Contact us at: sooddram@gmail.com

 

இலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு (பகுதி 22)

(அ.ஆனந்தன்)

சோவியத் படிப்பினை

இதையே சோவியத் நாட்டின் படிப்பினைகள் நமக்கு உணர்த்துகின்றன. சோசலிசம் இருந்தவரை தனிநாடு கோரிக்கை என்பது அங்கு எழவில்லை. எத்தருணத்தில் சோசலிசம் அங்கு வீழ்ந்ததோ அப்போது அதில் ஒருங்கிணைந்திருந்த அனைத்து தேசிய இனங்களும் பாதுகாப்பற்ற நிலையில் தாங்கள் இருப்பதாக உணரத்தொடங்கி தனிநாடுகள் கோரத்தொடங்கிவிட்டன. மாபெரும் தலைவர் ஸ்டாலினின் மறைவிற்குப்பின் முதலாளித்துவ சிந்தனைப்போக்குகள் ஊட்டி வளர்க்கப்பட்டதால் பின்னாளில் சோவியத்யூனியன் தகர்ந்த பின்பு தனிநாடு கோரிக்கையை முன்வைக்கும் முதலாளித்துவ சிந்தனைப் போக்கின் கரு அவர்கள் மனதில் உருவாக்கப்பட்டது. அதுவே அக்கோரிக்கை பெரிதாக எழுந்து ஒன்றாய் இருந்த சோவியத் நாடு பல தேசங்களாக பிளவுபடக் காரணமாக இருந்தது.

ஆரம்பத்தில் சிங்கள-தமிழ் உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையை வலியுறுத்திப் போராடிய கம்யூனிஸ்ட் அமைப்புகளும் தலைவர்களும் இருக்கவே செய்தனர். நாளடைவில் நாடாளுமன்றத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக நாடாளுமன்ற வாதத்தில் மூழ்கியவையாக அக்கட்சிகள் ஆகிவிட்டதால் படிப்படியாக இனவாதத்தையும் தங்களது அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தும் கலிசடைகளாக அவையும் உருமாறிவிட்டன. எனவேதான் தமிழ் மக்களின் பல்வேறு உரிமைகள் பறிக்கப்பட்ட போதும் அவை வாய்மூடி மெளனம் சாதித்தன. வர்க்கப் பார்வையை கைவிட்டுவிட்டு இங்குள்ள கம்யூனிஸ்டுகள் ஜாதிய வாதத்தை கையிலெடுத்து குறுக்கு வழியில் தேர்தல் அரசியலில் ஆதாயம் அடைய முனைவதுபோல் இலங்கையில் கம்யூனிஸ்டுகள் என்ற பெயரில் செயல்பட்ட கட்சிகளில் சிலவும் மிதமிஞ்சிய சிங்கள வெறிவாதத்தை கையிலெடுக்கவும் செய்தன.

எனவே இலங்கையின் இனப்பிரச்னைக்கு உண்மையான தீர்வு உழைக்கும் வர்க்கப் போராட்டத்தின் விளைவாக உருவாகும் வர்க்க பேதமற்ற சமுதாயம் அமைவதில்தான் உள்ளது. அத்தகைய வர்க்கப் போராட்டங்களே சிங்கள, தமிழ் உடமைவர்க்கங்களின் உண்மையான முக விலாசத்தை அம்பலப்படுத்தக் கூடியவை.

