Contact us at: sooddram@gmail.com

 

இலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு (பகுதி 11)

(அ.ஆனந்தன்)

தமிழர் விடுதலை முன்னணி

இந்த மோசமான வளர்ச்சிப் போக்குகள் தமிழர் விடுதலை முன்னணி போன்ற அமைப்புகள் உருவாகக் காரணமாக இருந்தன. அந்த அமைப்புகள் அவற்றிற்கு இருந்த பல்வேறு வரையறைகளுக்கு உட்பட்டே இப்பிரச்னையை எடுக்க வேண்டியிருந்தது. அவர்களுக்கு தனிநாடு கோரிக்கையை எழுப்புவதில் பெரும் சிக்கல் இருந்தது. நாடு முழுவதும் விரவிக்கிடந்த தமிழர்களின் நலன் தனிநாடு கோரிக்கையை எடுத்த எடுப்பில் முன்வைப்பதன் மூலம் பாதிக்கப்படும் என்ற சூழ்நிலை அவர்களின் கரங்களைப் பெருமளவு கட்டிப் போட்டது.

அது மட்டுமல்ல தமிழர்களில் வளர்ச்சியடைந்த பகுதியினர் தங்களது தொழில் வாய்ப்புகளுக்கு தமிழர் பகுதிகளோடு இலங்கை போன்ற ஒரு பெரிய சந்தையைக் கொண்ட நாடு இருப்பது அவசியம் என்றும் கருதினர். எனவே தமிழர் விடுதலை முன்னணி கோட்பாடு ரீதியான தேசிய சுயநிர்ணய உரிமை கேள்வியை முன்வைக்காமல் பல சமயங்களில் தங்களுக்கு சலுகை அளிக்க முன்வரும் சிங்கள ஆளும் வர்க்க கட்சிகளுடன் நேரடி அல்லது இலைமறை காய்மறை உறவு வைத்துக் கொள்வதன் மூலமே இப்பிரச்னைகளுக்கான தீர்வினைப் பெற விரும்பின. அந்த அடிப்படையில் ஒரு வரம்பிற்குட்பட்ட சமூக இயக்கத்தை அதுவும் நாடாளுமன்ற அரசியலில் பயன்படும் விதத்திலேயே அவர்கள் கையில் எடுத்தனர்.

அத்தகைய இயக்கங்களுக்கு செவிமடுத்து ஒருபுறம் அரசியலுக்காக இனவேற்றுமையை வளர்த்தாலும் மறுபுறம் அத்தகைய நடவடிக்கை முழு சமூக அமைதியையே பாதிக்கும் அளவிற்கு சென்றுவிடக்கூடாது என்ற அடிப்படையில் தமிழ் அமைப்புகளின் கோரிக்கைகள் சிலவற்றை பரிசீலிக்கும் நிலையிலிருந்த சில சிங்கள ஆட்சியாளர்களுக்கு பல எதிர்ப்புகள் சிங்கள தீவிரவாத அமைப்புகளால் உருவாக்கப்பட்டன.

சிங்கள வெறிவாத புத்தபிக்குகள்

சிங்கள தீவிரவாத அமைப்புகள் என்று கூறும்போது அதில் மிக முக்கியமானது இலங்கை புத்தபிக்குகளின் அமைப்பாகும். இலங்கை புத்த மதத்தில் பெரும் பகுதியினர் புத்த மதத்தின் 'மகாயன' பிரிவை சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் 'ஹினாயன' பிரிவை சேர்ந்தவர்கள். அந்த அடிப்படையில் அவர்கள் சமூக அக்கறை இல்லாதவர்கள்; குறுகிய தன்னலவாத மனநிலை கொண்டவர்கள் .அவர்களைப் பொறுத்தவரை மதரீதியாக தங்களிடம் இருந்து வேறுபட்ட ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் எந்த சலுகையும் ஜீரணிக்க முடியாததாக இருந்தது. உபதேசிக்கும் போது தங்களது மதக்கோட்பாடு 'அஹிம்சை' என்று அவர்கள் கூறிக் கொண்டாலும் அதன்படி பூச்சி புழுக்களுக்குக்கூட தீங்கு செய்யாதவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டாலும் நடைமுறையில் மனித கொலைகள் கூடச் செய்பவர்களாகவே அவர்கள் இருந்தனர்.

பல தமிழர் விரோத வன்முறை சம்பவங்களில் அவர்கள் முன்னணியில் இருந்தனர். இலங்கையின் ஜனாதிபதிகளிலேயே மிக உயர்ந்தவராக மதிக்கப்படும் திரு.பண்டாரநாயகா புத்தபிக்கு ஒருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலைக்கு திட்டம் தீட்டிக் கொடுத்து அதன் காரணகர்த்தாவாக இருந்தவர் என்ற அடிப்படையில் புத்த மதத்தின் வேறொரு முக்கியமான புத்தத் துறவி ஆயுள்தண்டனை அனுபவித்து வந்தார்.

