Contact us at: sooddram@gmail.com

 

இலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு (பகுதி 20)

(அ.ஆனந்தன்)

தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை

கூடுதல் அதிகாரம் வழங்குவது, சுயாட்சி, தனிஈழம் உள்பட அனைத்து விசயங்களும் அதில் விவாதிக்கப்பட்டு தனி ஈழம்தான் தீர்வு என்ற கோரிக்கை மற்ற தீர்வுகளைக் காட்டிலும் பெரிதாக எழுந்தால் அப்போது வாக்கெடுப்புக்குச் செல்லலாம். தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பது ஒவ்வொரு தேசிய இனத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரின் பிரிக்க முடியாத உரிமையாகும். அதனை அம் மக்களின் ஏகோபித்த விருப்பை மனதிற்கொண்டே செயல்படுத்த வேண்டும்.

இந்த பிரச்னையை இலங்கை அரசுடன் விவாதிக்க தகுதியும் அதிகாரமும் படைத்த ஒரே அமைப்பு விடுதலைப்புலிகள் அமைப்பே என்ற கருத்தை இங்கு செயல்படும் விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகள் பல முன் வைக்கின்றன. அது சரியானது அல்ல, ஏனெனில் அனைத்து மக்களின் விருப்பு வெறுப்பற்ற மனநிலையை ஆயுதம் தாங்கிய ஒரு குழு மிகச் சரியாக பிரதிபலிக்கும் என்று கூற முடியாது.

மேலும் விடுதலை புலிகள் கடந்த காலத்தில் இலங்கையின் தமிழர் வாழும் வடக்கு-கிழக்கு பகுதிகளை ஒன்றாக இணைத்து தமிழ் மாகாணம் ஒன்றை அமைத்துவிட்டு அதன் பின்னர் கிழக்குப் பகுதியில் மக்களிடம் அவர்கள் வடக்குப்பகுதி மக்களுடன் ஒருங்கிணைத்து ஒரு மாகாண அமைப்பின் கீழ் இருக்க விரும்புகிறார்களா அல்லது தனி மாகாணமாக செயல்பட விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு நடத்தி தீர்மானிக்க வேண்டும் என்று இருந்த இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் சரத்தினை கடுமையாக எதிர்த்தனர்.

கிழக்குப் பகுதியில் வாழும் மக்களில் மிகப் பெரும்பாலோர் தமிழ் பேசும் மக்களாக இருந்த போதிலும் அவர்களில் யாழ்ப்பாணத் தமிழர்கள் கிழக்குப் பகுதியின் பூர்வீகத் தமிழர்கள் மற்றும் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் என்ற பிரிவுகள் இருக்கவே செய்கின்றன. அவர்கள் பேசும் மொழி ஒன்றாக இருந்த போதிலும் அது மட்டுமே அவர்களிடம் முழுமையான ஒற்றுமை உணர்வினை ஏற்படுத்த முடியவில்லை.

ஏனெனில் இந்த முதலாளித்துவ காலகட்டத்தில் தேசிய முதலாளிகளின் முழக்கமான தனி நாடு கோரிக்கை என்பது பொருளாதார நலன்களை அடிப்படையாக வைத்தே எழுப்பப்படுகிறது. எனவே வடக்கு கிழக்குப் பகுதி இரண்டும் ஒரு மாகாணமாக அமைந்தால் அதில் யாழ்ப்பாண தமிழர்களின் ஆதிக்கம் மிகுந்துவிடும்; தங்களது நலன்கள் அவ்வளவுதூரம் பராமரிக்கப்படாது என்ற அச்சம் கிழக்குப் பகுதி பூர்வீக தமிழ் மக்களிடமும், தமிழ் மொழி பேசும் இஸ்லாமியரிடமும் பெரிதும் இருக்கவே செய்கின்றன. அதனால்தான் அந்த சரத்தினை விடுதலைப் புலிகள் எதிர்த்தனர்.

தனி ஈழம் சர்வரோக நிவாரணியல்ல

இங்குள்ள விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகள் மக்களிடம் முன் வைப்பது போல் தனிநாடு அதாவது தமிழீழம் என்பது இலங்கைத் தமிழ் மக்கள் அனைவரின் பிரச்னைகளுக்கும் தீர்வாகவல்ல சர்வரோக நிவாரணி அல்ல. தனிஈழம் என்று ஏற்பட்டால் அங்கு தமிழ் உடமை வர்க்கத்தின் ஆட்சியே ஏற்படும். அத்தகைய தமிழ் ஈழ தேசம் அமைப்பதில் தொடங்கியே பல்வேறு வேதனைகள் தலைதூக்கும். ஏனெனில் அவ்வாறு உருவாகும் தனித் தமிழ் தேசத்தில் இலங்கையின் சிங்களர் வசிக்கும் பகுதிகளில் இன்றும் வாழ்ந்து வரும் ஏராளமான தமிழர்கள் தங்களது உடமைகளை விட்டுவிட்டு வந்து குடியேற முடியாது.