தவறான, திரித்துரைக்கப்படும் வரலாற்று நிகழ்வுகள்

இதை முன்வைப்பதை விட்டுவிட்டு இங்குள்ள அதிதீவிர இடதுசாரிக் கட்சிகள் என்று கருதப்படும் சில கட்சிகள் தமிழ்ஈழம் அவைதில் அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஆன தீர்வு இருப்பது போலவும், சிங்கள மக்கள் அனைவரும் தமிழ் இனத்தின் எதிரிகள் போலவும் தமிழ்வெறி வாதத்தைத் தூண்டிவருகின்றன. உண்மையிலேயே இலங்கையில் எவ்வாறு இடதுசாரி முழக்கங்களை முன்வைத்துக் கொண்டு ஜே.வி.பி அமைப்பினர் சிங்கள வெறிவாதத்தை கையிலெடுத்து தமிழர்களுக்கு எதிராக குறிப்பாக மலைத்தோட்ட தமிழர்களுக்கு எதிராக தங்களது பிரச்சாரத்தில் விசத்தை கக்கினரோ அதைப்போல இங்கு இந்த இடதுசாரி அமைப்புகள் இலங்கையில் நிலவும் யதார்த்த நிலையைப் பாராது சாதாரண சிங்கள மக்கள் மீதும் விரோதத்தினையும் குரோதத்தினையும் உருவாக்கும் வெறுப்பு பிரச்சாரத்தை நடத்துகின்றனர்.

தங்களது வாதங்களை நிரூபிப்பதற்காக இந்திய வரலாற்று நிகழ்வுகளையே தங்களது நோக்கிற்குத் தகுந்தாற்போல முன்னுக்குபின் முரணாக திரித்தும் கூறுகின்றனர்.

அவர்களது ஈழ விடுதலை நமது கடமை என்ன? என்ற நூலில் லாலா லஜபதி ராயை தடியடியில் கொலைசெய்து மேலும் பல அடக்குமுறை சம்பவங்களில் ஈடுபட்ட ஆங்கில அரசுக்கு எதிராக அமைதியான முறையில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் கூடி போராட்டம் நடத்திய இந்தியர்கள் மீது கொடூரமாக துப்பாக்கி சூடு நடத்தினான் ஜெனரல் டயர் என்று கூறியுள்ளனர். உண்மையில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது 1919ம் ஆண்டு ஏப்ரல் 13ல் ஆகும்.

லாலா லஜபதிராய் சைமன் கமிசன் பகிஸ்கரிப்பு இயக்கத்தின்போது வெள்ளை போலிஸாரால் குண்டாந்தடித் தாக்குதலுக்கு ஆட்பட்டது 1928ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதியாகும். அதன் விளைவாக அவர் மரணம் அடைந்தது 1928ம் ஆண்டு நவம்பர் 17ம் நாளாகும். அதாவது 9 ஆண்டுகளுக்குபின்பு நடந்த ஒரு சம்பவத்திற்காக அதாவது 1928ல் நடந்த லாலாலஜபதிராயின் தடியடிக்காகவும் அதன் விளைவாக அவர் கொலையுண்டதற்காகவும் 1919ம் ஆண்டு ஜாலியன்வாலாபாக்கில் மக்கள் கூடி போராடினார்கள் என்று கூறியுள்ளனர்.

இவ்வாறு வரலாற்று நிகழ்வுகளை முன்னுக்குபின் முரணாக திரித்துக் கூறியும், சாதாரண சிங்கள மக்கள் மீதும் வெறுப்பையும் விரோதத்தை ஊட்டியும் செயல்படும் இவர்களின் போக்கு உண்மையில் இவர்கள் இந்திய மண்ணின் ஜே.வி.பி இயக்கத்தைச் சேர்ந்தவர்களாகவே தோற்றம் காட்டுகிறார்கள் என்பதையே புலப்படுத்துகிறது. மேலே நாம் முன்வைத்துள்ள ஆய்வின் அடிப்படையில் இலங்கைத்தமிழர் பிரச்னைக்கான தீர்வு அந்நாட்டு ஒட்டுமொத்த தமிழ் மக்களின் விருப்பினை அடிப்படையாகக் கொண்டதாக மட்டுமே இருக்கமுடியும்.

சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ அமைப்பு முறை இருக்கும் வரை இனப்பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வு இல்லை என்பதும் மனதிற் கொள்ளப்படவேண்டும். 

தொடர்பிற்கு

samy.anandan@gmail.com

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com