Contact us at: sooddram@gmail.com

 

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் (பாகம் 11)

(நேசன்)

இராணுவத்தால் கொக்குவில் சுற்றிவளைப்பு

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பலர் சுட்டுக் கொல்லப்படுகின்ற நிலவரம் அன்றிருந்தது. வவுனியா நகுலன், மன்னார் பொறுப்பாளர் நகுலன், கொக்குவிலில் இருந்து "புதியபாதை" பத்திரிகையை விநியோகிக்க வவுனியாவுக்கு எடுத்து சென்ற வவுனியா சிவகுரு, போன்ற பலர் இராணுவத்தினரிடம் பிடிபட்டதையடுத்து இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். 1984 மாசி மாதம் இந்தியாவுக்கு பயிற்சிக்கு இளைஞர்களை படகு மூலம் சுழிபுரத்திலிருந்து அனுப்பிவிட்டு திரும்பும் வழியில், சண்டிலிப்பாயில் வைத்து கொக்குவில் யோகராஜா, லவன் ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். கொக்குவிலில் புளொட்டினுடைய செயற்பாடுகள் பெருமளவுக்கு பகிரங்கமாக நடைபெற்று வந்ததாலும், லவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட டயரியில் இருந்த கொக்குவில் பற்றிய குறிப்புக்களாலும் இராணுவம் கொக்குவிலைக் குறிவைத்து செயற்பட ஆரம்பித்திருந்தது. இதை உணர்ந்து கொள்ள முடியாதிருந்திருந்த நாமோ கொக்குவிலையே எமது தொடர்புகளுக்காகவும், சந்திப்புக்களுக்கான மையமாகவும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தோம். கொக்குவில் இனிமேலும் எமது சந்திப்புக்களுக்கும், தொடர்புகளுக்கும் மையமாகவும் பாவிப்பதற்கு உகந்த இடமல்ல என்று சில மத்தியகுழு உறுப்பினர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அதை உடனடியாக நடைமுறைப்படுத்தவில்லை என்றே கூற வேண்டும். இது எதிரி பற்றிய எமது சரியான கண்ணோட்டம் இன்மையையும், எமது அசமந்தப் போக்கையும் காட்டியது.

யோகராஜா, லவன் ஆகியோர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் ஆகியிருந்து. சலீம் அவர் திருநெல்வேலியில் தங்கியிருந்த அறையில் வைத்து இராணுவத்தால் கைது செய்யப்பட்டு விட்டார் என்ற தகவல் கிடைத்தது. சலீம் 1983 மார்கழி மாதம் பிற்பகுதியிலிருந்து 1984 பங்குனி மாதம் அவர் கைது செய்யப்படும் வரை மூன்று மாதம் தள நிர்வாகப் பொறுப்பாளராக செயற்பட்டவர். சலீம் கைதை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று நாம் சிந்தித்து கொண்டிருந்த அதே நேரம் இராணுவம் வெகு நிதானமாகவும் ஆர்ப்பாட்டமில்லாமலும் எம்மை குறிவைத்து செயற்பட்டுக் கொண்டிருந்ததை நாம் அறிந்திருக்கவில்லை. சலீமின் கைதையடுத்து அன்று மாலை மீண்டும் அனைவரும் கொக்குவிலில் ஒன்று கூடுகின்றனர்.மத்திய குழு உறுப்பினர்களான பார்த்தன், கேதீஸ்வரன், சத்தியமூர்த்தி ஆகியோர் கொக்குவிலில் எமது செயற்பாடுகளை நன்கு அறிந்த சலீம், யோகராஜா, லவன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இனிமேலும் கொக்குவிலை சந்திப்பதற்கான மையமாக பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல என்று முடிவெடுத்தனர். இந்த முடிவையடுத்து கேதீஸ்வரன், கொக்குவில் கிருபா, ஜீவன் ஆகியோர் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர். எமது காலந்தாழ்த்திய முடிவால் இராணுவம் எம்மை சுற்றி வளைத்து கொண்டது. இராணுவம் யோகராஜா, லவன் கைதானதிலிருந்து ஒரு மாதகாலமாக தகவல் சேகரித்து, நன்கு திட்டமிடப்பட்டு CORDON & SEARCH என்ற கிராமங்களை சுற்றி வளைத்து மேற்கொள்ளப்பட்ட பாரிய இராணுவ நடவடிக்கையாக இது அமைந்தது.

