Contact us at: sooddram@gmail.com

 

இலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு (பகுதி 17)

(அ.ஆனந்தன்)

விடுதலைப் புலிகள் செய்த வரலாற்றுத் தவறு

இந்த பின்னணியில்தான் விடுதலைப் புலிகளின் அரசியல் வரலாற்றிலேயே மிக அப்பட்டமான தவறான இராஜீவ் காந்தியின் கொலை நிகழ்ந்தது. இது எத்தனை தவறானதென்றால் மக்களின் விடுதலையை இலக்காக கொண்டுள்ள எந்தவொரு சரியான அமைப்பும் உயர்ந்த இலக்குகளற்ற தனிநபர்கள் போல் பழிவாங்கும் மனநிலையில் செயல்பட்டு தனக்கு உயிரூட்டமான சாதக தளமாக உள்ள ஒரு பகுதி மக்களின் ஆதரவினை இழக்கும் விதத்தில் செயல்படவேபடாது; அந்த அடிப்படையில் இராஜீவ் காந்தியின் கொலை விடுதலைப்புலிகளால் செய்யப்பட்டிராது என்று பலர் நம்பினர். அப்படி நம்பியவர்களை அதிர்நது போகச் செய்யும் விதத்தில் பிரபாகரனிடம் இருந்தே மறைமுகமான ஒரு ஒப்புதல் வாக்குமூலம் வந்தது. அது ஒரு துன்பியல் நிகழ்வு என்று அக்கொலையில் தங்களின் பங்கினை மறுக்காத வகையிலான ஒரு பதிலினை அவர் பின்னர் முன்வைத்தார்.

உலக அளவில் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட நிர்ப்பந்தங்கள்

இராஜீவ் காந்தி அவர்கள் தமிழ் மண்ணில் கொல்லப்பட்ட பின்பு அதற்கு முன்பு விடுதலைப்புலிகள் நிகழ்த்திய பல சகோதர இயக்கங்களின் தலைவர்களின் கொலைகளால் வெறுப்பும் சலிப்பும் கொண்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை ஆதரிப்பதில் இருந்து பெரிதும் தங்களை விலக்கிக் கொண்டுவிட்டனர் என்றே கூறலாம். அதன் பின்னர் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு நிதி வசூல் தமிழக மண்ணில் நடைபெற வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

பல வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடைத் தொகைகளை வைத்தே ஆயுதங்கள் வாங்கி ஒரு அரசின் நிரந்தர இராணுவத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இராஜீவ் காந்தியின் கொலையை ஒட்டி இந்தியாவில் தடை செய்யப்பட்ட அந்த அமைப்பு உலகின் வேறுபல நாடுகளாலும் அடுத்தடுத்து தடைசெய்யப்பட்டது. இந்த தடைகள் அவர்கள் சுயேட்சையாக செயல்பட்டு நிதி ஆதாரம் திரட்டுவதைப் பெருமளவு பாதித்தது.

இந்த நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து அதன் முக்கிய தளபதிகளில் ஒருவரான கருணா விலகி சிங்கள அரசியல்வாதிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கினார். இது இன்னொரு கட்ட பின்னடைவினை விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஏற்படுத்தியது.

பின்னடைவுகளை ஈடுகட்ட வல்லவை மக்கள் இயக்கங்களே

பின்னடைவுகளே இல்லாத போராட்டம் என்று எதுவும் இருக்கமுடியாது. ஆனால் அந்த பின்னடைவுகளின் போது அதனால் ஏற்படும் மனச்சோர்விற்கு மருந்தாகி அப்பின்னடைவுகளை முன்னேற்றப்படிகளாக மாற்றவல்லவை பரந்துபட்ட மக்களின் ஆதரவும் பின்னடைவுகளின் போது தோன்றும் பலவீனத்தை ஈடுகட்டும் விதத்தில் மக்களிடம் தோன்றும் எழுச்சிகளுமே ஆகும். ஆனால் அப்படிப்பட்ட மக்கள் எழுச்சியை தட்டி எழுப்பவல்ல ஒரு மக்கள் இயக்கப் பாதையை உரிய முக்கியத்துவம் கொடுத்து விடுதலைப் புலிகள் ஒரு போதும் இலங்கை தமிழ் மக்களிடையே வளர்க்கவே இல்லை. அதனால்தான் இன்று இத்தனை இராணுவ ரீதியான பின்னடைவு அவ்வியக்கத்திற்கு ஏற்பட்டுள்ள நிலையிலும் கூட யாழ்ப்பாண தமிழ் மக்களிடம் இருந்தோ கிழக்குப் பகுதி தமிழ் மக்களிடம் இருந்தோ ஒரு பெரும் எழுச்சியோ கிளர்ச்சியோ தோன்றவில்லை.

இங்கு ஒரு வாதம் முன் வைக்கப்படலாம் அதாவது யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் இன மக்கள் துப்பாக்கி முனையில் நிர்வகிக்கப்படுகிறார்கள்; எனவே தான் அவர்கள் தங்களின் எழுச்சி முகத்தை காட்டாதிருக்கிறார்கள் என்று கூறலாம். ஆனால் கடந்த முப்பதாண்டு காலமாக ஆயுதம் தாங்கிய இலங்கை இராணுவத்தினுடனான தங்கள் அமைப்பினரின் சண்டையினை பார்த்துப் பார்த்து பழகிப் போன தமிழ் மக்கள் அச்சத்தினால் அவ்வாறு இருக்கிறார்கள் என்று கூறமுடியாது. மேலும் தனது இராணுவ வலிமையினை ஏறக்குறைய முழுமையாக போர்முனையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் திருப்பியுள்ள இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் மக்களை அத்தகையதொரு அச்சத்தில் ஆழ்த்தி வைத்திருக்கக்கூடிய அளவிற்கு ஒரு மிகப் பெரும் இராணுவத்தை மக்களின் சிவில் நிர்வாகத்தில் ஈடுபடுத்தி இருக்கவும் வாய்ப்பில்லை.

இந்நிலையில் அங்குள்ள தமிழ் மக்களின் மனநிலையை விருப்பு வெறுப்பின்றி புரிந்து கொள்வது இலங்கையின் இனப்பிரச்னைக்கு தீர்வுகாண விரும்பும் அனைவரின் மிக முக்கியக் கடமையாகும். அந்த மனநிலையைப் புரிந்து கொள்வதற்கு இதுபோல் புதிதாக அந்நிய ஏகாதிபத்திய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று முதலாளித்துவப் பாதையை தேர்ந்தெடுத்த பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடுகளில் சிறுபான்மை தேசிய இனங்களின் நடைமுறையை பார்ப்பது பயன்தருவதாக இருக்கும். அதற்கு ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டைக் கூறலாம்.

(தொடரும்......)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com