனத்துக்கு நல்லம். அதுசரி உன்ர மாமன்ர பேர் தெரியுமோ உனக்கு''திருவேங்கடம்''தமிழர் ஆருக்காவது இப்படி பேர் இருக்கே''அதுக்கென்ன இப்ப''இல்ல தமிழீழத்தின் தேசியத் தலைவரின் தாயென்னுறாணுகள்''அதுக்கென்ன இப்ப நான் தமிழச்சி தானே''உங்க...  உந்த கூத்தைக் கேளு ஒருதன் உன்னை நினைச்சு அழுறான் தன்ன பெதத்த தாயுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்காத போக்கிரி...''அதெப்படி உங்களுக்கு தெரியும்''யாம் அனைத்தும் அறிவோம். உவன் தாயையும் தகப்பனையும் 'பொன்சரில' கனடாவுக்கு கூப்பிட்டவன். வந்த இடத்தில் மனுசி செத்துப்போச்சு. மனுசியக்காட்டி அரசாங்கத்திடம் காசு கற்ககிறதுதான் அவன்ர கனவு. கனவில இடிவிழுந்த ஆத்திரம் அவனுக்கு''பாவி''இப்ப தகப்பன அறைக்குள்ள பூட்டிவைச்சிருக்கிறான்''ஏனப்பா''ஆ... தகப்பனுக்கு அரசாங்கம் கொடுக்கிற உதவித் தொகைய இவன் பிடுங்கிடுவான், கிழவன் சிலவுக்கு ரோட்டில நிண்டு பிச்ச எடுத்திருக்கு. மயினற்ர சினேகிதப்பெடியள் பகிடிபண்ண கிழவன அறைக்குள்ள அடைச்சுவைச்சிருக்கிறான்''சண்டாளா''உன்ர மகனவிடவோ''ஐயோ... எதுக்கு திரும்பத்திரும்ப... என்னப்பா உங்கட ஞானதிஸ்டியால அவன் எங்க இருக்கிறான் என்று சொல்லுங்கோவன்''பார்வதீ' பயந்து கிடுகிடுத்துப்போனாள் கிழவி. கிழவி பயந்துபோனதைக் கண்ட கிழவரும்,

'சரி சரி... அவன நினைச்சாலே அடிவறு கலக்குது நீ என்னடா எண்டா அவன் எங்க இருக்கிறான் என்று பார்த்துச் சொல்லச் சொல்லுறா... ம்... அவன்...''பார்வதி... பார்வதி...' அசரீரியைக் கேட்ட கிழவரும் கிழவியும் துணுக்குற்றனர்.

'என்னங்க''இண்டைக்கு உனக்குத் தீர்ப்பு ஆடாமல் அசையாமல் அப்படியே நில் காவலர்கள் உன்னை யமனிடம் தூக்கிச் செல்வார்கள்''என்னங்க அவன் எங்க இருக்கிறான் என்று சொல்லிட்டுப்போங்க'

1.

'மகா பிரபு இன்று பார்வதியின் தீர்ப்பு''செவிமடுத்தாய அவர்களின் உரையாடலை''ஆமாம் பிரபு''என்ன ஓமாம் பிரபு... கிழவியின் மனதில் அவனின் ஏக்கமிருக்கிறது, வயிற்றில் ஈரம் இருக்கிறது''பித்து''யோவ்... கடுப்பேத்தாதையும்''ஆம பிரபு ஆமா... மேலோகத்திலிருப்பவர்களுக்கு பெண்கள் என்றால் ரொம்ப ரொம்ப ஆகும் இல்லையென்றால் ரொம்ப ரொம்ப ஆகாது''என்னடா சொல்லவாறா''பின்யென்ன பெண்ணென்றால் ஒன்றில் வாயப்பிளந்து ஆவென்றுறியள் இல்லையென்றால் கடும் சினம்கொண்டு நெற்றிக்கண்ணைத் திற்றவும் தயங்கியதில்லை''இத அங்கபோய் பெண் பித்தர்களிடம் கேளு இஞ்சயேன்...''ஆன உன என்றால் அங்க போ அங்க போ என்றியள் பேசாம அங்கயே போயிருக்கிறன் 'ரான்சர' கொடுங்க'இவர்களின் வாக்கவாதம் நீண்டுகொண்டே போனது. வெளியில் தீர்ப்புக்காக காத்திருந்த பார்வதி மயக்கம்போட்டு கீழே விழுந்தார். காவலன் செய்வதறிந்து யமனின் அந்தரங்க ஆரோசனை அறைக்கதவைத் தட்டினான்.

'பிரபு தீர்ப்பு வழங்க வேண்டிய நேரம் கடந்து ரொம்ப நாளிகையாகிவிட்டது''ஓ... மை காட்... அடச் சீ அவளை அழைத்து வாருங்கள்... சித்திரகுப்தா எழுந்து கையைக் கட்டிக்கொண்டு நில் நீயும் நானும் நண்பர்கள்ளென்று வெளியில் யாருக்கும் தெரியக்கூடாது' பார்வதியைக் கண்ட யமன் தொண்டையைச் சரிப்படுத்திக்கொண்டு,

'அம்மையே தங்களுக்கு வழங்கப்படும் தீர்ப்பு தொடர்பாக எனக்கும் சித்திரகுப்தனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது, அதனால் யாம் தங்களை தற்காலிகமாக சொர்க்கத்துக்கு அனுப்பியிருந்தோம். ஆனால் தங்களின் மனம் நரகத்தைதேயே நாடியபடியால் நரகத்துக்கு அனுப்புகிறேன்' சித்திரகுப்தன் வெட்கித் தலை குனிந்தான். இதையறிந்த யமன்,

'இந்த தீர்ப்பும் தற்காலிகமானதுதான் நரகத்தில் தங்களுடைய மனம் அல்ல நடவடிக்கையை வைத்து பின்னர் மாற்றம் பெறும்''எனது கடைசி ஆசை ஒன்றுள்ளது''கடைசி ஆசையா... அதெல்லாம் இங்கில்ல'' ஐயோ... நிலம புரியாமல்!' என முக்காலத்தையும் உணர்ந்துகொண்ட சித்திரகுப்பதன் பதறினான். 'விசர் மனுசி அறளபேந்துபோச்சு' என வேலுப்பிளையரும் அலுத்துக்கொண்டார். விழித்துக்கொண்ட யமன்,

'சரி உனது கடைசி ஆசை என்ன?''என் மகன் எங்கே?'யமன், சித்திரகுப்தனை கடைக்கண்ணால் பார்த்து கொடுப்புக்குள் சிரித்தான். வலக்கையின் விரல்களை இறுக மடித்து ஓங்கி குத்தினான், வழங்கப்பட்ட தீர்ப்பின் மீது. தீர்ப்பு நிரந்தரமாக உறுதிசெய்யப்பட்டது.

சித்திரகுப்தன் தலையில் கையைவைத்துக்கொண்டு தரையில் குந்தியிருந்தான். கிழவி, 'பிள்ளை மனம் தான் கல்லு, இவங்கட மனமுமா?' என நினைத்துக்கொண்டாள். அவனைக் கண்டு கன்னத்தில் நாலு சாத்து சாத்தவேணும் என்ற அவளின் கடைசி ஆசையில் மண்ணைப்போட்டு முடிக்கிறேன்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com