இராணுவத்தின் சுற்றிவளைப்பில் இருந்து தப்பிக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் எமக்கு தெரிந்த திசைகளில் ஓடினோம். ஆனால் இராணுவம் மேற்கொண்ட மிகப் பெரியளவிலான சுற்றிவளைப்பில் ஓரளவு வெற்றி பெற்றது என்றே சொல்ல வேண்டும். யாழ் மாவட்ட பொறுப்பாளராக செயற்பட்ட சத்தியமூர்த்தியும், பார்த்தனுடன் இராணுவப் பிரிவில் செயற்பட்டு வந்த கொக்குவில் சிவாவும் இவர்களுடன் கூட பல அப்பாவி இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த சுற்றிவளைப்பில் இருந்து நான் (நேசன்)உட்பட பார்த்தன், கொக்குவில் ஆனந்தன் ஆகிய மூவர் மட்டுமே தப்பி வெளியேற முடிந்தது. தளத்தில் செயற்பட்ட மத்தியகுழு உறுப்பினரான குமரன் (பொன்னுத்துரை) இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாததாலும், பெரிய முரளி, கண்ணாடி சந்திரன் ஆகியோர் சென்னைக்கு புளட்டினால் கொள்ளையிடப்பட்டிருந்த கிளிநொச்சி வங்கி நகைகளின் ஒரு பகுதியை உமாமகேஸ்வரனிடம் ஒப்படைக்க சென்றிருந்ததாலும் இந்த இராணுவ சுற்றிவளைப்பில் இருந்து தப்பித்து கொண்டனர். யோகராஜா, லவன் கைதானதை அடுத்து லவனிடமிருந்து இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட டயரியில், இருந்த பெறப்பட்ட விளக்கமான தகவல்களின் அடிப்படையில் தான் கொக்குவில் மீதான இராணுவ சுற்றிவளைப்பை இராணுவத்தினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொக்குவில் சுற்றிவளைப்புக்கு முன், எவருக்குமே தெரியாமல் மிக இரகசியமாக திருநெல்வேலியில் பாதுகாப்பாக சலீம் தங்கியிருந்த இடத்தை துல்லியமாக அறிந்து இராணுவத்தினர் சலீமை கைது செய்தது எவ்வாறு என்பது, இன்று வரை கேள்வியாகவே உள்ளது.

கொக்குவில் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட பின்னர்தான், நான் இராணுவத்தால் தேடப்படும் ஒரு நபராக இருப்பதை அறிந்தேன். எனது வீட்டிற்குச் சென்று சோதனையிட்ட இராணுவத்தினர், எனது அனைத்துப் புகைப்படங்களையும் எடுத்துச் சென்றுவிட்டிருந்தனர். நிலைமைகள் அனைத்துமே தலைகீழாகவும், முன்னரைவிட இன்னும் சிக்கலானதாகவும் மாறிவிட்டிருந்ததன. புளொட்டில் நான் இணைந்ததிலிருந்து எனது வீட்டில் இருந்தபடியே அனைத்து செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்தேன். இராணுவ சுற்றிவளைப்புக்குப் பின்னான நிலைமையோ, இனிமேலும் வீட்டில் இருக்கமுடியாது என்றாகியது மட்டுமல்லாமல், கொக்குவிலை எமது தேவைகளுக்காகப் பயன்படுத்துவதையும் அறவே சாத்தியமற்றதாக்கியது. எதிரியைப் பற்றிய எமது தவறான கணிப்பீடு, விழிப்புணர்வின்மை, காலந்தாழ்த்திய முடிவுகள் போன்றவற்றால் தொடர்ச்சியாக இழப்புக்களை சந்திக்க வேண்டியிருந்தது.

ஒரே நாளில் தளநிர்வாகப் பொறுப்பாளர் சலீமின் கைதும், யாழ் மாவட்டப் பொறுப்பாளர் சத்தியமூர்த்தியின் கைதும் பெரியதொரு வெற்றிடத்தை அமைப்புக்குள் ஏற்படுத்திவிட்டிருந்தது. குறிப்பாக, சத்தியமூர்த்தியினது கைதானது அனைத்துவிடயங்களையும் ஒழுங்குபடுத்திச் செய்யக்கூடிய செயல்திறன்மிக்க ஒருவரை கடின உழைப்பாளியை இழந்ததாகவே கருதப்பட்டது. ஏனெனில் 1983 யூலை க்குப் பின் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு புளொட்டின் செயற்பாடுகள் நகர்த்தப்பட்டபின் அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்த அமைப்பாளர்களின் தொடர்புகளையும் சத்தியமூர்த்தியே பேணிவந்த அதேநேரம் யாழ் மாவட்ட அமைப்புச் செயற்பாடுகளையும் கவனித்து வந்திருந்தார். கைதுகளும், இழப்புகளும் தொடர்ந்து கொண்டிருந்தன. எமது செயற்பாடுகளும் அதே வேகத்தில் தொடர்ந்தவண்ணமிருந்தது.

(தொடரும்....) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com