Contact us at: sooddram@gmail.com

 

இலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு (பகுதி 13)

(அ.ஆனந்தன்)

மாகாண கவுன்சில்கள்

இந்த கட்டத்தில் சிங்கள ஆட்சியாளர்களும் சில வகையான தீர்வுகளுக்கு வர உடன்பட்டனர். அதாவது மாவட்ட வாரியான கவுன்சில்கள் அமைத்து அவற்றிற்கு சில அதிகாரங்கள் வழங்க அவை முன்வந்தன. அதன் மூலம் அதிகார பகிர்வு என்பது ஓரளவு தமிழர் வசிக்கும் பகுதிகளிலும் தமிழர்களுக்கும் கிடைக்கும். அது நாம் முழுக்க முழுக்க சிங்களர்களால் ஆளப்படுகிறோம் என்ற தமிழ் மக்கள் கொண்டிருந்த உணர்விலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் என்று எண்ணினர்.

ஆனால் தமிழர் பகுதிக்கு மட்டும் இந்த அதிகாரப்பகிர்வினை கொடுத்தால் அது தமிழ் ஆதரவு போக்கு என்ற உணர்வினை சிங்கள மக்களிடம் ஏற்படுத்திவிடும் என்பதால் நாடு முழுவதிற்கும் அமலாக்கப்பட்டது. மொத்தத்தில் 12 மாவட்ட கவுன்சில்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் மூன்று மாவட்ட கவுன்சில்கள் தமிழர் வாழும் பகுதிகளில் இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. இதில் விசித்திரம் என்னவென்றால் தங்களுக்கு மாவட்ட கவுன்சில்கள் வேண்டும் என்று சிங்கள மக்கள் கோராமலேயே அவர்களுக்கு மாவட்ட கவுன்சில் கிடைத்ததுதான்.

இதுபோன்ற கண்துடைப்பு நடவடிக்கைகள் தமிழ் மக்கள் மனதில் அவர்களின் கல்வி உரிமை பறிக்கப்பட்டதாலும் மொழி உணர்வு சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என அறிவிக்கப்பட்டதால் பெரிதும் புண்பட்டிருந்ததாலும் ஏற்பட்டிருந்த காயங்களுக்கு போதிய மருந்தாய் இல்லை. எனவே போர்க்குணமிக்க இளைஞர் நடவடிக்கைகள் தமிழ் பகுதிகளில் மென்மேலும் அதிகரித்தன. இந்த நடவடிக்கைகளை இராணுவ ரீதியாக எதிர்கொள்வதற்கு அரசிற்கு பெரும் இராணுவ செலவு ஏற்பட்டது. அதனால் பணவீக்கமும் விலைஉயர்வும் இலங்கையின் பொருளாதாரத்தை வாட்டி வதைக்கத் தொடங்கின.

கருப்பு ஜீலை 

இந்நிலை ஒட்டு மொத்தமாக மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை இலங்கையின் ஆட்சியாளர்கள் மேல் தோற்றுவித்தது. மக்கள் ஏறக்குறைய வெடித்துக் கிளம்பும் கிளர்ச்சி மனநிலையுடன் இருந்தனர். இந்நிலையில்தான் இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய கோரமான கருப்பு ஜுலை என அழைக்கப்படும் ஜுலை 23 - 1983 சம்பவங்கள் ஜெயவர்தனா அரசால் திட்டமிட்டு மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவும் அவர்களுக்குள் இன பிளவினையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் நோக்கத்தோடும் தூண்டிவிடப்பட்டன.

அன்று யாழ்ப்பான நகருக்கு வெளியே ரோந்து சென்று கொண்டிருந்த இலங்கை இராணுவத்தின் ஜீப் ஒன்றில் குண்டு வெடித்ததில் இரண்டு சிங்கள ராணுவ வீரர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. அப்போது அந்த ஜீப்பிற்குப் பின்னால் வந்து கொண்டிருந்த ராணுவ வாகனங்களில் வந்த ராணுவ வீரர்கள் வாகனத்திலிருந்து இறங்கி குண்டு வெடித்ததற்கு காரணமானவர்களைத் தேடிய போது எல்.டி.டி.ஈ அமைப்பினருக்கும் அவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அதில் 13 சிங்கள , ராணுவ வீரர்களும் ராணுவ அதிகாரிகளும், விடுதலைப் புலிகள் சிலரும் உயிரிழந்தனர்.

