Contact us at: sooddram@gmail.com

 

இலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு (பகுதி 3)

 (அ.ஆனந்தன்)

சிங்கள இனம், தமிழ் இனம் முழுவதையும் அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டதா?

அதாவது அவை இது எத்தனை கொடுமையான இனப்பிரச்னை என காட்ட முயல்கின்றன என்றால் சிங்களர்கள் தமிழ் இனம் முழுவதையும் அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர் என்று கூறும் அளவிற்கு சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஒருவருக்கொருவர் நேர் விரோதத் தன்மை கொண்டவர்கள்: இவர்களில் ஒரு பகுதியினரின் அழிவில் தான் மற்றொரு பகுதியினரின் வாழ்க்கை உள்ளது என்று மக்களை நம்ப வைக்கும் அளவிற்கு முயல்கின்றன. ஆனால் இது இப்படித்தானா? என்று பல வரலாற்று நிகழ்வுகளுடன் பொருத்திப் பார்ப்பது நமக்கு மிகவும் அவசியமாகும்.

பிரிட்ஷாரை எதிர்த்த போராட்டத்தில் ஒன்றிணைந்தது எவ்வாறு?

இவர்களின் இத்தகைய இலங்கையின் இனப்பிரச்னை குறித்த பார்வை, இந்தியாவின் தேசிய இனப்பிரச்னைகள் குறித்தும் இவர்கள் கொண்டுள்ள தவறான பார்வையினைப் பிரதிபலிப்பதாக உள்ளது. அதாவது முதலில் இப்படி ஓரினத்துடன் மற்றொரு இனம் ஒத்து வாழவே முடியாத இனப்பிரச்னை ஒன்று இலங்கையின் தமிழ்-சிங்கள இனங்களுக்கிடையே இருந்திருக்குமானால் அவ்விரு இனங்களும் ஒன்றுசேர்ந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை நாட்டைவிட்டு வெளியேற்ற போராடியிருக்க முடியுமா? இது நமக்கு எழும் முதல் கேள்வியாகும்.

இதற்குப் பதில் கூறும் வகையில் எவ்வாறு தமிழ்-சிங்கள இனங்களுக்கிடையே பழக்க வழக்கங்கள், மதம் பண்பாடு இவை சார்ந்த வேறுபாடுகளும் ஒருவரை ஒருவர் பரிகசித்துக் கொள்ளும் போக்கும் நீண்ட காலமாகவே இருந்து வந்துள்ளது என்பது போன்ற சான்றுகளை முன் வைப்பது முறையாகாது. ஏனெனில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் சேர்ந்து வாழும் எந்தவொரு நாட்டிலும் இதுபோன்ற முரண்பாடுகள் நிலவவே செய்யும்.

நேர் விரோத முரண்பாடா, இல்லையா?

நாம் பார்க்க வேண்டியது அத்தேசிய இனங்களுக்கிடையில் நிலவும் முரண்பாடுகள் ஒன்றின் அழிவில்தான் மற்றொன்றின் வாழ்க்கை இருக்கிறது என்ற அடிப்படையிலான நேர்விரோத முரண்பாடுகளா? அல்லது நேர்விரோதமற்ற சமரச முறையிலேயே தீர்வைக் கொண்டு வர முடியும் என்று கூறத்தக்க முரண்பாடுகளா? என்பவையே.

நாம் முதலில் கூறிய நேர் விரோத முரண்பாடு தமிழ் - சிங்கள தேசிய இனங்களுக்கிடையே நிலவியிருக்குமானால் நிச்சயமாக இவ்விரண்டு இனங்களும் ஒன்றிணைந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியிருப்பது சாத்தியமல்ல.

குதிரைக்குப் பதிலாக சிங்களத் தலைவர்கள் இழுத்த தேர்

விடுதலைப் போராட்டக் காலத்தில் நிலவிய இன ஒற்றுமைக்கு சான்றாக அக்காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்வது இங்கு பொருத்தமாக இருக்கும். அதாவது விடுதலைப் போராட்டத்தை ஒட்டி 1915-ல் தடைக்காவலில் வைக்கப்பட்டிருந்த சிங்கள இனத்தைச் சேர்ந்த தலைவர் டி.எஸ். சேனநாயகாவை விடுவிப்பதற்காக பல இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு கடல்வழியாக இங்கிலாந்து சென்று திறமையாக வாதிட்டு நாடு திரும்பிய தமிழர் தலைவரும் வழக்கறிஞருமான திரு.பொன்னம்பலம் ராமநாதனை ஊர்வலமாக சிறப்புடன் அழைத்துச் செல்ல ரதம் ஒன்றை சிங்களத் தலைவர்கள் கொண்டுவந்தனராம்.

