Contact us at: sooddram@gmail.com

 

இலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு (பகுதி 10)

(அ.ஆனந்தன்)

பிரிவினையை ஆழப்படுத்திய தரப்படுத்துதல் திட்டம்

அதனை அடிப்படையாகக் கொண்டு உயர்கல்வி பெறுவதிலும் அதைக் கொண்டு வேலைச் சந்தையில் போட்டியிடுவதிலும் தமிழர் எண்ணிக்கையை குறைக்கத் திட்டமிட்டனர். அதாவது சிங்களர்களும் தமிழர் அளவிற்கு முன்னேறுவதற்கு சலுகைகள் வழங்குகிறோம் என்ற அடிப்படையில் தரப்படுத்துதல் என்ற பாரபட்சமான திட்டத்தைக் கொண்டுவந்தனர்.

1972 ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த தரக்கட்டுப்பாடு திட்டத்தின்படி மருத்துவக் கல்வியில் சேர விரும்பும் ஒரு மாணவர் அவர் தமிழராக இருந்தால் 400க்கு 250 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவர் சிங்களராக இருந்தால் 229 மதிப்பெண்கள் பெற்றிருந்தாலே போதும். தகுதி அடிப்படையில் 30 சதவீத இடங்கள் மட்டுமே நிரப்பப்படும். 55 சதவீத இடங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கட் தொகை அடிப்படையில் சிங்கள தமிழ் மக்களிடையே ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீதமுள்ள 15 சதவீத இடங்கள் கல்வி ரீதியில் பின் தங்கிய மாவட்டங்களுக்கு என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்டது. இந்த அடிப்படையில் தமிழ் மாணவர்கள் மிகக் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றால் கூட அவர்கள் இலங்கையில் உள்ள கல்லூரிகளில் இடம் பிடிக்க முடியாது என்ற நிலை தோன்றியது.

நாட்டை இரண்டாக்கிய ஒற்றை ஆட்சி மொழி திட்டம்

மேலும் நாம் ஏற்கனவே பார்த்த சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்ற கொள்கை அரசியல் சட்டப்பிரிவு 33ன் கீழ் 1956ம் ஆண்டு இலங்கை ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் தமிழ் மக்களின் கிளர்ச்சிகளைத் தொடர்ந்து 1958ம் ஆண்டு தமிழ் மொழி (விசேச சட்டம்)ொண்டுவரப்பட்டது. அதன்படி தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழும் ஆட்சி மொழி என அறிவிக்கப்பட்டது. அது சிங்களமே இலங்கையின் ஆட்சி மொழி என்பதைப் பாதிக்காத வகையில் அமல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்பின்னர் 1972ம் ஆண்டில் சிங்களம் ஆட்சி மொழியாக தமிழ் மொழி பெயர்ப்பு வசதியுடன் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் 1978ம் ஆண்டு வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைத் தவிர்த்து பிற அனைத்துப் பகுதிகளுக்கும் சிங்களமே ஆட்சி மொழி என்றும், ஆங்கிலம் இணைப்பு மொழி என்றும் அறிவிக்கப்பட்து. ஒட்டு மொத்தத்தில் மொழியை மையமாக வைத்து சிங்கள, தமிழ் மக்களிடையே வேற்றுமையைப் பேணும் போக்கு ஆட்சியாளர்களால் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டது.

இந்த இரண்டு நடவடிக்கைகளும் தமிழ் மக்களை நடைமுறை ரீதியாகவும் உணர்வுமட்டத்திலும் பெரிதும் பாதித்தன. வறண்ட பகுதியில் வாழ்ந்து கொண்டு கல்வியறிவின் மூலமாக மட்டுமே தங்களை நிலைநாட்ட முடியும் என்ற நிலையிலிருந்த தமிழ் மக்களுக்கு கல்வி உரிமையையே பறிப்பது என்ற அரசின் நடவடிக்கை கடும் அதிர்ச்சியை தந்தது. மேலும் ஆட்சி மொழிக் கொள்கை உணர்வு ரீதியில் தமிழ் மக்களை மிகப் பெரிதாக பாதித்தது.

கல்விக்காக நாடுவிட்டு நாடு செல்லும் துயரம்

இந்த நிலையில் இலங்கை தமிழ் மக்களில் வசதியுடையவர்கள் தங்களது பிள்ளைகளை கல்விக்காக இந்தியா போன்ற நாடுகளுக்கு அனுப்பினர். தரமான கல்விபெற வேண்டி ஒரு நாட்டைவிட்டு இன்னொரு நாடு செல்வது என்பது இயல்பாகவே எல்லா நாடுகளிலும் காணப்படக் கூடிய ஒரு நடைமுறை, ஆனால் தங்கள் நாட்டிலேயே தரமான கல்வி பெறுவதற்கு ஏற்ற நிறுவனங்கள் இருந்தும்கூட அதே வகை கலை மற்றும் விஞ்ஞான கல்வியைப் பயில்வதற்காக தனது நாட்டைவிட்டு அண்டைநாட்டுக்கு சென்றாக வேண்டும் என்ற அரசு ஏற்படுத்திய நிர்ப்பந்த நிலை அந்த மாணவர் மற்றும் அவர்களின் பெற்றோர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை இயல்பாகவே ஏற்படுத்தியது. அவர்களைத் தவிர பொருளாதார வசதியின்மை காரணமாக படிப்பதற்காக தகுதி இருந்தும் தங்களை ஒத்த சிங்கள மாணவர்களைக் காட்டிலும் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றிருந்தும் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கும் செல்ல முடியாது கல்வியை இழந்து நிற்கும் மாணவர்களின் மனநிலை இன்னும் எவ்வளவு கொதிப்படைந்ததாக இருக்கும். இச்சூழ்நிலைகளே தமிழ் மக்களிடையேயும் இன உணர்வினைப் பெருமளவு தூண்டியிருந்தது.

(தொடரும்......)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com