Contact us at: sooddram@gmail.com

 

இலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு (பகுதி 14)

(அ.ஆனந்தன்)

தமிழக மக்களின் சகோதரத்துவ எழுச்சி

இலங்கை தமிழருக்கு ஆதரவாக செயல்பட்ட தமிழ் அமைப்புகளுக்கு நன்கொடைகள் குவிந்தன. இலங்கை தமிழ் அமைப்புகள் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கண்காட்சிகள் நடத்தி இலங்கை தமிழ் மக்களின் அவல நிலையினை தமிழ்நாட்டு மக்களிடம் கொண்டுவந்தன. மறைந்த திரு. ஆண்டன் பாலசிங்கம் போன்றவர்கள் இலங்கை தமிழர் போராட்டத்தினை மார்க்சிய அடிப்படையிலும் விளக்கிக் கூறினர். அயர்லாந்து விடுதலை இயக்கத்தை மார்க்ஸ் ஆதரித்து எழுதியது இலங்கை தமிழர் போராட்டத்திற்கு ஆதரவாக மேற்கோளாகக் காட்டப்பட்டது. இக்கால கட்டத்தில்தான் இலங்கை தமிழர் விடுதலை எழுச்சியின் மிக ஆக்கபூர்வமான தோற்றம் பொலிவுடன் உலகெங்கிலும் தூக்கி நிறுத்தப்பட்டது.

இலங்கை அரசியல் வரலாற்றிலும் இக்காலகட்டம் ஒரு மிக முக்கிய திருப்பு முனையாக இருந்தது. அதாவது அதுவரை பிளாட், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற ஆயுதம் தாங்கிய அமைப்புகள் டி.யு.எல்.எப் என்ற ஆயுதமேந்தாத தமிழ் ஆதரவு அரசியல் இயக்கத்தோடு எத்தனை முரண்பாடுகள் இருந்தாலும் அவற்றை ஆயுதம் தாங்கிய பூசல்களின் மூலமாக வெளிகாட்டாமல் செயல்பட்டுவந்தன. ஆனால் 1983 கலவரங்களுக்கு பின்பு தமிழர் போராட்டத்தின் தலைமை எல்.டி.டி.ஈ அமைப்பின் கரங்களுக்கு பிரதானமாக சென்றுவிட்டது. அதாவது இன்னும் சரியாக கூறுவதானால் இயக்கத்தின் தலைமை எல்.டி.டி.ஈ அமைப்பின் துணிச்சல்மிக்க ஆயுத நடவடிக்கைகளால் தட்டிபறிக்கப்பட்டது.

மக்கள் இயக்க பின்னணி இல்லாமல் உருவான எல்.டி.டி.ஈ.

எந்த ஒரு நாட்டிலும் எந்தவொரு ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியும் அதனால் பயன்பெரும் மக்கள் மத்தியில் வேரூன்றியுள்ள - பரந்துபட்ட மக்களின் போராட்ட வலிமையினைப் பறைசாற்றவல்ல- இயக்கங்களின் பின்னணியிலேயே நடைபெற்றுள்ளன. ஆனால் இலங்கையை பொறுத்தவரை எல்.டி.டி.ஈ தலைமை இலங்கை தமிழ்மக்களின் போராட்டத்தில் தலைஎடுத்த நாள் முதற்கொண்டு சாதாரண தமிழ் மக்களின் ஒற்றுமையினை சாத்வீக முறையில் இயக்கங்கள் மூலம் பறைசாற்றும் போக்கு படிப்படியாக மட்டுபடுத்தப்பட்டது. நாளடைவில் அது அறவே இல்லாமலும் போய்விட்டது.

இதற்கிடையில் இந்திய அரசின் ஆதரவோடும் இந்திய தமிழ்மக்களின் மாபெரும் தார்மீக ஒத்துழைப்போடும் இலங்கை அரசை எல்.டி.டி.ஈ-யின் இராணுவ நடவடிக்கைகள் ஆட்டம்காணச் செய்தன. எங்கே தனது ஒட்டுமொத்த செல்லுபடித்தன்மையும் நிலைகுலைந்துவிடுமோ என்று எண்ணிய இலங்கை ஆட்சியாளர்களும் அவர்களின் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்தனேயும் இப்பிரச்னையில் தலையிட்டு இதன் தீர்வுக்கு இராணுவ, பொருளாதார ரீதியாக உதவக்கோரி இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு படைஎடுக்கத் தொடங்கினர். ஆனால் ஜெயவர்தனே எதிர்பார்த்த ஒத்துழைப்பு அந்நாடுகளில் இருந்து அவருக்கு கிட்டவில்லை.

