Contact us at: sooddram@gmail.com

 

தமிழ் மக்களின் அரசியலுடன் இரண்டறக் கலந்த அமரர் சிவதாஸன்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் பனை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவருமான எஸ். சிவதாசன் தனது 77 வது வயதில் இயற்கை எய்தினார். அவர் 50 வருட கால அரசியல் வரலாற்றைக் கொண்டவர் என்பதுடன் மூன்று மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்ற சிறந்த மொழி பெயர்ப்பாளருமாவார். தனது மாணவப் பருவத்திலேயே இடதுசாரி அரசியலில் ஈடுபாடு கொண்டு இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கொண்டவர் என்பதுடன் வடக்கு கிழக்கில் நிகழ்ந்த பல்வேறு அரசியல் போராட்டங்களில் பங்குபற்றி பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறைக்கும் சென்றவர்.

தோழர் சிவதாசன் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருந்த காலத்தில் தொழிற் சங்கப் பணிகளில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றியவர். இலங்கைத் தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதிநிதியாக இலங்கைப் போக்குவரத்துச் சபை தோட்டத் தொழிலாளர்கள் சங்கம், காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்புக் கூட்டுத்தாபனம், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை போன்றவற்றில் தொழிற் சங்கங்களைக் கட்டியெழுப்பியதுடன் அந்த அமைப்புகளின் தொழிற்சங்க உரிமைகளுக்காகவும் தொழிலாளர்களது நலன்களுக்காகவும் அயராது போராடியவர்.

இவற்றிற்கும் மேலாக இலங்கைத் தொழில் நீதிமன்றத்தில் இலங்கைத் தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதிநிதியாக இருந்து தொழில் நீதிமன்றங்களில் வாதாடி தொழிலாளர்களுக்கு பல வெற்றிகளை ஈட்டிக் கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றிய காலத்தில் அப்போதைய பிரபல அரசியல் தலைவர்களாக விளங்கிய தோழர்களான டொக்டர் எஸ்.ஏ. விக்கிரமசிங்க பீற்றர் கெனமன் கே.பி. சில்வா போன்றோருடனும் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டதின் பின்னர் தோழர் என். சண்முகதாஸனுடன் இணைந்து பணியாற்றிய சமயம் தோழர்களான பிரேம்லால் குமாரசிறி எஸ்.டி. பண்டாரநாயக்க போன்றவர்களுடனும் இணைந்து பணியாற்றினார்.

அதேசமயம் வடபகுதியில் சகலரது நன்மதிப்பைப் பெற்றிருந்த ஆசிரியர் மு. கார்த்திகேசன் தோழர் வி.ஏ. கந்தசாமி ஆகியோருடனும் இணைந்து பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பல போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி வழிநடத்தியவருமாவார். தோழர் சிவதாசன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் இணைந்து செயற்பட்டபோது 1986 ஆம் ஆண்டில் புலிகளால் தடுத்துவைக்கப்பட்டு மிகவும் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதுடன் நீண்ட காலமாக சிறை வைக்கப்பட்டிருந்தார். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபையின் மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டு வடக்குக், கிழக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளை நிலை நாட்டுவதில் தமிழ் பேசும் மக்களின் இறுதித் தீர்வுக்கு இந்தியாவின் உதவியும் உத்தாசையும் அவசியம் என்பதையும் உணர்ந்து செயலாற்றியவர் என்பதுடன் தோழர் பத்மநாபாவின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் உரியவராகவும் இருந்தார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இரு தடவைகள் தேர்வு செய்யப்பட்டதுடன் அக்கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவராகவும் இருந்து மக்கள் பணியாற்றியவர். பின்னர் பனை அபிவிருத்திச் சபையின் தலைவராகவுமிருந்து சபையின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார். இக்காலகட்டத்தில் கொழும்பில் அவரது வாகனத்தை இலக்கு வைத்து புலிகளால் 2006.08.09 அன்று மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பில் படுகாயமடைந்து மயிரிழையில் உயிர் தப்பினார்.

தோழர் சிவதாசன் ஈ.பி.டி.யின் முக்கியஸ்தர் என்பதற்கும் அப்பால் ஈ.பி.டி.பி.யின். ஆரம்ப காலத்திலிருந்தே கட்சியுடன் பின்னிப்பிணைந்திருந்தவர். இலங்கை - இந்திய ஒப்பந்த காலத்தில் தமிழ் நாட்டில் தங்கியிருந்த தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 90 இன் நடுப்பகுதியில் தாயகத்தில் கால் பதித்தபோது அவருடன் கூட இலங்கை வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தந்தையாராகிய திரு கதிரவேல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்பகால உறுப்பினராக இருந்த போது தோழர் சிவதாசன் அவர்களும் இணைந்து பணியாற்றினார். பின்னாளில் தோழர் கதிரவேலின் சகோதரியை திருமணம் செய்ததன் மூலம் அரசியல் உறவோடு நெருக்கமான இரத்த உறவும் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களோடு நீடித்திருந்தது.

ஜீவா...

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com