Contact us at: sooddram@gmail.com

 

இலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு (பகுதி 9)

(அ.ஆனந்தன்)

உழைப்பால் நாட்டிற்கு வளம் குவித்த மலையகத் தமிழர்

மலையகத் தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் இலங்கையில் ஒரு ஒட்டுண்ணித்தனமான வாழ்க்கையை நடத்தவில்லை. மாறாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு போதிய ஆட்கள் அங்கு கிடைக்காததால் தென் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து அங்கு வேலை செய்வதற்கு கொண்டு செல்லப்பட்டவர்களே அவர்கள். நெற்றிவேர்வை நிலத்தில் விழ அவர்கள் பாடுபட்டதன் பயனாக பெரும் அந்நிய செலாவணி இலங்கைக்குக் கிடைத்தது.

இடதுசாரிகளின் தேர்தல் வெற்றியும் செங்கொடி சங்க வளர்ச்சியும்

விடுதலைக்குப் பின்பு அங்கு நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகளை ஒட்டியே அவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கு கூடுதலாக ஏற்பட்டது. குறிப்பாக 1964ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 7 இடதுசாரி வேட்பாளர்களை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தேர்ந்தெடுத்தனர். அதுமட்டுமல்ல தேயிலைத் தோட்டத் தொழிலாளரிடையே செங்கொடி சங்கத்தின் வளர்ச்சியும் பிரமிக்கத்தக்க விதத்தில் இருந்தது.

இன பேதம் கடந்த முதலாளிகளின் வர்க்க ஒற்றுமை

மேலும் அத் தேர்தல் முடிவுகள் எந்த பிரித்தாளும் சூழ்ச்சியை கையிலெடுத்து சோசலிச ரீதியிலான சமூக மாற்றம் அங்கு வந்துவிடுவதை தடுக்க இலங்கையின் ஆளும் வர்க்கமும் ஆட்சியாளர்களும் விரும்பினார்களோ அந்த இனப் பிரிவினையை உடைத்து நொறுக்கும் விதத்தில் சிங்கள, தமிழ் தொழிலாளரின் உழைக்கும் வர்க்க ஒற்றுமை அங்கு ஏற்பட்டதை கோடிட்டு காட்டியது. இதனைக் கண்டு பீதியடைந்த சிங்கள-தமிழ் தேசிய முதலாளிகளும் அதாவது திருமதி. பண்டார நாயகாவும் செல்வ நாயகமும் கையோடு கைகோர்த்தே சாஸ்திரி-பண்டாரநாயகா ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர்.

அதன் விளைவாகவே இலட்சக்கணக்கான மலையகத் தமிழர்கள் தமிழகம் திரும்ப நேர்ந்தது. அதாவது சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு தேசிய இனங்களிலும் இருந்த உடமை வர்க்கங்களின் தலைவர்கள் மலையகத் தமிழர்களிடம் தோன்றிய இனம் மொழி கடந்த தொழிலாளர் ஒற்றுமையும் இடதுசாரி சிந்தனைப்போக்கும் இலங்கை முழுவதும் வியாபித்து வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே அன்று அவ்வாறு கைகோர்த்து செயல்பட்டனர்.

உண்மையிலேயே அப்பழுக்கற்ற இன உணர்வு இலங்கைத் தமிழர்களை வழிநடத்தியிருக்குமானால் மலையகத் தமிழரின் வெளியேற்றத்தின் போதுதான் அவ்வுணர்வு மிகப் பெரிதாக வெளிப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் 15 லட்சம் மலையகத் தமிழர்களும் வெளியேற்றப் படாமல் இருந்திருந்தால் தமிழர் மக்கள் தொகையும் இன்னும் கூடுதலாக இருந்திருக்கும். மத்தியத்துவப் படுத்தப்பட்ட ஆட்சியமைப்பில் கூடுதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் பெற அது வழியும் வகுத்திருக்கும்.