அவர்கள் தங்களது வசிப்பிடங்களில் விட்டுவிட்டு வந்த உடமைகளை ஈடு கட்டும் விதத்தில் தமிழ் ஈழத்தில் வசிக்கும் மக்கள் அவர்களுக்கு தொழில் வாய்ப்புகளோ வசிப்பிடங்களோ புதிதாக ஏற்படுத்தி தருவது சாத்தியமல்ல. இப்போதும் பல்லாயிரக்கணக்கான பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானில் இருந்து இடம் பெயர்ந்து டெல்லியிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழும் இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் அகதிகளைப் போலவே வாழ்வது இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இந்நிலையில் சிங்கள மக்கள் வசிக்கும் பகுதிகளில் வசிக்கும் இலங்கை தமிழ் மக்களில் மிகப்பெரும்பாலோர் அப்பகுதிகளைவிட்டு பெரும்பாலும் வெளியேற விரும்பமாட்டார்கள்.

அவர்களைத் தவிர 10 லட்சத்துக்கும் மேலான மலையகத் தமிழ் மக்கள் மனப்பூர்வமாக யாழ்ப்பாணத் தமிழர்களோடு ஒரே மொழி பேசுவதால் ஒத்துப் போகக் கூடியவர்கள் அல்ல. யாழ்ப்பாண உடைமை வர்க்கத் தமிழர்களும் அவர்களுக்கு அடைக்கலம் தருவர் என்று கூற முடியாது. ஏனெனில் 5 லட்சம் மலையகத் தமிழர்களின் வெளியேற்றத்திற்கு பண்டார நாயகாவுடன் இணைந்து ஒப்புதல் அளித்தது யாழ்ப்பாண உடைமை வர்க்கத் தமிழர்களின் பிரதிநிதி செல்வநாயகமே ஆவார்.

இன்று வரை மனப்பூர்வமாக மலையத் தமிழர்களை இங்குள்ள விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்புகள் கூறுவது போல் தங்களது தொப்புள்கொடி உறவுகள் என்று யாழ்ப்பாண உடைமை வர்க்கத் தமிழ்மக்கள் பார்ப்பதில்லை. யாழ்ப்பாணத்தில் உழைக்கும் வர்க்கத் தமிழர்களிடமும் வர்க்க உணர்வு மட்டம் குறைவாக இருந்ததால் அது ஏற்படவில்லை. கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னேறிய யாழ்ப்பாண உடமைவர்க்க தமிழ்மக்கள் மலையகத் தமிழர்களை கூலிக்கு வேலை செய்ய வந்த மக்களாகவே அதாவது சிங்கள உடமை வர்க்கத்தினர் பார்க்கும் விதத்திலேயே இப்போதும் பார்க்கின்றனர்.

இந்நிலையில் தமிழர்களுக்கு என்று தனிநாடு ஒன்று ஏற்பட்ட பின்னரும் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ நேரும் தமிழர்கள் மனவியல் ரீதியான ஒரு வகையான தாழ்வு மனப்பான்மையுடனேயே அப்பகுதிகளில் வாழ நேரும். இன்று பாகிஸ்தானிலும் வங்கதேசத்திலும் பிரிவினைக்குப் பின்னும் அந்நாடுகளிலேயே தங்கியுள்ள இந்து மக்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்களோ அவ்வாறே சிங்களப் பகுதிகளில் வாழ வேண்டியிருக்கும் தமிழ் மக்களும் நடத்தப்படுவர். வங்கதேசத்தில் வசிக்கும் இந்துமக்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை தஸ்லிமா நஸ்ஸ்ரீனின் லஜ்ஜா என்ற நவீனத்தை படித்தாலே தெரியவரும். அதைப்போலவே பிரிவினைக்குபின் நமது நாட்டில் உள்ள முஸ்லீம் மக்களும் வகுப்புவாத சக்திகளால் அவர்களின் மனம்புண்படும் விதத்தில் விமர்சிக்கப்படுவதையும் நடத்தப்படுவதையும் வகுப்பு மோதல்களுக்கு ஆட்படுத்தப்படுவதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

மேலும் எவ்வெப்போது சிங்கள ஆளும் வர்க்கம் நெருக்கடிக்கு ஆட்படுத்தப்படுகிறதோ அப்போதெல்லாம் இலங்கையில் சிங்கள மக்களோடு சேர்ந்து வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் மீது ஒரு கட்சி மாறி மற்றொரு கட்சி வெறுப்பையும் அவமரியாதை பேச்சுகளையும் உமிழவே செய்யும் அது சந்திக்கும் நெருக்கடிகளிலிருந்து பெரும்பான்மை சிங்கள மக்களின் கவனத்தை திசை திருப்பி விட அதனைச் செய்யும்.

இத்தனை கொடுமையாக இராதெனினும் தமிழர் வாழும் கிழக்குப் பகுதியில் தமிழருடன் இணைந்து வசிக்கும் சிங்கள மக்களுக்கும் எங்கு செல்வது எவ்வாறு ஒன்றி வாழ்வது என்பது குறித்த பிரச்னைகள் நிச்சயம் இருக்கவே செய்யும். இவற்றைஎல்லாம் கருத்தில் கொள்ளாது தமிழ் ஈழம் தமிழ் மக்களுக்கு ஒரு பொற்காலத்தை ஏற்படுத்தித் தந்துவிடும் என்ற ஒரு கற்பனைச் சித்திரத்தை இங்குள்ள விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகள் முன் வைக்கின்றன.

(தொடரும்......)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com