Contact us at: sooddram@gmail.com

 

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் (பாகம் 10)

(நேசன்)

சந்ததியார் படகுவழியாக இந்தியாவிலிருந்து வருகை

புளொட்டுக்குள் தோன்றியிருந்த தவறான போக்குகள் குறித்து ஆரம்ப காலங்களிலேயே பல்வேறு மட்டங்களிலும், புளொட்டுக்குள்ளேயே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதும் கூட, அவற்றிற்கு சரியான முறையில் தீர்வு காணப்படவில்லை - மத்தியகுழு என்று சொல்லப்பட்ட குழுவிலும் கூட. இதற்கு முக்கிய காரணம் என்னவெனில் புளொட் தலைமையில் இருந்த பெரும்பான்மையானோர் தாம் தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து வித்தியாசமான போக்கை கொண்டவர்களென்றும், மார்க்சிய சிந்தனையாளர்கள் என்றும், எமது போராட்டத்தினூடாக "அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிந்து" சமத்துவ சமுதாயம் படைப்போம் என்றும் கூறிக் கொண்டனரே தவிர, அதற்கான தத்துவார்த்த வழிகாட்டலையே, அரசியல் அறிவையோ கொண்டிருக்கவில்லை என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.

இந்த உண்மை நாம் புளொட்டிலிருந்து வெளியேறி "தீப்பொறி" க் குழுவாக செயற்படத் தொடங்கியபோது புளொட்டின் மத்திய குழுவில் அங்கம் வகித்திருந்தவர்களான "புதியதோர் உலகம்" ஆசிரியர் டொமினிக(கேசவன்), காந்தன்(ரகுமான் ஜான்), கண்ணாடிச் சந்திரன் மூலமும் அவர்களின் கருத்துக்கள் மூலமும் தெட்டத் தெளிவாகியது.

தோழர் தங்கராசா, "புதியதோர் உலகம்" ஆசிரியர் டொமினிக(கேசவன்) போன்றோருக்கு இடதுசாரி அரசியலில் இருந்த பரிட்சயமும், ஓரளவு தெளிவும் புளொட்டை ஒரு புரட்சிகர அமைப்பாக வெளிக்காட்ட உதவியாக இருந்தது என்று கூறலாம். ஏனைய சில மத்தியகுழு அங்கத்தவர்களைப் பொறுத்தவரை இடதுசாரித்தத்துவத்தின்பால் பெரிதும் கவரப்பட்ட, சமுதாய மாற்றத்தில் அக்கறை கொண்டோராக காணப்பட்டபோதும் கூட வெறும் கோசங்களுடன் தங்களை மட்டுப்படுத்திக் கொண்டனர். இன்னும் ஒரு பகுதி மத்தியகுழு உறுப்பினரோ கண்மூடித்தனமான தலைமை விசுவாசம் மட்டுமே, போராளியாய் இருப்பதற்கான முன்நிபந்தனை என்று கருதினர்.

மார்கழி 1983 காந்தன் (ரகுமான்ஜான்) இந்தியா சென்ற பின்னர் ரகுமான் ஜானின் நண்பனான சலீம் தள நிர்வாகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். தளத்தில் செயற்பட்ட உறுப்பினர்களால் புளொட்டினுடைய தவறான போக்குகள் குறித்து (சுந்தரம் படைப்பிரிவினரின் தன்னிச்சையான செயற்பாடுகள், அரசியல் ரீதியில் தவறான போக்குகள்) விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த விமர்சனங்களை முன்வைத்ததில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்கள் சத்தியமூர்த்தியும் கேதீஸ்வரனுமாவார். இதனால் புளொட்டின் முன்னணி அங்கத்தவர்களிடையே ஒருவகையான " ுழப்பநிலை"யும். "தளர்வு" மனப்பான்மையும் காணப்பட்டது. இந்த நிலையில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் குறித்துப் பேசுவதற்கும், பிரச்சனைகளைக் கையாளுவதற்கும் என்று சந்ததியார் இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