இத்தாக்குதல் எல்.டி.டி.ஈ தளபதி கிட்டுவால் நடத்தப்பட்டது. உயிரிழந்த சிங்கள ராணுவ வீரர்களின் உடலைத் தகனம் செய்வதற்காக கொழும்பிற்குக் கொண்டு சென்று அங்கு மக்களின் பார்வைக்கு அவற்றை வைத்து அப்போது ஆட்சியிலிருந்த ஜெயவர்தனே தலைமையிலான யு.என்.பி அரசாங்கம் தமிழ் மக்கள் மீது கொலை வெறித்தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டது. தலைநகர் கொழும்பில் தொடங்கிய இத்தாக்குதல் படிப்படியாக கல்லி, மாதரை, கம்பலா, நாவலப்பிட்டி, புசல்வா, கண்டி, நுவரேலியா, பதுல்லா, அனுராதபுரம் என அனைத்து இடங்களுக்கும் பரவியது. பல தமிழருக்குச் சொந்தமான வீடுகளும், வியாபார நிறுவனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. வாகனங்களில் பயணம் செய்தவர்கள் வாகனங்களோடு சேர்த்து வைத்துக் கொளுத்தப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக வெளிக்கடைச் சிறையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடைக் காவல் கைதிகளாக இருந்த 53 தமிழர்கள் சிங்களக் கைதிகளால் கொலையுண்டனர். தமிழ் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறைகளின் சாவிகளை எளிதில் சிங்களக் கைதிகள் எடுக்கும் வண்ணம் சிறைக்காவலர்கள் வைத்திருந்து தாக்குதலுக்கு உதவினர். நாடுமுழுவதும் நடந்த தாக்குதல் அனைத்தையும் காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. ஆளும் யு.என்.பி. கட்சியினர் கலவரக்காரர்களோடு கைகோர்த்துச் செயல்பட்டனர். ஒட்டு மொத்தத்தில் இக்கலவரத்தில் 3000 பேர்வரை உயிரிழந்ததாக அதிகார பூர்வமற்ற தகவல்கள் கூறின. 18000 வீடுகளுக்கு மேல் சேதமடைந்தன. தீக்கிரையாக்கப்பட்ட வீடுகளில் பற்றி எரிந்த தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்களும் கலவரக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டன.

ஜீலை 23 அன்று தொடங்கிய கலவரத்தை 29ம் தேதி வரை முழுவீச்சில் நடக்க அனுமதித்துவிட்டு 29ம் தேதியன்று கலவரத்தைக் கட்டுப்படுத்த என்று துப்பாக்கிச் சூடு ஒன்றினை நடத்தி கலவரத்தை அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது. அத்துப்பாக்கிச் சூட்டில் 15 சிங்கள கலவரக்காரர்கள் கொல்லப்பட்டனர். சிங்கள வெறியர்கள் இத்தகைய மிருகத்தணத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தாக்குதலுக்கு ஆளாகி ஒளிய இடமின்றி அலைந்த பல தமிழர்களுக்கு சாதாரண சிங்கள மக்கள் பலரும், முஸ்லீம் குடிமக்களும் புகலிடம் தந்து காப்பாற்றினர்.

ஆயிரக்கணக்கில் இக்கலவரத்தில் தமிழ் மக்கள் கொலையுண்டதோடு அவர்களின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உடைமைகளும் சூறையாடவும், களவாடவும்பட்டன. பல லட்சகணக்கான மக்கள் அரசு முகாம்களில் தஞ்சமடைந்தனர், லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக வந்து குவிந்தனர்.

இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்யாமல் வைத்திருந்து அதனை கொழும்பிற்கு கொண்டு சென்று மக்களின் பார்வைக்கு வைத்து அதன்மூலம் தமிழ் எதிர்ப்பு வெறி உணர்வினை எவ்வளவு தூரம் தூண்ட முடியுமோ அவ்வளவு தூரம் தூண்டி இலங்கை வரலாற்றின் களங்கமாய் இன்றும் என்றும் விளங்கப்போகும் இரத்தக்களரியை சிங்கள வெறிவாத அமைப்புகளின் துணையோடு இலங்கை ஜனாதிபதி ஜெயவர்தனே கிளப்பிவிட்டார்.

இந்தியா, இலங்கை தமிழ் இளைஞர்களுக்கு முகாம்கள் அமைக்கவும் இராணுவ பயிற்சி பெறவும் அனுமதி அளித்த வேளைகளில்கூட தமிழ்நாட்டின் சாதாரண மக்கள் இலங்கை தமிழர் பிரச்னை பற்றியோ அங்கு நடந்துவரும் இன ஒடுக்குமுறை அதற்கு எதிரான போராட்டம் ஆகியவை குறித்தோ பெரிதும் அறியாதவர்களாகவே இருந்தனர். ஆனால் 1983‡ல் இலங்கையில் அரசின் திட்டமிட்ட சதியினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட தமிழர் மீதான வன்முறை முன்னெப்போதும் கண்டிராத அளவில் ஒரு சகோதரத்துவ உணர்வினை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

(தொடரும்......)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com