ஆனால் அவர் வந்தவுடன் ரதத்தின் குதிரைகளை அவிழ்த்துவிட்டு விட்டு அவருக்கு தாங்கள் பட்டிருந்த நன்றிக்கடனை வெளிப்படுத்தும் முகமாக திரு.எ.ஈ. குணசிங்கா உள்பட வந்திருந்த சிங்கள தலைவர்கள் அந்த ரதத்தை தாங்களே இழுத்து வந்தனராம். இப்படிப்பட்ட வகுப்பு ஒற்றுமையும் தமிழ், சிங்கள இனங்களுக்கிடையில் விடுதலைப் போராட்ட காலத்தில் நிலவியுள்ளது. இந்நிகழ்வு இவ்விரு இனங்களும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து வாழ முடியாதவாறு நேர் விரோத முரண்பாடுகளுடன் எப்போதுமே இருந்து வந்துள்ளவை என்பதையா காட்டுகிறது?

நிர்வாக வசதிக்காக ஏகாதிபத்தியம் கட்டாயப்படுத்தி இணைத்ததா?

இது ஆரம்ப முதற்கொண்டே தேசிய இனப்பிரச்னையே என்ற கருத்தை முன் வைக்கக் கூடியவர்கள் மற்றுமொரு வாதத்தையும் வலியுறுத்திக் கூறுகிறார்கள். அதாவது ஏகாதிபத்திய ஆட்சி பல இடங்களில் தனது நிர்வாக வசதிக்காக பல தேசிய இனங்கள் வாழ்ந்த பகுதிகளை கட்டாயப்படுத்தி இராணுவ வலிமையின் மூலம் ஒருங்கிணைத்து வைத்திருந்தனர்; அவ்வாறு ஒருங்கிணைத்து வைக்கப்பட்டதே இலங்கையின் தமிழ்-சிங்கள தேசிய இனங்கள் வாழ்ந்த பகுதிகளாகும் என்பது அந்த வாதம்.

அதாவது வற்புறுத்தல் தவிர வேறு எந்த அம்சமும் அவைகளின் ஒருங்கிணைப்பை கொண்டு வரவில்லை என்பது அவர்கள் முன் வைக்கும் கருத்து. நிர்வாக வசதிக்காக இலங்கையின் தமிழர் வாழும் பகுதியையும் சிங்களர் பகுதியையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இணைத்திருந்தாலும், அதனால் மட்டுமே சிங்கள, தமிழ் இனமக்கள் கட்டாயத்தால் ஒன்று சேர்ந்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்பது உண்மையல்ல.

எதிரியின் பலம் இணைந்து போராட வைத்தது

இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் அன்னிய ஏகாதிபத்தியத்தின் ஆட்சியின் கீழ் இருந்த போதும் அந்நாடுகளில் இருந்த பல்வேறு தேசிய இனங்களும் தங்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தனித்தனியே போராடி தனித்தனி தேசிய அரசுகளாக உருவாக ஏற்ற சூழ்நிலை இல்லை. ஏனெனில் அத்தேசிய இனங்கள் எதிர் கொள்ள வேண்டியிருந்த ஏகாதிபத்தியம் மிகவும் வலிமை வாய்ந்ததாக இருந்ததால் அதனைத் தங்கள் தங்களது தனித்த போராட்டங்களால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை அத்தேசிய இனங்களுக்கு ஏற்படவில்லை.

விடுதலைப் போராட்டம் விளைவித்த ஒற்றுமை

எனவே அவை ஒன்று திரண்டு, ஒருங்கிணைந்து பொது எதிரியை எதிர்த்துப் போராடின. அப்போராட்டத்தின் விளைவாக பல தேசிய இன மக்களிடையே நல்லுறவும் ஏற்பட்டது. இலங்கையைப் பொருத்தவரை தமிழர் வாழும் பகுதிகளிலிருந்து தங்கள் படிப்பிற்கேற்ற அரசு வேலைகள் கிடைக்கும் போது சிங்களர் பகுதி என இவர்கள் கூறும் கொழும்பு போன்ற நகரங்களிலும் தமிழ் மக்கள் சென்று வாழ்ந்தனர். இதன் விளைவாக தேசிய இனங்களின் ஒன்று கலத்தலும் நிகழ்ந்தது. இது ஏகாதிபத்திய நிர்வாக வசதிக்காக அது கட்டாயப்படுத்தி ஒருங்கிணைத்ததனால் மட்டும் ஏற்பட்டதல்ல.

(தொடரும்......)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com