இது தவிர கொழும்பில் நடைபெற்ற ஒரு தமிழர் மாநாட்டை சீர்குலைக்கும் விதத்தில் மாநாடு நடந்த அரங்கை சுற்றிலும் இளம் புத்தபிக்குகள் பலர் நின்று கொண்டு கல்வீச்சில் ஈடுபட்டு அந்த மாநாட்டையே நடைபெறவியலாமல் செய்த - எந்த மதத்தின் அடிப்படை உணர்விற்கும் ஒத்துவராத செயல் அங்கு புத்தத் துறவிகளால் அரங்கேற்றப்பட்டது.

உலக அளவில் முதலாளித்துவம் மிகவும் பிற்போக்கானதாக ஆகிவிட்ட நிலையில் தோன்றி வளர்ந்த இந்தியா, இலங்கை போன்ற நாடுகளின் முதலாளித்துவ-ஜனநாயகம் அரைவேக்காட்டுத் தன்மை கொண்டதாகவே இருந்தது. மதத்தை அரசியலில் இருந்து பிரிப்பது என்ற ஜனநாயகத்தின் மிக அடிப்படையான கோட்பாடு இந்நாடுகளில் அமுலாகவில்லை.

மக்களின் பின்தங்கிய மனநிலை காரணமாக மதவாத எண்ணப்போக்குகளும் மதப்பிரச்சாரகர்களின் மேல் குருட்டுத்தனமான அபிமானமும் மரியாதையும் மிகுந்தே இருந்தன. இதனை மையமாகக்கொண்டு மதவாதிகள் குறிப்பிடத்தக்க செல்வாக்கினை இவ்விருநாட்டு அரசியல் களத்திலும் செலுத்தினர்; இன்னும் செலுத்திக் கொண்டும் உள்ளனர். இலங்கையின் இனப்பிரச்னை இத்தனை கடுமையாக ஆனதற்கு அந்நாட்டின் புத்த மத நிறுவனமும் ஒரு முக்கிய காரணமாகும்.

இனவெறி பாதையில் இடதுசாரி ஜே.வி.பி.

இது தவிர சில சிங்கள இடதுசாரி தீவிரவாத அமைப்புகளும் தமிழ்விரோத மனநிலையை வளர்த்து வந்தன. அவைகளில் மிக முக்கியமான அமைப்பு ரோகன விஜயவீராவின் ஜே.வி.பி என்று அழைக்கப்படும் "ஜனதா விமுக்தி பெருமனா' என்ற அமைப்பாகும். அந்த அமைப்பினர் புத்த பிக்குகளை போல் அல்லாது வேறு காரணங்களுக்காக தமிழ் விரோத மனநிலையை வளர்த்தனர். ஒருபுறம் தமிழர்களின் அவர்களது மக்கள் தொகை விகிதத்திற்கு அதிகமான வளர்ச்சி சிங்கள இளைஞர்களை குழப்பி அவர்களது மனதில் தமிழ் விரோத எண்ணத்தை உருவாக்குவதற்கு ஜே.வி.பி-யால் பயன்படுத்தப்பட்டது.

அது தவிர தனது அண்டைநாடான இந்தியாவின் மேலாதிக்க மனப்பான்மையும் அதன் செல்வாக்கு மண்டலத்திற்கு இலங்கையைக் கொண்டுவர அது மேற்கொள்ளும் முயற்சிகளும் ஜே.வி.பி அமைப்பினால் கடுமையான வெறுப்புடன் பார்க்கப்பட்டன. அதன் காரணமாக அந்த அமைப்பு குறிப்பாக மலையகத் தமிழர்களை இந்திய ஏகாதிபத்தியத்தின் ஏஜெண்டுகள் என்று பார்த்தது.

ரோகன விஜயவீரா மாஸ்கோ பல்கலைகழகத்தின் மாணவராக இருந்த போதிலும் கம்யூனிஸ்ட அரசியலில் ஈடுபாடு உடையராக தன்னைக் காட்டிக் கொண்ட போதிலும் சேகுவாரோவை தனது ஆதர்ச புரட்சியாளராக அறிவித்துக் கொண்டிருந்தாலும் அவருடைய அரசியல் பக்குவமற்ற பார்வையினை மலையகத் தமிழர்கள் குறித்த அவருடைய அணுகுமுறை கேவலமாக வெளிக்காட்டியது. நிலவிய முதலாளித்துவ அரசியலில் குறுக்குவழியில் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதற்காக அவர் சிங்கள தேசிய வெறி உணர்வினை தனது அமைப்பின் உணர்ச்சிபூர்வ பிரச்சாரங்களின் மூலமாக அதாவது இங்கு சில இடதுசாரி அமைப்புகள் தமிழ் இன உணர்வினை தூண்டும் விதத்தில் தூண்டினார்.

(தொடரும்......)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com