முன்னணி அங்கத்தவர்கள் பங்குபற்றிய கூட்டம் கொக்குவிலில் இடம்பெற்றது. இதில் சத்தியமூர்த்தி, கேதீஸ்வரன், பார்த்தன், பெரியமுரளி, பொன்னுத்துரை, ஈஸ்வரன், யக்கடயா ராமசாமி, ராமதாஸ், கண்ணாடிச் சந்திரன், சலீம், முத்து (வவுனியா) போன்றோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன; பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன; ஆனால் பிரச்சனைகள் உரியமுறையில் தீர்வு காணப்படவில்லை. மாறாக, அனைத்து அங்கத்தவர்களையும் நம்பிக்கையுடன் செயற்படுமாறு சந்ததியார் கேட்டுக் கொண்டார். சந்ததியார் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் இளைஞர் பேரவை போன்ற குறுந்தேசியவாத தீவிர வலதுசாரி அரசியலில் இருந்து இடதுசாரி அரசியலை நோக்கி வந்த ஒருவர். யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்தபோது JVP உறுப்பினர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. JVP உறுப்பினர்களுடனான கருத்து பரிமாற்றங்கள் சந்ததியாரின் சிந்தனைப் போக்கில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது. சந்ததியார் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வரும் போது இடதுசாரி போக்கின் மேல் ஆர்வம் கொண்டவராக, இடதுசாரிய சிந்தனை உடையவராக காணப்பட்டார். இவரது இந்த இடதுசாரி போக்கானது ஒரு முழுமையான இடதுசாரிய சிந்தனையை கொண்டிராத போதும் கூட, அதை நோக்கிய தேடலாக, அதை நோக்கிய வளர்ச்சியாக, அதை பிரநிதித்துவப்படுத்துவதை நோக்கியதாக இருந்தது. சந்ததியார் சிந்தனையளவில் மட்டும் முற்போக்காளராக இருக்கவில்லை; உதட்டளவில் மட்டும் ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றி பேசுவதோடு மட்டும் நின்று விடவில்லை; அவர் நடைமுறையில் காந்தீயம் என்ற அமைப்புக்கூடாக இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டு மலையகத்தில் இருந்து இடம்பெயந்த அகதிகளை குடியேற்றி, அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கு கடுமையாக உழைத்தவர்.

கடின உழைப்புக்கு முன்னுதாரணமாக விளங்கிய சந்ததியார் நேர்மையும் எளிமையும் கொண்ட ஒரு போராளியாக புளொட்டுக்குள் விளங்கினார். ஆனால் சந்ததியாரின் இத்தகைய நல்ல பண்புகள் எதுவுமே ஒரு அமைப்புக்குள் தோன்றும் முரண்பாடுகளை தீர்ப்பதற்கு ஏதுவாக அமையவில்லை. காரணம், ஒரு புரட்சிகர அமைப்பானது சரியான தத்துவார்த்த அரசியல் வழிகாட்டலில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஜனநாயக மத்தியத்துவப்படுத்தப்பட்ட, அமைப்புக் கோட்பாடுகள், கட்டுப்பாடுகளுடன் கூடிய, ஒரு அமைப்பாக இருந்திருக்க வேண்டும். புளொட் அமைப்பு அன்று அப்படி இருக்கவில்லை. சிறுகுழு என்ற நிலையில் இருந்த புளொட் ஜூலை 1983 இன அழிப்பு தொடர்ந்து திடீர் வீக்கத்தை கண்டிருந்தது. இதனால் சந்ததியார் எவ்வளவுதான் கடின உழைப்பாளியாகவும், நேர்மையானவராகவும், எளிமையானவராகவும் இருந்த போதும் கூட, முரண்பாடுகளின் தோற்றுவாய்களை இனங்காண்பதில், முரண்பாடுகளை கையாளுவதில் வெற்றிபெற முடியவில்லை.

இச்சந்திப்பின் பின்னர் முன்னணி அங்கத்தவரான கேதீஸ்வரன் புளட்டின் செயற்பாடுகளில் நம்பிக்கையற்றவராக அதிருப்தி அடைந்தவராக காணப்பட்ட போதும், அன்றைய சூழலோ மாறுபட்ட ஒன்றாக இருந்தது. இனவாதத்திற்கெதிரான போராட்டத்தின் தேவை, அதற்கெதிராக ஏதாவது ஒருவழியில் போராட வேண்டும் என்ற நிலை, மக்கள் மத்தியில், பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில், மாணவர்கள் மத்தியில் தோன்றியிருந்த மனோநிலை போன்றவை, எவரையுமே ஏதாவது ஒரு அமைப்புடன் இணைந்து செயற்படுமாறு தூண்டியது. இதுவே அன்றைய பொதுப் போக்காகவும் இருந்தது. கேதீஸ்வரனுடனான மத்தியகுழு உறுப்பினர்களின் கருத்துப்பரிமாற்றங்களுக்கூடாக அவர் மீண்டும் புது ஆற்றலுடன் செயற்படத் தொடங்கினார். இயக்கங்களின் வளர்ச்சி கண்டு அரசபடைகள் உசாரடைந்தன. இயக்கச் செயற்பாடுகள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவர்களை வேட்டையாடும் முயற்சிகள் தொடங்கின.

தலைமறைவு" அமைப்பு என்ற நிலையிலிருந்து பகிரங்க" அமைப்பு என்ற நிலைக்கு வரும்போது தவிர்க்கமுடியாமல் எமது செயற்பாடுகள் குறித்து எதிரி அறிந்து கொள்ள பெரிதும் உதவியாய் இருக்கும் என்பதை அப்போது நாம் புரிந்துகொண்டிருக்கவில்லை. அதுவும் புளொட் சிறுகுழு என்ற நிலையிலிருந்து மக்கள் தழுவிய, மக்கள் அமைப்புக்களைக் கொண்டதாக மாற்றமெடுத்த காலகட்டமாக இருந்தது. இதனால் எமது செயற்பாடுகளை எதிரியால் மிகவும் சுலபமாக கண்காணிக்கக்கூடியதாய் அமைந்திருக்க வாய்ப்பிருந்தது.

(தொடரும்....)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com