Contact us at: sooddram@gmail.com

 

போக்கிடமற்ற போக்கிரித்தனம்!

(ஜீ.)

'வேண்டாதவன் பெண்டாட்டியின் கைதொட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம்' என்பதுபோல இலங்கை அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளும் சில தமிழ் பிரகிதிகளைப் பொறுத்தவரை குற்றமாகவே கருதப்படுகிறது. அதுவும் புலன் பெயர்ந்தவர்களின் புலம்பல்கள் சொல்லி மாளாது.

கரும்பு தின்னக் கூலிகேட்கும் இலங்கையிலிருக்கும் அரசியல்வாதிகளும், ஆய்பவர்களும் வெளுத்துக்கட்டுவதை இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் உட்பட சம்பந்தப்பட்டவர்கள் கேட்டு தம்மை தொலைக்கமாட்டார்கள் என்பதே இவர்களின் ஒரே நம்பிக்கை. அந்த நம்பிக்கையில் மண்ணள்ளிப்போடும் அளவுக்கு புலம்பெயர்ந்தவர்களில் நல்லவர்கள் குறைவே.

கனடாவில் இயங்கும் - வெளியிடப்படும் தமிழ் வானொலி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளின் செயற்பாடுகள் மிகத் திறமையான பச்சோந்தித்தனம். குறிப்பாக கனேடிய பல்கலாசார வானொலியில் (சிஎம்ஆர்) நடைபெறும் அனைத்து அரசியல் சம்பந்தப்பட்ட ஒலிபரப்புக்களும் மூன்றாந்தரமானவை என்பதை சுட்டிக்காட்டவேண்டிய தேவையில்லை. குவியம், செய்தியின் பின்னணியில் மற்றும் செய்திகள் பக்கா பச்சோந்தித்தனமானது. செய்திகளை இலங்கையிலிருந்து வழங்கும் இரண்டு பிரதான செய்தியாளர்கள் மூடிக்கேற்ற சாடிகளாக அள்ளி வழங்குவதில் பின்நிற்பதில்லை. அப்படியென்றால்தானே கனடாவிலிருந்து கிடைக்கும் டொலர் உபகாரம் ஒழுங்காக வந்துகொண்டிருக்கும்!

செத்த புலியிலிருந்து உண்ணி கழண்டு போவதைப்போல மேலே குறிப்பிட்ட வகையறாக்கள் இன்னும் கழண்டபாடில்லை. செத்துப்பிழைத்தவர்களின் உயிரை வாங்குகிறார்கள். அதற்கேற்றாப்போல இலங்கை அரசாங்கமும் இவர்களுக்கு தீனிபோடுகிறது. அமிர்தஷன், தயாபாரன் ஆகிய இருவரும் எப்படியோ பத்திரிகையொன்றில் பணியாற்றுகிறார்கள். முன்னவர் நிக்ஷன் என்று அறியப்பட்ட கொழும்புப் பத்திரிகையொன்றில் பணியாற்றிவருகிறார். பின்னவர் யாழ் பத்திரிகையொன்றில் பணியாற்றிவருகிறார்.

இவர்கள் செய்திகளை தெரிவுசெய்து வழங்குவதும் வழங்கும் விதமும் கொடுமையானது. அதிலும் வானொலியின் அரசியல் ஆயும் நிகழ்சிகளில் இவர்கள் வழங்கும் கருத்துக்கள் கொடுமையிலும் கொடுமையாது. ஒரு பத்திரிகைக்குரிய தார்மீக பொறுப்புக்களிலிருந்தும் தூர விலகி அரசியல் நாகரிகமற்று நேர்மையான அரசியல்வாதியிலிருந்தும் விலகி பக்கா போக்கிரித்தனமான முறையில் செய்திகளையும் கருத்துக்களையும் இந்த வானொலியினூடாக எடுத்துவருகின்றனர்.

செத்த புலியை உயிர்ப்பிக்கும் நோக்கமல்ல, செத்து அழுகிக்கொண்டிக்கும் புலியின் சதையையும் என்புகளையும் அகற்றிவிட்டு பஞ்சடைத்த புலியைவைத்து எதிரியை மிரட்டுவதே இவர்களது நோக்கம் போலும். புலிகளின் பினாமி அமைப்பான கூத்தமைப்பு தொலைந்தது சனியனென்று தலைக்கு தண்ணிதெளித்துவிட்டு பிழைப்பைப் பார்த்துக்கொள்கிறது. ஆனால் இவர்கள் பூச்சாண்டி காட்டுகிறார்கள்.

கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசாங்கம் கொத்தணிக் குண்டுகளைப் போட்டது போல இந்தமாதிரியான பத்திரிகையாளர்கள் என்று தம்மை அழைத்துக்கொள்பவர்களாலும் புலன் பெயர்ந்து 'ஐயோ தமிழ் மக்கள், தேசியம்' என்று கூப்பாடு போடுபவர்களாலும் உண்மையின் மீதும் தமிழ் மக்களின் தலைமீதும் போடப்படும் கொத்தணிக் குண்டுகளைப் பற்றி யாரும் கவலைப்படுவதே இல்லை.