அந்நாடுகள் அவை முதலாளித்துவ ஏகாதிபத்திய அமைப்புகளாக இருப்பதால் அந்தந்த நாடுகளின் ஏகாதிபத்திய முதலாளித்துவ நலன்களை மனதிற்கொண்டே செயல்படுபவைகளாக இருந்தன. அதாவது இலங்கையை போன்ற ஒரு மிகச்சிறு சந்தை வளத்தை கொண்டுள்ள நாட்டுடன் உறவை மேம்படுத்துவதற்காக இந்தியா போன்ற மிகப்பெரும் சந்தைவளம் கொண்ட முதலாளித்துவ ரீதியில் ஒரு பெரும் பொருளாதார சக்தியாக உருவாகி வளர்ந்துவருகிற நாட்டுடன் ஒரு உரசலை ஏற்படுத்திக் கொள்ள அந்நாடுகள் விரும்பவில்லை. எனவே அந்நாடுகள் இலங்கை ஆட்சியாளர்களை இந்தியா பக்கம் இப்பிரச்னைக்கான தீர்வைக்கோரி அணுகுமாறு தள்ளின. இந்தியாமீது மனப்பூர்வமான எந்த உறவையும் கொண்டிருக்க விரும்பாதவராக இருந்த போதிலும் வேறுவழியின்றி இந்தியாவை அணுக வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியான ஜெயவர்த்தனேக்கு இதனால் ஏற்பட்டது.

வேறுவழியின்றி இந்தியாவை அணுகிய ஜெயவர்த்தனே

இதனைத் தொடர்ந்து இலங்கை ஆட்சியாளர்கள் இந்தியாவை அணுகியதன் மூலம் உருவானதே இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஆகும். இதன்படி விடுதலைப் புலிகள் தங்களது ஆயுதங்களை இந்திய அமைதிப்படையிடம் ஒப்படைக்க வேண்டும். கூடுதல் அதிகாரம் கொண்ட மாகாண கவுன்சில்கள் யாழ்ப்பாணம் மற்றும் இலங்கையின் கிழக்கு பகுதியான திரிகோணமலை, பாட்டிகோலா ஆகிய நகர்களை உள்ளடக்கிய பகுதிகளில் ஏற்படுத்தப்படும். தமிழ் பிரதேசம் அனைத்திற்குமான மாகாண கவுன்சிலுடன் இணைந்திருப்பதா? இல்லையா? என்பது ஒரு வாக்கெடுப்பின் மூலம் கிழக்குப் பகுதியில் முடிவு செய்யப்படும். சிங்களத்துடன் கூட தமிழும் ஆட்சி மொழியாக நீடிக்கும். ஒரே பிரதேசமாக திகழ்வதா இல்லையா என்பதை மையமாக வைத்து நடைபெறும் பொது வாக்கெடுப்பு இந்தியாவின் மேற்பார்வையின் கீழ் நடைபெறும் இது போன்றவை இந்த இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மிக முக்கிய சரத்துக்களாகும்.

இந்த ஒப்பந்தத்தை டெல்லியில் வைத்து பிரபாகரனை ஏற்றுக்கொள்ளச் செய்த பின்னர் இந்தியா தனது துருப்புக்களை இலங்கைக்கு அனுப்பியது. இந்திய அரசின் பார்வையில் விடுதலைப் புலிகள் வைத்திருந்த ஆயுதங்கள் பலவும் அவர்களால் வழங்கப்பட்டவையே என்ற எண்ணமே இருந்தது. ஆனால் விடுதலைப்புலியினரோ உலக அளவில் தோன்றிவிட்ட பொதுச் சந்தையிலிருந்து பல ஆயுதங்களை வாங்கியிருந்தனர். எனவே இந்திய அமைதிப்படை வசம் அவர்கள் ஒப்படைத்த ஆயுதங்களைக் காட்டிலும் அதிகமான ஆயுதங்கள் விடுதலைப்புலிகளின் கைவசம் இருந்தன.

டெல்லியில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை பிரபாகரன் ஏற்றுக் கொண்டார் என்று முன்வைக்கப்பட்ட கருத்துக்கு மாறாக யாழ்ப்பாணம் சென்றதும் ஒரு மிகப்பெரும் மக்கள் கூட்டத்தைக் கூட்டி இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் தனக்கு இருக்கக்கூடிய சந்தேகங்களை வெளிப்படுத்தி இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதற்கு பிரபாகரன் பிள்ளையார்சுழி போட்டார்.

(தொடரும்......)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com