இனமா? உடமையா? என்றால் உடமைக்கே முன்னுரிமை

ஆனால் மலையகத் தமிழர் பகுதியில் வளர்ந்த வர்க்க அரசியல் மேலும் வலுப்பெற்றால் அதனால் சொத்துடைமை அமைப்பிற்கே பங்கம் நேர்ந்துவிடும் என்பதால் தமிழ் தேசிய இனத்தின் உடைமை வர்க்கப் பிரதிநிதிகள் உடைமை வர்க்க அரசியலுக்கு தலைமையேற்றிருந்த சிங்கள அரசியல் வாதிகளுக்கு ஒத்துஊதி துயரகரமான மலையகத் தமிழர்களின் வெளியேற்றத்திற்கும் இன்னும்பல மலையகத் தமிழர் நாடற்றவராய் அங்கே இருப்பதற்கும் வழிவகுத்தனர். அதாவது உடைமையா, இனமா என்ற கேள்வி எழுந்த போது தமிழ் தேசிய உடைமை வர்க்கம் உடைமைக்கே முன்னுரிமை தந்தது.

தற்செயல் நிகழ்வல்ல

இன்று இங்கு தமிழ் இன பிரச்னையை முன்னெடுத்து முழுங்குபவர்கள் முன் வைப்பது போல் மலையகத் தமிழரின் வெளியேற்றம் இலங்கைத் தமிழர் அதற்கு தேவைப்பட்ட அளவு முக்கியத்துவம் தராததாலோ அல்லது தற்செயலாகவோ, ஒரு சாதாரண நிகழ்வாகவோ நடந்ததல்ல.

பொதுவாக இயல்பான வேளைகளில் உடமை வர்க்கங்களிடையே சந்தையை கைப்பற்றும் வாய்ப்புகளை திறமையாக பயன்படுத்தும் போட்டியே உக்கிரமாக நடைபெறுகிறது. அது எதுவரை என்றால் உடமை வர்க்கங்களுக்கு எதிரான வர்க்கப் போராட்டங்கள் கூர்மையடையாத வரை. அப்போட்டியில் வலு சேர்ப்பதற்காக உடமை வர்க்கங்கள் தங்களின் இனம், மொழி, கலாச்சாரம் போன்ற அனைத்தையும் திறம்படப் பயன்படுத்துகின்றன.

ஆனால் எப்போது தனி உடமைக்கே உலைவைக்கும் உழைக்கும் வர்க்கப் போராட்டங்கள் தலைதூக்குகின்றனவோ அப்போது இன, மொழி, கலாச்சார பேதங்கள் அனைத்தையும் மறந்து உடைமை வர்க்கங்கள் தங்களது அடிப்படை நலனான தனிச் சொத்துரிமையை பாதுகாக்க ஒன்று கூடி விடுகின்றன. இதனை அப்பட்டமாகவும் தெளிவாகவும் நிரூபித்ததே இலங்கையின் மலையகத் தமிழர் வெளியேற்றப் பிரச்னையாகும்.

விடுதலைக்குப்பின் இலங்கை அரசு எதிர்கொண்ட கடும் நெருக்கடிகள் அதன் ஒரு விளைவாக தோன்றிய வேலையின்மைப் பிரச்னை ஆகியவற்றிற்கான அமைப்பு ரீதியான காரணத்தை மூடிமறைத்து சிங்கள மக்களின் வாய்ப்புகள் பறிபோவதற்கு உண்மையான காரணம் அங்கு வாழும் ஒப்புநோக்குமிடத்து முன்னேறியதாக தோற்றமளித்த தமிழ் இனத்தைச் சேர்ந்த மக்களே என்ற நாசகரமான எண்ணத்தை சிங்கள மக்களிடையே சிங்கள ஆட்சியாளர்கள் பெரிதாக்கி பரவச் செய்ததே என்பதை கடந்த இதழில் பார்த்தோம்.

(தொடரும்......)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com