சிஎம்ஆரின் யாழ் செய்தியாளர் செய்தி வாசிப்பதே ஒரு தனிதான். அதுபோலத்தான் அவர் அரசியலை ஆயுறதும். 'குறிப்பிடத்தக்கது' என்று செய்தியின் கடைசியில் சொல்வதன் மூலம் தனது அரசியல் வங்குரோத்தை நிறுவிவிடுவார். கொலை, கொள்ளை நடந்த இடத்திலிருந்து நூறுயார் தொலைவில் இராணுவத்தின் பாதுகாப்பு அரணோ அல்லது ஈபிடிபியின் காரியாலயம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்றோ '........ இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுவின் செய்றபாடென்று மக்கள் கருதுகிறார்கள்' என்று முடிக்காட்டில் மனுசனுக்கு தூக்கமே வராது போல.

அதேபோல தமிழ் மக்களுக்கும் தேசியத்துக்கும் சார்பான செய்தியென்று காட்டிக்கொண்டு தமக்கும் தமது எஜமானதும் பிழைப்பை வளர்க்கும் விதமான செய்திகளை வாசிக்கும்போது 'மக்கள் கருதுகிறார்கள்' என்றோ 'ஆய்வாளர்களின் கருத்து' என்றோ முடித்துக்கொள்கிறார்கள். அரசியல் அநாதரவை, கருத்தியலின் அனாதரவையே இது காட்டுகிறது.

இந்த வானொலியின் 'நமது செய்தியாளர்' தானொரு உசாரான பேர்வழி என்று நினைத்துக்கொண்டுதான் அமிர்தஷன் என்ற புனைபெயரை வைத்துக்கொண்டுள்ளார். முன்னவருக்கு இவர் சற்றும் குறைவானவரல்ல. இவர்தான் செய்தியை ஆயுறதுக்கும் செய்தியின் பின்னால் என்ன தெரிகிறது என்பதையும் கூடுதலாக குனிந்து பார்ப்பவர். கூத்தமைப்பு எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்ன முடிவுகளை எடுக்க வேண்டும்? என்றெல்லாம் சொல்லுவார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். 'மாமனிதர்' என்ற பட்டத்தில் மண்விழுந்ததோடு மாமாமனிதரான பீஷஷ்மர் என்கிற சிவத்தம்பி விட்ட இடத்தை இவர் தொட்டுச்செல்கிறார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட 'படிப்பினைகள் மற்றும் மீள்இணக்க ஆணைக்குழு' முன்னால் தமிழ் மக்கள் தோன்றி சாட்சியம் அளித்தது தொடர்பாக யாழ் மற்றும் நமது செய்தியாளர்கள் வழங்கிய செய்தி ஆகா, ஓகோ. யாம் பெற்ற இன்பம் இன்னும் எத்தனைபேர் பெற்றார்களோ தெரியவில்லை.

செய்தி ஆயுறதில அமிர்தஷனவிட்டால் வேறொருவர் பிறந்துதான் வரவேண்டும். மேற்குறிப்பிட்ட ஆணைக்குழுவுக்கு முன்னால் தோன்றிய தமிழ் மக்கள் யுத்தத்தின் இறுதி நாட்களில் புலிகள் தம்மை சுட்டதென்றோ கொடுமைப்படுத்தினார்களென்றோ குறிப்பிடவில்லை என்று அடித்துக் கூறினார். மேலும் இவர்களுக்கு ஒரே குழப்பம் என்னவென்றால் ஆணைக்குழு ஒரு கண்துடைப்பு என்று இந்தக் கூட்டம் கூப்பாடு போட்டாலும் பெரும் திரளான தமிழ் மக்கள் சாட்சியம் அளிக்க முன்வந்ததுதான். சர்வதேசத்துக்கு தெரியப்படுத்தவும், ஒரு பதிவாக அது அமைய வேண்டும் என்பதற்காகவும்தான் தமிழ் மக்கள் சாட்சியமளிக்க முன்வந்தார்கள் என்றொரு அரிய கண்டுபிடிப்பையும் முன்வைக்கிறார். இதற்குள் அரசாங்கம் தமக்கு சாதகமான மக்களை 'செற்'பண்ணித்தான் சாட்சியமளிக்க வைத்தார்கள். ஆனால் அரசாங்கம் நினைத்தற்கு மாறாக பெரும்திரளான மக்கள் சாட்சியமளிக்க முன்வந்ததாகவும் சொல்கிறார்.

மேலும் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த புலிகளின் உயர்மட்டத் தலைவர்களுக்கு என்ன நடந்தது என்று மக்கள் அங்கலாய்ப்பதாக தான் அங்கலாய்கிறார். இதிலாவது புலிகள் சரணடைவதில்லை சயனட்தான் அடிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்றாது குறிப்பிட்டதாக இல்லை. அரசாங்கத்தை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்கும் புலிகளை சுத்தவாளியாக்குவதுமே இவர்களுடைய தலையால கடமையாகிறது. என்ன பிழைப்பு?

அரசாங்கம் போர்க்குற்றம் புரிந்திருக்குமானால் புலிகளும் அதனைப் புரிந்திருக்கிறார்கள் என்பதைத் தன்னும் ஒத்துக்கொள்ளாத படுகோழைகள். போக்கிடமற்ற போக்கிரிகள். மனிதத்தன்மையற்ற ஊடக வியாபாரிகள்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com